சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
– வழக்கறிஞர்    பி. விஜயகுமார் முதல் மனைவி இறந்து போயிருந்தாலும் இரண்டாவது மனைவிக்கு கணவரின் ஓய்வூதியம் வராது தற்சமயம் ஒரிசா உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு இது. கணவர் அரசு ஊழியர். அவருக்கு முதல் மனைவி இருந்தார். முதல் மனைவிக்கு குழந்தைகள் இல்லை. ஆதலால் கணவர் முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாவதாக இன்னொரு பெண்ணை மணந்து கொண்டார். திடீரென கணவர் இறந்து போகிறார். இப்போது கணவரின் ஓய்வூதியம் பெறுவது சம்மந்தமாக முதல் மனைவிக்கும் இரண்டாம் மனைவிக்கும் […]
Read More
  • By Magazine
  • |
– வழக்கறிஞர்   பி. விஜயகுமார் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் பெருந்தன்மை மாரீஸ்வரி- எதிர்- தமிழ்நாடு அரசு என்ற வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் 2015-ம் ஆண்டுகால கட்டத்தில் நடந்தது. வழக்கின் தன்மை என்னவென்றால் கணவன் மனைவி இருவரும் பார்வை இல்லாத தம்பதியர்கள். கணவருக்கு பிறவியிலேயே பார்வை கிடையாது. மனைவிக்கோ 12-ம் வகுப்பு முடிக்கவும் பார்வை போயிற்று. இருவருக்கும் திருமணம் நடந்த முதலில் மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. தம்பதியர்கள் சிகிட்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்குச் […]
Read More
  • By Magazine
  • |
– வழக்கறிஞர்  பி. விஜயகுமார் டி.என்.ஏ பரிசோதனையில் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கக் கூடாது பூனாவைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் செல்வந்தர்கள். ஒருவர் மற்றவருக்கு சளைத்தவர் அல்ல. கணவர் பெயர் அருண் ஃபிரோடியா, மனைவி பெயர் அபர்ணா ஃபிரேஷயா. இருவருக்கும் இரு ஆண்குழந்தைகள். அபர்ணா எப்போதும் அவருடைய ஆண் நண்பர்களுடன் அலைபேசியில் தொடர்பில் இருப்பவர். இது அருணுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் மனைவி அதை கண்டு கொள்ளவில்லை. நாளடைவில் மனைவியின் போக்கு சரியில்லை என்ற மனநிலையில் வந்தவர் தமது […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
– வழக்கறிஞர்  பி. விஜயகுமார் வாகன விபத்து வளர்ப்பு பிராணிகளுக்கு பொருந்துமா? கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் 2022-ஆம் ஆண்டு ஒரு வழக்கு நடந்தது. அதாவது ஒருவர் செல்லமாக வளர்த்து வந்த உயர்ரக நாய் மீது ஒருவர் தமது வண்டியை கவனக்குறைவாக ஒட்டி, அந்த நாய்க்கு விபத்து ஏற்படுத்தி அதை சாகடித்து விட்டார். இதனால் மனம் நொந்ந நாயின் சொந்தக்காரர் நீதிமன்றத்தை நாடி விபத்து ஏற்படுத்திய டாக்சி டிரைவர் மீது இ.த.ச பிரிவு 304 A (கவனக் குறைவால் இறப்பு […]
Read More
  • By Magazine
  • |
– வழக்கறிஞர்   பி. விஜயகுமார் எப்படியெல்லாம் சட்டம் வேலை செய்யுது பாருங்க! கண்ணன் மற்றும் ராதா இருவரும் கணவன் மனைவியர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஆனால் கண்ணன் பெயரில் ஏகப்பட்ட சொத்துக்கள் இருந்தன. வயது ஆகிக் கொண்டே இருந்தது. தமது காலத்திற்குப் பிறகு தமது சொத்துக்களை யாருக்காவது சென்றடைய வேண்டும் எண்ணத்தில் கண்ணன் ஒரு உயில் எழுதினார். தனது இறப்பிற்குப் பிறகு மனைவி ராதா உயிரோடு இருந்தால் அவரது சொத்துக்கள் அனைத்தும் ராதாவிற்கு செல்ல வேண்டுமென்றும், ஒருவேளை […]
Read More
  • By Magazine
  • |
வழக்கறிஞர் பி. விஜயகுமார் திறமையான சி.பி.ஐ ஹிமாச்சல் பிரதேசம் சிம்லா ஊரில் 2017-ம் ஆண்டு நடந்த சம்பவம் இது. 8 வயது பள்ளி பெண் குழந்தை மக்காச்சோளத் தோட்டத்து வழியாக நடந்து சென்று கொண்டிருந்த போது அவளைப் பின் தொடர்ந்த காமுகன் ஒருவன் அவள் கழுத்தை டவ்வல் கொண்டு இறுக்கி மயக்கமுறச் செய்து அவளை சீரளித்து கொன்று சென்று விட்டான். மறுநாள் ஹிமாச்சல் முழுக்க இந்த செய்தி தீயாய் பரவியது. டி.ஜி.பி தலைமையிலேயே விசாரணை முடுக்கி விடப்பட்டது. யார் […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
– வழக்கறிஞர்  பி. விஜயகுமார் சைபர் குற்ற வங்கி பணம் முடக்கப்படுவதும் விடுவிக்கப்படுவதும்Breezing and unbreezing bank Accounts involved cyber crime திடீரென வங்கியிலிருந்து நமக்கு ஒரு அழைப்பு வரும். உங்கள் வங்கிக் கணக்கின் பணம் முடக்கப்பட்டுள்ளது என்று. நாம் பயந்தபடி வங்கிக்கு  ஓடுவோம். விபரங்கள் கேட்போம். வங்கி மேலாளரோ கேரள மாநில சைபர் குற்றப்பிரிவு போலீசார் உங்கள் வங்கி கணக்கை முடக்க உத்தரவிட்டுள்ளதாக ஆணை பிறப்பித்துள்ளார்கள் என்று சொல்லுவார்கள். இதற்காக யாரும் பயப்படத் தேவையில்லை. […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
– வழக்கறிஞர் பி. விஜயகுமார் 1986-ல் நடந்த சம்பவத்துக்கு  நாற்பது வருடம் கழித்து தீர்ப்பா? இது ராஜஸ்தான் மாநிலத்தில் 1986-ம் ஆண்டு நடந்த சம்பவம். ஒரு ஆறு வயது ஒரு சிறுமியை ஒரு காமுகன் சிதைத்து விட்டான். பாலைவனத்தில் கஷ்டப்பட்டு ஒட்டகத்தில் வந்து சிறுமியின் தாய் போலீசில் புகார் செய்தார். வழக்கு நீதிமன்றத்திற்கு விசாரணக்கு வந்தது. அப்போது இந்த போக்சோ சட்டம், அதாவது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 கிடையாது. பாலியல் குற்றங்களுக்கு அப்போது […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
Irretrievable Marriage (நீடிக்கவே முடியாத திருமணம்) – வழக்கறிஞர் பி. விஜயகுமார் விவாகரத்து வழக்கு பல காரணங்களால் நீதிமன்றத்தில் கணவராலோ அல்லது மனைவியர்களாலோ தாக்கல் செய்யப்படுகிறது. பரஸ்பர விவாகரத்து கணவன்- மனைவி இவரும் சேர்ந்து தாக்கல் செய்வார்கள். பரஸ்பர வழக்கில் கணவன்- மனைவி இருவருக்கும் விவாகரத்து கிடைத்து விடும். ஒரு தரப்பினர் மட்டும் தாக்கல் செய்யும் வழக்குகளில் விவாகரத்து எளிதாக கிடைக்காது. ஏனென்றால் மறுதரப்பு கட்சிக்காரர் விவாகரத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பார். சில வழக்குகளில் நீதிமன்றம் கணவன் – […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
– வழக்கறிஞர் பி. விஜயகுமார் ஜாதி மாறுவதற்கு சட்டத்தில் இடம் உண்டுமா?                 ஜாதி என்பது ஒருவருக்கு மேல் இருக்கும் சமுதாய அடையாளமேத் தவிர எவருடைய உடலிலும் அடையாளப்படுத்தியிருக்கும் ஜாதியின் மரபணு கிடையாது. ஆதலால் விஞ்ஞானத்தில் ஜாதிக்கு இடமில்லை. புளியமரத்தை நாம் பனைமரம் என்று கூப்பிட்டாலும் அதற்கு ஒன்றும் தெரியாது. அது அப்படியே பூமியில் நின்று கொண்டுதான் இருக்கும். இவைகளுக்கு வெளியிலிருந்து அவைகளுக்குத் தெரியாமலேயே நாம் ஒரு அடையாளத்தை கொடுத்திருக்கிறோம் அவ்வளவு தான். இதே போன்று தான் […]
Read More