உண்டி கொடுப்போர்
  • By Magazine
  • |
– கை. செல்லத்தங்கம் நகரின் மையப்பகுதியில் செயல்படும் ஒரு பிரபல இதயநோய் மருத்துவமனை உள்ளது. மாடியில் தான் மருத்துவர் அறை. அங்குள்ள ஹாலில் தான் வெளிநோயாளிகள் காத்திருக்க வேண்டும். மருத்துவரோ வளர்ந்து வரும் இதயநோய் சிறப்பு மருத்துவர். பல்வேறு மருத்துவமனைகளுக்கு சிறப்பு ஆலோசனைக்காகவும், அறுவை  சிகிச்சைக்காகவும் சென்று விடுவார். பார்வை நேரம் என்பது பிற்பகல் தான். மூன்று மணி என்று நேரப்பலகையில் போட்டு இருந்தாலும் இரவு வரை காத்திருக்க வேண்டும். அவரது தேவை பல மருத்துவமனைகளுக்கு தேவைப்பட்டது. […]
Read More
உள்ளுணர்வு வேர்கள்
  • By Magazine
  • |
– ஓஷோ மாசேதுங் சிறுவனாக இருந்த போது அவருடைய தாயார் ஒரு சிறிய தோட்டம் வைத்திருந்தார். அந்தப் பகுதியில் அவருடைய தாயார் தோட்டத்தில் பூத்த மலர்களைப் போல அழகான மலர் வேறு யார் தோட்டத்திலும் இல்லை. அவர் அந்தப் பூக்களை மிகுந்த நேசத்தோடு வளர்த்தார். அவருடைய அன்பினால் அந்த பூக்கள் தனித்தன்மையான பரிசைப் பெற்று தந்தன. மாசேதுங் இன்னும் குழந்தையாக இருந்தபோது, அவர் தாயார் நோய்வாய்ப்பட்டார். ஆனால் அவர் தன்னுடைய நோயைப் பற்றியோ அல்லது அவரை நெருங்கிக் […]
Read More
வதந்தீ
  • By Magazine
  • |
– குமரி எழிலன் மதியம் ஒன்றரை மணிக்கு குளத்ல போயி குளிக்காட்டா குடியாமுழுகியாப் போகும்….முணுமுணுத்தாள்…தர்மப் பத்தினி… கோசலை “வீடு சொல்லி கேக்காட்டா ஊரு சொல்லி கேக்கும்” என்ற சொலவடை வந்து விழுந்திருக்கும். “முங்கிக் குளிக்கிற சுகம் டவுன்ல பொறந்த உனக்கு எப்பிடித் தெரியும்” பதிலுக்கு முனங்கிக் கொண்டே பைக்கில் பறந்தேன் நான்.. குளத்தின் தொண்ணூறு விழுக்காடு நீர்ப்பரப்பு தாமரை இலை கொண்டு    மூடப்பட்டிருந்தது.பத்து விழுக்காடு இடம் ஆலமர நிழலால் தண்ணீரை குளிரச் செய்தது….. தண்ணீரின் அடி ஆழம் […]
Read More
டீக்கடை
  • By Magazine
  • |
– கை. செல்லத்தங்கம் காலை மணி ஒன்பது எப் எம்மில் வானொலி திரைப்பட பாடல்கள் நேயர் விருப்பம் கேட்டுக் கொண்டிருக்கிறது. அந்த டீக்கடையின் வெளியில் உள்ள பெஞ்சில் ஒருவர் தினத்தந்தி நாளிதழை படித்துக் கொண்டிருக்கிறார்,”அண்ணே ஒரு டீ போடுங்க” என்றபடி. நான் எத்தனை தடவை சார் சொல்றேன். நான் உங்களை விட சின்னவன், “தம்பின்னு சொல்லுங்க சார்” என்றார் டீக்கடை முதலாளி ராஜா. புன்சிரிப்போடு நானும் சரி தம்பின்னு சொல்லிக்கிட்டு கடையில் கூட்டமில்லாததால் குடும்பத்தைப் பற்றி கேட்டேன். […]
Read More
வருணின்  சாகசம்
  • By Magazine
  • |
– காளீஸ்வர் அன்றைக்கு ராத்திரி 10 மணி ஆனதுக்கு அப்புறம் கூட வரும் டிவிய அணைக்காம கார்ட்டூன்ஸ் பார்த்துகிட்டே இருந்தான். அம்மா அவன திட்டி நாளைக்கு திங்கட்கிழமை ஸ்கூலுக்கு போகணும் போய் சீக்கிரம் தூங்குற வேலைய பாரு அப்படின்னு பெட்ரூமுக்கு விரட்டி விட்டாங்க. போகும்போதுதான் அருணுக்கு நாளைக்கு டீச்சர் கொடுத்த ஹோம் ஒர்க் ஞாபகத்துக்கு வந்தது. வழக்கமா ஏதாவது அஞ்சு பக்கம் எழுதணும் அப்படின்னா கூட, அம்மா அப்பா கிட்ட கேட்டு எதையாவது எழுதி கொடுத்துவிடுவான். இந்த […]
Read More
பொரி உருண்டை
  • By Magazine
  • |
– கை. செல்லத்தங்கம் வெளியூரில் இருக்கும் என் மகனிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தேன். அம்மா உங்க பேரன் உங்ககிட்ட பேசணுமாம் கொடு என்றேன். என்பேரன் ஆதினியன் பாட்டி எனக்கு பொரி உருண்டையும் காசிமுறுக்கும் வேண்டும் என்றான். என்னப்பா கேட்கின்றாய் என்றேன். எங்க அப்பாவுக்கு அவர்கள் சின்னப்பிள்ளையாய் இருக்கும் போது அவங்க தாத்தா பொரி உருண்டையும் காசிமுறுக்கும் தானே வாங்கிக் கொடுத்தார்களாம். அது எனக்கும் வேணும். தாத்தாக்கிட்டே சொல்லி வாங்கித் தாங்க. நாங்க அடுத்த வாரம் அங்கே வருவோம்ல […]
Read More
  • By Magazine
  • |
– சிவ. விஜயபாரதி. கும்பகோணம் அந்த வாசனை அவனை ஏதோ செய்தது. அவர்கள் மீதிருந்து வருகின்ற அந்த மணம் அவன் மூக்கினுள் நுழைந்து இதயம் வருடியது.அது என்ன வாசனை? இந்த ஐந்து பேர் மீது மட்டும் எப்படி வருகிறது இந்த வாசனை?குறைவாகவும் இல்லை.அதிகமாகவும் இல்லை. அருகில் அமரும் நமக்கு மட்டும் மிக மெல்லியதாக பரவி கொஞ்ச நேரத்தில் காணாமல் ஆகிவிடுகிறது.எனக்கு மட்டும்தான் அப்படி தோன்றுகிறதா? இவர்களின் மேல் வரும் இவ்வாசனை எனக்கு மட்டும்தான் தெரிகிறதா? வேறு யாருக்காவது […]
Read More
செஞ்சோற்றுக்கடன்
  • By Magazine
  • |
கை. செல்லத்தங்கம் ராமசாமி… ஏ.ராமசாமி என்னப்பா கூப்பபிட்டது கூட காதில் கேட்காமல் அப்படியென்ன யோசனையில் போய்க்கிட்டு இருக்க… ஒன்றுமில்லண்ணே… வயலுக்கும் போய்க்கிட்டு வாறேன்… ஆமா அது தான் தெரியுதே… நான் என்ன யோசனைன்னு கேட்டேன். அதாண்ணே பிரியா படித்து முடிச்சுட்டா. பக்கத்து இங்கிலீஷ் மீடியம் ஸ்கூலுக்கு டீச்சராகப் போறா. கலியாணம் பாக்கணும் இல்லா அதை தான் நினைச்சிக்கிட்டே வந்தேன். நல்ல யோசனை தானப்பா உனக்கு. நான் ஒண்ணு சொல்லட்டுமா… சொல்லுங்கண்ணே… பேசாம உன் தங்கச்சி பையன் கண்ணனுக்கு […]
Read More
மான்விழி டீச்சர்
  • By Magazine
  • |
N.செல்வி ஞானதாஸ் மான்விழி அழகிய புன்னகையுடன் வலம் வந்தாள். அவள் வேலை பார்க்கும் பள்ளியில். ஆசிரியைகளுள் அவளைத்தான் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். அனைவர் மனதையும் கவர்ந்திருந்தாள். அவளது மனதில் மென்மையை அவளது பேச்சே பிரதிபலிக்கும்.   பள்ளியில் பெரும்பாலான குழந்தைகள் எனக்கு வகுப்பு ஆசிரியராக மான்விழி ஆசிரியை வர வேண்டுமென தலைமை ஆசிரியரிடமே கேட்டு விட வேண்டும் என தலைமை ஆசிரியரின் அறையின் பக்கம் வரை சென்று விட்டு ஓடி விடுவார்கள் அந்த அளவிற்கு குழந்தைகளுக்கு மான் […]
Read More
  • By Magazine
  • |
கை. செல்லத்தங்கம் தாத்தா, அப்பா வந்தாச்சு என்று பேத்தியின் குரல் கேட்டு வாசலுக்கு வந்தார் ராஜன். வாப்பா எப்படியிருக்க என்ற தந்தைக்கு நான் நல்லாயிருக்கேன். நீங்கள் எப்படி இருக்கீங்க என்று கேட்டபடி தந்தையை லேசாக கட்டிப்பிடித்தான் கோகுல். நில்லுப்பா ஆரத்தி எடுக்கிறேன், அம்மா. எனக்கும் சேர்த்து எடுங்க பாட்டி என்ற பேரனுக்கும், மகன், மருமகள், பேத்தி சேர்ந்தே ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் வந்தனர். நான் தான் மூணு மாசத்துக்கு ஒரு தடவை வாறேனே… இதுக்கு போய் என்னம்மா […]
Read More