அறிவு சமூகத்திற்காக ஓயாது உழைக்கும்  விக்கிபீடியா
  • By Magazine
  • |
– சே. சுபாஷினி இன்று நாம் ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் உடனடியாக இணையததில் தேடுகின்றோம். சுமார் 25 வருடங்களுக்கு முன்னால் நூலகங்கள்தோறும் சென்றால்தான் நம்மால் தகவல்களை அறிந்து கொள்ள முடியும். ஆனால் கணினியுகம் இணையத்தை அறிமுகப்படுத்தியப்பிறகு. விக்கிபீடியா எனும் மந்திரக்காரன் அறிவார்ந்த தேடலுக்கான நேரத்தை நம் உள்ளங்கைகளில் கொடுத்துவிட்டான். அந்தவகையில் மாணவர் முதல் பெரியவர்வரை அன்றாட வாழ்வில் தினமும் விக்கிபீடியாவை பயன்படுத்தாமல் யாரும் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவு விக்கிபீடியா மக்கள் வாழ்வில் […]
Read More
விடுதலைக் கலைத்தோழன் முரசு ஆனந்த்
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் ஜனவரி 7ஆம் நாள் சென்னைப் பயணத்தில் ரெஜின்ரோஸ் நிர்வகிக்கும் சென்னை தியேட்டர் அக்காடமியில் நான் சிறுகதை ஆசிரியர் அனலி செல்வராஜ் நாடகக் கலைஞர், தஞ்சை விஜி ஆகியோர் சந்தித்தோம். அப்போது நாடகப் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாடக ஒத்திகையின் சிறுபகுதியைப் பார்க்கும் வாய்ப்பை விஜயகுமார் எனக்கும் செல்வராஜ்க்கும் வழங்கினார். ஒத்திகையைப்பார்த்தபின் கலைஞர்களிடம் பேசும்போது எங்கள் நாடக நினைவுகளை பகிர்ந்துகொண்டபோது முரசு கலைக்குழுவில் நாங்கள் நிகழ்த்திய நாடகங்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டோம். பின் அலுவலகம் […]
Read More
புத்தகம் வாசிப்பு
  • By Magazine
  • |
முனைவர் ப.சார்லஸ் தொட்டு பார்த்தால் அது வெறும் காகிதம் தொடர்ந்து படித்தால் வாழ்வில் வெற்றியின் ஆயுதம் அதுவே புத்தகங்கள் ஆகும் .”மனிதனுடைய ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு புத்தகங்கள்” தான் என்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.                 புத்தகங்கள் மனிதனின் மிகச் சிறந்த நண்பர்கள்.ஒரு நல்ல புத்தகம் நூறு நல்ல நண்பர்களுக்கு சமம் என்றார் நம் முன்னாள் குடியரசுத் தலைவர் கி. றி. யி. அப்துல் கலாம். உலகின் பெரிய மேதைகள் அனைவரும் புத்தகம் வசிக்கும் பழக்கத்தின் மூலம் உருவானவர்களே. […]
Read More
விக்கிப்பீடியாவில் அயராது செயலாற்றும் தமிழ் எழுத்தாளர்
  • By Magazine
  • |
– காளீஸ்வர் நீங்கள் இணையத்தில் ஒரு தாவரத்தின் புகைப்படத்தை தேடும் போது நூற்றுக்கணக்கான முடிவுகள் உங்களுக்கு காண கிடைக்கும். ஆனால் அந்த அனைத்து புகைப்படங்களையும் உங்களால் ஆராய்ச்சி கட்டுரைகளுக்கோ, புத்தகங்களுக்கோ, அவ்வளவு ஏன் பள்ளிக்கூட செயல்பாடுகளுக்கு கூட நேரடியாக பயன்படுத்த முடியாது. இத்தகைய புகைப்படங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்டவர்களால் அல்லது நிறுவனங்களால் காப்புரிமை பெறப்பட்டவை.                 ஆனால், உலகம் முழுவதும் இருக்கக்கூடிய மக்கள் தகவல்களையும் தரவுகளையும் அறிந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கில் விக்கிப்பீடியா அறக்கட்டளை தொடங்கப்பட்டது. விக்கிப்பீடியாவில் […]
Read More
உயர்ந்த கனவு
  • By Magazine
  • |
– சஜிபிரபு மாறச்சன் குடியரசு தலைவர் அப்துல்கலாம் தான் போகும் இடமெல்லாம் கனவு காணுங்கள் என்றார்.  திரும்ப திரும்ப ஒரே கனவையே பார்த்தால் சக்தி வாய்ந்த எண்ணங்களாக உருவெடுத்து உங்களை செயலாற்றல் மிக்க மனிதராக உயர்த்தி விடும் என்று கூறினார். அப்துல்கலாம் அவர்களுக்கு மட்டும் கனவுகள் நடந்து விடும் என்று நினைக்காதீர்கள். உங்களாலும் நிச்சயமாக நீங்கள் நினைத்ததை அடைய முடியும். இதற்கு எடுத்துக்காட்டு ஒன்று பார்ப்போம். வீட்டில் தோட்டம் வைத்திருந்தால் வெண்டைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், கத்தரிக்காய் இக்காய்கறிகள் […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA -வின் 295-வது கருத்தாய்வு கூட்டமானது திரு.அருள்தாஸ் ஆசான் தலைமையில் மரு.கமலகண்ணன், மருத்துவர்.த.இராஜேந்திரன், திரு.கே.செல்வநாதன் ஆசான், திரு.இராஜன் ஆசான் ஆகியோர் முன்னிலையில் 03.01.2026 அன்று மதியம் சுமார் 2.00 மணியளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் திரு. இராஜன் ஆசான் அமுக்கூரா சூரணம் செய்முறையை தெளிவாகக் கூறினார். அடுத்ததாக மரு.கமலக்கண்ணன் அலர்ஜிக்கு எளிய கசாயம் செய்முறையையும், கருப்பை நோய்கள், சதையடைப்பு, சூதகக்கட்டு இவற்றுக்கு எளிய சூரணம் செய்முறையையும், மாதவிடாய் ஒழுங்கின்மை, உடல் பருமன் மாற […]
Read More
புல்லன்குழி செம்முதல் அபூபக்கர் ஆசான்
  • By Magazine
  • |
பண்டை சேரநாட்டின் தெற்குபகுதியில் ஆய்நாடாகவும், வேணாடாகவும் வரலாறு கண்ட தற்போதைய குமரிமண்ணானது , குறிப்பாக குமரி மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள், தமிழரின் உயரிய கலைகளிலொன்றான வர்மக் கலையின் முக்கிய மையங்களாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக போரில் தங்களைப் பாதுகாக்கவும், எதிரியை முடக்கவும் இதைப் பயன்படுத்தியதோடு, காயமடைந்தவர்களை குணப்படுத்தவும் இதே அறிவு பயன்பட்டது. இதனால் போரும் மருத்துவமும் இணைந்த ஒரு தனித்துவ மரபு இங்கு உருவானது. இந்த உடல்-மனம்-திறன் வளர்ச்சியோடு தொடர்புடைய இன்னொரு பெரிய சிந்தனைத் தளம் ஆயகலைகள் […]
Read More
கல்வியின் வரலாறும் வளர்ச்சியும்
  • By Magazine
  • |
பழனி அரங்கசாமி பிறப்பினாலும், வளர்ச்சியினாலும், தோற்றத்தினாலும் மனிதர் அனைவரும் ஒன்றே என்றாலும், தனி ஒருவன் கல்வி கற்று அறிவும் ஆற்றலும் பெற்று உயர்ந்து நிற்கும் போது, அவனை உலகம் மதித்துப் போற்றுகிறது. எனவே சமுதாயத்தில் ஒரு தனிமனிதனின் பெருமைக்கும், புகழுக்கும், அறிவுக்கும் கல்வி ஒரு தலையாய காரணம் ஆகும். அறவுடையோன்வழி அரசும் செல்லும் என்பது அசைக்க முடியாத உண்மை. கிறிஸ்துவத்துக்கு ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்ட கி.மு 15- ஆம் நூற்றாண்டினை இந்திய வரலாற்றில் வேதகாலம் என்று குறிப்பிடுவர். […]
Read More
தமிழர் தற்காப்பு கலையான   களரிக்கு சர்வதேச அங்கீகாரம்
  • By Magazine
  • |
அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் அவர்கள் வலியுறுத்தல் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில், தமிழர்களின் வீரப் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் “தமிழர்களின் தற்காப்பு கலைகளைப் பாதுகாப்போம்” என்ற முழக்கத்துடன் களரி கலை விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழர் மரபு தற்காப்புக் கலைகளின் பெருமையை மீண்டும் சமூகத்தின் மையத்துக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்த இந்த விழா, ஒரே நேரத்தில் ஒரு போட்டி நிகழ்வாகவும், ஒரு பாரம்பரிய விழிப்புணர்வு நிகழ்வாகவும் அமைந்தது. இன்றைய நவீன காலகட்டத்தில் பல்வேறு வெளிநாட்டு […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
 SAVKIA-வின் 249-வது கருத்தாய்வுக் கூட்டமானது திரு.இராஜன் ஆசான் தலைமையில் மரு.கமலக்கண்ணன் ஆசான், திரு.கே.செல்வநாதன்  ஆசான் ஆகியோர் முன்னிலையில் 06.12.2025 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில், மரு.கமலக்கண்ணன் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சூரணம் செய்முறையையும், வாதநோயை குணப்படுத்தும் சூரணம் செய்முறையையும் தெளிவாகக் கூறினார். திரு.இராஜன் ஆசான் சூலை-18, வாதம், மார்புவலி, தோள்பட்டை வலிக்கும், தாதுபுஷ்டிக்கும் எட்டி விதை மாத்திரை செய்முறையை கூறினார். திரு.செல்வநாதன் ஆசான் இருமலுக்கான மாத்திரை […]
Read More