கவிதை
  • By Magazine
  • |
பொறியாளர் சண்முக வடிவேலு, திருச்சி புலிகளின் உறுமலைப் புவியெங்கும் பரப்பியவன்! தமிழ்ப்பேரரசின்        தகைசால் பாணன்! பெரியார் பாசறையில்                முகிழ்த்த கவிமலர்! தேசியத்தலைவனின் தனித்தப்புகழை இசைத்தமிழ் வடிவமாக்கி பகல் இரவாகப் பாடிய இறவாப்பாடகன்!      தேனிசை செல்லப்பா! உலகத்தமிழரின் அடையாளமாய் நீ செல்லப்பா!  வீரவணக்கம் தோழர்!
Read More
நின்று துடிக்கிறது
  • By Magazine
  • |
– சிவ. விஜயபாரதி அதீத குரலெடுத்து கத்தி பாய்கின்றன கணைகள் விழுந்து வெடிக்கின்றன குண்டுகள். வீடுகளுக்குள்ளேயும் பதுங்கு குழிகளுக்குள்ளேயும் இருக்கச்சொல்லி எச்சரிக்கை செய்கின்றன சைரன் ஒலிகள். எதற்காகவும் யாருக்கும் அஞ்சவும் அடிபணியவும் மாட்டோமென எதிர்ப்புக் குரலை அதன் சகாக்களுடன் குண்டுகள் பொழிந்து நசுக்கியது. எதிர் குரல் சூளுரைத்த காணொளிகளை மறுபடி மறுபடி ஒளிபரப்புச் செய்கின்றன தொலைக்காட்சிகள். இடிபாடுகளில் சிக்கிய உடல்கள் இரத்தத்தில் தோய்ந்திருந்தது.
Read More
பெருமை மின்னும் ராசா
  • By Magazine
  • |
– சிவ. விஜயபாரதி மழிக்காத தாடி அழுக்கேறியச் சட்டை பழுப்பேறிய தலை அப்பாவின் அடையாளம். நைந்த வாழ்வை ஊக்குக்கோர்த்து பிய்ந்த செருப்போடு அணிந்திருப்பார். பண்டிகை நாட்களில் புலர்வதற்குள் செல்பவர் யாரிடம் கடன் வாங்குவாரோ துண்டின் ஒரு முனையில் மளிகை சாமான்களை உருண்டையாக  மூட்டைபோல் கட்டி முதுகுப்பக்கம் தொங்கவிட்டு கையில் ஆட்டின் தலையோடு பெருமை மின்னும் ராசா போல உறுமத்தில்தான் வீடு வருவார். நாங்கள் உறங்குவதாய் படுத்திருக்கும் இரவுகளில் நீளும் வறுமை பட்டியலை அம்மாவின் காதுகளுக்குச் சொல்லும் அவர் […]
Read More
கவிதை
  • By Magazine
  • |
குளச்சல் ரவிச்சந்திரன் குடும்பம் என்னும் மலர் வளையத்தில் வாசம் வீசும் அன்பு தேவதைகளே பெண்கள், தோற்றுப் போனது தோல்விகள் உண்மைதான், காலங்காலம் தொட்டு கிழக்கும் மேற்கும் இதுவரை சமநீதி கண்டதுண்டோ?… இடப்பாகம் அளித்து-ஈசன் அர்த்தநாரி ஆகியும், பூசையோடு பெண்மை மறுக்கப்படுவது மாபெரும் உண்மை, இந்த ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் தியதி அன்று,,,, “உலகெங்கும் பெண்ணிற்கு எதிரான வன்முறைகள் இன்று இல்லை” யென நாளை செய்தி வந்தால்…… வெற்றிதான்.
Read More
கவிதை
  • By Magazine
  • |
பெட்ரோல்,டீசல் விலை!      எவ்வளவு என்றாலும்…..      உயர்த்திக் கொள்ளுங்கள்!      ஏனெனில் எங்களுக்கு      உலகம் தெரியாது. சமையல் எரிவாயு விலை!      எவ்வளவு என்றாலும்….      உயர்த்திக் கொள்ளுங்கள்!      ஏனெனில் எங்களுக்கு      சிந்திக்கத் தெரியாது. அந்தவரி இந்தவரியென்று,      எத்தனை வரிகளுண்டோ…..      வசூலித்துக் கொள்ளுங்கள்!      ஏனெனில் நாங்கள்      குட்டக் குட்ட குனிபவர்கள். வங்கிக் கடன்கள்!      எத்தனை லட்சங்கோடி என்றாலும்….      தள்ளுபடி செய்யுங்கள்!      ஏனெனில் […]
Read More
  • By Magazine
  • |
– பராந்தகன் தொடர்ந்து விண்ணிலே வேட்டுச் சத்தம்.. வானம் திகைத்துத்தான் போனது. பண்டிகைப் பொழுதும் இல்லை , திருமணக் கொண்டாட்டம் இத்தனை நாளா? பெருவாழ்வு வாழ்ந்தவர்களின் கல்யாண சாவா! வானின் அகண்ட பார்வையில் அகப்பட்டது, கனவைச் சுமந்த பிஞ்சுகளும் அவர்களை அரவணைத்த கட்டிடங்களும், அன்றாட அலுவல்களில் திளைத்த மாந்தர்களும் அகால மரணம் அடைந்த போர்காலம் இது என்று
Read More
  • By Magazine
  • |
கே.பி.பத்மநாபன் கம்பனது காவியம் தான் காசினியில் மாந்தக்                 கற்பனையின் கோட்டைக்குத் தூணாகிடும் காண் அம்பலத்தில் கற்புத்தீ ஆர்த்தெழுந்த காதை                 அளித்திட்ட இளங்கோவின் சிலம்பும் நற்றூண்தான் நம்பலமாம் நன்னெறியின் வாழ்வியலை ஈந்த                 நன்மறையாம் வள்ளுவரின் வள்ளுவமும் தூண்தான் உம்பரும்தாம் போற்றுமுயர் துறவுரைத்த நூலாம்                 உயர்வுமணி மேகலையோ ஞானமிகு தூண்தான்! அம்புவியில் மழலையென அவதரித்த நாளாய்                 அறிவூட்டும் நூல்களெலாம் அறந்தாங்கும் தூண்கள் செம்புலப்பெய் நீரெனவே சேர்த்தே நாம் அணைத்தால்                 சிந்தனையின் கோட்டையெலாம் […]
Read More
  • By Magazine
  • |
கமல. அருள் குமார்                                          இளகும் மனம் சிலருக்கு – அன்பை விலக்கும் குணம் சிலருக்கு… பழகும் மனம் சிலருக்கு – நட்பை பகைக்கும் குணம் சிலருக்கு… உதவும் மனம் சிலருக்கு – உறவை உடைக்கும் குணம் சிலருக்கு… உழைக்கும் மனம் சிலருக்கு – தீங்கு இழைக்கும் குணம் சிலருக்கு… திறக்கும் மனம் சிலருக்கு – கதவை அடைக்கும் குணம் சிலருக்கு… இணைக்கும் மனம் சிலருக்கு – காதலைப் பிரிக்கும் குணம் சிலருக்கு… காக்கும் மனம் சிலருக்கு – […]
Read More
கவிதை
  • By Magazine
  • |
தாங்கிடத் தண்ணீர் இருந்தால் தான் தாமரையும் ஓங்கிடக் கதிர் வாங்கி மலரும்.. தடுக்கிடத் தடைகள் இருந்தால் தான் முடிந்திடும் வெற்றியும் முயற்சிக்கு கிடைத்த பரிசாகத் தெரியும்.. தாங்கவும் சிலர்.. தடுக்கவும் பலர்.. வாழ்வின் வெற்றிக்கு வேறென்ன வேண்டும் ?? கமல. அருள் குமார்
Read More
  • By Magazine
  • |
நா.சுயம்பு வலிந்து வருவது புன்னகை அல்ல; உன்னுள் வழிந்து வருவதே புன்னகை! கனிந்து ஊற்றெடுக்கும் கனியின் சாறு போல் உவந்து ஊற்று எடுப்பதே உள்ளத்தின் புன்னகை! மழையாய் பொழிவதுவானத்தின் புன்னகை; தென்றலாய் வீசுவது காற்றின் புன்னகை! அமுதமாய் இனிப்பது அம்மாவின் புன்னகை ; அறியாமை விலக்குவது ஆசிரியர் புன்னகை! வெற்றியில் குளிப்பது வீரத்தின் புன்னகை ; வியர்வையில் குளிப்பது உழைப்பின் புன்னகை! மொழியில் மலர்வது கவிதையின் புன்னகை; விழியில் மலர்வது காதலின் புன்னகை! கடிகாரம் காட்டுவது காலத்தின் […]
Read More