• By Magazine
  • |
பெண்ணில்லா வாழ்க்கை… மண்ணில்லா பூமி… கண்ணில்லா மனிதர்கள் இதை… எண்ணாமலே வண்ணமிழந்து வாழும் சூட்சுமம்… வாழ்க்கையின் இழப்பு. முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள் என்னும் நூலிலிருந்து
Read More
பெண்களைப் பேணுவோம்
  • By Magazine
  • |
பெண்ணற்ற வாழ்க்கையும் கண்ணற்ற முகமும் ஒன்று பெண்களைப் பேணுவோம் கண்கள் தெளிவாகும் கசடர்கள் எழுதி வைத்த பெண்ணடிமை வார்த்தைகளை தீயிட்டு கொழுத்திடுவோம் ஆக்கிப்படைத்து நமை ஆளுகின்ற இயற்கையும் பெண்ணாகும்… போற்றி வளர்த்து நமை பூத்துக்குலுங்க வைக்கும் நீரும் பெண்ணாகும் காற்றாய் நாம் வாழ கணக்கறிந்துள்ளே ஊற்றி வெளியேறும் உட்காற்றும் பெண்ணாகும் ஆற்றி உடலுள்ளே… ஆற்றலாய் நிற்பவளும் பெண்ணாகும்… நுட்ப அறிவாலே நூறாண்டு சென்றாலும் மாறாத நுண்ணிமையும் பெண்ணாகும்… ஆண் பெண் என இருவரையும் தான் சுமக்கும் எண்ணாயிரம் […]
Read More
மனித நேயம்
  • By Magazine
  • |
புண்பட்ட நெஞ்சம் தேறுதல் பெற்றது மழலை பேச்சால் காத்திருப்பதும்  ஏமாறுவதும் சகஜந்தான் காதல் பாதையில் உழைப்பும் நம்பிக்கையும் இருந்தால் புறமுதுகு காட்டும் தோல்வி எத்தனை தலைமுறைக்கு தாக்கம் தரப்போகிறதோ மதுவின் ஆட்டம்? படிப்பிற்கும் அறிவிற்கும் சம்பந்தம் இல்லாமல் அமைந்து விடுகிறது பலருக்கு வேலை எத்தனை கொலைகள் உறவுகளுக்குள் எங்கே போனது மனித நேயம் எல்லோருக்கும் கிடைக்கட்டும் உணவு அதன்பின் பேசுவோம் ஜனநாயகத்தைப் பற்றி கடும்பசி பார்ப்பதில்லை உணவின் சுவையை கட்சி மாநாடு நல்ல கூட்டம் பிரியாணி வழங்குமிடத்தில் […]
Read More
நீர், வன, நிலவளம் காப்போம்!
  • By Magazine
  • |
– கே.பி.பத்மநாபன் நீர்நிலைகள் நிலத்தினிலே இல்லாதாயின்                 நெடுமரங்கள் நீள்வயல்கள் மாய்ந்து போகும் ; கார்மேகம் திரண்டெழுந்து மழை பெய்தற்குக்                 காடுகளே காரணமென்றறிதல் வேண்டும்; நீர்வளமும் நிலவளமும் ஓங்குதற்கு                 நிச்சயமாய் வனவளத்தைக் காத்தல் வேண்டும்; சேர்ந்திந்த முவ்வளமும் சிறந்திட்டால் தான்                 செகத்தினிலே உயிர்த்துடிப்பை காண்போம், தின்னம்! ஊர்வெளியில் வீணாகும் நீரை எல்லாம்                 ஊருணியில் சேமித்தால் இயற்கை அன்னை மார்பினிலே சுரந்திடுமே உயிர்நீர் என்றும்;                 மண்செழிக்கும் மழைநீரை ஏரி தன்னில் சேர்த்திட்டால் […]
Read More
மழையின் பெருமை!
  • By Magazine
  • |
கருமேகம் சூழ்கையிலே கழனிமகன் உள்ளம்      கதிரோனைக் கண்டலரும் கமலம்போல் துள்ளும் ; தருக்களுடன் தரைவாழும் இன்னுயிர்கள் யாவும்      தமை மறந்த மகிழ்வாலே தாமாகக் கூவும் ; ஒருதுளிதான் விசும்பின் நீர் வீழ்ந்திட்ட போதில்      உலர்ந்திட்ட பாறையிலும் உயரும்புல் காடு ; நெருப்பெனவே வெய்யோனால் வெந்திட்ட மண்ணும்      நிமிடத்துள் தான் குளிர்ந்து சுகமுண்டு பண்ணும்! அருமகிழ்தாய் மன்னுயிரை வாழ்விக்கும் மாரி      அகத்துனவும் அரும்தாக நீருமென ஆகி கருவறைக்கும் கல்லறைக்கும் இடைப்பட்ட வாழ்வைக் […]
Read More
தேவை
  • By Magazine
  • |
செந்நிற கதிர்கள் பரவ புலரத் தொடங்கியது காலை மணற்பரப்பில் நிரம்பிய காலடித் தடங்களுடன் சிதறி கிடக்கின்றன தீர்ந்துபோன மதுபோத்தல்கள் படகுகள் அருகில் வலையில் சிக்கிய மீன்கள் ஒவ்வொன்றாய் எடுத்த பரதவர்கள் விரிக்கப்பட்ட படுத்தாக்களில் வீசி கொண்டிருக்கின்றனர் நெகிழிப்பைகளில் ஆளுக்கொரு கூறுகளாய் அள்ளி நிரப்பினர் விலை முடிக்கப்பட்ட மீனின் வலியை துள்ளிக்கொண்டிருந்த மீனைப்பார்த்த நிகரன் “உசுரோடருக்குப்பா! இத நம்ம வளக்குலாம்பா? என்றதும் உறைந்திருந்த அம்மீனின் கண்களில் விழுந்தது எங்கிருந்தோ பறந்து வந்த இதய வடிவிலான இலை. அலையின் சாரலோடு […]
Read More
உத்திரத்தில் நிற்கின்றது பண்டிகை
  • By Magazine
  • |
பண்டிகைநாளின் முந்தைய நாட்களிலான முடிவிலா நகமென நீளும் முள்படுக்கையின் மீது நடந்து கடக்க முயலுகிறான் ஒரு அப்பன் மகனோ மகளோ ஆசைபட்டதை வாங்கவில்லை எனும் கோபத்தோடும் அழுகையோடும் பலூன்களாய் மிதக்கிறார்கள் வீட்டிற்குள் அவ்வப்போது வந்து மோதவும் செய்கிறார்கள் இல்லத்தரசியோ அடுக்கி வைத்திருக்கும் கையாலாகாததை வாரிவாரி அறைகிறாள் அவள் அவ்வாறு அறைவது பண்டிகையின் வெளியிரைச்சலையும் தாண்டி வெடித்து பறக்கிறது எருக்கம்பஞ்சின் தன்மையோடு புரளும் குடும்பவன்முறையின் குலுக்காம்பெட்டிக்குள் சேர்ந்து குலுங்குகிறார்கள் பண்டிகையும் அப்பனும் தூரத்திலிருக்கும் அம்மா நினைத்துக் கொண்டிருக்கிறாள் “இந்த […]
Read More
அருகிலிருக்கும் அன்பு
  • By Magazine
  • |
பக்கத்திலிருப்போரின் அன்பைத் தக்க வைக்க ஏதாவது செய்துவிடுங்கள் அதாவது என்ன வேண்டும் என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாய் உங்களை வெட்டித் தின்றுக்கொண்டிருப்பதை நீங்கள் மனம் உவந்து ஏற்றுக் கொள்ளக்கூடாது தெரியாததாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும் உங்களுக்குத் தெரியாது என்பதை நீங்கள் தெரியப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும் அதாவது அது ஒரு தொடர் செயல்பாடாகும் சீராய் துடித்துக்கொண்டிருக்கும் இதய முள்ளின் இசை இரவின் அதிர்விலும் வெளிப்படும் அல்லவா அந்த நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும் யாமத்திற்கும் வைகறைக்கும் இடையில் எழும்பும் அருகில் துயிலும் […]
Read More
  • By Magazine
  • |
காதல் இயற்கையானது தினம்தினம் புதிது புதிதாய் பூப்பூப்பதுபோல் பூக்கும் காதல் இயற்கையானது.. அதனை தியதிச் சிமிழுக்குள் சிறைவைக்க நினைத்தது யார்? எங்கோ யாரோ ஒருவரின் காதல் வென்ற தினமாம்.. தினம்தினம் வெல்லும் காதல்பூக்கள் சிலபூக்கள் புயல் வேகத்தில் பறந்திடுதல் உண்டுதான்.. ஆனாலும் தினம்தினம் காதல் தினமே.. பெப்ருவரி 14 அவர்களுக்கு. இனி காதலர்களைச் சேர்த்துவைக்க தாலியும் கையுமாய் அலையும் கூட்டத்துக்கு தினம்தினம் வேலை வைப்போம் வெல்க காதல் காதல் இயற்கையானது தியதிச்சிமிழ்கள் இனி அவர்களுக்கு மட்டும்..  – […]
Read More
மருதாணிச் சொல்
  • By Magazine
  • |
விரைவில் விரல்களில் மருதாணி இட்டு வருவதாய் பளபளத்துக் கிடந்த விடியலில் சொல்லிச் சென்றாய்.. சிவந்து கிடக்கும் உன் மெல்விரல் பார்க்கும்       ஆசையில் நாளெல்லாம் காத்துக்கிடக்கின்றேன். அந்திப்பொழுதின் செவ்வானத்தைப் பார்க்கிறேன் வானத்துக்கு யார் இட்டது மருதாணி எனக்கேட்டுக்கொள்கிறேன். பறவைகள் கூடடைந்த பின்பும் என்னிடத்தில் வராத நீ வழக்கம் போலவே வாக்குத் தவறுகின்றாய்.. நீ உச்சரித்துச் சென்ற மருதாணி என்னும் சொல் பச்சையாகப் படர்ந்து சிவக்கத் தொடங்குகின்றது என்னுள்… – கூடல் தாரிக்
Read More