சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA – வின் 201-வது கருத்தாய்வுக் கூட்டமானது திரு. கருணாநிதி ஆசான் தலைமையில் மரு.கமலக்கண்ணன், திரு.வடமலை நாராயணன், மருத்துவர்.த.இராஜேந்திரன், திரு.கே.செல்வநாதன் ஆசான் ஆகியோர் முன்னிலையில் 04.07.2026 அன்று சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில், திரு.வடமலை நாராயணன் அக்குபஞ்சர் மருத்துவம் குறித்து உரையாற்றினார். அடுத்ததாக திரு.இராஜேந்திர பிரசாத் முத்திரை, யோகா குறித்து பேசினார். மரு.கமலகண்ணன் ஆசான் ஒற்றைதலைவலி, பீனிசத்துக்கு தைலம் செய்முறையைக் கூறினார். மேலும் நடுக்குவாத சூரணம் செய்முறையையும் கூறினார். […]
Read More
சித்த மருத்துவத்தை அரசு வளர்க்க வேண்டும்!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் இந்திய பாரம்பரியத்தில் தொன்மையான கலாச்சாரம் திராவிட கலாச்சாரம். கி.மு.க்களில் வாழ்ந்த பழங்கால மக்கள் இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் பரவி வாழ்ந்துள்ளனர். இவர்களின் வாழ்க்கை சூழ்நிலைக்கேற்ப மொழி வளர்ச்சிகளை ஏற்படுத்தி வெறும் பேச்சு வழக்கிலேயே வழங்கி வந்தனர். இவைகளில் மிக முக்கிய நான்கு பிரிவுகளாக விளங்கிய இந்தோ ஆரிய மொழிகளாக இந்தி, குஜராத்தி, அசாமி, வங்காளி முதலியனவும் திராவிட மொழிகளாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலியனவும் சைனோ – திபெத்திய பர்மிய மொழிகளாக […]
Read More
மூல “பவுத்திரம்”
  • By Magazine
  • |
டாக்டர் என்.கே. சுரேஷ் MD(S) மூலபவுத்திரம் என்பது மலக்குடல் உட்புறத்திலிருந்து, ஆசனவாயை சுற்றியுள்ள வெளிப்புற தோல்பகுதிக்கு ஒரு குகை மாதிரி தொடர்பு உண்டாகி, அதன்வழி சீழ், நீர்வடிதல் மற்றும் சில நேரங்களில் மலக்கசிவுகளும் வடிந்து நல்ல வலியை கொடுக்கக் கூடிய ஒரு வியாதி ஆகும். மூலநோய் என்பது வேறு. மூலபவுத்திர நோய் என்பது வேறு. பவுத்திரம், பகரந்தனம், ஆசனரூடி, ஆசனபவுத்திரம் என்ற வேறுபெயர்களும் இதற்கு உண்டு. ஆங்கிலத்தில் இதற்கு பெயர் Fistula –in- ano, Anal Fistula.. […]
Read More
வர்மம் எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் சூண்டோதரி வர்மம் சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான கவளிக்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் சூண்டோதரி வர்மம் பற்றி அறிவோம். இவ்வர்மம் சூண்டுவிரலின் மொழியின் மேல்குழியில் அமைந்துள்ளது. இதற்கு சூண்டோதரி வர்மம், சுட்டு வர்மம் என்னும் வேறுபெயர்களும் உண்டு. “வகுத்தபடி சூண்டுவிரல் மொழியிறைக்குள் சூண்டோதரி வர்மம்”. – வர்ம குருநூல் “சூண்டும் விரல் கவிட்டில் சூழ்ந்த சூண்டோதரியாம்”. – இலாடச்சூத்திரம் என குறிப்பிடுகிறது. போடவே சூண்டுவிரல் இடையில் […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA -வின் 300 வது மாதக் கருத்தாய்வு கூட்டமும், 25-வது ஆண்டு வெள்ளிவிழா விருது வழங்கும் நிகழ்ச்சியும் திரு.அருள்தாஸ் ஆசான் தலைமையில் டாக்டர்.அக்ரி.ஒய்.இராஜகுமார், திரு.முழங்குழிலாசர், திரு.கே.செல்வநாதன், வர்ம மறுமலர்ச்சியின் தந்தை டாக்டர்.த.இராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் 06.06.2026 அன்று மதியம் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் திரு. கே.செல்வநாதன் 25-வது ஆண்டு வெள்ளிவிழா 30.05.2026 அன்று மூலச்சல் அரசு உயர்நிலைப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது குறித்தும் சிறந்த சித்த மருத்துவ வல்லுநர்களுக்கும், களரி, […]
Read More
மூலநோய்
  • By Magazine
  • |
டாக்டர் என்.கே. சுரேஷ் MD(S) ஜீரணமண்டலப் பாதையின் கடைசி பகுதியான மலக்குடலின் (Rectum) உள்ளே உள்ள இரத்தநாளங்களில் வீக்கம் மற்றும் தாபிதம் ஏற்பட்டு இரத்தம் கசிதல், வலி, எரிச்சல் மற்றும் வெளியில் முளை பிதுங்கி காணுதல் போன்ற குறிகுணங்களை காட்டி துன்பப்படுத்தும் நோயை மூலநோய் என்கிறோம். மூலநோயால் இந்தியாவில் சுமார் 11 சதவீதம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். மூலநோய் பொதுவாக உணவுபழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறை மாற்றங்களால் உருவாகிறது. மூலநோயால் பாதிக்கப்படுபவர்கள் புத்துணர்ச்சி இன்றி, எரிச்சலுடன், கடுகடுப்பாக இருக்கும் மனநிலைக்கு […]
Read More
அகில உலக சித்த ஆயுர்வேத வர்ம களரி கழகத்தின் (SAVKIA) வெள்ளிவிழா
  • By Magazine
  • |
அகில உலக சித்த ஆயுர்வேத வர்ம களரி கழகத்தின் (SAVKIA) வெள்ளி விழா, மருத்துவ நூல்கள் வெளியீடு, மூத்த ஆசான்களுக்கு விருது வழங்குதல் மற்றும் வர்ம மருத்துவச் செயலாலரங்கம் உள்ளிட்ட முப்பெரும் விழாக்கள் கன்னியாகுமரி மாவட்டம்  மூலச்சல் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மிகச் சிறப்பாக நடநதது. துவக்க விழாவும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் வர்ம மறுமலர்ச்சியின் தந்தை Dr.T. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில்  கிரீன் அக்ரி கிளப் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் Agri.Y. இராஜகுமார் மற்றும்  மரு. […]
Read More
வர்மம் எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான தெக்ஷணைக்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் கவளிக்காலம் பற்றி அறிவோம். புறங்கையின் பெருவிரல் கவளியில் கவளிக்காலம் அமைந்துள்ளது. இவ்வர்மம் கவளி வர்மம், கைக்கவளி வர்மம், கைக்கவளிக்காலம் எனவும் அழைக்கப்படுகிறது.                 “மரணமென்று கவர் நேர் ஒன்றரையிறைக்கும்                 மைந்தனே கவளிவர்மம்”.                                                                 – வர்ம குருநூல்                 “கைப்பெருவிரல் கவளியில் கவளிவர்மம்”.                                                                                                 – வர்ம கலைக்களஞ்சியம் என குறிப்பிடுகிறது. போடும் […]
Read More
கீழாநெல்லியின் மருத்துவகுணங்கள்
  • By Magazine
  • |
கஸ்தூரிபா   ஜாண்ஸன் தாவர இயலில் பைலானதஸ் அமரஸ் (Phyllanthus amarus) என்று அழைக்கப்படும் இம்மூலிகை யூபோர் பயேசியே (Euphorbiaceae) என்ற குடும்பத்தை சேர்ந்தது. தமிழ்நாட்டில் பரவலாக மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு குறுஞ்செடி. சுமார் 15 சென்டிமீட்டர் உயரம் வரை வளரும். இம்மூலிகையின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன் தருகிறது. பயன்கள் மஞ்சள் காமால நோய் தீர்க்க வேருடன் கூடிய முழுச் செடியையும் நீரில் கழுவி அரைத்து 5 முதல் 7 நாட்கள் மோரில் கலந்து காலை […]
Read More
குடல்புண்
  • By Magazine
  • |
டாக்டர் என்.கே. சுரேஷ் MD(S) வயிற்றில் ஏற்படும் புண்களையும், சிறுகுடலின் முன்பகுதியில் ஏற்படும் புண்களையும் பொதுவாக நாம் வழக்கத்தில் குடல்புண் (அல்சர் – Peptic ulcer) என்று அழைக்கிறோம். நாட்பட்ட குடல்புண்நோய் உள்ளவர்கள் உடலும், மனமும் குன்றி போவதால் இதனை குன்மம் என சித்தமருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வயிற்று பகுதியில் ஏற்படும் புண்களை வயிற்றுப்புண், Gastric ulcer, Stomach ulcer என்று அழைப்பதுண்டு. வயிற்றுபகுதியை தொடர்ந்து வரும் சிறுகுடலில் ஏற்படும் புண்களை- சிறுகுடல் புண் (duodenal ulcer)) என்று […]
Read More