சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA – 298-வது கருத்தாய்வு கூட்டமானது திரு.அருள்தாஸ் ஆசான் தலைமையில், திரு. கே.செல்வநாதன் ஆசான், மரு.கமலக்கண்ணன், மூலச்சல் டாக்டர்.த.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 04.04.2026 அன்று மதியம் சுமார் 2 மணியளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் திரு. அருள்தாஸ் ஆசான் ஆறறிவு விளக்கம் குறித்துப் பேசினார். மேலும் மூலநோய்களுக்கு கந்தக செந்தூரம், நரம்புச்சுருக்கம், கட்டிகளுக்கு வெடியுப்பு சுண்ணம் செய்முறையைக் கூறினார். திரு. சுப்பிரமணிய ஆசான் தமரக வாயு குணமாக மருந்து, சொறி, சிரங்கு, படை, […]
Read More
கிரியேட்டினின் பற்றி அறிவோம்
  • By Magazine
  • |
– கஸ்தூரிபா ஜாண்ஸன் கிரியேட்டினின் (Creatinine) என்பது அன்றாட செயல்பாட்டின் போது தசைநார்கள் சிதைவடைவதால் உருவாகும் ஒரு கழிவுப்பொருளாகும். சுருக்கமாகச் சொன்னால் கிரியேட்டினின் சிறுநீரகத்தின் செயல்பாட்டை அளவிட உதவும் ஒரு முக்கியமான இரத்தக் கழிவுப்பொருள் எனலாம். கிரியேட்டின் சில செய்திகள் இரத்தத்தில் கிரியேட்டின் அளவு அதிகரிப்பது, சிறுநீரகங்கள் சரியாகச் செயல்படவில்லை என்பதைக் குறிக்கும் முக்கிய அறிகுறியாகும். ஆரோக்கியமான சிறுநீரகங்கள் இரத்தத்தில் உள்ள இந்த கழிவைக் வடிகட்டி சிறுநீர் வழியாக வெளியேற்றுகின்றன. தசை ஆற்றலை பயன்படுத்தும் போது கிரியேட்டினின் […]
Read More
வாய்ப்புண்
  • By Magazine
  • |
டாக்டர் என்.கே. சுரேஷ் MD(S) வாயில் ஆரம்பித்து ஆசனவாயில் முடிவடையும் ஜீரணமண்டலத்தில், வாய் முதல் பகுதியாக உள்ளது. வாய்ப்புண் பல காரணங்களால் ஏற்பட்டு, உணவு உண்பதற்கும், உணவு விழுங்குவதற்கு சிரமத்தை கொடுக்கிறது. உதடுகளின் உட்புறம், கன்னத்தின் உட்புறம், நாக்கு, பல்ஈறு ஆகிய பகுதியில் ஏற்படும் புண்களை, வாய்ப்புண் என்று அழைக்கிறோம். பொதுவாக வாய்ப்புண் 4 நாட்களிலிருந்து 14 நாட்களுக்குள் ஆறிவிடும். வாய்ப்புண்ணை அக்கரம் என அழைப்பதுண்டு.  மேலும்  Apthousulcer, Stomatitis என்பதும் வாய்ப்புண்ணை குறிக்கும். வாய்ப்புண் உண்டாவதற்கான […]
Read More
வர்மம் எனும்  மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் புயவர்மம் சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான கூட்டுக்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் புயவர்மம் பற்றி அறிவோம். புயவர்மம் புயத்தின் நடுச்சுழியில் அமைந்துள்ளது. புஜ வர்மம், புஜப்பொருத்து வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் இவ்வர்மம் வழங்கப்படுகிறது. “புஜத்தின் நடுச்சுழியில் புயவர்மம்”.                                                                                 – வர்ம குருநூல் “தாக்குகின்ற காறை எல்லுமுனை அற்றத்தில் சார்வாக புயவர்மம்”.                                                                                – வர்ம கலைக்களஞ்சியம் என குறிப்பிடுகிறது. “தீருமடா காறையதின் முனையில் தானே திறமான […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA–297 வது கருத்தாய்வு கூட்டமானது 07.03.2026 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் திரு. அருள்தாஸ் ஆசான் தலைமையில் திரு.இராஜன் ஆசான், மரு.கமலக்கண்ணன், மருத்துவர்.த.இராஜேந்திரன், திரு.ஜாண் ஆகியோர் முன்னிலையில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் திரு.இராஜன் ஆசான் உடல் உஷ்ணம், நரம்பு வலிமை இவற்றுக்கு அமிர்த சஞ்சீவி சூரணம் செய்முறையைக் கூறினார். திரு. அருள்தாஸ் ஆசான் பாசாண விசம் முறிக்கும் மருந்து செய்முறையைக் கூறினார். மேலும் ஒடிவுமுறிவு, புண், தீபட்டபுண், அடிபட்ட காயம் […]
Read More
ஃபாஸ்ட்ஃபுட்  –Fast Food
  • By Magazine
  • |
– கஸ்தூரிபா    ஜாண்ஸன் ஃபாஸ்ட்ஃபுட் உணவில் செயற்கை நிறங்களை அதிகம் கலக்கின்றனர். சான்ட்விச், சிக்கன் 65, பஜ்ஜி, வடை, பிரியாணி, ஃபிரைடு ரைஸ் போன்ற பல்வேறு உணவுகள் துரித உணவுகள் என்ற பெயரில் பல்வேறு வகையான நிறப்பொடிகளுடன் அலங்காரமாக அங்காடிகளில் அரங்கேறுகின்றன. நிறத்துக்காகவும், ருசிக்காகவும், மணத்துக்காகவும் சிறுவர் முதல் பெரியோர் வரை அவற்றை உண்டு ருசிக்கின்றனர். அவற்றில் பல்வேறு வகையான இராசாயன மருந்துகள் சேர்க்கப்படுகின்றன. அதனால் குடல் புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு, மரபணுக்கோளாறு, உடல் பருமன் போன்ற […]
Read More
வர்மம் எனும்  மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் கூட்டுக்காலம் சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான கோச்சக்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் கூட்டுக்காலம் பற்றி அறிவோம். கையின் அக்குள் பகுதியில் கூட்டுக்காலம் அமைந்துள்ளது. இவ்வர்மம்  கைக்கூட்டுக்காலம், கரக்கூட்டுக்காலம், கமுக்குழி வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. இந்த கூட்டுக்காலத்தில் அத்திப்பதை அத்திக்காந்தாரி நரம்புகளும், அகச்சூத்திர புறச்சூத்திர நரம்புகளும் கூட்டாக பின்னி செயல்படுவதால் தான் இப்பெயர் ஏற்பட்டது. இந்த தலமும் சார்பும் பல்வேறு வர்ம பிணிகளை தீர்க்கும் வல்லமை […]
Read More
கிரீன் டீயும் ஆன்டி ஆக்ஸிடஸ்களும்
  • By Magazine
  • |
கஸ்தூரிபா ஜாண்ஸன் கிரீன் டீ தாவர இயலில் கேமிலியா சினென்சிஸ் (Camellia sinensis) எனப்படும் குறிப்பிட்ட ரகத் தேயிலைச் செடியின் இளம் தளிர்களும், மொட்டுகளும் சேமிக்கப்பட்டு குறைந்த பட்ச சூட்டில் இலைகளின் நிறம், மணம், ருசி மாறாமல் கிரீன் டீ எனப்படும் பசும் தேயிலை தயாரிக்கப்படுகிறது. கொதிக்கும் நீரில் பச்சைத் தேயிலை போட்டு பால் சேர்க்காமல் பற்களில் சிறிது சிறிதாகப் படும்படி அருந்த வேண்டும். சுக்கு, பட்டை, மிளகு, ஏலம், கிராம்பு, துளசி, புதினா இலைகள், ரோஜா இதழ்கள், […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-வின்  296 -வது கருத்தாய்வுக் கூட்டம் 07.02.2026 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் திரு. இராஜன் ஆசான் தலைமையில் திரு.கே.செல்வநாதன் ஆசான், மரு.கமலகண்ணன். மூலச்சல் மருத்துவர்.த. இராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் இராஜேந்திரா மருத்துவமகை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் திரு.இராஜன் ஆசான் நரம்பு பிடிப்பு, எலும்புவலி, கைகால் கோச்சுதல் இவற்றுக்கு எளிய சூரணம் செய்முறையைக் கூறினார். அடுத்ததாக மரு.கமலகண்ணன் தடவுமுறை தைலம் தயாரிக்கும் முறையையும், இருதய படபடப்பு, வீக்கம், பலவீனத்துக்கு சூரணம் செய்முறை, அதி […]
Read More
வர்மம் எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் கோச்சக்காலம் சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான கைமுட்டு வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் கோச்சக்காலம் பற்றி அறிவோம். கைமுட்டின் உட்புறக்கண்ணில் மேல் அருகு பற்றி ஒரு இறையில் கோச்சக்காலம் அமைந்துள்ளது. இவ்வர்மம் கோச்சல்காலம், கோச்சைக்காலம், கோச்சு வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. “மயங்கும் முட்டின்கண் சார்பில் கோச்சைக்காலம்”.                                                                                 – வர்ம குருநூல் “கைமுட்டின் உள் கண்ணின் மேலருகு                 பற்றி கோச்சுவர்மம்”.                                                 […]
Read More