புதிய கண்டுபிடிப்பு
  • By Magazine
  • |
பூமியின் அரிதான தனிமம் புற்றுநோய் சிகிச்சையில் புரட்சி – முனைவர் மோகனா, பழனி ஓர் அரிதான, குறுகிய காலமே இருக்கக்கூடிய தனிமம் ஒன்று மருத்துவத்தின் மிகத் துல்லியமான புற்றுநோய் கொல்லியாக மாறக்கூடும் என அறிஞர்கள் கணித்துள்ளனர். இதற்கான ஆய்வினை டெக்சாஸ் A & M பல்கலைக்கழக சைக்ளோட்ரான் நிறுவனம் செய்துள்ளது. இத்தகவல் 2025, நவம்பர் 11- ஆம் நாள் Science daily-ல் வெளியிடப்பட்டுள்ளது.   அஸ்டட்டின்-211  புற்றுநோய் எதிர்ப்பு   டெக்சாஸ் A & M பல்கலைக்கழக […]
Read More
  • By Magazine
  • |
சுமார் 900,000-800,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவை 1,280 இனப்பெருக்க உயிரினங்கள் மட்டுமே..! – முனைவர் மோகனா, பழனி பூமியில் மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் மனிதகுலம் கிட்டத்தட்ட முற்றிலுமாக அழிக்கப்பட்ட காலம் என்ற ஒன்று இருந்தது . அதுதான், சுமார் 900,000-800,000 ஆண்டுகளுக்கு முன்பு, உலக மக்கள் தொகை,என்பது சுமார் 1,280 இனப்பெருக்க உயிரினங்கள் மட்டுமே இருந்தன என்ற ஆபத்தான நிலையை அடைந்தது. இந்த மிகக் குறைந்த நிலையை அடைந்து, 117,000 ஆண்டுகள் இதே […]
Read More
பழைய டிவியின் திரைகள்
  • By Magazine
  • |
– காளீஸ்வர் அப்பொழுதெல்லாம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இருந்ததில்லை! கண்ணைக் கவரும் எல்இடி விளக்குகள் இருந்ததில்லை! குண்டு பல்பு என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் டங்ஸ்டன் விளக்குகளும், கருப்பு வெள்ளை திரையிலான தொலைக்காட்சிப் பெட்டிகளுமே இருந்தன. 1990-களில் தான், தனியார் தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் இந்தியாவில் தொடங்கியது. அந்தப் பழைய நாட்களில், டிவி ஆன் செய்ததும் ஒரு சில வினாடிகள் கழித்துத் தான் படம் வரும். அது ஏன்? அந்த டிவிக்களின் உள்ளே என்ன நடந்தது? இப்போது பார்ப்போம். […]
Read More
மின்னணுவியலின் கதை
  • By Magazine
  • |
 – காளீஸ்வர் நமது நவீன உலகின் அடித்தளமாக விளங்கும் மின்னணுவியல், ஒரே இரவில் தோன்றிய மாயாஜாலம் அல்ல. இது படிப்படியாக, பல கண்டுபிடிப்பாளர்களின் உழைப்பாலும், விடாமுயற்சியாலும் உருவான பிரம்மாண்ட அறிவியல் பயணம். எலெக்ட்ரான்கள் பற்றிய புரிதல் ஏற்பட்ட பின்னர்தான் ‘மின்னணுவியல்’ என்ற தனித் துறையே உருவானது.  எலெக்ட்ரானின் பிறப்பு மின்னணுவியலின் தொடக்க புள்ளியானது, ஜே.ஜே. தாம்சன் (J.J.Thomson) என்ற ஆங்கில இயற்பியலாளரின் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பில்தான் இருக்கிறது. 1897 ஆம் ஆண்டில், கேத்தோடு கதிர்க் குழாய்கள் (Cathode […]
Read More
பல் மருத்துவம் – நம்ப முடியாத வரலாற்று உண்மைகள்
  • By Magazine
  • |
– முனைவர் மோகனா, பழனி இப்போது எல்லோரும் பல் மருத்துவம் பற்றி நன்கு அறிவோம். வருடத்துக்கு இரண்டு முறை நாம் ஒரு நல்ல பல் மருத்துவரைப் பார்த்து, நம் பல்லை, அதன் பற்கறையை நீக்கி சுத்தம் செய்கிறோம்/செய்வது நல்லது. பல்லில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் பல் மருத்துவரை நாடுகிறோம். வலி தரும்  ஞானப்பற்களை அகற்றுவது/ வேர் சிகிச்சை (Root canal) செய்வது போன்ற நவீன பல்மருத்துவ நடைமுறைகளும் இப்போது உண்டு.. பல் மருத்துவம்- வரலாற்றுத் தகவல்கள்                 […]
Read More
செயற்கை கருவறை
  • By Magazine
  • |
முனைவர் மோகனா, பழனி அம்மாவின் கருவறை தான் குழந்தையை உருவாக்கிக் கொடுக்கிறது. இதுவரை கருப்பைக்கு மாற்று இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தோம். இப்போது அறிவியல் அதற்கும் கூட மாற்று உண்டு என்று வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.   செயற்கை கருப்பை என்றால் என்ன?  மனிதக் கருவை கருப்பைக்கு வெளியே வளர்க்கும் ஒரு சாதனம். இயற்கையான கருப்பையின் சூழலை செயற்கையாக உருவகப்படுத்துகிறது.  இதில்  அம்னியோடிக் திரவம் (Amniotic fluid) போன்ற செயற்கை திரவம்.  செயற்கை நஞ்சுக் கொடி […]
Read More
வீரமங்கை வேலுநாச்சியாருக்காக தலைகொடுத்த உடையாள்வெட்டுடையாள் காளி
  • By Magazine
  • |
பேராசிரியர் முளங்குழி பா.லாசர் சிவகங்கைச் சீமையைச் சீரோடும், சிறப்போடும் ஆட்சி செய்த மன்னன் முத்துவடுகநாத பெரிய உடையத்தேவரை, ஆலயத்தில் வழிபாடு செய்து திரும்பிய போது ஆங்கிலப்படை வஞ்சகமாய்ச் சூழ்ந்து கொன்றது. வேலுநாச்சியாரை கொலை செய்ய முயன்றது. வேலுநாச்சியார் வெள்ளையர் படையினரிடமிருந்து தப்பி வருகிற போது தாகத்தால் சுருண்டு விழுந்தார். ஆடு மேய்த்துக் கொண்டிருந்த உடையாள் என்ற பெண் ஓடிச் சென்று தண்ணீர் கொடுத்தாள். பசிபோக்க உணவு கொடுத்தாள். தான் உணவும், தண்ணீரும் கொடுத்தது மகாராணிக்கு தான் என்று […]
Read More
வெள்ளையரை எதிர்த்து போராடிய வீரமங்கை கிட்டூர்ராணி சென்னம்மா
  • By Magazine
  • |
பேராசிரியர். முளங்குழி.பா.லாசர் தமிழ்நாட்டில் வீரமங்கை வேலுநாச்சியார் போல் கர்நாடகாவில் மக்களால் போற்றி புகழப்படுபவர் வீரமங்கை கிட்டூர்ராணி சென்னம்மா.  1778- ஆம் ஆண்டு கர்நாடக மாநில கிட்டூர் காகத்தி நகரில், தூலப்பக்கவுண்டர் தேசாய் மகளாகப் பிறந்தார். கிட்டூர் சமஸ்தான மன்னர் முல்லை சர்ஜா சென்னம்மாவை மணம் புரிந்து கொண்டார். 1812-ஆம் ஆண்டு மன்னர் முல்லை சர்ஜா மரணமடைய பின்னர் ஒரே மகனும் இறந்து விட்டான். ராணி சென்னம்மா சிவலிங்கப்பாவை வளர்ப்பு மகனாக்கி மன்னனாக முடி சூட்டி, ஆட்சிக்கட்டிலில் அமர்த்தினார். […]
Read More
பற்காரை பொய் சொல்லுவதில்லை
  • By Magazine
  • |
(ஆதிமக்களின் உணவைப் பேசும் பற்காரை) – முனைவர் மோகனா, பழனி நண்பர்களே. நீங்கள் இன்று மதியம் என்ன சாப்பிட்டீர்கள் என்று கேட்டால்  யார் பதில் சொல்லுவார்கள்..உடனே சொல்லி விடலாம், நீங்கள் சொல்லலாம். நீங்கள்  சொல்லாவிடில், உங்களின் வயிறு அல்லது குடலுக்குள் உள்ள பொருட்கள் நீங்கள் என்னென்ன சாப்பிட்டீர்கள் என்று சாப்பிட்ட உணவு பற்றிய பேட்டியை /பட்டியலைத் தரலாம். அதனை நாம் புரிந்து கொள்ள முடியும். சாப்பிட்ட உணவைக் கூறும் பற்காரை ஆனால் போன வாரம் வியாழக்கிழமை என்ன […]
Read More
வெள்ளையர் கைப்பற்றிய நாட்டைப் போராடி மீட்ட வீரமங்கை வேலுநாச்சியார்
  • By Magazine
  • |
பேராசிரியர். முளங்குழி.பா.லாசர் இந்திய நாட்டு விடுதலைப்போரில் வெள்ளையரை எதிர்த்து நின்று போரிட்டு, வெற்றி வாகை சூடி, இழந்த நாட்டை வெள்ளையரிடமிருந்து கைபற்றிய ஒரே வீரமங்கை வேலுநாச்சியார். இராமநாதபுரம் மன்னர் விஜயரகுநாத செல்லத்துரை சேதுபதிக்கும், முத்தம்மாள் நாச்சியாருக்கும் 1730- ஆம் ஆண்டு மகளாக பிறந்த வேலுநாச்சியார். பயமே தெரியாதவர். வீரம் நிறைந்தவர். கணவனைக் கொல்ல வந்த புலியுடன் போராடி அதனைக் கொன்ற வீரமங்கை. வீரத்தோடு விவேகமும் நிறைந்த பேரழகி. வேலுநாச்சியார் தமிழ், உருது, சமஸ்கிருதம், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், […]
Read More