வாக்கு என்பது வாழ்வாதாரம்? தமிழகத்தின் தேவை என்ன?
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் தமிழகம் மீண்டும் ஒரு தேர்தல் திருவிழாவிற்குத் தயாராகி வருகிறது. வீதிகளில் கொடிகளும், காற்றில் வாக்குறுதிகளும் பறக்கத் தொடங்கிவிட்டன. ஆனால், ஆரவாரங்களுக்கு மத்தியில் சாமானிய மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்னவாக இருக்கின்றன என்பதை அரசியல் கட்சிகள் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய தருணம் இது. ஒரு தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமல்ல; அது மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படும் மாற்றத்திற்கான திறவுகோல். இன்றைய சூழலில் தமிழக மக்கள் எதிர்கொள்ளும் இரண்டு முக்கிய சவால்கள்: […]
Read More
புத்தாண்டின் நம்பிக்கை
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் ஒவ்வொரு புத்தாண்டும் வருகையிலும் மனிதர்கள் இந்த ஆண்டு நாம் பெற்ற கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து அடுத்த ஆண்டில் நல்ல விஷயங்கள் நடக்காதா? என்கின்ற எதிர்பார்ப்புகளை சுமந்து புத்தாண்டுகளை எதிர்கொள்கிறார்கள். மனித மனம் அன்றாடங்களில் உள்ள சிக்கல்களின் வழியாக பெற்ற அனுபவங்களின் மூலம் எதிர்காலத்தின் மீது நம்பிக்கையைத் தவிற வேறு என்ன வைக்க இயலும் என்கின்ற அடிப்படையில் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.      மனிதர்களுக்கு ஒன்று முடிந்து இன்னொன்று துவங்க வேண்டும் என்கின்ற வாழ்வின் […]
Read More
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் சமூகம் அறிவார்ந்த மேம்பட்ட சமூகமாக மாற வேண்டும் என்றால் அதற்கு இரு துறையினரை முக்கியமாக பொறுப்புமிக்கவர்களாகக் குறிப்பிடுவர்.                 ஒன்று ஆசிரியர்கள் மற்றொன்று ஊடகவியலாளர்கள். இருவரும் சமூகத்தை செம்மையிடுவதிலும் வளர்த்தெடுப்பதிலும் மிக முக்கியப் பங்காற்றுகின்றனர்.  ஆசிரியர்கள்  அவர்களிடம் வந்துச் சேரும்    குழந்தைகளை சிறந்த ஆளுமைகளாக, ஆற்றல்கொண்டவர்களாக, தலைவர்களா உருஏற்றி இச்சமூகத்திற்கு  கொடுக்கின்றார்கள்.                 அவ்வாறு உருபெற்றவர்களால் இச்சமூகத்தில் ஒவ்வொரு துறைகளும் இயங்குகின்றது. மேலும் இயக்கவும் படுகின்றது. அவ்வாறு இயங்குகையில் அவர்கள் தவறுகள் செய்வார்களே […]
Read More
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்க இயலவில்லை எனும் செய்திகளை படிக்கும்போது நம்மால் கவலைபடாமல் இருக்க இயலவில்லை.  இதைவிட ஒரு துயரம் வேறு இருக்க முடியாது. சமூகத்தின் பல்வேறு துறைகளிலும் பல ஆக்கப்பூர்வமான பங்கேற்புகளை வழங்கி சமூகமுன்னேற்றத்தில் பங்கெடுத்துக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்கள் இன்று ஊழியர்களுக்கு மாதச் சம்பளம்/ஓய்வூதியம் வழங்கக்கூட அரசைக் கையேந்தும் அவலநிலையில் உள்ளது. சான்றிதழ்களை அச்சிடக்கூடப் பணமின்றித் தவிப்பதை படிக்கையில் துயரம் கௌவுகின்றது.                 “இந்தப் பொருளாதார நெருக்கடிக்கான முதன்மைக் காரணம், […]
Read More
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் மக்கள் கூடும் நிகழ்வுகளான, அரசியல் பேரணிகள், விளையாட்டு மைதானங்கள், கேளிக்கை நிகழ்ச்சிகள்,  வழிபாட்டுத் தலங்கள் போன்ற இடங்களில் எதிர்பாராத விதமாக நெரிசல் ஏற்பட்டு, சிலர் உயிரிழக்கும் துயரச் சம்பவங்கள் நிகழும்போது நாம் மிகவும் வருந்துகிறோம். ஆனால் இப்பகுதிகளில் ஒரு தனிநபராக நம் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கின்றன அல்லது இருக்க வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு நம் மக்களிடம் இருக்கின்றதா என்பதைப் பற்றியும் நாம் யோசிக்க வேண்டும்.  போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளின்மை, திட்டமிடல் குறைபாடுகள் […]
Read More
  • By Magazine
  • |
தலையங்கம் வயிற்றுக்குப் போராடும் ஏழைகளுக்கு தான் வாழ்க்கைப் போராட்டம்… அந்த ஏழைகளை வைத்துப் பிழைக்கும் போராட்டம் தான் ஒரு சூட்சும போராட்டம். வாழ்க்கையின் எல்லா தளங்களிலும் வஞ்சிக்கப்படுபவர்கள் ஏழைகளே! ஏழ்மையும், இயலாமையும், இல்லாமையும் இவர்களை பிறர் காலடியில் வீழ்ந்து கிடக்க வழிவகுக்கிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் தன்னை மறந்து, தன் வாழ்வை மறந்து, சிந்தனை மறந்து வாழும் சிறகிழந்த பறவைகள். பறக்கவிட்டால் பறந்துவிடும். ஆனால் பறக்கமுடியாத அளவிற்கு முடமாக்கப்படும் மூடம். காற்றை சுவாசிக்கக் கூட கடமையாற்றும் இவர்களை […]
Read More
எதிர்காலம் எனும் நம்பிக்கை
  • By Magazine
  • |
தலையங்கம் உலக மக்களால் எப்போதும் கண்காணிக்கப் படுகின்ற நாடுகளில் ஒன்று இந்தியா. மக்கள் தொகையில் முதலிடத்தை எட்டிவிட்டதால் மற்ற நாடுகளின் பார்வைகள் அனைத்தும் இந்நாட்டின் சந்தைப்படுத்தலை எதிர்நோக்கியே இயங்கும். ஆனால் இங்கு வாழும் பெரும் பணக்காரர்கள் பலர் வெளிநாடுகளில் குடியேறி சுகமான வாழ்க்கை வாழ்வதையேக் குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். இந்தியாவில் வாழ்ந்து வளமான செல்வங்களை ஈட்டி உயர்ந்த நிலைக்குச் சென்ற பெரும் கோடீஸ்வரர்கள் சுமார் 17000-க்கும் மேற்பட்டவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவை விட்டு வெளிநாடு சென்று குடியேறி […]
Read More
ஓலமிடும்  உலகின்  மனசாட்சி
  • By Magazine
  • |
ஜனநாயக இந்தியாவில் மக்களாட்சி மக்களுக்காக நடத்தப்படுகின்றது என்பது தான் ஏழைமக்களின் நம்பிக்கை. அம்மக்களில் வலிமை குன்றி, நலிவுற்று, வாழ வழி தெரியாமல் தவிக்கும் மக்களுக்கு கால்வயிற்றுக் கூழுக்காவது வாழ வழிவகுக்கும் ஒருவகைப் பணிமுறை தான் நூறு நாள் வேலைத்திட்டம். அந்த வேலையில் ஒன்றிய அரசு கை வைத்துவிட்டது. அதற்கான ஒதுக்கீட்டுத் தொகையை குறைத்து அதற்கேற்ப ஆட்குறைப்பும் செய்துவிட்டது. இது சாதாரண ஏழை மக்களைப் பற்றிய கவலையே அவர்களுக்கு இல்லை என்னும் உணர்வைக் காட்டுவதாக தெருவெங்கும் பேசும் பேச்சாகக் […]
Read More
  • By Magazine
  • |
வேண்டும்! ஏழைகளின் நலனில் அக்கறை! உலகின் வல்லரசு நாடுகளில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் கார்பரேட்டுகளுக்கு எதிராக மக்கள் 2008- ஆம் ஆண்டில் தீவிரமாக போராடத் தொடங்கி அஃது ஓய்வுற்று ஓரளவு சமாளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதே போல் அதிகரித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் தாறுமாறான வரிவிதிப்புகள், உலக நாடுகளை ஒரு விதமான பார்வைக்குள் கொண்டு வந்துள்ளது. உள்நாட்டு அரசியல் பொருளாதார சூழலும் வெகுவாக பாதிப்படைந்து மக்கள் 2008-ம் ஆண்டை போல் மீண்டும் தெருக்களில் இறங்கி போராடி வருகின்றனர். […]
Read More
  • By Magazine
  • |
இந்தியாவின் ஒட்டுமொத்த ஏழை மக்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒருவகை அச்சம் எனும் பாசி படரத் தொடங்கி வருகிறது. முதலில் விவசாய நிலங்களில் சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்படும் பூச்சுக்கொல்லி மருந்துகள். அறியாமையின் உள்ளே ஓர் அறிவுத்திறனாகக் கடைப்பிடிக்கப்படும் இப்பயன்பாடு தலைமுறைகளை நோயாளிகள் ஆக்கிவிடும் எனும் உணர்வே இல்லாத நிலையில் அரசும் கவனிக்கவில்லை. மக்களும் கண்டுகொள்ளவில்லை. களைக்கொல்லிகள் என சந்தைப்படுத்தபடும் மருந்துகள் நிலத்தின் உயிரியியல் கட்டமைப்பை சிதைத்து வெட்டையாக்கிவிடும் என்ற உணர்வு துளியளவும் இல்லாத ஏழை விவசாயிகள். வறுமையின் பிடியில் […]
Read More