உடல் பருமன்
  • By Magazine
  • |
செ.பராந்தகன் உடல் பருமன் என்பது உடலில் அதிகப்படியான கொழுப்பு சத்து சேர்ந்து உடல் நலத்தை பாதிக்கும் ஒரு நாள்பட்ட நிலை. பிறந்த குழந்தை கொழுகொழுவென்று இருந்தால் நாம் மகிழ்கின்றோம்.  அதுவே மழலைப் பருவம் தாண்டியும் நீடித்தால் நாம் கவலைப்படுகிறோம். எனவே உடல் பருமன் என்பது உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலை. தனிப்பட்ட ஒருவரின் இயலாமை அல்ல. உடல் பருமன் என்பது எடை பார்க்கும் கருவி மற்றும் வெளிப்புறத் தோற்றத்தோடு தொடர்புடையது மட்டுமல்ல .உடலில் கொழுப்பு சத்து அதிகரித்தால் […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA – வின் 201-வது கருத்தாய்வுக் கூட்டமானது திரு. கருணாநிதி ஆசான் தலைமையில் மரு.கமலக்கண்ணன், திரு.வடமலை நாராயணன், மருத்துவர்.த.இராஜேந்திரன், திரு.கே.செல்வநாதன் ஆசான் ஆகியோர் முன்னிலையில் 04.07.2026 அன்று சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில், திரு.வடமலை நாராயணன் அக்குபஞ்சர் மருத்துவம் குறித்து உரையாற்றினார். அடுத்ததாக திரு.இராஜேந்திர பிரசாத் முத்திரை, யோகா குறித்து பேசினார். மரு.கமலகண்ணன் ஆசான் ஒற்றைதலைவலி, பீனிசத்துக்கு தைலம் செய்முறையைக் கூறினார். மேலும் நடுக்குவாத சூரணம் செய்முறையையும் கூறினார். […]
Read More
  • By Magazine
  • |
வர்ம அறிவியல் மாமேதை மூலச்சல் Dr.T.இராஜேந்திரன் சென்ற மாத இதழின் தொடர்ச்சி… உயிர்களின் தோற்றம் 7.2 முதல்நிலை ஒருசெல் உயிரிகளின் தோற்றம் (Prokaryotes) நியூக்ளியோ புரோட்டீன்கள் தொடர்ந்து தனக்குள்ளே தானே இரண்டாய் பிளவடையும் இந்த செயலானது ஒருசெல் போன்ற உயிரிகள் கடலில் தோன்ற காரணமானது. அறிவியலறிஞர் ஒப்பாரின் கருதுகோள்படி, நியூக்ளியோ புரோட்டீன்களுடன் கூடிய கோசர்வேட்ஸுகளே முதல் செல்லுலார் உயிரிகளாகும். இவைகள் அனைத்தும் இன்றைய பாக்டீரியாக்களுக்கு ஒப்பானவையாக கருதப்படுகிறது. காற்றற்ற இடமான கடலுக்குள் மாறுபட்ட அமைப்புகளைக் கொண்ட இந்த […]
Read More
யாருக்கு எது சொந்தம்? (பொதுவுடைமை)
  • By Magazine
  • |
உள்ளத்தின் ஓசைகள் என்னும் நூலிலிருந்து பூமியில் கல் பதித்து எல்லையிட்ட காலம் முதல் வந்தபெரும் தொல்லைகளால் எல்லையில்லா துன்பம்… ஏணிக்கும் எட்டாத ஏற்றத்தாழ்வுகள்… எடுத்தாள இயலா பிரிவினைகள்… உள்ளங்கள் கோணலாய் போனதால் தேடிவந்த மின்னலும் கோணலாகி பன்னல் வேர்கள் முதல்… பாதைகளும் கோணலாகி ஆறுகள்… நதிகளெல்லாம் ஆங்காங்கே அழுதுபுரண்டு அடியோடு வற்றிவிட்டதோ…. மாறுபட்ட சிந்தனைகள் வேறுபட்ட நினைவலைகள்… இத்தனையும் இறைவன் கொடுத்த வரம் அல்ல… இவனே…. தொடுத்த வரம் ஹார்மோன்கள் கர்மங்கள் இரண்டுமே இலக்கணம் புரியாத இடைவெளிகள் […]
Read More
கர்ம வீரர் காமராஜர்
  • By Magazine
  • |
நா.சுயம்பு நீ……. கங்கையைப் போல் புனிதமானவன் காவிரியைப் போல் எழுச்சியானவன் இருந்தும் வைகையைப் போல் எளிமையானவன்! நீ……….. ஜனநாயக இமயத்தில் பூத்த சோஷலிச மலர் சர்வ வல்லமையும் பெற்ற கிங் மேக்கர் இருந்தும் சலனமற்ற ஆறாய் கடந்தவன்! நீ……… கலை மகளின் அவதாரமாய் வந்தவன் மலை மகளின் மன உறுதியை பெற்றவன் இருந்தும் “காமாட்சி” என்றே அழைக்கப் பட்டவன்! நீ…….. சுதந்திர மங்கை மேல் கொண்ட தீராக் காதலால் எந்த சுந்தரியையும் ஏறெடுத்து பார்க்காத சுந்தரன்! நீ…. […]
Read More
  • By Magazine
  • |
இரா.சிவானந்தம் நலம் நலம் என்பது ஒரு ஊட்டச்சத்து சொல் நலமே ஒருவர் என்றே கடிதம் தொடர்கிறது சந்திக்கும் போது முதலில் கேட்பது நலமா? எத்தனை சொத்து- வசதி இருந்தாலும் நலமே முக்கியமானது நலம் தருவதற்கென்றே நாட்டில் எத்தனை மருத்துவமனைகள்? உறவு- நட்பென ஒருவர்க்கு நலமில்லை என்றால் என்ன பாடுபடுகிறோம் உழைப்பதற்கும் நலம் வேண்டும் தொண்டு செய்வதற்கும் நலமே வேண்டும் அரசு நலமாய் இருந்தால் நாடு நலமாய் இருக்கும் மக்கள் நலமாய் இருந்தால் நாடு செழிப்பாய் இருக்கும் நலம் […]
Read More
சித்த மருத்துவத்தை அரசு வளர்க்க வேண்டும்!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் இந்திய பாரம்பரியத்தில் தொன்மையான கலாச்சாரம் திராவிட கலாச்சாரம். கி.மு.க்களில் வாழ்ந்த பழங்கால மக்கள் இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் பரவி வாழ்ந்துள்ளனர். இவர்களின் வாழ்க்கை சூழ்நிலைக்கேற்ப மொழி வளர்ச்சிகளை ஏற்படுத்தி வெறும் பேச்சு வழக்கிலேயே வழங்கி வந்தனர். இவைகளில் மிக முக்கிய நான்கு பிரிவுகளாக விளங்கிய இந்தோ ஆரிய மொழிகளாக இந்தி, குஜராத்தி, அசாமி, வங்காளி முதலியனவும் திராவிட மொழிகளாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலியனவும் சைனோ – திபெத்திய பர்மிய மொழிகளாக […]
Read More
“என்றிலிருந்து ஆடை அணிந்தோம் நாம்”
  • By Magazine
  • |
முனைவர் ச. தினகரன் இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்விலங்கியல் துறை, நீர்வாழ் பூச்சியியல் ஆய்வு மையம், மதுரை கல்லூரி மனிதன் மகத்தானவனா? மனிதன் தனியனா? மனிதன் அனாதையா? இப்படி எத்தனை கேள்விகள் கேட்டாலும் இல்லை என்று தான் பதில் கிடைக்கும். உண்மையில் அவன் தனியாளல்ல! அவன் ஒரு நடமாடும் சூழல் மண்டலம். அவனை நம்பி அத்தனை உயிர்கள் இருக்கிறது. அத்தனையும் ரத்த சொந்தம். அம்மாவை விடவும், காதலியை விடவும், குழந்தைகளை விடவும் உங்களில் நிலைத்து, பரம்பரை பரம்பரையாக […]
Read More
வசந்தம்
  • By Magazine
  • |
– கை. செல்லத்தங்கம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அந்தக் கல்லூரி ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் கல்லூரி. அக்கல்லூரியில் வைத்து செயற்கை நுண்ணறிவு (A.I) சார்ந்த மூன்று நாள் கருத்தரங்கம். எங்கள் கல்லூரியில் இருந்தது. அத்துறை சார்ந்த நானும் எனது சகநண்பர்கள் நால்வரும் கலந்து கொள்வதாக முடிவு. பல்வேறு கல்லூரியில் இருந்து கருத்தரங்கத்திற்கு மாணவர்கள் வருவார்கள். துறை சார்ந்த நிபுணர்கள் பலர் வருவர். இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கல்லூரிக்கு நல்ல பெயர் வாங்கி தர வேண்டும் […]
Read More
மூல “பவுத்திரம்”
  • By Magazine
  • |
டாக்டர் என்.கே. சுரேஷ் MD(S) மூலபவுத்திரம் என்பது மலக்குடல் உட்புறத்திலிருந்து, ஆசனவாயை சுற்றியுள்ள வெளிப்புற தோல்பகுதிக்கு ஒரு குகை மாதிரி தொடர்பு உண்டாகி, அதன்வழி சீழ், நீர்வடிதல் மற்றும் சில நேரங்களில் மலக்கசிவுகளும் வடிந்து நல்ல வலியை கொடுக்கக் கூடிய ஒரு வியாதி ஆகும். மூலநோய் என்பது வேறு. மூலபவுத்திர நோய் என்பது வேறு. பவுத்திரம், பகரந்தனம், ஆசனரூடி, ஆசனபவுத்திரம் என்ற வேறுபெயர்களும் இதற்கு உண்டு. ஆங்கிலத்தில் இதற்கு பெயர் Fistula –in- ano, Anal Fistula.. […]
Read More