• By Magazine
  • |
உனை கொன்றொழித்து விட்டுத்தான் மறுவேலை ஆம் கொலைக்களத்தை முடிவு செய்துவிட்டேன் ஆயுதங்கள் தேர்வாகிவிட்டன உனை கொலை செய்து விடுகிறேன் பார் விரைவில் நீயில்லாமல் போவாய் எனது சொற்களை தின்று அரித்து விடுகிறாய் எனது இதயத்திற்குள் புகுந்து கரண்டுகிறாய் உனை அழித்தொழித்து விட்டுத்தான் மறுவேலை அழிக்க கையெடுக்கும் போதெல்லாம் எனது நல்ல சொற்களின் இடுக்குகளில் ஒழிந்து கொள்கிறாய் ஆம் நீயொரு பாச்சைதான் உனை அழிப்பதொன்று அவ்வளவு சிரமமில்லை பாச்சை எதிரிதான் துரோகிகள் ஒட்டுண்ணியைப் போன்றவர்கள் நமது ‘மன்னிப்பு’ இடுக்குகளில் […]
Read More
நூல் மதிப்புரை
  • By Magazine
  • |
முக்கனியின் முத்துக்கள்’ என்ற நூலை படைத்துள்ளார் கவிஞர் இ.க. சுப்பையா கம்பர் அவர்கள்,  இந்நூலில் கம்பனின் பெருமை, கம்பனும் தமிழும், கம்பனின் கவிதை. கம்பனின் எழுத்து. கம்பனின் கவி உலகம். கம்பனின் தமிழ் பெருமை, கம்பனின் சோக பாடல், கம்பனின் கவிநயம், கம்பராமாயணத்தின் சிறப்பம்சம் என்று கம்பனின் பெருமையையும், திருவள்ளுவரின் பெருமை. திருக்குறளின் பெருமை என்று திருவள்ளுவரின் பெருமைகளையும், தமிழ்நாட்டின் பெருமை தமிழ் மொழியின் சிறப்பு தமிழின் பெருமை, கவிதைகளில் நன்மையும் பொய்யும் தமிழ்த்தாயின் பெருமை என்று […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
 SAVKIA-வின் 249-வது கருத்தாய்வுக் கூட்டமானது திரு.இராஜன் ஆசான் தலைமையில் மரு.கமலக்கண்ணன் ஆசான், திரு.கே.செல்வநாதன்  ஆசான் ஆகியோர் முன்னிலையில் 06.12.2025 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில், மரு.கமலக்கண்ணன் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சூரணம் செய்முறையையும், வாதநோயை குணப்படுத்தும் சூரணம் செய்முறையையும் தெளிவாகக் கூறினார். திரு.இராஜன் ஆசான் சூலை-18, வாதம், மார்புவலி, தோள்பட்டை வலிக்கும், தாதுபுஷ்டிக்கும் எட்டி விதை மாத்திரை செய்முறையை கூறினார். திரு.செல்வநாதன் ஆசான் இருமலுக்கான மாத்திரை […]
Read More
மாற்றுத் திறனாளிகள் குறித்த பார்வைகள்
  • By Magazine
  • |
A. தர்மராஜ் (த.ராசு) முந்தைய பாகத்தின் தொடர்ச்சி… மாற்றுத்திறனாளிகள் திருமணத்துக்கு தங்கத்தில் தாலி வழங்குவதற்கு ஒரு புதிய திட்டம் தொடங்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் இத்திட்டத்தை 2023 ஏப்ரல் மாதத்தில் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயிலில் தொடங்கி வைத்து முதல் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, வரகுபாடி கிராமத்தைச் சேர்ந்த பாப்பாத்தி என்பவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. முதுகலை தமிழ் பட்டதாரியான இவர் மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச மற்றும் தேசிய அளவிலான […]
Read More
கோபம் எப்படி ஏற்படுகிறது?
  • By Magazine
  • |
மூலச்சல் Dr.T. இராஜேந்திரன் M.sc, MD(Hom), Ph.D. நமது உடலின் அதிவேகமான எதிர் உணர்ச்சிகளில் ஒன்றுதான் கோபம். “கோபம் கட்டுப்பட்டு விட்டாலே மனிதன் அரைஞானி ஆகிவிடுகிறான்”. “சிரிப்பினால் சாதிக்கும் ஆயிரம் விசயங்கள் கூட சிந்தனையற்ற ஒரு துளி கோபத்தால் சிதைந்து விடுகின்றது”. ஆம்… மனிதன் பல்வேறு விசயங்களுக்காக உணர்ச்சி வசப்படுகிறான். அவ்வாறு படும் எல்லா உணர்ச்சிகளிலும் மிகமிக மோசமானது கோபம் மட்டுமே… நமது மூளையில் பனி ரெண்டு முக்கிய இணை நரம்புகள் உள்ளன. இந்த பனிரெண்டு இணை […]
Read More
வதந்தீ
  • By Magazine
  • |
– குமரி எழிலன் மதியம் ஒன்றரை மணிக்கு குளத்ல போயி குளிக்காட்டா குடியாமுழுகியாப் போகும்….முணுமுணுத்தாள்…தர்மப் பத்தினி… கோசலை “வீடு சொல்லி கேக்காட்டா ஊரு சொல்லி கேக்கும்” என்ற சொலவடை வந்து விழுந்திருக்கும். “முங்கிக் குளிக்கிற சுகம் டவுன்ல பொறந்த உனக்கு எப்பிடித் தெரியும்” பதிலுக்கு முனங்கிக் கொண்டே பைக்கில் பறந்தேன் நான்.. குளத்தின் தொண்ணூறு விழுக்காடு நீர்ப்பரப்பு தாமரை இலை கொண்டு    மூடப்பட்டிருந்தது.பத்து விழுக்காடு இடம் ஆலமர நிழலால் தண்ணீரை குளிரச் செய்தது….. தண்ணீரின் அடி ஆழம் […]
Read More
மந்தத்தை போக்கும் “மந்தாரை”
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் அழகிற்காக தோட்டத்தில் வளர்க்கப்படும் சிறு செடிவகையை சார்ந்த மந்தாரை, அதிக மருத்துவ குணங்களையும் பெற்றுள்ளது. மந்தாரையின் பூர்விகம் மலேசியா, இந்தோனேசியா, இந்தியா மற்றும் சைனா என்றும் சொல்லப்படுகிறது. மந்தாரையில் பல இனங்கள் உண்டு. அவைகளில் முக்கியமானவை. வெள்ளை, சிவப்பு, மஞ்சள் நிற பூக்களை கொண்டது. இதில் சிவப்பு நிற பூக்களை கொண்ட மந்தாரை அதிக மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. மந்தாரையின் இலைகள் பிளவுபட்டு வண்ணத்துப்பூச்சியின் இறகு போன்ற வடிவத்தில் காணப்படும். பூக்கள் 5 […]
Read More
  • By Magazine
  • |
– வழக்கறிஞர்   பி. விஜயகுமார் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் பெருந்தன்மை மாரீஸ்வரி- எதிர்- தமிழ்நாடு அரசு என்ற வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் 2015-ம் ஆண்டுகால கட்டத்தில் நடந்தது. வழக்கின் தன்மை என்னவென்றால் கணவன் மனைவி இருவரும் பார்வை இல்லாத தம்பதியர்கள். கணவருக்கு பிறவியிலேயே பார்வை கிடையாது. மனைவிக்கோ 12-ம் வகுப்பு முடிக்கவும் பார்வை போயிற்று. இருவருக்கும் திருமணம் நடந்த முதலில் மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. தம்பதியர்கள் சிகிட்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்குச் […]
Read More
  • By Magazine
  • |
S. லெட்சுமி தங்கம் பாலகிருஷ்ணன். காரவிளை தேன் அருவியாய் பிறந்து தத்தும் அலை யென தவழ்ந்து புன்னகை பூ சொரிந்து அனுப்புகிறோம் 2025 ஐ. வாரீர் வாரீர் இவ்வையக செல்வங்களே!!! பாரீர் பாரீர் சிங்கமென புறப்பட்ட 20 26 ஐ!! செங்கதிரோன் காலையில் மெதுவாக கண்விழிக; செம்மாங்கு பாடியே பறவைகள் பாட்டடிசைக்க.; மானியமும் மீனினமும்; நடனமாடி மகிழ்ந்திருக்க!! செவ்வனே மெல்ல மெல்ல நடை போட்டு மெதுவாய் பிறந்தது புத்தாண்டு!!! மேகமெனும் இரும்பு கதவை திறந்து வந்தான்; செவ்விதழ் […]
Read More
வர்மம் எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் விசபந்த வர்மம் சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான துதிக்கை வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் விசபந்த வர்மம் பற்றி அறிவோம். இவ்வர்மம் மேற்புற முழங்கை மத்தியில் அமைந்துள்ளது. விஷபந்த வர்மம், விசபந்தக்காலம், விஷமணிபந்த வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் இவ்வர்மம் வழங்கப்படுகிறது. “ஆரடா பெருவிரல் மேல் சுட்டுவர்மம் அப்பனே அஞ்சிறை மேல் விசமணியின்பந்தம்”.                                                                                                                                 – ஒடிமுறிவு நூல் “வீழுமந்த முழங்கையில் மையம் பற்றி விசமான மணிபந்த […]
Read More