நோக்கு வர்ம ஆசான் பிரகாசன் குருக்கள் பேட்டி
  • By Magazine
  • |
தற்காப்புகலையில் மட்டுமல்ல. வாழ்க்கையிலும் ஒளிந்து மாறும் யுக்தியை கடைபிடித்தால்  முன்னேறலாம் என்கிறார். பிரபல நோக்குவர்ம ஆசான் என அறியப்படும் திரு.பிரகாசம் குருக்கள் புதிய தென்றலுக்காக அவரை அவரது மருத்துவமனையில் சந்தித்தோம்.  களரி ,வர்மம் போன்றவற்றைப் பற்றி நமது குழுவினர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் உற்சாகமாக பதில் கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். ஐயா தங்களின் களரி பயிற்சி பற்றி கூறுங்கள்? நான் எனது களரி கூடத்தின் மூலம் மாணவ மாணவிகளுக்கு களரிபயிற்சி அளித்து வருகிறேன். தற்போதைய காலகட்டத்தில் வன்முறைகள் […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
– வழக்கறிஞர்  பி. விஜயகுமார் சைபர் குற்ற வங்கி பணம் முடக்கப்படுவதும் விடுவிக்கப்படுவதும்Breezing and unbreezing bank Accounts involved cyber crime திடீரென வங்கியிலிருந்து நமக்கு ஒரு அழைப்பு வரும். உங்கள் வங்கிக் கணக்கின் பணம் முடக்கப்பட்டுள்ளது என்று. நாம் பயந்தபடி வங்கிக்கு  ஓடுவோம். விபரங்கள் கேட்போம். வங்கி மேலாளரோ கேரள மாநில சைபர் குற்றப்பிரிவு போலீசார் உங்கள் வங்கி கணக்கை முடக்க உத்தரவிட்டுள்ளதாக ஆணை பிறப்பித்துள்ளார்கள் என்று சொல்லுவார்கள். இதற்காக யாரும் பயப்படத் தேவையில்லை. […]
Read More
முரண்
  • By Magazine
  • |
கமல அருள் குமார் தொலைவில் அழகாய் தெரியும் சில அருகே ஆபத்தைத் தரலாம்.. வளைவில் முடிவாய் தெரியும் சில வளைந்த பின் வியப்பைத் தரலாம்.. கலையில் கவர்ச்சியாய் தெரியும் சில களைத்த பின் கவலையும் தரலாம்… விலையில் வீழ்ச்சியாய் தெரியும் சில உழைத்த பின் உயர்ச்சியும் தரலாம்… பார்வைக்கு பளபளப்பாய் தெரியும் சிலர் பழகின பின் பாம்பாகவும் மாறலாம்.. அழகும் ஆபத்தும் எப்போதும் அருகருகே… அறிவும் அறியாமையும் எப்போதும் எதிர் எதிரே…
Read More
“நாளைய உலகம்” (இசைப்பாடல்)
  • By Magazine
  • |
குமரி எழிலன் எல்லைகளில்லா உலகம் – இது ஏற்ற தாழ்விலா கழகம் எங்கே எதுவிளைந்தாலும்-அது பெற்றவர்க்கெல்லாம் சொந்தம்                                 (எல்லைகளில்லா…) உழைப்பில் உருவான உலகம் -இது உலகோர்க் கெல்லாம் சொந்தம் பசித்த வயிறு நிறைத்து – மகிழும் பாரோர் எல்லாம் பந்தம்..                                 (எல்லைகளில்லா …) விற்பனை என்பது பனையா – அட கற்பனை போல் ஒரு வினையா என்றொரு கேள்வி எழணும் – நாம் எந்நாளும் எல்லாமும் பெறணும்                                 (எல்லைகளில்லா …) போரெனும் ஆயுதம் […]
Read More
  • By Magazine
  • |
எம். ஞானசேகர் சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை சமர்ப்பித்து பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய மாண்புமிகு சிறு, குறு மற்றும் நடுத்தரத்துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்களின் அறிவிப்புகள் 1. 2025/26-ம் நிதி ஆண்டில் வங்கிகள் மூலம் தமிழ்நாட்டின் 10 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு ரூ.25 லட்சம் கோடி கடனாக வழங்கப்படும். 2. சிட்கோ மூலம் திருமுடிவாக்கம், நாயனூர், நாகம்பள்ளி, சூரியர், கருத்தப் புளியம்பட்டி, தனிச்சியம், நடுவூர், நரசிங்கநல்லூர் ஆகிய 9 இடங்களில் 308 ஏ பரப்பில், […]
Read More
களரிக்கலை
  • By Magazine
  • |
மூலச்சல் Dr.T. இராஜேந்திரன் இந்தியாவின் தென்கோடியில் இறுதி எல்லையாக விளங்கும் கன்னியாக்குமரி மாவட்டம் 1672 சதுரகிலோமீட்டர் பரப்பளவையும் 71.5 கிலோமீட்டர் கடற்கரையையும் கொண்டதாகும். இது மூன்று புறமும் கடலாலும் ஒரு பகுதி மலையாலும் சூளப்பட்ட ஓர் இயற்கைவளம் கொழிக்கும் மாவட்டமும் ஆகும். இது நீண்டகாலமாக திருவிதாங்கூரின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. 1956 நவம்பர் 1-ம் நாள் தமிழ்நாட்டோடு இணைக்கப்பட்டு கன்னியாக்குமரி மாவட்டம் எனும் பெயரைப் பெற்றது. இங்கு வாழ்ந்த பெரும்பான்மை மக்களும் தமிழ் மொழியையே தாய்மொழியாகக் […]
Read More
நோய் வராமல் தடுக்கும் “ரம்பூட்டான்”
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் பார்ப்பதற்கு கண்களை கவரும் வண்ணம் சிவப்பு நிறத்தில் ரோமம் போன்ற வெளிப்புற வளர்ச்சியையும், அதன் உள்ளே உண்ணக்கூடிய புளிப்பு மற்றும் இனிப்பு சுவையுடன் கூடிய வெண்ணிற நீள் உருண்ட வடிவ சதையுடனும் அதன் உட்புறம் கடினமான ஒரு விதையையும் கொண்டு இருக்கும் பழம் தான் ரம்பூட்டான். இதன் பூர்வீகம் மலேசியா, இந்தோனிசியா ஆகிய நாடுகள். மேலும் இது பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை, இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் பயிராகிறது. ரம்பூட்டான் மரவகையை […]
Read More
மாற்றுத் திறனாளிகள் குறித்த பார்வைகள்
  • By Magazine
  • |
A. தர்மராஜ் (த.ராசு) ஆரம்பத்தில் நம் நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளைக் கவனிப்பதற்கென்று ஒரு சில மாநிலங்களில் மட்டும் தனிப்பட்ட இலாகாக்களும், மாவட்ட அளவிலான சமூக நலத்துறை அதிகாரிகளும் இருந்த நிலை இருந்தது. அப்படி இல்லாத மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை முழு அளவில் தீர்க்க முடியாத நிலையே இருந்தது. உயர் அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டிய நிலையே நீண்ட நாட்களாய் நிலவியது. மாற்றுத்திறனாளிகள் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு தடை இருந்த […]
Read More
  • By Magazine
  • |
கவிஞர்.E.K.சுப்பையா கம்பர் காந்திமகானை பணிந்திடுவோம்                 அவர் காட்டிய அஹிம்சையை கடைபிடிப்போம்                 பொறுமையை கடைபிடித்து பெருமையை செய்வோம்                 மாந்தர் பிறப்பை சிறப்படைய செய்வோம்                 தாழ்ந்தவர்களையும் தாங்கிடுவோம் நீக்கிடுவோம் கொடுமையை                 வள்ளுவன் குறளை வாழ்க்கையில் நடத்தி வள்ளள் காந்தியை போற்றுவோம்                 நமக்கு சுதந்திரத்தை வாங்கி கொடுத்தவர்கள் இறப்பிலும் பிறர் உயிரை எடுப்பதில்                 அவர் விரும்பவில்லை உண்ணாவிரதம் உண்மையின்                 தத்துவத்தை கொண்டே உலகை நடுங்க செய்யும்                 கண்கண்ட தெய்வம் […]
Read More
வர்மம்’எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
 முனைவர் முல்லைத்தமிழ் சலப்பிற வர்மம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான பின்னல்வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் சலப்பிறவர்மம் பற்றி அறிவோம். மூத்திரக்காலத்திற்கு நேர் பின்புறம் முதுகெலும்புத்தொடரில் அமைந்துள்ளதே சலப்பிற வர்மமாகும். இவ்வர்மம் ஜலப்பிற வர்மம், சடப்பிறக்காலம், சரடயந்த காலம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. “ஆனந்தமான மூத்திரக்காலத்தின் பின் சலப்பிறவர்மம்”.                                                                                 – கால வர்மநூல் “அறுதி ஜலப்பையினுட புறதாரைக்குள் அறிஞர் உரை சலப்பிறவர்மம்”.                                                                                                  – வர்ம குருநூல் […]
Read More