முரண்

முரண்

  • By Magazine
  • |

கமல அருள் குமார்

தொலைவில்

அழகாய் தெரியும் சில

அருகே ஆபத்தைத் தரலாம்..

வளைவில்

முடிவாய் தெரியும் சில

வளைந்த பின்

வியப்பைத் தரலாம்..

கலையில்

கவர்ச்சியாய் தெரியும் சில

களைத்த பின்

கவலையும் தரலாம்…

விலையில்

வீழ்ச்சியாய் தெரியும் சில

உழைத்த பின்

உயர்ச்சியும் தரலாம்…

பார்வைக்கு

பளபளப்பாய் தெரியும் சிலர்

பழகின பின்

பாம்பாகவும் மாறலாம்..

அழகும் ஆபத்தும்

எப்போதும் அருகருகே…

அறிவும் அறியாமையும்

எப்போதும் எதிர் எதிரே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *