கவிஞர்.E.K.சுப்பையா கம்பர்
காந்திமகானை பணிந்திடுவோம்
அவர் காட்டிய அஹிம்சையை
கடைபிடிப்போம்
பொறுமையை கடைபிடித்து
பெருமையை செய்வோம்
மாந்தர் பிறப்பை
சிறப்படைய செய்வோம்
தாழ்ந்தவர்களையும் தாங்கிடுவோம்
நீக்கிடுவோம் கொடுமையை
வள்ளுவன் குறளை வாழ்க்கையில்
நடத்தி வள்ளள் காந்தியை போற்றுவோம்
நமக்கு சுதந்திரத்தை வாங்கி கொடுத்தவர்கள்
இறப்பிலும் பிறர் உயிரை எடுப்பதில்
அவர் விரும்பவில்லை
உண்ணாவிரதம் உண்மையின்
தத்துவத்தை கொண்டே
உலகை நடுங்க செய்யும்
கண்கண்ட தெய்வம்
காந்தியை நினைத்தால்
கடவுளை நினைப்பதற்கு சமம்
அன்னல்காந்தியை நினை
அனுதினமும் அவர்துதி பாடுவோம்.
Leave a Reply