“நாளைய உலகம்” (இசைப்பாடல்)

“நாளைய உலகம்” (இசைப்பாடல்)

  • By Magazine
  • |

குமரி எழிலன்

எல்லைகளில்லா உலகம் – இது

ஏற்ற தாழ்விலா கழகம்

எங்கே எதுவிளைந்தாலும்-அது

பெற்றவர்க்கெல்லாம் சொந்தம்

                                (எல்லைகளில்லா…)

உழைப்பில் உருவான உலகம் -இது

உலகோர்க் கெல்லாம் சொந்தம்

பசித்த வயிறு நிறைத்து – மகிழும்

பாரோர் எல்லாம் பந்தம்..

                                (எல்லைகளில்லா …)

விற்பனை என்பது பனையா – அட

கற்பனை போல் ஒரு வினையா

என்றொரு கேள்வி எழணும் – நாம்

எந்நாளும் எல்லாமும் பெறணும்

                                (எல்லைகளில்லா …)

போரெனும் ஆயுதம் இல்லை -பதவி

பேய் எனும் ஆவியும் இல்லை

ஏழைப் பணக்காரனில்லை – இனி

எனது உனதென்பதில்லை…

                                (எல்லைகளில்லா…)

அடிமை என்றொரு சொல்லே -இனி

அகர வரிசையி லில்லை

ஆணும் பெண்ணும் சமமே- சாதி

ஆணவக் கொலைகளும் இல்லை

                                (எல்லைகளில்லா…

கையில் வண்ணக்கயிறு – கட்டி

பேதம் காட்ட மாட்டோம் – இனி

பொய்யில் பொதிந்து வந்த

புனைகதைகள் பேசமாட்டோம்..                                

(எல்லைகளில்லா …)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *