ஆடாதோடையும் அதன் மருத்துவபயன்களும்
  • By Magazine
  • |
– கஸ்தூரிபா ஜாண்ஸன் ஆங்கிலத்தில் மலபார் நட் (Malabar nut) என்று அழைக்கப்படும். ஆடாதோடை தாவரவியல் பெயர் (Adathoda Vasica) ஆடாதோடை வாசிக்கா என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு புதர் செடியாகும். Acanthaceae  என்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்தது ஆடாதோடை தரப்படுத்தப்படாத பூக்கும் தாவரம். இத்தாவரம் முக்கியமான வேலிகளில் காணப்படும் மாவிலை, நுணர் இலையைப் போல் ஈட்டி வடிவத்தில் நீண்ட பெரிய இலைகளுடன் செழிப்பாக வளர்ந்திருக்கும். இதன் பூக்கள் வெண்ணிறமானவை. இம்மூலிகை (சூடு) வெப்பத் தன்மையானது. இத்தாவரத்தின் […]
Read More
ஊனமுற்றோர்  சில  ஊனமற்ற பார்வைகள்
  • By Magazine
  • |
A.  தர்மராஜ் (த.ராசு) அரவாணிகளையே மூன்றாம் பாலினத்தவர் என்றும், ஊனமுற்றவர்களையே மாற்று திறனாளிகள் என்றும் நாம் அழைக்கிறோம். தாத்தா, பாட்டி, தாய், தந்தை, பிள்ளைகள் என்று குடும்பமாக வாழ்வதையே கலாச்சாரமாய்க் கொண்டிருக்கும் இந்தியர்களான நம்மில் பாலினத்தவரில் ஆண்பால், பெண்பால் என்று ஏதேனும் ஒன்று என்றில்லாமல் மிக அபூர்வமாக ஒருசில குடும்பங்களில் ஒரு சில குழந்தைகள் மூன்றாம் பாலினத்தவராக பிறந்து விடுகின்றனர். குழந்தையாக பிறக்கும் போதே உடனடியாக என்றில்லாமல், ஓரிரு நாள் அல்லது மாதங்களில் அல்லது வருடங்களில் பிறப்புறுப்பில் […]
Read More
சட்டத்தை  தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
– வழக்கறிஞர் பி. விஜயகுமார் புதிய பாஸ்போர்ட் சட்டம் அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமல் அனுமதியின்றி அந்நாடடில் குடியேறியவர்களுக்கு புதிய அதிபர் டிரம்ப் எவ்வாறு கடிவாளம் போட்டுள்ளாரோ அதே போல் நம் நாட்டிலும் நமது நாட்டிற்குள் முறையான ஆவணங்கள் இல்லாமல் அனுமதியின்றி குடியேறியவர்களுக்கு கடிவாளம் போட்டு அவர்கள் எந்தெந்த நாட்டிலிருந்து வந்தார்களோ அந்தந்த நாட்டிற்கு அவர்களை திருப்பி அனுப்பும் சட்டம் வந்துள்ளது. வங்க தேசிகள், பாகிஸ்தானியர், பர்மாகாரர்கள் என நிறைய அந்நிய நாட்டினர் சட்டத்திற்கு புறம்பாக நம் […]
Read More
  • By Magazine
  • |
“இல்லாள் இல்லாளேல் இல்லாகும் விருந்தென்று சொல்லாமல் சொல்லும் குறள்” “குடியென்னும் குன்றேறி நின்றார் முடிசாய்ந்து அடிசாய்வர் என்றேனும் ஓர்நாள்.” “பெற்றோரை முதியோர் இல்லத்தில் விட்டவர்கள் மற்றோர்நாள் சேர்வர் அங்கு” பாதை காட்டும் படிப்பை விட்டுவிட்டு போதை விற்கிறது அரசு.
Read More
வான்புகழ் வள்ளுவர்!
  • By Magazine
  • |
– இரா.சிவானந்தம் திருவள்ளுவரின் அற்புதப்படைப்பால் வியந்து நிற்கிறது ஞாலம் ஒன்றே முக்கால் வரிகளில் தான் எத்தனையெத்தனை ஜாலம் முப்பாலின் உன்னதத்தை என்றும் மறக்காது காலம் மதம் இனம் கடந்த அற்புதப்படைப்பு வள்ளுவரின் காலமும் – வரலாறும் இன்னும் ஆராயப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுவரை இதற்கீடான ஒரு நீதிநூல் தோன்றவில்லை இனியும் எம்மொழியிலும் தோன்றப் போவதுமில்லை அனைத்து மக்களாலும் ஏற்கப்பட்ட நூல் அனைத்து நாட்டாரும் ரசிக்கும் நூல் போற்றாத மனிதர் இல்லை போற்றாதவர் மனிதரே இல்லை ஞாலம் உள்ளளவும் வள்ளுவம் […]
Read More
  • By Magazine
  • |
 – குமரி எழிலன் …. கல்வி, தேசுமிக்கது தேச எல்லைக் கடந்தும் பேசப்படுவது, கொடுக்க கொடுக்க வளருமே தவிர குறையாது, பிறரால் திருட முடியாதது, கல்வியால் பெறும்புகழ் காலம் கடந்தும் நிற்கும். புத்தக விரும்பிகளாகிய நேரு விவேகானந்தர், அம்பேத்கர், காந்தி, பகத்சிங், அண்ணா, ஆப்ரகாம் லிங்கன், நெப்போலியன் … போன்றோர், அழியாத கல்வியைப் பெற்று, அவனியை ஆண்டவர்கள் . “கல்வி, அறிதலுக்கான கருவி, என்கிறார் கல்வியாளர் நேரு” உலகப் பார்வை கியூபா பின்லந்து நாடுகளில், ஏழு வயதிற்குப் […]
Read More
வெற்றிக்கு தடையல்ல
  • By Magazine
  • |
 – சஜிபிரபு மாறச்சன் “கவிஞனுக்கு காண்பதெல்லாம் கவிதை சிற்பிக்கு தொடுவதெல்லாம் சிலை. எழுத்தாளனுக்கு எதுவும் கரு. வியாபாரிக்கு எல்லாம் லாபம்” என்பனவற்றை போல«, வறுமையில் தவிப்பனும் எப்படியும் சாதிக்கலாம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போல் நமது கடமையைச் செய்வதற்கு வெட்கப்பட தேவையில்லை. பிறர் என்ன நினைப்பார்கள் என்ற சிந்தனையை தூக்கியெறிந்து விட்டு உழைக்கத் தொடங்கினாலே, நமது பொருளாதார நிலை உயர்ந்து, சமூகத்தில் நல்ல நிலைக்கு வர முடியும். சிலர் நம்மால் அவனைப் போல படிக்க வசதியில்லையே என்று […]
Read More
  • By Magazine
  • |
கவிஞர். E.K. சுப்பையாகம்பர் மனிதர்கள் தங்கள் செயலுக்கும் தொழிலுக்கும் அப்பாற்பட்டவர்கள். மனிதர்கள் தன்னை தானே தன் மனதை சீர்திருத்தி கொண்டால் இறைவனை அறியலாம். பிரபஞ்சத்தை கைகளால் வளைத்து பிடிக்க முடியாது. ஆனால் உண்மை பக்தியால் அரவணைத்துக் கொள்வது எளிதான காரியம். ஆன்மாக்கள் தனித்தனியாக இருந்தாலும் பலம், பலவீனம், விருப்பு, வெறுப்பு இருந்தாலும் இறைவனை பக்தி கண்ணோடு பார்த்தால் தியானம் என்பது தனியாக அமர்ந்து கண்ணை மூடிக் கொண்டு அசையாமல் தியானம் செய்வது உண்மை தியானம் அல்ல. சாலை […]
Read More
இந்திய விடுதலைக்காகப் போராடிய மாபெரும் வீராங்கனை ஜாண்சிராணி லட்சமிபாய்
  • By Magazine
  • |
பேராசிரியர். முளங்குழி.பா.லாசர் ஜாண்சிராணி லட்சுமிபாய் 1827- ஆம் ஆண்டு மராத்திய பிராமணர் குலத்தில், மோரோபாண்டு, பாகீரதி அம்மாள் பெற்றோருக்கு மகளாக, காசி என்றழைக்கப்படும் இன்றைய வாரணாசியில் பிறந்தார். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியதோடு, ஆண்களுக்கு நிகராக வாள்வீச்சு, குதிரையேற்றம், துப்பாக்கி சுடுதல், அம்பு எய்தல் போன்ற அத்தனை போர்ப்பயிற்சிகளையும் பெற்றார். இவரது இயற்பெயர் மணிகர்னிகா. மனு என அழைத்தனர். ஜாண்சி நாட்டு மன்னர் கங்காதர்ராவ் மணிகர்னிகாவை மணம் புரிந்து கொண்டார். அப்போது அவருக்கு வயது 15 தான். […]
Read More
வங்கிகளின் நம்பகத்தன்மை
  • By Magazine
  • |
பழனி அரங்கசாமி பொதுமக்களும், உழைப்பாளிகளும், நடுத்தர வர்க்கத்தினரும், ஓய்வூதியம் பெறுகின்ற முதியோர்களும் குடும்ப செலவு போக மீதப் பணத்தை தங்களது வருங்காலத் தேவைகளுக்காகவும், வீடு, மனை, சிறுதொழில்கள் ஆகியவற்றில் முதலீடு செய்வதற்காகவும் சேர்த்து வைக்கின்றனர். இப்படிச் சேமிக்கின்ற பணத்தை தொடர்ந்து வீட்டில் வைத்திருக்க இயலாது. சிற்சில சமயங்களில் நாமோ, துணைவியாரோ, பிள்ளைகளோ வீண்செலவு செய்திடக் கூடும். திருடர் பயம் வேறு. தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் தொழில் தொடங்குவோரிடம் கடனாகவோ பங்குத் தொகையாகவோ கொடுத்தால், பணம் மீண்டும் […]
Read More