• By Magazine
  • |
வசந்தம் ஒருநாளில் மலர்வதில்லை. அதுபோலத்தான் வாழ்வின் உயர்வு என்கிறார் அரிஸ்டாட்டில். என்றோ ஒருநாள் நடக்கப் போகின்ற தேர்வுக்காக நாம் வருடம் முழுவதும், படித்து, நம்மை தயார் செய்து காத்திருக்கிறோம். நன்றாக எழுதி நல்ல மார்க் எடுக்கிறோம் இல்லையா… உழைக்க வேண்டும். உழைத்தால் தான் கூலி கிடைக்கும். வியர்வை சிந்தாமல் எதுவும் கிடைக்காது. எது உங்களுக்கு தேவையோ அதை அளவில்லாமல் இப்பிரபஞ்சம் உங்களுக்கு வாரி வழங்கி கொண்டே இருக்கும். சாதனை புரிய பிறந்த நீங்கள் ஏன் தயக்கம் காட்டுகின்றீர்கள். […]
Read More
சரித்திரப்பதிவின் முதல்பெண் மருத்துவர் மெரிட் ப்ட்டா
  • By Magazine
  • |
நண்பர்களே, இப்போது நான் கூறுவது ஒரு சரித்திரம் பதிவிட்ட உண்மை நிகழ்வுகள். பொதுவாக பெண்களைப் பற்றிய பதிவுகள் குறைவாக  கிடைக்கின்றன. நான் ஆதிகால பெண் மருத்துவர்களைத் தேடியபோது எதிர்பாராமல் கிடைத்தவர் தான் மெரிட் ட்டா (Merit-Ptah) என்ற பெண் மருத்துவர். இதில் Ptah என்பதற்கு “Ptah கடவுளின் பிரியமானவர்” என்று பொருளாம். இவர் மெரிட் ட்டா (Merit-Ptah) எகிப்தின் இரண்டாம் வம்சத்தின் போது, பாரோவின் நீதிமன்றத்தின் ஒரு பெண் தலைமை மருத்துவராக கருதப்பட்டார். அவரது காலம் கிமு […]
Read More
கோபம் தானாக அடங்கிப் போகிறது!
  • By Magazine
  • |
ஜப்பானில் தியானத்தை ஜா.ஜென் என்பார்கள். ஜா.ஜென் என்றால் உட்கார்ந்து விடுவது என்று பொருள். ஒன்றும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருப்பது. ஒரு ஜென் துறவி ஒரு நாளுக்கு ஆறிலிருந்து எட்டு மணிநேரம் சும்மா உட்கார்ந்திருக்கிறார். ஒன்றும் செய்யாமல் சும்மா அப்படியே உட்கார்ந்திருக்கிறார். அப்படிச் சில நாட்கள், வாரங்கள், மாதங்கள் உட்கார்ந்திருக்கும் போது மனம் தானாக ஓய்ந்து போகிறது. புத்தி பேதலித்தவர்களை ஜென் மடங்களுக்கு அழைத்து வருவார்கள். அங்கே அவர்களுக்கு எந்த சிகிச்சையும் தருவதில்லை. உட்கார்ந்திருக்க உதவுவார்கள். உணவு தருவார்கள். […]
Read More
எப்சம் உப்பு
  • By Magazine
  • |
வீடுகளில் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் உப்பின் வேதியியல் பெயர் சோடியம் குளோரைடு ஆகும். ஆனால் எப்சம் உப்பு என்பது எப்சம் உப்பு மெக்னீசியம் மற்றும் சல்பேட் போன்றவற்றின் கலவையாகும். இதன் வேதியியல் அமைப்பின் காரணமாகவே உப்பு எனப்படுகிறது. இந்த உப்பு மருந்துக் கடைகளில் தான் கிடைக்கும்.  மசாலாக் கடைகளில் கிடைக்காது. இது மெக்னீசியம் குறைபாட்டினை நீக்கும் தன்மை வாய்ந்தது. இது வலிகள், காயங்கள், தசைவலிகள், வீக்கங்கள், சோர்வு, பல்வேறு சரும பிரச்சனைகளை சரிச் செய்ய உதவும். பல்வேறு […]
Read More
அணுக்கனிமப் படிவங்கள்
  • By Magazine
  • |
அணுக்கனிமப் படிமங்கள் அகழ்வு, இரண்டு அடுக்குச் செயல்பாடுகளாக இருக்கும். அணுக்கனிமப் படிமங்கள் நிலத்தின் மேற்பரப்பில் அமைந்துள்ளது. முதலில் நிலமேற்பரப்பில் இருந்து 2.5 முதல் 3 மீட்டர் ஆழம் வரையில் அகழ்வுப்பணிகள் நடத்தப்படும். அடுத்தகட்டமாக அடுத்த அடுக்கு அகழ்விக்கப்படும். 2 ஆவது அகழ்விப்பு முடிக்கும் போது கனிமப்பிரிவு ஆலையில் இருந்து கொண்டு வரப்படும் நிராகரிக்கப்பட்ட அணுக்கனிமங்கள் இல்லாத மண்ணைக் கொண்டு பள்ளங்கள் நிரப்பப்படும். அகழ்விப்பு சராசரி 6 மீட்டர் வரையிலும் அதிகபட்சம் 9 மீட்டர் ஆழம் வரையிலும் இருக்கும். […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-வின் 280-வது கருத்தாய்வுக் கூட்டமானது, திரு.அருள்தாஸ் ஆசான் தலைமையில் மருத்துவர்.த.இராஜேந்திரன், மருத்துவ கமலகண்ணன், திரு.கே. செல்வநாதன் ஆசான் ஆகியோர் முன்னிலையில் 05.10.2024 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் மருத்துவர். கமலகண்ணன் மூட்டுவலிக்கு எளிய முறையில் சூரணம் செய்முறையை கூறினார். அடுத்ததாக திரு.கே.செல்வநாதன் ஆசான் பாரம்பரிய மருத்துவம் குறித்து தெளிவாக உரையாற்றினார். அடுத்ததாக, திரு.ஸ்டீபன் ஆசான் நாபிரணம் மாற எளிய மருந்தினையும், பெரும்பாடு குணமாக எளிய மருந்து […]
Read More
  • By Magazine
  • |
பிறரை வென்று வாழ்வதற்காய்ப்                 பித்தலாட்டம் செய்வதுவும் உறவை எல்லாம் மிதிப்பதுவும்                 உண்மை தன்னை மறைப்பதுவும் திறமையாக ஏய்ப்பதுவும்                 திருடிப் பொருளைச் சேர்ப்பதுவும் புறமே கூறி நடப்பதுவும்                 புகழைத் தருமென்(று) எண்ணாதே! அறமே இல்லாச் செய்கைகளால்                 ஆதிநாளில் கிடைப்பதெலாம் இறவாப் புகழென்றாகாதே;                 ஈசல் வாழ்வே அதற்குண்டு: மறந்தும் கேடு செய்யாமல்                 மனிதநேயத் தொண்டுடனே சிறந்த செயலைச் செய்வோர்க்கே                 சீரும் பேரும் நிலைத்திருக்கும்! நிறமும் இனமும் மதமுமெலாம்                 […]
Read More
வித்தைகள் கற்க வாழ்நாள் போதாது
  • By Magazine
  • |
மத்திகோடு சிவகுமார் ஆசான்பேட்டி கண்டவர் : ஜி.ஜெயகர்ணன் ஆசான்கள் என்பவர்கள் ஆழம் காண முடியாத அறிவு பொக்கிஷங்கள் என்றால் மிகையல்ல. ஆம்புலன்ஸ், அதிநவீன மருத்துவமனைகள் ஒன்றுமே இல்லாத காலத்தில் கூட இவர்கள் பாரம்பரியமாக கற்றுக் கொண்ட கல்வியாலும் தங்களது அனுபவ அறிவினாலும் எண்ணிலடங்காத மனித உயிர்களை காப்பாற்றி வந்துள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அத்தகைய அறிவு ஜீவிகளான ஆசான்கள் தமிழகத்தின் தென்கோடியிலும் கேரளா போன்ற மாநிலங்களிலும் அதிகமாக காணப்படுகின்றனர். அப்படிப்பட்ட ஆசான்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் […]
Read More
இட்லி புராணம்
  • By Magazine
  • |
தமிழன் கண்டுபிடித்த தலையாய உணவு இதன் வரலாற்றுக்காலம் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி உண்பது காய்ந்த வயிற்றிற்கும் காய்ச்சல் காரருக்கும் உதவுவது மருத்துவர் மருந்துசீட்டில் எழுதாத மருந்து. எப்போது உண்ணலாம் எதனுடனும் உண்ணலாம் ஒரே மாவுதான் சுவை வேறு- தோசை- இட்லியாய் எந்த தமிழர் விருந்திலும் இதற்கு இடமுண்டு பலரின் பயணத்தில் உடன் வருவது துணியுடன் ஒட்டி அவிழ்ந்தாலும்- பிரிக்கப்படுவது மாலை வரை தாக்கு பிடிக்கும் மறுநாள் இட்லி உப்புமாவாக மலரும். […]
Read More
உலகைப் படிப்பவன்
  • By Magazine
  • |
எப்போதும் எதிலும் ஒழுங்கைக் கடைபிடிக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கு காணும் எல்லாவற்றிலும் நீளும் தாமதம் காணச் சகிக்காமல் தலைக்கேறும் கோபத்தில் தானாகவே கிடைத்து விடுகிறது சிடுமூஞ்சிப் பட்டம் தேவையின் உச்சத்தில் காலைப் பிடித்தும் காயை நகர்த்தியும் காரியம் சாதித்துவிடும் எதிர் வீட்டுக்காரருக்கு சாமர்த்தியசாலிப் பட்டம் பொருந்திப் போகிறது. எப்போதும் உதவியென யார் கேட்டாலும் ஓடிச்செய்யும் மாடி வீட்டு நண்பருக்கு எளிதில் கிடைக்கிறது இளிச்சவாயன் பட்டம் எப்படி வாழ்வதென்ற கேள்வியோடும் எதைப் படிப்பதென்ற ஏக்கத்தோடும் எனைச் சுற்றியுள்ளோரைக் கண்டு மனிதர்களின் […]
Read More