சுற்றுச்சூழல் அக்கறையோடு
  • By Magazine
  • |
பண்டிகைகளைக் கொண்டாடுவோம் பண்டிகைகள் என்றாலே கொண்டாட்டங்களுக்கு குறைவிருக்காது. உறவுகள் கூடி கொண்டாடுவதற்கானவைதான் பண்டிகைகளும் திருவிழாக்களும். ஆனால் இந்த அவசரகால தொழில்நுட்ப வாழ்வில் தொலைவுகளில் வாழும் நாம் இப்பண்டிகைக் காலங்களில் உறவுகளை சந்தித்து கூடி மகிழ்ந்திருப்பதற்கான முக்கியத்துவத்தைக் குறைத்துக் கொண்டு நுகர்வுசார்ந்த கொண்டாட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றோம். சொந்தங்களைச் சந்தி¢த்தல் என்பது சுமூகமான கூட்டுக்குடும்பங்களில் நடைபெறும் நிகழ்வாகும். தற்போதைய வாழ்விற்கான பொருளாதாரத் தேடலில் எங்கெங்கோ படிப்பு, பணி என பிரிந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் உறவு ரீதியாக தொலைவிலிருந்தாலும் கூட்டுக்குடும்ப […]
Read More
மணமூட்டும் புதினா
  • By Magazine
  • |
புதினா நறுமணமிக்கது. இது உணவிற்கு மட்டுமல்லாது, வாய்க்கும் நறுமணத்தை கொடுத்து, உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. புதினா சத்து நிறைந்தது. இதன் பூர்வீகம் ஐரோப்பிய நாடுகளாக இருப்பினும், எல்லா இடங்களிலும் பயிராகிறது. தண்டுபகுதி அல்லது வேர்பகுதியை தொட்டியில் உள்ள மண்ணில் ஊன்றி வீட்டு தோட்டங்களில் வளர்க்கலாம். தண்ணீர் தினம் ஊற்ற வேண்டும்.  இது சுமார் 2 அடி உயரம் வரை வளரக்கூடியது. இலை கடும்பச்சை நிறத்தில் ஓரங்களில் பற்களுடனும், சுருக்கங்கள் நிறைந்தது போன்றும் காணப்படும். புதினா, பற்பசை, வாய் […]
Read More
ஒரு நினைவூட்டல்
  • By Magazine
  • |
“இயற்கை என்னும் இளைய கன்னி” குமரியின் கிழக்கு எல்லையில் தோவாளைக்கும் இராஜாவூருக்கும் இடையலிருக்கும் மலையின் பெயர் கன்யா உச்சி…ஆம் குமரிக்கோடு..(கன்யா_குமரி.உச்சி_கோடு,மலை) ‘பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள’ என்ற சிலம்பின் பாயிரவரிகள்..ஈராயிரம் ஆண்டுகட்குமுன் இயற்கை சீற்றங்களால் ஏற்பட்ட  மாற்றங்கள் குறித்து பேசுகின்றது. கடுக்கரை என்ற ஊர் வரை குமரிக்கடல்பரந்திருந்து.. அன்றைய கபாடபுரத்தோடு.. இவ்வூரும் கடல்கோளுக் கிரையாகி, கடற்கரை எனும் ஊர் கடல்வற்றி மீண்டும் நிலமாகி இன்றைய நிலம்  கடுக்கரை ஆயிற்று… என்பர்…. ஆம்… இயற்கை […]
Read More
ஆன முதலில் அதிகம் செலவானால்
  • By Magazine
  • |
வரவு எட்டணா செலவு பத்தணா என்றால் அதிகம் இரண்டணா கடனில் போய் தானே முடியும். நம் முன்னோர்களில் பெரும்பான்மையோர் கடன் வாங்குவதை மிகவும் அவமானமாகவே நினைத்து வாழ்ந்தனர். வருவாய்க்கு ஏற்பவே செலவுகளைச் சுருக்கி வருவாய்க்குள் வாழவே முற்பட்டனர். குடும்பத்தில் உள்ள இல்லதரசிகளும் கணவன் உழைத்துப் பொருள் தேடிக்கொண்டு வந்து கொடுப்பதைச் சிக்கனமாகச் செலவிட்டு அதில் சிறு தொகையை (சிறுவாடு) கணவருக்குக் கூட தெரியாமல் சேமித்து வைப்பர். அதனைக் குடும்பத்தின் அவசர அவசியத் தேவைக்குத் தக்க சமயத்தில் கொடுத்துக் […]
Read More
சரித்திரப்பதிவின் முதல்பெண் மருத்துவர் மெரிட் ப்ட்டா
  • By Magazine
  • |
நண்பர்களே, இப்போது நான் கூறுவது ஒரு சரித்திரம் பதிவிட்ட உண்மை நிகழ்வுகள். பொதுவாக பெண்களைப் பற்றிய பதிவுகள் குறைவாக  கிடைக்கின்றன. நான் ஆதிகால பெண் மருத்துவர்களைத் தேடியபோது எதிர்பாராமல் கிடைத்தவர் தான் மெரிட் ட்டா (Merit-Ptah) என்ற பெண் மருத்துவர். இதில் Ptah என்பதற்கு “Ptah கடவுளின் பிரியமானவர்” என்று பொருளாம். இவர் மெரிட் ட்டா (Merit-Ptah) எகிப்தின் இரண்டாம் வம்சத்தின் போது, பாரோவின் நீதிமன்றத்தின் ஒரு பெண் தலைமை மருத்துவராக கருதப்பட்டார். அவரது காலம் கிமு […]
Read More
அணுக்கனிமப் படிவங்கள்
  • By Magazine
  • |
அணுக்கனிமப் படிமங்கள் அகழ்வு, இரண்டு அடுக்குச் செயல்பாடுகளாக இருக்கும். அணுக்கனிமப் படிமங்கள் நிலத்தின் மேற்பரப்பில் அமைந்துள்ளது. முதலில் நிலமேற்பரப்பில் இருந்து 2.5 முதல் 3 மீட்டர் ஆழம் வரையில் அகழ்வுப்பணிகள் நடத்தப்படும். அடுத்தகட்டமாக அடுத்த அடுக்கு அகழ்விக்கப்படும். 2 ஆவது அகழ்விப்பு முடிக்கும் போது கனிமப்பிரிவு ஆலையில் இருந்து கொண்டு வரப்படும் நிராகரிக்கப்பட்ட அணுக்கனிமங்கள் இல்லாத மண்ணைக் கொண்டு பள்ளங்கள் நிரப்பப்படும். அகழ்விப்பு சராசரி 6 மீட்டர் வரையிலும் அதிகபட்சம் 9 மீட்டர் ஆழம் வரையிலும் இருக்கும். […]
Read More
சட்டத்தை  தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
புதிய சட்டத்திருத்தம்- சில மாற்றங்கள் பழைய குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி போலீசார் ஒரு வழக்குப்பதிவு செய்தால் அது குறித்த விபரங்கள் வழக்குப்பதிவு செய்தவருக்கோ அல்லது அவர் பக்கம் சாட்சி சொல்ல இருப்பவர்களுக்கோ வழக்கின் விபரம் தெரியாமலிருக்கும். நீதிமன்றத்திற்கு சாட்சி சொல்லச் செல்லும் போதுதான் வழக்கின் விபரத்தைப் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்தவருக்கும் சாட்சிகளுக்கும் தெரிவிப்பர். ஆதலால் சாட்சி சொல்லுபவர்கள் நீதிமன்றத்தில் அத்தனையும் கோட்டை விடுவர். குற்றவாளி எளிதாக வழக்கில் இருந்து தப்பிவிடுவான். நடந்த சம்பவம் ஒன்றாக இருந்திருந்தாலும் […]
Read More
‘வர்மம்’ எனும் மர்மக்கலை…!
  • By Magazine
  • |
சிப்பிச்சக்கர வர்மம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான சுளுக்குவர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் சிப்பிச்சக்கர வர்மம் பற்றி அறிவோம். புறமுதுகில் சுளுக்குவர்மத்தின் இருவிரல் கீழ் அமைந்ததே சிப்பிச்சக்கர வர்மமாகும். இந்த வர்மத்தை பதித்து அனுக்கிவிட்டால் சுழலி உண்டாகும் என்று வர்ம குருநூல் கூறுகிறது. இவ்வர்மம் சிப்பிக்குழிவர்மம், பூணூல்காலம், இரத்தம் துப்பி வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது.  “சுளுக்கு வர்மத்தின் ரண்டுவிரல் தாழே பூணூல்காலம்”.                                                                                                 – வர்ம குருநூல் “முன்னெல்லு […]
Read More
  • By Magazine
  • |
ஒரு நாட்டினுடைய முன்னேற்றம் என்பது பல கோணங்களைச் சார்ந்தது. அதில் அரசின் முதல் நோக்கம் மக்களின் வாழ்வியல் சார்ந்த அக்கரை. உணவு, வாழ்விடம், ஆரோக்கியம், கல்வி, விழிப்புணர்வு போன்றவைகளாகும். அதை சார்ந்து விவசாயம், சுகாதாரம், அறிவியல் கல்வி, நீராதாரம் போன்றவைகள் முதன்மையாக பராமரிக்கப்பட வேண்டியதும் கவனிக்கப்பட வேண்டியதுமாகும். மக்களின் விழிப்புணர்வுக்குள் இத்தகைய அவசிய தேவைகளின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டியது அரசின் கடமையாகும். எங்கு மக்கள் அச்சத்தாலும், பொருளாதார நெருக்கடியாலும் துன்பப்பட்டு வாழ்கிறார்களோ அங்கு மனவளமும், உடல்நலமும் […]
Read More
ஊழ்வினை
  • By Magazine
  • |
நம்மிடையே பாயும் நதிக்கு பெயரில்லை அப்படியே ஏதோவொரு பெயர் வைத்து அழைத்தாலும் அதற்கு பொருந்தவில்லை இதுவரையான வாழ்வின் அத்தனை இன்ப துன்பங்களையும் யாதொரு புகார்களும் இன்றி ஏற்றுக் கொண்டு ஆத்தோடு அதன் போக்கில் போகும் குணம் நமது விட்ட குறை தொட்ட குறையாக விடுபட்ட ஏதோவொரு கணக்கை சமன் செய்ய வந்திருக்கிறாய் திணை திரிந்து தரிசாய்க் கிடந்த நிலத்தில் ஏரோட்டி பிரதி பலன் பாராது விதைக்கிறாய் அன்பெனும் பெரு வித்தை வளர்ந்து பல்கிப் பெருகி நிற்கும் அதன் […]
Read More