ஊழ்வினை
  • By Magazine
  • |
நம்மிடையே பாயும் நதிக்கு பெயரில்லை அப்படியே ஏதோவொரு பெயர் வைத்து அழைத்தாலும் அதற்கு பொருந்தவில்லை இதுவரையான வாழ்வின் அத்தனை இன்ப துன்பங்களையும் யாதொரு புகார்களும் இன்றி ஏற்றுக் கொண்டு ஆத்தோடு அதன் போக்கில் போகும் குணம் நமது விட்ட குறை தொட்ட குறையாக விடுபட்ட ஏதோவொரு கணக்கை சமன் செய்ய வந்திருக்கிறாய் திணை திரிந்து தரிசாய்க் கிடந்த நிலத்தில் ஏரோட்டி பிரதி பலன் பாராது விதைக்கிறாய் அன்பெனும் பெரு வித்தை வளர்ந்து பல்கிப் பெருகி நிற்கும் அதன் […]
Read More
சித்தமருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA–வின் 279-வது கருத்தாய்வுக் கூட்டமானது திரு. கபரியேல் ஆசான் தலைமையில் திரு.கே. செல்வநாதன் ஆசான், மரு.கமலகண்ணன், திரு.கருணாநிதி ஆசான், மூலச்சல் மருத்துவர்.த. இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 07.09.2024 அன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் திரு.கபரியேல் ஆசான் வர்மக்கலையை சிறந்த முறையில் கற்று உலகெங்கும் பரவச்செய்ய வேண்டும் என்றும் கூறினார். அடுத்ததாக திரு. கருணாநிதி ஆசான் திறிபலா சூரணம் செய்முறையை கூறினார். அருத்ததாக மரு.ஷேக் முகமது பிரளி தைலம் […]
Read More
இது உன்னுடைய வாழ்க்கை வாழ்ந்து விடு!
  • By Magazine
  • |
மரணத்தைக் கண்டு பயமல்ல, காலத்தைக் கண்டுதான் பயம். அந்த பயத்தின் ஆழத்தில் என்ன இருக்கிறதென்று பார். வாழ்வை வாழ முடியவில்லையே என்ற ஆதங்கம். வாழ முடியாது போய்விட்ட வாழ்வை பற்றிய கவலை. வாழ்கிறாய் என்றால் பயமில்லையே. வாழ்வில் நிறைவேற்றம் இருக்குமானால் பயமே இருக்காது. வாழ்வை இனுபவித்திருந்தால், வாழ்வின் உச்சத்தில் என்னென்ன கிடைக்குமோ அதையெல்லாம் பெற்றுக் கொண்டிருந்தால்,  வாழ்வே ஒரு பரவசமாக இருந்திருக்குமானால். ஆழ்ந்த ஒரு கவிதையாக இருந்திருக்குமானால், உனக்குள் துடிக்கும் ஒரு கீதமாக இருந்திருக்குமானால், ஒரு கொண்டாட்டமாக […]
Read More
அன்பென்னும் வீடு..
  • By Magazine
  • |
அன்பென்னும் செங்கல்லை ஊன்றி அன்பென்னும் சுவரைக்கட்டி அன்பென்னும் மேற்கூரையை வேய்ந்து அன்பென்னும் வண்ணமும் பூசி எளிதாகவே கட்டி முடிக்கப்படுகிறது அன்பென்னும் வீடு விரிசல் எதுவும் விழாமல் பார்த்துக்கொள்வது தான் பெரும் போராட்டமாக இருக்கிறது. – கூடல் தாரிக்
Read More
அழியும் நிலையில் பாறு கழுகுகள்
  • By Magazine
  • |
ஐயுசிஎன் எச்சரிக்கை                 பாறு கழுகுகள் விழிப்புணர்வு நாள் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?                 ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் முதலாம் சனிக்கிழமை ‘பாறு கழுகுகள்’ விழிப்புணர்வு நாளாகப் பல நாடுகளிலும்  கடைபிடிக்கப்படுகிறது. ‘பாறு’  என்றால் என்ன? ’பாறு’ என்பது கழுகு வகையைச் சேர்ந்த உருவில் மயில் அளவுள்ள பறவை இனமாகும். சத்தியமங்கலம், முதுமலை வாழ் இருளர் பழங்குடிகளால் இவை ‘பாறு’ என  அழைக்கப்படுகின்றன. சங்க இலக்கியமும் இதன் ஒரு வகையைப் ‘பாறு’ என்று அழைக்கிறது. ‘பாறு’ என்றால் […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
சட்டம் படிப்பதற்குரிய கல்வித்தகுதி கழிந்த மாதம் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் இவ்வாறு ஒரு தீர்ப்புவந்தது. மாணவர் ஒருவர் 10-ம் வகுப்பு வரை பள்ளிச்சென்று ரெகுலர் படிப்பை படித்து முடித்து விட்டு சூழ்நிலையின் காரணமாக மேலும் பள்ளிச் சென்று +2 படிக்க முடியவில்லை. இதனால் இவர் வீட்டிலிருந்தே தொலைதூரக்கல்வி மூலம் தமது +2 வை முடித்தார். இந்த தொலை தூரக்கல்வி சான்றுடன் ஆந்திராவில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் சட்டம் படிப்பிற்காக விண்ணப்பம் கொடுத்திருந்தார். கல்வி நிர்வாகமோ தொலைத்தூரக்கல்வி படித்தவர்களுக்கெல்லாம் […]
Read More
பரிமாணங்களைக் கண்ணுறுதல்
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் வீட்டில் பல்லியைப் புகைப்படம் எடுத்தான் மகன். நான் அலுவலகத்தில் புகைப்படம் எடுத்தேன், இரண்டு பல்லிகளுமே குட்டிப் பல்லிகள். நான் எடுத்தப் புகைப்படத்தில் பல்லிக்குட்டியின் உள்ளுறுப்புகள் வண்ண நிழலாகத் தெரிகின்றது, அடிவயிற்றோடு சில உறுப்புகளும் தெரிகின்றன, குடல், ஈரல், மண்ணீரல் என அவை இருக்கலாம். மகன் ஒருநாள் முன்னரே அந்தப் புகைப்படத்தை எடுத்துவிட்டான். அடுத்தநாள் தூக்கத்திற்காக படுக்கையைத் தட்டும்போதுதான் சொன்னான். “அப்பா… அப்பா…. உங்க செல்பேசியில் ஒரு புகைப்படம் எடுத்தேன், பாருங்க..” “எந்த இடத்தில் […]
Read More
மலையாளக்  கவிதை
  • By Magazine
  • |
மலையாளம் – விபிதா தமிழ் – ராஜன் ஆத்தியப்பன்                                      உம்மிணிக்கு ஆறு வயது. அவளுக்கென்று  மூக்குக் கண்ணாடி ஒன்றுண்டு. பூனையை அவள் பார்ப்பது நான் பார்ப்பதுபோல் அல்ல. அவளது பூனைக்கு சிறகுகளுண்டு. மனிதரைப்போல அது பேசும் ஒரு கையால் சோறு பிசைந்து தின்னும். நாய்குட்டியை அவள் பார்ப்பது நான் பார்ப்பதுபோல் அல்ல. ஆகாயம் தொடுமளவிற்கு பறக்கும் சக்தியுடையது அவளது நாய்குட்டி. பாட்டு பாடும் படம் வரையும் முத்தம் கொடுக்கும். எறும்புகளை அவள் பார்ப்பது நான் பார்ப்பதுபோல் […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
வழக்கறிஞர்.பி.விஜயகுமார் போலீசாருக்கு நமது மொபைல் ஃபோனை சோதனையிடும் அதிகாரம் கிடையாது. (அரசியலமைப்புச்சட்டம் ஆர்ட்டிக்கிள்-21 Right to Life and personal Liberty). பொதுவாக ஓட்டுனர் உரிமம் இல்லாமலும் தலைக்கவசம் அணியாமலும் வாகனம் ஓட்டுபவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்கள் மீது அபராதம் விதிக்க முற்படுவர். சில வாகன ஓட்டிகளோ வீட்டில் உரிமம் இருக்கிறது, அதனால் அபராதம் கட்ட முடியாது என அடம் பிடிப்பர். இதனால் போலீசாருக்கும் வாகன ஓட்டிக்கும் வாய்தகராறு முற்றி இறுதியில் போலீசார் அவர் வண்டியை […]
Read More
சித்தமருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA -வின் 278-வது கருத்தாய்வுக் கூட்டமானது திரு. அருள்தாஸ் ஆசான் தலைமையில் திரு. இராஜன் ஆசான், திரு.கே. செல்வநாதன் ஆசான், மூலச்சல் மருத்துவர்.த.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 03.08.2024 அன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் திரு. அருள்தாஸ் ஆசான் துருசு சுண்ணம் செய்முறையை செய்து காண்பித்தார். அடுத்ததாக, திரு. இராஜன் ஆசான் மேகநோய்கள், கை கால் எரிவு, மேகவறட்சை, எலும்புருக்கி, நீர் சுருக்கு, உடல் வறட்சி இவற்றை குணப்படுத்தும் […]
Read More