புல்லன்குழி செம்முதல் அபூபக்கர் ஆசான்
  • By Magazine
  • |
பண்டை சேரநாட்டின் தெற்குபகுதியில் ஆய்நாடாகவும், வேணாடாகவும் வரலாறு கண்ட தற்போதைய குமரிமண்ணானது , குறிப்பாக குமரி மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள், தமிழரின் உயரிய கலைகளிலொன்றான வர்மக் கலையின் முக்கிய மையங்களாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக போரில் தங்களைப் பாதுகாக்கவும், எதிரியை முடக்கவும் இதைப் பயன்படுத்தியதோடு, காயமடைந்தவர்களை குணப்படுத்தவும் இதே அறிவு பயன்பட்டது. இதனால் போரும் மருத்துவமும் இணைந்த ஒரு தனித்துவ மரபு இங்கு உருவானது. இந்த உடல்-மனம்-திறன் வளர்ச்சியோடு தொடர்புடைய இன்னொரு பெரிய சிந்தனைத் தளம் ஆயகலைகள் […]
Read More
கல்வியின் வரலாறும் வளர்ச்சியும்
  • By Magazine
  • |
பழனி அரங்கசாமி பிறப்பினாலும், வளர்ச்சியினாலும், தோற்றத்தினாலும் மனிதர் அனைவரும் ஒன்றே என்றாலும், தனி ஒருவன் கல்வி கற்று அறிவும் ஆற்றலும் பெற்று உயர்ந்து நிற்கும் போது, அவனை உலகம் மதித்துப் போற்றுகிறது. எனவே சமுதாயத்தில் ஒரு தனிமனிதனின் பெருமைக்கும், புகழுக்கும், அறிவுக்கும் கல்வி ஒரு தலையாய காரணம் ஆகும். அறவுடையோன்வழி அரசும் செல்லும் என்பது அசைக்க முடியாத உண்மை. கிறிஸ்துவத்துக்கு ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்ட கி.மு 15- ஆம் நூற்றாண்டினை இந்திய வரலாற்றில் வேதகாலம் என்று குறிப்பிடுவர். […]
Read More
எங்கள் ஓட்டு…
  • By Magazine
  • |
மயூரி சித்தாராமன் எங்கள் ஓட்டு உங்களுக்கே….. ஆங்… ஞாபகம் வந்திட்டு… இப்ப நா வாக்காளரு…! அய்யா நா சொல்லியத கொஞ்சம் கேட்டுட்டு போங்கய்யா.. கட்சிய விட கட்சி மானம் கொடிகட்டிப் பறக்காமே ? அவிய தேர்தல் முடியிறவர சூடு சொரணைய வாடகைக்கு வுட்டுருக்காவளாம்…! அதோ பாருங்க ஒரு கட்சிக்க இனிசியலுக்கு அப்பன் பெயரா மகன்பெயராண்ணு ரெத்தத்தின் ரெத்தங்களுக்கு பாலூத்துயாவளாம்… அப்பப்பா… பருப்புக் கொழம்புக்குள்ள மீனை போட்டு சமச்சமாதி கூட்டணி தயார்… அய்யா.. அரசியல் பிரம்மாக்களே.. தேர்தல் வாக்குறுதி […]
Read More
வட்டக்கும்மி கொட்டுங்கடி கொட்டி ஆடுங்கடி பொங்கலிலே
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் ஊர்க்கிழவி தலைமையில் அம்மன் பாட்டுக்கு வட்டக்கும்மி கொட்டும் கோயில் முற்றம் காவேரிப் பொங்கும் கொள்ளிடத்து ஆற்றுக்குள்ளிருந்து கருங்காளைகளைக் கழுவித்துடைத்து வண்டிபூட்டி வரும் பூலான்தேவியின் அப்பா கோவில் சுற்றுச் சுவரில் ஏற்றியிருந்த திருவள்ளுவன் பார்க்க செவ்வந்திபூச் சடை பின்னிய இளையவள் குறும்புக்காரி காணும் பொங்கலில் குரவையிட்டு ஆடுகிறாள் ஆடுகிறாள் அவள் அம்மையும் பாட்டியும் அண்டைவீட்டு மாமியும் ஆடி துடியேறி மயங்கிச் சரியும் பெண்டிரின் மருங்கைப் பிடித்து தூக்கி நிறுத்தும் வீராங்கணை தொடை தட்டிச் சிரிக்கிறாள் […]
Read More
புதியதென்றல்!
  • By Magazine
  • |
– கே.பி.பத்மநாபன் சுதந்திரப்போர்ப் புயலினிலே தியாகம் செய்தோர்                 சூழ்நிலையில் அமைதியினைச் செய்த நேரம் இதமான விடுதலையின் தென்றல் காற்று                 இந்தியமண் மீதினிலே வீசலாச்சு; முதன்முதலில் நறுமணத்தோ டிங்கே வீசி                 முற்றான இன்பத்தைத் தந்த தென்றல் எதனாலோ சிறிதுசிறிதாக மாறி                 இனியமணம் தனையிழந்து வீசு தின்று! மதசாதி இனபேதம் கலந்தாலோ                 மனிதமெனும் நேயம்தான் குறைவதாலோ சதகோடி நிதிசிலரும் குவிப்ப தாலோ                 சாக்கடையாய் அரசியலும் ஆனதாலோ வதம் செய்யும் வன்முறைகள் நிறைந்தாலோ […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
– வழக்கறிஞர்    பி. விஜயகுமார் முதல் மனைவி இறந்து போயிருந்தாலும் இரண்டாவது மனைவிக்கு கணவரின் ஓய்வூதியம் வராது தற்சமயம் ஒரிசா உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு இது. கணவர் அரசு ஊழியர். அவருக்கு முதல் மனைவி இருந்தார். முதல் மனைவிக்கு குழந்தைகள் இல்லை. ஆதலால் கணவர் முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாவதாக இன்னொரு பெண்ணை மணந்து கொண்டார். திடீரென கணவர் இறந்து போகிறார். இப்போது கணவரின் ஓய்வூதியம் பெறுவது சம்மந்தமாக முதல் மனைவிக்கும் இரண்டாம் மனைவிக்கும் […]
Read More
நாம் யாரும் அறிவாளி இல்லை! ஏன்?
  • By Magazine
  • |
வர்ம அறிவியல் மாமேதை மூலச்சல் Dr.T. இராஜேந்திரன் அறிவு என்பது வரையறுக்கப்பட்ட சிந்தனை வடிவங்களால் கட்டமைக்கப்படுகிறது. அந்த சிந்தனை வடிவங்களை மனம் எனும் மாயச்செயல் உருவாக்குகின்றது. மாயச்செயல் மூளையின் இயக்கத்தால் உருவாகிறது. அதற்கு “ஷைக்கான்” எனப்படும் மனதின் நுண்ணதிர்வு மூலக்கூறுகள் காரணமாகின்றன. இந்த மனதின் அதிர்வுகள் அறிவுப்பொறிகளோடு நான்குவித அறிவுநிலைகளை ஏற்படுத்துகின்றது. அறிவுநிலைகளின் நிலைகளுக்கேற்பவே மனித சிந்தனைகளின் பார்த்தல், கேட்டல், நுகரல், அனுமானித்தல், புரிதல், உணர்தல், தெளிதல் போன்றவைகள் அறிதலாக மாற்றப்பட்டு அறிவாக பதிவாகி மூளையில் இடம்பெறுகின்றன. […]
Read More
தூக்கமின்மை
  • By Magazine
  • |
– கஸ்தூரிபா   ஜாண்ஸன் வாழ்வில் நமக்கு உணவு எவ்வளவு முக்கியமோ அதே போல் தூக்கமும் அவசியம். இரவு நன்கு தூங்கினால் தான் உடலில் உள்ள அனைத்து சுரப்பிகளும் நன்கு வேலை செய்யும். தூக்கம் ஒரு இரவு இல்லை என்றால் உடல் நலம் கெட்டு விடும்.  இரவில் நன்கு தூங்கும் போது தான் மூளையின் செல்கள் ஒழுங்காகவும், பாதிப்புகள் இல்லாமல் இருக்கும். ஆழ்ந்த தூக்கம் சுமார் 8 மணி நேரம் இருந்தால் சிறுநீரகம், இதயம் சம்பந்தமான நோய்கள், நரம்புத்தளர்ச்சி, […]
Read More
தமிழர் தற்காப்பு கலையான   களரிக்கு சர்வதேச அங்கீகாரம்
  • By Magazine
  • |
அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் அவர்கள் வலியுறுத்தல் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில், தமிழர்களின் வீரப் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் “தமிழர்களின் தற்காப்பு கலைகளைப் பாதுகாப்போம்” என்ற முழக்கத்துடன் களரி கலை விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழர் மரபு தற்காப்புக் கலைகளின் பெருமையை மீண்டும் சமூகத்தின் மையத்துக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்த இந்த விழா, ஒரே நேரத்தில் ஒரு போட்டி நிகழ்வாகவும், ஒரு பாரம்பரிய விழிப்புணர்வு நிகழ்வாகவும் அமைந்தது. இன்றைய நவீன காலகட்டத்தில் பல்வேறு வெளிநாட்டு […]
Read More
வர்மம் எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் கைமுட்டு வர்மம் சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான விசபந்த வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் கைமுட்டு வர்மம் பற்றி அறிவோம். இவ்வர்மம் கைமுட்டின் வெளிப்புறக்குழியில் அமைந்துள்ளது. கைமுட்டி வர்மம், புறமூட்டு வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் இவ்வர்மம் வழங்கப்படுகிறது. “குணமான கைமுட்டுக் குழியிலப்பா முட்டுவர்மமிதற்கு பேரு”.                                                                                                                 – கலைக்கண்ணாடிச் சூத்திரம் “ஆகுமே முட்டுக்குழி மேல்பக்கத்தில்                 அடிகொண்டால் கை வீங்கும் களைப்புண்டாகும் மட்டறிய காதிரைச்சல் மயக்கம் […]
Read More