வர்மம் எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் உள்ளங்கை வெள்ளை வர்மம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான பூவல் வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் கையில் உள்ள வர்மமாகிய உள்ளங்கை வெள்ளை வர்மம் பற்றி அறிவோம். உள்ளங்கை வெள்ளை வர்மம், பெருவிரலுக்கடியில், நடுவிரலோடு சேரும் உள்ளங்கைப் பகுதியில் அமைந்துள்ளது. இவ்வர்மம் உள்ளங்கை வர்மம், வெள்ளை வர்மம், கைவெள்ளை வர்மம், ஒளிச்சக்கர வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது.  “பேறான உள்ளங்கை வெள்ளைவர்மம்”.                                                                 – வர்மக்கண்ணாடி […]
Read More
ஒவ்வொரு வருடமும்  கொலு வைக்கிறார்கள்  பள்ளியில்
  • By Magazine
  • |
– சிவ. விஜயபாரதி. கும்பகோணம் ஆர்வத்துடன் குழந்தைகளும் அடுக்கி வைக்கிறார்கள் பொம்மைகளை. விதவிதமான உணவுகள் தானிய வகைகள் வரிசை படுத்தப்பட்டிருக்கின்றன பூஜை தயாரானதும் வரிசையில் நிற்க வைக்கப்படுகிறார்கள் சீருடையில் குழந்தைகள். புதிதாக சேர்க்கப்பட்ட குழந்தைகளின் விரல் பிடித்து நெல்லில் எழுதுகிறார்கள் “அகரத்தை”. “சரஸ்வதி நமோ ஸ்துப்யம்” பாடல் ஒலிக்க தீபாராதனை ஒளியில் அழகாக தெரிகிறது குழந்தைகள் தொலைத்த புன்னகை பொம்மைகளில் ஒளிர்வது
Read More
  • By Magazine
  • |
– திலீபன் காளிதாஸ் – (தமிழாசிரியர் ஒரு வீட்டில் தண்ணீர் கேட்டால் நான்தான் சிறப்பு விருந்தினர். எனக்கென தனி டம்ளர், என்னிடம் பணம் கொடுக்கும் நீயோ கையை உயர்த்திப் போடுகிறாய். நான் கொடுத்தப்  சில்லறையை வாங்கிச் சட்டைப்பையிற்குள் போடுகிறாய். உன் வீட்டைத் தூய்மை செய்து மூக்கை மூடி, வீதியில் போடுகிறாய். என் பிழைப்போ விரும்பி தெருவை சுத்தம் செய்வது. என் பணியோ தூய்மைப் பணியாளர், உங்களின் மத்தியில் குப்பைக்காரன்! என் உடையோ அழுக்கு நிறம், எத்தனை சாயம் […]
Read More
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்க இயலவில்லை எனும் செய்திகளை படிக்கும்போது நம்மால் கவலைபடாமல் இருக்க இயலவில்லை.  இதைவிட ஒரு துயரம் வேறு இருக்க முடியாது. சமூகத்தின் பல்வேறு துறைகளிலும் பல ஆக்கப்பூர்வமான பங்கேற்புகளை வழங்கி சமூகமுன்னேற்றத்தில் பங்கெடுத்துக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்கள் இன்று ஊழியர்களுக்கு மாதச் சம்பளம்/ஓய்வூதியம் வழங்கக்கூட அரசைக் கையேந்தும் அவலநிலையில் உள்ளது. சான்றிதழ்களை அச்சிடக்கூடப் பணமின்றித் தவிப்பதை படிக்கையில் துயரம் கௌவுகின்றது.                 “இந்தப் பொருளாதார நெருக்கடிக்கான முதன்மைக் காரணம், […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-வின் 292-வது கருத்தாய்வு கூட்டமானது மரு.கமலக்கண்ணன் தலைமையில் திரு.கே.செல்வநாதன் ஆசான், மூலச்சல் மருத்துவர்.த. இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 04.10.2025 அன்று மதியம் சுமார் 2.00 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் மரு.கமலகண்ணன் மூட்டு வலிக்கான மருந்து, மலச்சிக்கல், வலிகளை கட்டுப்படுத்துவதற்கான சூரணம் செய்முறையை கூறினார். மேலும் தீராத தலைவலிக்கு பூச்சு மருந்தினையும் கூறினார். அடுத்ததாக திரு. செல்வநாதன் ஆசான் பசியின்மை, செரியாமை, உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல் ஆகியவற்றை குணமாக்கும் லேகியம் செய்முறையைக் […]
Read More
  • By Magazine
  • |
– சிவ. விஜயபாரதி. கும்பகோணம் அந்த வாசனை அவனை ஏதோ செய்தது. அவர்கள் மீதிருந்து வருகின்ற அந்த மணம் அவன் மூக்கினுள் நுழைந்து இதயம் வருடியது.அது என்ன வாசனை? இந்த ஐந்து பேர் மீது மட்டும் எப்படி வருகிறது இந்த வாசனை?குறைவாகவும் இல்லை.அதிகமாகவும் இல்லை. அருகில் அமரும் நமக்கு மட்டும் மிக மெல்லியதாக பரவி கொஞ்ச நேரத்தில் காணாமல் ஆகிவிடுகிறது.எனக்கு மட்டும்தான் அப்படி தோன்றுகிறதா? இவர்களின் மேல் வரும் இவ்வாசனை எனக்கு மட்டும்தான் தெரிகிறதா? வேறு யாருக்காவது […]
Read More
செஞ்சோற்றுக்கடன்
  • By Magazine
  • |
கை. செல்லத்தங்கம் ராமசாமி… ஏ.ராமசாமி என்னப்பா கூப்பபிட்டது கூட காதில் கேட்காமல் அப்படியென்ன யோசனையில் போய்க்கிட்டு இருக்க… ஒன்றுமில்லண்ணே… வயலுக்கும் போய்க்கிட்டு வாறேன்… ஆமா அது தான் தெரியுதே… நான் என்ன யோசனைன்னு கேட்டேன். அதாண்ணே பிரியா படித்து முடிச்சுட்டா. பக்கத்து இங்கிலீஷ் மீடியம் ஸ்கூலுக்கு டீச்சராகப் போறா. கலியாணம் பாக்கணும் இல்லா அதை தான் நினைச்சிக்கிட்டே வந்தேன். நல்ல யோசனை தானப்பா உனக்கு. நான் ஒண்ணு சொல்லட்டுமா… சொல்லுங்கண்ணே… பேசாம உன் தங்கச்சி பையன் கண்ணனுக்கு […]
Read More
  • By Magazine
  • |
பூ.வ.தமிழ்க்கனல் தமிழீழம் யாழ்ப்பாணத்திலுள்ள செம்மணி கிராமத்திற்கு அருகில் பல நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் உயிரோடும் உயிரற்ற நிலையிலும் புதைக்கப்பட்டனர். தமிழீழத் தமிழ் மக்கள் முள்ளிவாய்க் காலில் மட்டும் இனப் படுகொலை செய்யப்படவில்லை. அதற்கு முன்பாகவே பல்வேறு திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் ஈழத் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்கள். அப்படியான ஒரு நிகழ்வே செம்மணிப் படுகொலை. 1998, 1999 ஆம் ஆண்டுகளில், செம்மணிப் படுகொலைப் புதை குழி உலகத்துக்குத் தெரிந்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2001-ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் […]
Read More
  • By Magazine
  • |
– ஓஷோ நல்ல குணம் எதையும் உண்டாக்குவதில்லை. ஏனெனில் நீங்கள் முற்றிலும் நற்குணம் உடையவராக இருப்பின் உங்களுக்கு எதுவும் தேவையில்லை. நீங்கள் நற்குணம் உடையவராக இருப்பின் அங்கு ஆசை இல்லை. அங்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை. நீங்கள் முற்றிலும் சரியாக இருக்கின்றீர்கள். முற்றிலும் சரியாக இருப்பது எங்கும் நகர்வதில்லை. அரைகுறையானது தான் நகர்கிறது. அரைகுறையானது தான் எதையாவது உண்டாக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறது. ஒரு முற்றிலும் சரியான ஓவியன் ஓவியம் தீட்டுவதில்லை. ஒரு முற்றிலும் சரியான இசைக்கலைஞன் அவனுடைய […]
Read More
மாற்றுத் திறனாளிகள் குறித்த பார்வைகள்
  • By Magazine
  • |
A. தர்மராஜ் (த.ராசு) முந்தைய பாகத்தின் தொடர்ச்சி.. மாற்றுத் திறனாளிகளின் நலன் கருதி, இந்திய அரசின் மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுத் துறையின் கீழ் ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டுக்கான தேசீய நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனம் 2023 பிப்ரவரியில் திருப்போரூரை அடுத்த முட்டுக்காடு ஊராட்சியில் மாற்றுத் திறனாளிகளால் உருவாக்கப்பட்ட பொருட்களை பொது மக்களுக்கு காட்சிப்படுத்தும் தேசீய அளவிலான கண்காட்சி மற்றும் அவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ஒன்றினை நடத்தியது. இந்தக் கண்காட்சியில் 23 மாநிலங்களைச் […]
Read More