– சிவ. விஜயபாரதி. கும்பகோணம்
ஆர்வத்துடன் குழந்தைகளும்
அடுக்கி வைக்கிறார்கள்
பொம்மைகளை.
விதவிதமான உணவுகள்
தானிய வகைகள்
வரிசை படுத்தப்பட்டிருக்கின்றன
பூஜை தயாரானதும் வரிசையில்
நிற்க வைக்கப்படுகிறார்கள்
சீருடையில் குழந்தைகள்.
புதிதாக சேர்க்கப்பட்ட
குழந்தைகளின் விரல் பிடித்து
நெல்லில் எழுதுகிறார்கள்
“அகரத்தை”.
“சரஸ்வதி நமோ ஸ்துப்யம்”
பாடல் ஒலிக்க
தீபாராதனை ஒளியில்
அழகாக தெரிகிறது
குழந்தைகள் தொலைத்த புன்னகை
பொம்மைகளில் ஒளிர்வது
Leave a Reply