பணி ஓய்வு நாள்
  • By Magazine
  • |
செ.பராந்தகன் நாளை முதல் செய்த வேலையையே திரும்பிச்  செய்ய வேண்டியதில்லை.. நேரங்கலெல்லாம் இனி என் கையில் தவழும். மலர்ந்த பூக்களையும் காய் கனிகளையும் கவனித்து மகிழலாம். உண்ணும் உணவின் ருசி நன்கு புரியும். கண்கள் காணாத காட்சியெல்லாம் காணப்போகின்றது.. அடுக்கிவைத்த வாசிக்காத புத்தகங்கள் வரவேற்கும் நான் வாசிக்க போகும் நேரங்களை… ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம் நாளைமுதல்
Read More
தற்காப்புகலை ஆசான் ஹாரிஸ்
  • By Magazine
  • |
காவல்துறை அதிகாரியிடம் பரிசு பெற்றேன் எனது தற்காப்பு கலை நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரியிடம் இருந்து பரிசு பெற்றது மறக்க முடியாத சம்பவம் என்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே ஈஞ்சக்கோடு பகுதியை சேர்ந்த திரு. ஹாரிஸ் ஆசான் புதிய தென்றலுக்காக குலசேகரம் அருகே ஈஞ்சக்கோடு , பண்டாரவிளையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம். அப்போது நமது கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் … தாங்கள் தற்காப்பு கலையை கற்றுக் கொண்டது எப்படி?  எனது பெயர் ஹாரிஸ் ஆகும். […]
Read More
வடை சுட்ட பாட்டிக்கு நேர்ந்த பரிதாபம்?
  • By Magazine
  • |
கோ.சுரேஷ்குமார் ஒரு நாள் காலை, பாட்டி தனது கடையில் வாசலில் உட்கார்ந்து வடை சுட்டுக் கொண்டிருந்தார். வாசனை முழு தெருவையும் சுற்றி வந்தது. அந்த வாசனைக்கே பக்கத்தில் உள்ள ஒரு டயர் வண்டியிலிருந்த ஒரு குட்டி காக்கா! பறந்து வந்து “பாட்டியிடம் பாட்டி பாட்டி எனக்கொரு வடை தர வேண்டும்”என்றது. பாட்டி சிரித்தபடியே, “ஓ.. பணம் கொடு, வடை கொடுக்கிறேன்!” என்றார். உடனே காக்கா தான் சேமித்த பணத்தில் இருந்து ஒரு 10 ரூபாய் நாணயத்தை கொடுத்தது. […]
Read More
கவிக்கொண்டல் செங்குட்டுவன்
  • By Magazine
  • |
பூ.வ.தமிழ்க்கனல் 1957-ஆம் ஆண்டு, சென்னைக் கடற்கரையில், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் மாபெரும் பொதுக் கூட்டத்தினை நடத்தியது தி.மு.க. அண்ணா அந்தக் கூட்டத்தில் சொற்பொழிவாற்றினார். அவரது உரையைத் தொகுக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார், கட்சி ஏடான ‘நம்நாடு” பத்திரிகையாளர். அதற்கு முன்பான கூட்டங்கள் வரை கையால் குறிப்பு எடுத்தவர், அந்தக் கூட்டத்துக்கு அப்போது தான் அறிமுகமாகி இருந்த ‘ டேப் ரெக்கார்டர்” பதிவுக் கருவியைப் பயன்படுத்தினார். ஆனால், அண்ணாவின் பேச்சு பதிவாகவில்லை. கூட்டம் முடிந்து, அடுத்த நாள் […]
Read More
எனது திரைப்படங்களின் அரசியல்
  • By Magazine
  • |
மலையாள இயக்குனர் ஆசிக் அபுவோடு உரையாடல் மலையாளத்தில் பேட்டிக் கண்டவர் ஸ்ரீதேவி பி.அரவிந்த் தமிழில்: கிருஷ்ணகோபால் இயக்குனர்,தயாரிப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் எனும் பன்முகத் தன்மைக் கொண்ட மலையாள இளம் திரைக்கலைஞன் ஆஷிக் அபு .22 பிமேல் கோட்டயம், சால்ட் அன்ட் பெப்பர் மற்றும் வைரஸ் போன்ற படங்களை இயக்கியவர். தனது படங்களுக்கு பல விருதுகளைப் பெற்ற பரிசோதனை முயற்சி இயக்குனர்.சமீபத்தில் அவர் இயக்கி வெளி வந்த கவனம் பெற்றப் படம் ‘ரைபிள் கிளப் ‘ என்பது குறிப்பிடத்தக்கது. […]
Read More
மனிதக்குழந்தையின் நினைவு பொதிகள்
  • By Magazine
  • |
– முனைவர் மோகனா, பழனி மனித  வாழ்க்கையின் முதல் ஓரிரண்டு வருடங்களில் நாம் நிறைய கற்றுக்கொண்டாலும், பெரியவர்களாகிய பின்னர்,  நம்மால் அந்தக் காலத்திலிருந்து குறிப்பிட்ட நிகழ்வுகளை நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. நினைவுகளைச் சேமிப்பதற்குப் பொறுப்பான மூளையின் பகுதியே காரணமாக இருகிறது. அதன் பெயர் ஹிப்போகாம்பஸ். இது சிறுவயதில் அவ்வளவாக வளரவில்லை. ஆனால் இளமைப் பருவத்தில் நன்றாக வளர்ந்து வருவதால், நமது ஆரம்ப ஆண்டுகளில் நினைவுகளை குறியாக்கம் செய்ய முடியாது என்பதால், இந்த அனுபவங்களை நாம் தக்க […]
Read More
மாற்றுத் திறனாளிகள் குறித்த பார்வைகள்
  • By Magazine
  • |
A. தர்மராஜ் (த.ராசு) கல்வித்தகுதியும்  வேலைவாய்ப்பும்                 ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு விடுவதற்கு அரசாணை விடுக்கப்பட்டுள்ளது. இது போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும். சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் தங்கள் சக்கர நாற்காலியுடன் சுலபமாக ஏறி இறங்க தேவைப்படும் ரூட் பஸ்களில் தனிவாசல் […]
Read More
போன்சாய் வாழ்க்கை
  • By Magazine
  • |
ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் கொஞ்சம் வளர்ந்தாலும் கிளைகளை உடைத்துவிட்டு கொஞ்சுகிறான் நான் அழகி என்று ! என் இயல்பில் படராமல் அவன் இசைவுக்கு வளரும் எனக்கோ போன்சாய் மரங்கள் பிடித்தமில்லை வட்டத்தொட்டிக்குள் வாழும் போன்சாய் போல் வீட்டுச்சுவருக்குள் முடிகிறது என்வாழ்வும் நீர் தேடி அழையமுடியா வேரின் வலியும் இலக்கின்றி ஓடும் என் வாழ்வின் வலியும் ஒத்த பாதையில் பயணிக்கிறது
Read More
  • By Magazine
  • |
இரா.சிவானந்தம் பயனளிக்கும் கைத்தொழிலை தக்க காலத்தில் கற்றுக்கொண்டால் வாழ்க்கைக்கு வளம் ஊட்டும் கற்ற கைத்தொழில் யாருக்கும் எப்போதும் அடிமையாக்காது காட்டும் கைத்தொழில் சிறப்புறக்கற்றால் பலருக்கு கொடுக்கலாம் வேலைவாய்ப்பு கைத்தொழில் கற்றவர் தானே தொழிலாளி தானே முதலாளி வேலை நேர கட்டுப்பாடில்லை எப்போதும் உழைக்கலாம் எந்த நேரத்திலும் ஓய்வு எடுக்கலாம் உழைப்பிற்கேற்ப வருவாய் கூடும் வாழ்க்கைதரமும் பெருகும். தணிக்கை – வரி ஏய்ப்பு சோதனை பிரச்சனை இல்லை பயமின்றி உழைக்கலாம் சிறந்த கைத்தொழில்களால் நாமும் உயர்வோம் நாடும் உயரும்.
Read More
ஏக்கம்
  • By Magazine
  • |
குமரி எழிலன் சன்னலில் ஒரு சாயல் தெரிந்தது… அது வானத்து நிலவோ … நிலவைத் தொட கைகள் துடித்தன கண்கள் மட்டுமே தழுவி மீண்டன… தோற்ற மயக்கமா? உண்மைத் தோற்றமா? நிலவுக்கும் தெரியும் கண்களுக்கும் புரியும்..  நாள் நட்சத்திரம் தேதி குறிப்பிட்டா கைகள் குலுக்கும் காயங்கள் சேரும்.. காய்ச்சலுக்கு மருந்து காத்திருக்குது கடைகளில் அல்ல … கண்களில் …. கைகளில் … இதயங்களில் …. காலம் உருண்டோடுகிறது உலகம் சுழன்று கொண்டிருக்கிறது கற்பனையில் மட்டும் வாழ்வது கனவல்லவா […]
Read More