மதுவின் நடனம்
  • By Magazine
  • |
முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்… வீட்டுக்குள் பாட்டில்களின் ஊர்கோலம் பசியில் துடிக்கும் குழந்தைகளின் முன் டாஸ்மாக்கின் சாகஸம்.
Read More
பொரி உருண்டை
  • By Magazine
  • |
– கை. செல்லத்தங்கம் வெளியூரில் இருக்கும் என் மகனிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தேன். அம்மா உங்க பேரன் உங்ககிட்ட பேசணுமாம் கொடு என்றேன். என்பேரன் ஆதினியன் பாட்டி எனக்கு பொரி உருண்டையும் காசிமுறுக்கும் வேண்டும் என்றான். என்னப்பா கேட்கின்றாய் என்றேன். எங்க அப்பாவுக்கு அவர்கள் சின்னப்பிள்ளையாய் இருக்கும் போது அவங்க தாத்தா பொரி உருண்டையும் காசிமுறுக்கும் தானே வாங்கிக் கொடுத்தார்களாம். அது எனக்கும் வேணும். தாத்தாக்கிட்டே சொல்லி வாங்கித் தாங்க. நாங்க அடுத்த வாரம் அங்கே வருவோம்ல […]
Read More
  • By Magazine
  • |
கே.பி.பத்மநாபன் உடலில் குறைகள் இருந்தாலும்                 உள்ளத்துள்ளே நிறைந்திட்ட திடமாம் அன்பால் வெல்லுகிற                 திறத்தோர் மாற்றுத் திறனாளி கடலின் அளவுக் கருணையினைக்                 காயம் முழுதும் கொண்டவர் தாம் உடனே உதவும் பண்பாலே                 உயர்ந்தோர் மாற்றுத் திறனாளி முடவராக இருந்தாலும்                 முகத்து நகையின் அரவணைப்பால் முற்றாய் நம்மை ஆட்கொள்ளும்                 முதிர்ந்த மனத்தோர் அவரே தாம் முடக்கம் நாவில் இருந்தாலென்?                 முத்தாள் ஒளிரும் அவர் விழிகள் சுடராய் நேய மொழியுரைக்கும்                 […]
Read More
‘வறுமை குறித்த வள்ளுவம்
  • By Magazine
  • |
– குமரி எழிலன் திருவள்ளுவர் ஒரு உலகமனிதர். திருக்குறள் ஒரு உலக இலக்கியம் திருக்குறள் மத அடையாளங்களுக்குள் சிக்காத ஒரு அற்புதம்.. ரஷ்ய அறிஞர் அலக்சாண்டர் பியார்ட்டிகோர்ஸ்கி.. இந்திய மற்றும் உலக இலக்கிய தரவரிசையில் தலைசிறந்த நூல் திருக்குறள்…. என்கிறார். திருக்குறள் மனித ஆற்றலைக் கொண்டாடும் மாபெரும் படைப்பு.. ஆம் உழவுத்தொழிலின் உன்னதம் வாழ்வியல்போற்றும் இல்லறம் தீதின்றி வரும் பொருளறம் பொதுமறையல்ல பொதுமுறை மந்திரமோ தந்திரமோவல்ல வாழ்க்கைச் சித்திரம்.. சமூக பொருளா”தார உளவியல் சூழலியல் குறித்த வாழ்க்கைப் […]
Read More
சைவமா? அசைவமா?
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் கற்ற கைமண்ணை பாவிச்செல்லும் விதைப்போன் அவன் அவன் நடக்கும் இடங்களில் நாளங்களின் துடிப்புகளைக் கண்டுணரும் அபூர்வங்கள் பூக்கும் அவன் உடலோ மண் வாசனையை தெளிக்கும் மயில் பீலி பார்த்தோர் வியந்தோர் அவனை நுகர்ந்து கொண்டு செல்லும் வாசனைகளில் தங்கள் கோபுரங்களை எழுப்பிக் கொள்வர் இது அன்றாடம்தான் அவனுக்கு ஆயினும் அவனை தன்னருகே வைத்துக்கொள்ளவும் தூக்கிவிடவும் அவர்கள் தங்களிடையே சில பல கேள்விகளை சுருட்டி வைத்திருக்கிறார்கள் அவன் மக்களைப்பற்றிக் கேட்கிறார்கள் அவர்களின் பெயர் படிக்கும் […]
Read More
கடவுள்
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் மௌனத்தை செல்பேசியில் ஏற்றிவிட்டு அமர்ந்திருந்தேன், கோவில் வளாகத்தின் கல்லிருக்கையில் என்னருகில் ஒரு முதியவர் வந்தமர்ந்தார் நான் அவரைக் கவனிக்க வில்லை என் மௌனத்தின் கனம் ஏறிக்கொண்டே இருக்கின்றது ஒரு பஞ்சுமூட்டை நீர் குடிப்பதைப்போல மௌனத்தின் துடி கைகொள்ளாதது அல்லவா? என்னவோ தோன்ற அவரைப் பார்த்தேன் கல் இருக்கையின் அந்த ஓரத்தில் அமர்ந்திருந்த அவரோ கொதித்துக் கொண்டிருக்கும் இன்னொரு மௌனத்தின் வெக்கையாக ஒளிர்ந்து கொண்டிருந்தார் எனக்கு வியர்த்தது அவரின் எடை நகர்த்த முடியாததாக இருந்தது […]
Read More
நீங்கள் உங்களை மறந்து விடாதீர்கள்
  • By Magazine
  • |
– ஓஷோ முன்னொரு காலத்தில் ஒரு அரசர் இருந்தார். அவர் ஜோதிடத்திலும் வல்லவராக இருந்தார். அவர் நட்சத்திரங்களை பற்றிக் கற்பதில் மிகவும் ஆர்வமுடையவராக இருந்தார். திடீரென்று அவர் இதயத்தில் பயத்தை உணர்ந்தார். ஏனெனில் இவ்வருடத்தில் அறுவடையாகும் பயிர்களை உட்கொண்டால் அபாயகரமான விளைவுகள் ஏற்படும் என்பதை உணர்ந்தவராக இருந்தார். யார் அந்தப் பயிரை உண்டாலும் அவர்கள் பைத்தியமாகி விடுவார்கள். ஆகவே அவர் தனது பிரதம மந்திரியைக் கூப்பிட்டு நடக்கப் போகும் விஷயத்தைப் பற்றி சொன்னார். நட்சத்திரங்கள் சரியாக இருக்கின்றன. […]
Read More
சுடர்விடுவோம் மண்மீது
  • By Magazine
  • |
– முல்லைதமிழ் கள்ளிச்செடி மீது புள்ளி வைத்து கானல் இளநீரில் கண்ணி வைத்து வாழையடி வாழையாய் வாய்விரித்து மண்ணில் வளம்போன்ற பெண்மைதனை வாரி வசைபாட ஆயிரம் பேர் போதாக் குறைக்கிங்கு கேளுங்கள் பொல்லாப்பை வல்லான் வகுத்ததென்பான் வழிவழியாய் வந்ததென்பார் காலம் என்பான் கடவுள் என்பான் எல்லாம் இறைசெயல் என்பான் ஏணிக்கும் எட்டாத தூரத்தில் ஏற்றி வைத்துக் கதைபேசி எடுத்து வீசிடுவார் மங்கையரை கற்பென்பான் அதில் காடென்பான் நாடென்பான் காட்டும் அறநூல்கள் அத்தனையும் மங்கையர்தம் கடன் பேசும் ஆணுக்குப் […]
Read More
தமிழரும் பாரம்பரிய மருத்துவமும்
  • By Magazine
  • |
மூலச்சல் Dr.T.இராஜேந்திரன் M.Sc, MD(Hom),Ph.D., தமிழர்கள் மருத்துவக்கலையில் தலைசிறந்து விளங்கியவர்கள். இதன் உயர்வையும், நன்மதிப்பையும் மருந்துகளின் பெயரிலேயே பல புலவர்களின் பெயர்களும், இலக்கியங்களும் இருப்பதிலிருந்து எளிதில் உணர்ந்துகொள்ள முடிகிறது. தமிழர் மருத்துவம் உலகில் தமிழர்கள் பரவி வாழ்ந்த அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றன. எனினும் குமரி மாவட்டம் இன்றும் இதில் தலைசிறந்து விளங்குகின்றது. லெமூரியாக் கண்டம் என நம்மால் கருதப்படும் பகுதியின் எச்சமாகக் கருதப்படும் குமரி மாவட்டத்தில் தமிழரின் பாரம்பரியமிக்க மருத்துவம் பொதுமருத்துவம், சிறப்பு மருத்துவம், கை மருத்துவம், […]
Read More
சஜீவின் தெய்யத்தின் முகங்கள் நூல் குறித்த ஒரு பார்வை
  • By Magazine
  • |
– கிருஷ்ணகோபால்     கடந்த 2024 ம் ஆண்டு ஜுன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னால் நண்பர்களோடு வட கேரளத்திற்கு மூன்று நாட்கள் சுற்றுலா சென்று வந்தேன். அதன் ஒரு பகுதியாக கண்ணூர் அருகே தெய்யம் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட சிறக்கல் அருங்காட்சியகத்தை பார்வையிடும் போது தெய்யத்தின் பல முகங்களை பார்க்க முடிந்தது . அதை பார்த்ததும்  தெய்யம் எனும் களியாட்டம் நிகழும் இடத்திற்குச் சென்று பார்க்க வேண்டும்  என  ஆர்வம் பொங்க அங்குள்ளவர்களிடம் […]
Read More