பல் மருத்துவம் – நம்ப முடியாத வரலாற்று உண்மைகள்
  • By Magazine
  • |
– முனைவர் மோகனா, பழனி இப்போது எல்லோரும் பல் மருத்துவம் பற்றி நன்கு அறிவோம். வருடத்துக்கு இரண்டு முறை நாம் ஒரு நல்ல பல் மருத்துவரைப் பார்த்து, நம் பல்லை, அதன் பற்கறையை நீக்கி சுத்தம் செய்கிறோம்/செய்வது நல்லது. பல்லில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் பல் மருத்துவரை நாடுகிறோம். வலி தரும்  ஞானப்பற்களை அகற்றுவது/ வேர் சிகிச்சை (Root canal) செய்வது போன்ற நவீன பல்மருத்துவ நடைமுறைகளும் இப்போது உண்டு.. பல் மருத்துவம்- வரலாற்றுத் தகவல்கள்                 […]
Read More
சுதந்திரம்…
  • By Magazine
  • |
கமல. அருள் குமார் சிறகை விரிக்க சிட்டுக்கு வானம் முழுவதும் சுதந்திரம்… மணத்தை பரப்ப மொட்டுக்கு காற்று முழுவதும் சுதந்திரம்.. கண்டபடி ஆட மீனுக்கு கடல் முழுவதும் சுதந்திரம்… வண்டு போல ஓட மானுக்கு காடு முழுவதும் சுதந்திரம்… சுதந்திரம் பெற்ற மனிதனுக்கு சொந்த நாட்டிலும் இல்லை சுதந்திரம்… இயற்கை போடுவதில்லை எதற்கும் தடை.. செயற்கைத் தடையென்றால் சினம் கொண்டதை உடை..
Read More
பகுத்தறிவைப் பயன்படுத்து!
  • By Magazine
  • |
கே.பி.பத்மநாபன் பகுத்தறிவைப் பயன்படுத்திப்                 படிப்பறிவை உயர்த்திக் காட்டு வகுத்திட்ட பழமை மூட                 வழக்கத்தை ஒழித்துக் காட்டு தகுமென்றோ தகாத தென்றோ                 தனியறிவால் பிரித்துக் காட்டு தொகுத்த பல நூல்கற்றாலும்                 தூயவையா தென்றே காட்டு! மிகுதியான கற்பனைகள்                 மெய்யற்ற பொய்க் கதைகள் மகுடியின் முன் நாகம்போல் உன்                 மதியினையே மயக்கும் தம்பி புகுந்திட்ட ஐயம் நீக்கப்                 புத்தியுடன் வினாவெழுப்பு தகுதிவிடை கிட்டா தாயின்                 தள்ளிவிடு மூட மென்றே! […]
Read More
  • By Magazine
  • |
குமரி எழிலன் கண்ணெதிரே உள்ளகாட்சி            காண்பதற்கு பெண்மறைவில் மறைந்ததென்ன            மாயம் பெண்இடத்தைக் காலிசெய்த             உடனே தூண்மறைவில் சென்றதென்ன             நியாயம் ஒருகண்ணால் நீ பார்த்த             போதும் ஒளிர் மின்னல் என்மீது              மோதும் தளிர்கொடியாய் நெஞ்சத்தில்               படரும் குளிர் கொம்பாய் என்நெஞ்சு                மாறும்.. பார்வையாலே நீ என்னைக்                 கொல்கிறாய் பாவி என்னை பரிதவிக்க                  வைக்கிறாய்.. நேராகப் பார்த்தால்தான்                 பெண்ணே நிலவு முகம் தேய்ந்திடுமா                  […]
Read More
முடவாட்டுக்கால் கிழங்கு
  • By Magazine
  • |
கஸ்தூரிபா ஜாண்ஸன் சைவ ஆட்டுக்கால், முடவாட்டுக்கால் கிழங்கு, முடவன் கிழங்கு, பண்ணைகிழங்கு என்றெல்லாம் அழைக்கப்படும் ஒருவகை கிழங்கு. தமிழ்நாட்டில் கொல்லிமலை, சேர்வராயன், ஏற்காடு போன்ற மலைகளில் உயரமாக இடங்களில் விளைகிறது. இது பாறைகளின் வெடிப்பில் விளையும் ஒருவகைப் பெரணியை சேர்ந்த தாவரமாகும்.  இக்கிழங்கின் மேல்பகுதி கம்பளி போர்த்தியது போல் மெல்லிய இழைகளுடன் உண்மையிலேயே ஆட்டுக்கால் போல் தோற்றமளிக்கிறது. எனவே சைவ ஆட்டுக்கால் என்று பெயர் பெற்றது. இதன் தாவரவியல் பெயர்                 Drynaria qucercifolia இது மலைப்பகுதியில் […]
Read More
முதல் இந்தியத்தளபதி கரியப்பா
  • By Magazine
  • |
பழனி அரங்கசாமி இந்தியாவின் மக்கட்தொகை 140 கோடி. முப்பதுக்கு மேற்பட்ட மாநிலங்கள் மேற்கு எல்லையில் பாகிஸ்தானும், வடகிழக்கில் சீனாவும் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நமது நிலையான எதிரிகள். வட மேற்கில் ஆப்கன் நாடும், நேர் வடக்கில் நேபாளமும், கிழக்கில் பங்களதேசமும் நம்ப முடியாத நடுநிலை நாடுகள். இந்தச் சூழ்நிலையில் இந்தியாவின் பாதுகாப்பினை ஏற்றுக் கொண்டுள்ள தானைத்தலைவரே நம் நாட்டின் இராணுவத் தளபதி. இமயமுதல் குமரி வரை பரந்துபட்ட இந்தியப் பெருநிலத்தை 13 லட்சம் போர் வீரர்களோடு […]
Read More
வெடிக்கும் பேட்டரிகள்  காரணங்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள்
  • By Magazine
  • |
 காளீஸ்வர் தற்காலத்தில் தினம் தோறும் செய்திகளில் “வெடிக்கும் பேட்டரிகள்” என தலைப்புகள் வைத்து பரபரப்பு செய்திகள் வெளியிடப்படுவதை  கவனிக்க முடிகிறது. மொபைல் போன் பேட்டரி வெடித்து மாணவர் பலி. கையில் வைத்துக் கொண்டிருந்த மொபைல் போன் வெடித்து, உயிருக்கு ஆபத்தான காயங்களுடன்  மருத்துவமனையில் அனுமதி என தினம் தோறும் படித்து வருகிறோம்.எதனால் பேட்டரிகள் வெடிக்கிறது? பேட்டரிகள் வெடிப்பதற்கு நூற்றுக்கணக்கான காரணங்கள் இருக்கின்றன. ஆனால், அதை வெடிக்காமல் பாதுகாப்பதற்கான வழிகளை தான்  பார்க்க இருக்கிறோம். காரணம் உண்மையிலேயே ஒரு […]
Read More
இரணங்களை ஆற்றும் “இரணகள்ளி”
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் அரியவகை மருந்துகள் என்று அதிக விலை கொடுத்து வாங்கும் பலநாட்டு மருந்துகள் இருக்கும் வேளையில், எல்லா இடங்களிலும், எல்லா மண்ணிலும் வளர்ந்து எளிதாக கிடைக்கக் கூடிய சில நாட்டுமருந்து தாவரங்களை நாம் அற்பமாக எண்ணி விடுகிறோம். அந்த வகையில் பள்ளி செல்லும் குழந்தைகள் விளையாட்டாக இந்த செடியின் இலைகளை புத்தகத்தின் உள் வைத்து சில நாட்கள் கழித்து பார்க்கும் போது இலையின் விளிம்புகளிலிருந்து பல செடி முளைகள் வெளிவருவது பார்த்து ஆனந்தம் அடைவார்கள். […]
Read More
மஞ்சள் வானம்
  • By Magazine
  • |
– கை. செல்லத்தங்கம் காரை நிறுத்தி டிரைவரை பார்க்கிங் செய்ய சொல்லிவிட்டு அலுவலகத்தில் வேகமாக செல்ல திரும்பிய போது மெத்தென்று ஏதோ ஒன்றில் மோதியதை உணர்ந்தான் எழில். மலர் பந்து போல்மிருதுவாக இருந்த மோதலுக்கு சொந்தாக்காரி ஒரு பெண் என டக்கென்று தலையை நிமிர்த்திய போது உணர்ந்தான். சாரி சாரி மேடம் என்றான். தன்னை சுதாரித்துக் கொண்ட இளம்பெண் என்ன மிஸ்டர் பார்த்து வரதில்லையா? என்றாள்.  அவள் வதனம் நோக்கியவன் உள்ளம் ஒருவித உணர்வுக்குள்ளானது. மஞ்சள் நிற […]
Read More
வர்மம்’எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் மலப்பிற வர்மம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான சலப்பிற வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் மலப்பிறவர்மம் பற்றி அறிவோம். மலப்பிற வர்மம், ஜலப்பிற வர்மத்திற்கும், பூவல் வர்மத்திற்கும் இடையே முதுகுப்பகுதியில் அமைந்துள்ளது. அதாவது மலாசயத்தின் நேர் எதிர்புறம் அமைந்ததே இந்த வர்மம் ஆகும். இவ்வர்மம் மலப்புற வர்மம், மலபந்த வர்மம், சரடு அயர்ந்த காலம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. “வன்னெல்லின் ஆறிறை கீழ் தப்பிறவர்மம் மாத்திரையாம் […]
Read More