வர்மம்’எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான அல்லிவர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் பின்னல்வர்மம் பற்றி அறிவோம். பின்னல்வர்மம், நாபியின் நேர் பின்பாக முதுகெலும்பில் அமைந்துள்ளது. இவ்வர்மம் பின்னெல் வர்மம், வாயுக்காலம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. “நானான நாபியின் பின்னே தானே நலமான பின்னெல்லின் வர்மமாகும்”.                                                                                                 – கால வர்மநூல் “வாதவீடாம் நாபி கூர்மத்தின் பின் மருவி நிற்கும் பின்னல்வர்மம்”.                                                                                                   – வர்ம […]
Read More
இன்பம்
  • By Magazine
  • |
– சஜிபிரபு மாறச்சன் எப்போதும் நாம் அனைவரும் மகிழ்ச்சியாக, ஆடிப்பாடி விளையாடலாம் என்று தான் நினைக்கிறோம். இன்பத்தை விரும்பி ஏற்பது போல், துன்பத்தையும் மனவலிமையுடன் நாம் எதிர்கொள்ள பழக வேண்டும். முள்ளில்லாமல் ரோஜா இல்லை. துன்பம் இல்லாமல் மண்ணில் வாழ்க்கை இல்லை. இன்பமே துன்பத்தின் வித்து. துன்பம் தான் மனிதனின் சிந்தனையைத் தூண்டுகிறது. இன்பத்தில் அவன் தன்னிலையை இழக்கிறான். துன்பம் வரும் போது அவனுள் விழிப்புணர்வு பிறக்கிறது. இன்பத்தில் மூடிக் கிடக்கும் கண்கள் துன்பத்தில் திறக்கின்றன. துன்பமும், […]
Read More
ஞானத் தமிழ் வளர்ப்போம்
  • By Magazine
  • |
– கை. செல்லத்தங்கம் ஞானத் தமிழ் வளர்ப்போம் – நாம் விஞ்ஞானத் தமிழ் வளர்ப்போம். முக்கடல் முத்தமிடும் குமரி மண்ணில் மும்மதமும் சேர்ந்துழைக்கும் குமரியிலே . ஞானத் தமிழனுக்கோர் வானுயரச் சிலை மெய்ஞ்ஞானத் தலைவனுக்கோர் கற்சி¢லை சங்கம் வைத்து வளர்த்த தமிழ் தரணியெங்கும் முழங்கும் தமிழ் கற்க அதற்குத்தக நில் என்ற தமிழ் அணுவை குறுகத் தரித்து ஏழ்கடலை புகுத்தி குறளைச் சொன்ன தமிழ் கம்பனும் கவியரசர்களும் கையாண்ட தமிழ் மெய்ஞ்ஞானம் மூலம் வளர்ந்த தமிழ் – […]
Read More
  • By Magazine
  • |
– ஓஷோ அது இன்னமும் காலைப் பொழுது. ஒரு  கிராமத்தின் குழந்தைகள் அப்போது தான் பள்ளியை அடைந்திருக்கிறார்கள். எதிர்பாராத  விதமாக ஒரு அதிகாரி ஆய்வு செய்ய வந்தார். முதல் வகுப்பறைக்கு சென்று சொன்னார். மூன்று மிகவும் புத்திசாலி மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக என்னிடம் வந்து நான் கரும் பலகையில் எழுதக்கூடிய வினாவிற்கு விடை காணுங்கள். ஒரு மாணவர் மெதுவாக எழுந்திருந்து கரும்பலகையிலிருந்த வினாவுக்கு விடையளித்து விட்டு தன் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டார். பிறகு இரண்டாவது […]
Read More
பணி ஓய்வு நாள்
  • By Magazine
  • |
செ.பராந்தகன் நாளை முதல் செய்த வேலையையே திரும்பிச்  செய்ய வேண்டியதில்லை.. நேரங்கலெல்லாம் இனி என் கையில் தவழும். மலர்ந்த பூக்களையும் காய் கனிகளையும் கவனித்து மகிழலாம். உண்ணும் உணவின் ருசி நன்கு புரியும். கண்கள் காணாத காட்சியெல்லாம் காணப்போகின்றது.. அடுக்கிவைத்த வாசிக்காத புத்தகங்கள் வரவேற்கும் நான் வாசிக்க போகும் நேரங்களை… ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம் நாளைமுதல்
Read More
தற்காப்புகலை ஆசான் ஹாரிஸ்
  • By Magazine
  • |
காவல்துறை அதிகாரியிடம் பரிசு பெற்றேன் எனது தற்காப்பு கலை நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரியிடம் இருந்து பரிசு பெற்றது மறக்க முடியாத சம்பவம் என்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே ஈஞ்சக்கோடு பகுதியை சேர்ந்த திரு. ஹாரிஸ் ஆசான் புதிய தென்றலுக்காக குலசேகரம் அருகே ஈஞ்சக்கோடு , பண்டாரவிளையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம். அப்போது நமது கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் … தாங்கள் தற்காப்பு கலையை கற்றுக் கொண்டது எப்படி?  எனது பெயர் ஹாரிஸ் ஆகும். […]
Read More
வடை சுட்ட பாட்டிக்கு நேர்ந்த பரிதாபம்?
  • By Magazine
  • |
கோ.சுரேஷ்குமார் ஒரு நாள் காலை, பாட்டி தனது கடையில் வாசலில் உட்கார்ந்து வடை சுட்டுக் கொண்டிருந்தார். வாசனை முழு தெருவையும் சுற்றி வந்தது. அந்த வாசனைக்கே பக்கத்தில் உள்ள ஒரு டயர் வண்டியிலிருந்த ஒரு குட்டி காக்கா! பறந்து வந்து “பாட்டியிடம் பாட்டி பாட்டி எனக்கொரு வடை தர வேண்டும்”என்றது. பாட்டி சிரித்தபடியே, “ஓ.. பணம் கொடு, வடை கொடுக்கிறேன்!” என்றார். உடனே காக்கா தான் சேமித்த பணத்தில் இருந்து ஒரு 10 ரூபாய் நாணயத்தை கொடுத்தது. […]
Read More
கவிக்கொண்டல் செங்குட்டுவன்
  • By Magazine
  • |
பூ.வ.தமிழ்க்கனல் 1957-ஆம் ஆண்டு, சென்னைக் கடற்கரையில், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் மாபெரும் பொதுக் கூட்டத்தினை நடத்தியது தி.மு.க. அண்ணா அந்தக் கூட்டத்தில் சொற்பொழிவாற்றினார். அவரது உரையைத் தொகுக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார், கட்சி ஏடான ‘நம்நாடு” பத்திரிகையாளர். அதற்கு முன்பான கூட்டங்கள் வரை கையால் குறிப்பு எடுத்தவர், அந்தக் கூட்டத்துக்கு அப்போது தான் அறிமுகமாகி இருந்த ‘ டேப் ரெக்கார்டர்” பதிவுக் கருவியைப் பயன்படுத்தினார். ஆனால், அண்ணாவின் பேச்சு பதிவாகவில்லை. கூட்டம் முடிந்து, அடுத்த நாள் […]
Read More
எனது திரைப்படங்களின் அரசியல்
  • By Magazine
  • |
மலையாள இயக்குனர் ஆசிக் அபுவோடு உரையாடல் மலையாளத்தில் பேட்டிக் கண்டவர் ஸ்ரீதேவி பி.அரவிந்த் தமிழில்: கிருஷ்ணகோபால் இயக்குனர்,தயாரிப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் எனும் பன்முகத் தன்மைக் கொண்ட மலையாள இளம் திரைக்கலைஞன் ஆஷிக் அபு .22 பிமேல் கோட்டயம், சால்ட் அன்ட் பெப்பர் மற்றும் வைரஸ் போன்ற படங்களை இயக்கியவர். தனது படங்களுக்கு பல விருதுகளைப் பெற்ற பரிசோதனை முயற்சி இயக்குனர்.சமீபத்தில் அவர் இயக்கி வெளி வந்த கவனம் பெற்றப் படம் ‘ரைபிள் கிளப் ‘ என்பது குறிப்பிடத்தக்கது. […]
Read More
மனிதக்குழந்தையின் நினைவு பொதிகள்
  • By Magazine
  • |
– முனைவர் மோகனா, பழனி மனித  வாழ்க்கையின் முதல் ஓரிரண்டு வருடங்களில் நாம் நிறைய கற்றுக்கொண்டாலும், பெரியவர்களாகிய பின்னர்,  நம்மால் அந்தக் காலத்திலிருந்து குறிப்பிட்ட நிகழ்வுகளை நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. நினைவுகளைச் சேமிப்பதற்குப் பொறுப்பான மூளையின் பகுதியே காரணமாக இருகிறது. அதன் பெயர் ஹிப்போகாம்பஸ். இது சிறுவயதில் அவ்வளவாக வளரவில்லை. ஆனால் இளமைப் பருவத்தில் நன்றாக வளர்ந்து வருவதால், நமது ஆரம்ப ஆண்டுகளில் நினைவுகளை குறியாக்கம் செய்ய முடியாது என்பதால், இந்த அனுபவங்களை நாம் தக்க […]
Read More