• By Magazine
  • |
வழக்கறிஞர்  பி. விஜயகுமார் திருநங்கையை மணமுடிக்க மறுத்தவர் மீது வழக்கு கிமாச்சல் பிரதேஷ் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு இது. ஃபேஸ்புக் மூலமாக ஒரு திருநங்கையும் கிமாச்சலைச் சேர்ந்த ஒரு இளைஞனும் பழகிக் கொண்டனர். திருநங்கை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பாள். பழக்கம் பிறகு தீவிர காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்வதற்குத் தயாராகினார்கள். இச்சம்பவம் இளைஞனின் பெற்றோருக்குத் தெரியவந்து இத் திருமணத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இருப்பினும் மகன் அவளைத் தான் கட்டுவேன் என ஒற்றைக்காலில் நின்றான். […]
Read More
  • By Magazine
  • |
செ.பராந்தகன் நோயில்லாத வாழ்வே குறைவில்லாத செல்வம் என்பதை அனைவரும் அறிவோம். உலகப் பொதுமறை’ திருக்குறள்’ என்னும் வாழ்வியல் நூல் வைத்தியத்திற்கு ‘மருந்து’ என்னும் அதிகாரத்தில் 10 குறள்களில் வியாதி உண்டாகும் வழிகள் மற்றும் அவற்றை தடுக்கும் முறைகளை எடுத்துரைக்கிறது.  ‘மிகினும் குறையினும் ‘என்று தொடங்கும் குறளில் காற்று, நீர் ,உணவு ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் மிகுந்தாலும் நோய் உண்டாகும் என்கிறார் வள்ளுவர். ‘மருந்தென வேண்டாவாம்’ என்ற என்ற குறளில் அறுசுவைகளுடன் உண்ணப்படுகின்ற உணவு சீரணமாகிவிட்டது […]
Read More
கீழாநெல்லியின் மருத்துவகுணங்கள்
  • By Magazine
  • |
கஸ்தூரிபா   ஜாண்ஸன் தாவர இயலில் பைலானதஸ் அமரஸ் (Phyllanthus amarus) என்று அழைக்கப்படும் இம்மூலிகை யூபோர் பயேசியே (Euphorbiaceae) என்ற குடும்பத்தை சேர்ந்தது. தமிழ்நாட்டில் பரவலாக மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு குறுஞ்செடி. சுமார் 15 சென்டிமீட்டர் உயரம் வரை வளரும். இம்மூலிகையின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன் தருகிறது. பயன்கள் மஞ்சள் காமால நோய் தீர்க்க வேருடன் கூடிய முழுச் செடியையும் நீரில் கழுவி அரைத்து 5 முதல் 7 நாட்கள் மோரில் கலந்து காலை […]
Read More
அண்டத்தோற்றத்தின் அறிவியல் கொள்கைகள்
  • By Magazine
  • |
வர்ம அறிவியல் மாமேதை மூலச்சல் Dr.T. இராஜேந்திரன் சென்ற மாத இதழின் தொடர்ச்சி… பூமி தோற்றம் பற்றிய அலக்சாண்டர் ஒப்பாரின் மற்றும் ஜே.பி.எஸ். ஹால்டன் ஆய்வுகள்  பூமியானது 500 முதல் 600 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனிலிருந்து உடைந்த பகுதியாகவோ அல்லது விண்வெளி தூசுகளாகவோ இருந்த பொருட்கள் இணைந்தே இப்படி உருவாகியிருக்கும் என்று கருதினர். இன்றைய நமது சூரியமண்டலம் முழுவதும் கூட இப்படித்தான் உருவாகியிருக்கும் என ஒப்பாரின் ஹால்டன் போன்ற அறிவியல் அறிஞர்கள் தெளிவுபடுத்தினர். ஆரம்பத்தில் பூமியானது […]
Read More
குடல்புண்
  • By Magazine
  • |
டாக்டர் என்.கே. சுரேஷ் MD(S) வயிற்றில் ஏற்படும் புண்களையும், சிறுகுடலின் முன்பகுதியில் ஏற்படும் புண்களையும் பொதுவாக நாம் வழக்கத்தில் குடல்புண் (அல்சர் – Peptic ulcer) என்று அழைக்கிறோம். நாட்பட்ட குடல்புண்நோய் உள்ளவர்கள் உடலும், மனமும் குன்றி போவதால் இதனை குன்மம் என சித்தமருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வயிற்று பகுதியில் ஏற்படும் புண்களை வயிற்றுப்புண், Gastric ulcer, Stomach ulcer என்று அழைப்பதுண்டு. வயிற்றுபகுதியை தொடர்ந்து வரும் சிறுகுடலில் ஏற்படும் புண்களை- சிறுகுடல் புண் (duodenal ulcer)) என்று […]
Read More
தென்பாண்டி நாடு எனும் குமரிமண்
  • By Magazine
  • |
– மங்காவிளை  D. இராஜேந்திரன் பாண்டிய மன்னனை திவாகரம் என்னும் நூல் குமரிசேர்ப்பன் என்கிறது. இங்கே பாண்டியரின் செல்வாக்கு இருந்ததை சங்க இலக்கியமான மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது. கன்னியாகுமரியை சுற்றியுள்ள பகுதி புறத்தாய நாடு எனப்பட்டது. இது பாண்டிய நாட்டின் தென்கோடி. எனவே தென்பாண்டியநாடு என்றழைக்கப்பட்டது. பாண்டியரின் குலதெய்வமாக குமரி பகவதி குறிக்கப்படுகிறாள். புறநானூறு பாண்டியனை பஃறுளியின் தலைவன் என்கிறது. குமரிமாவட்ட கல்வெட்டுகளும், சின்னமனூர் செப்பேடுகளும் குமரிக்கும் பாண்டிக்கும் உள்ள தொடர்பைத் தருகின்றன. கி.பி. 140-ல் குமரிக்கு வருகைதந்த […]
Read More
வர்மம் எனும்  மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் தெக்ஷணைக்காலம் சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான புயவர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் தெக்ஷணைக்காலம் பற்றி அறிவோம். இவ்வர்மம் உள்ளங்கை வெள்ளை வர்மத்தின் நேர் பின்புறம் புறங்கையில், நடுவிரலுக்கும், மோதிர விரலுக்குமிடையில் அமைந்துள்ளது. இவ்வர்மத்திற்கு தெக்ஷண வர்மம், தெக்ஷணைக்காலம், மொழிப்பிறங்கண் வர்மம் என்னும் வேறுபெயர்களும் உண்டு. “அறுதியென்ற உள்ளங்கை வர்மத்தின் பின் தெக்ஷணையின் காலமென்பார்”.                                                                                                                 – வர்ம குருநூல் என குறிப்பிடுகிறது. சாந்தமாம் தெக்ஷணையின் காலம் […]
Read More
குவாண்டம் பிணைப்பு பிரபஞ்சப் பயணம்
  • By Magazine
  • |
– காளீஸ்வர் பிரபஞ்சத்தின் இரு முனைகள் தமிழ்நாட்டின் கொடைக்கானல் மலைப்பகுதியில், இரவு நேரத்து மேகமூட்டத்திற்கு இடையே நட்சத்திரங்களை உற்று நோக்கிக் கொண்டிருந்தான் அன்பு. அவன் சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT Madras) குவாண்டம் கம்ப்யூட்டிங் துறையில் முனைவர் பட்டப் படிப்பு படிக்கும் மாணவன். அவனுடைய ஆய்வகம் முழுக்க சூப்பர் கண்டக்டிங் கியூ பிட்களும் (Superconducting Qubits), லேசர் கதிர்களும் நிறைந்திருந்தன. அன்று இரவு, அவனது கணினியில் ஒரு விசித்திரமான தரவுப் பின்னல் (Data anomaly) தோன்றியது. […]
Read More
  • By Magazine
  • |
– எஸ்.கே. கங்கா மரணங்கள் இயல்பானதுதான் என்று சொல்லி அத்தனை எளிதாகக் கடந்து போக முடியாத ஒரு மரணம் நேற்று சம்பவித்திருக்கிறது. (26.05.2026) பெரிய பட்டங்களிலோ, அதிகாரத்தின் ஆசனங்களிலோ அவன் அமர்ந்திருக்கவில்லை. ஆனால், நேற்று பிற்பகல் தொடங்கி முகநூல் முழுக்க அவன் நினைவுகளால் நிறைந்திருக்கிறார். தன் வாழ்க்கைப்பயணத்தில் அவன் யாரையெல்லாம் பாதித்தாரோ, அந்த உள்ளங்கள் யாவும் இன்று நிலைகுலைந்து போயிருக்கின்றன. அவனை அறிந்தவர்கள் எவராலும் இந்த மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 60 வயதைக் கூடக் கடக்காதவன். […]
Read More
  • By Magazine
  • |
– காளீஸ்வர் 1. பிளாஸ்க் (Flask) பாட்டிலுக்குள் வைக்கப்படும் நீர் மட்டும் சூடாகவே இருப்பதற்கு காரணம் என்ன? பிளாஸ்க்கின் உட்புறம் மற்றும் வெளிப்புறச் சுவர்களுக்கு இடையே வெற்றிடம் (Flask) இருக்கும். வெப்பம் கடத்தப்படுவதற்கு ஏதேனும் ஒரு ஊடகம் (காற்று அல்லது பொருள்) தேவை. வெற்றிடத்தில் வெப்பம் கடத்தல் மற்றும் வெப்பச் சலனம் நடைபெறாது என்பதால் வெப்பம் வெளியேறாமல் நீர் சூடாகவே இருக்கிறது. 2. பாதரசம் மட்டும் ஏன் திரவ நிலையில் இருக்கிறது? பாதரச அணுக்களுக்கிடையேயான பிணைப்பு (Metallic […]
Read More