உலகின் முதல் எழுத்தாளர்
  • By Magazine
  • |
ஆதிகால சுமேரியாவும், பாபிலோனும்தான் நாகரிகம், மற்றும் எழுத்துக்களின் பிறப்பிடம் என்று சொல்லப்படுகிறது.   யூப்ரடீஸ், டைக்ரீஸ் நதிகளுக்கிடையே இருந்த, பண்டைய மெசபடோமியாவின்  ஒரு நகரம்தான் பாபிலோன். மெசபடோமியாதான் மனித நாகரிகத்தின் தொட்டில் என்றும், வளமான பிறைநிலம் (Fertile Crescent)  என்றும் போற்றப்படுகிறது.  அந்த காலம், கற்காலத்தின் முடிவாகவும், பித்தளை/உலோக காலத்தின் துவக்க காலமும் கூட. அப்போதுதான்  எழுத்து துவங்கியதும் கூட.  பழங்கால சுமேரியர்கள் கல்வியில் மிகவும் நம்பிக்கை வைத்திருந்தனர். எதனையும் பதிவு செய்வது அங்கே முக்கியமாக கருதப்பட்டது. தமது […]
Read More
தமிழ் நாடகத்தந்தை சங்கரதாசு சாமிகள்
  • By Magazine
  • |
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனால், ‘நாடக உலகின் இமயமலை’ என்று புகழப்பெற்ற சங்கரதாசுசாமிகள் தமிழ் நாடகத்தந்தை என்றும் போற்றப்படுகிறார். புதுநெறிஇவர் நலிந்து கிடந்த நாடகத் தமிழுக்கும்இசைதமிழுக்கும் புதுநெறி வகுத்தவர். கூத்துமரபில் இருந்து உருவாகி வளர்ந்த தமிழ் நாடகத்தை அரங்கமரபிற்கு ஏற்ப முறைகளை உருவாக்கியதோடு மட்டுமின்றி தெருக்கூத்துகளையும் புதுப்பித்தவர். தமிழ் நாடக வரலாற்றில் 50-க்கும் மேற்பட்ட நாடகங்களை இயற்றினார். ஏராளமான கலைஞர்களை உருவாக்கி நாடகப்பயிற்சி அளித்தார்.சங்கரதாசுசாமிகள், தூத்துக்குடியில் தமிழ்ப் புலமைமிக்க தாமோதரன்-பேச்சியம்மா தம்பதியருக்கு மகனாக 1867-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி […]
Read More
மக்கள் கவிஞர் தமிழ் ஒளி
  • By Magazine
  • |
_ பூ.வ. தமிழ்க்கனல் “வஞ்சகக் காலன் வருவதும் போவதும் வாழ்க்கை நியதியடா – எனில் செஞ்சொற் கவிதைகள் காலனை வென்று சிரிப்பது இயற்கையடா !” ஆம். இந்த வரிகளை எழுதிய காலனை வென்று வாழும் கவிதைகளை இயற்றிய மகத்தான மக்கள் கவிஞர் தமிழ் ஒளி பிறந்த நூறாண்டு விழா ஆண்டு இது.  பாரதிதாசனுக்கு 33 வயது இளையோன். கவிஞர் தமிழ் ஒளி பிறந்தது 1924 செப்டம்பர் 21 ஆம் தேதியாகும். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூர் […]
Read More
ஜேன் குக் ரைட் – வேதிசிகிச்சையின் அன்னை
  • By Magazine
  • |
– பேரா. மோகனா, பழனி நண்பர்களே, எல்லா உயிர்களையும் நோய் தாக்குவது இயல்பு.நோய் என்பது வைரஸ் அல்லது  பாக்டீரியா அல்லது   வளர்சிதை  மாற்றங்களால் ஏற்படலாம்.  இவைகளில் வைரஸ் நோய்கள் அனைத்தும் தொற்றும் நோய்களே. பாக்டீரியாவால் ஏற்படும் நோய்களில் சில தொற்றுபவை;  சில தொற்றாநோய்கள். தொற்றாநோய்களில்  மூன்று பெரிய நோய்கள்தான் முன்னணியில் நிற்கின்றன  1. சர்க்கரை நோய், 2. இதய நோய் 3. புற்றுநோய்.. புற்றுநோய் எப்படி புற்றுநோய் என்பது நோய் அல்ல. அது ஒரு வளர்சிதை மாற்றத்தில் […]
Read More
தமிழர் மரபில் நிலமும் – நீரும்
  • By Magazine
  • |
– ஓர் சூழலியல் பார்வை – கோவை சதாசிவம் மனிதர்கள் தமது முன் கால வரலாற்றை அறிந்து கொள்வதில் தீராத தாகம் கொண்டவர்கள்! பத்து தலைமுறைக்கு முன்பு எம் பாட்டன் எப்படி இருந்திருப்பார்..? எப்படி வாழ்ந்திருப்பார்..? இத்தகைய கேள்விகளில் இருந்தே தொடங்குகின்றன… எப்போது பூமி தோன்றியது..? எப்போது மனிதன் தோன்றினான் ..?  எனும் புதிய கேள்விகள். பூமி, இறைவனின் படைப்பு என்று பண்டைய சமயங்கள் அனைத்தும் நம்பின. பூமி தட்டையானது என்னும் கருத்தாக்கத்தில் பூமியை பாயாகச் சுருட்டிக்கொண்டு […]
Read More
பூதப்பாண்டியில் பிறந்த புரட்சிக்குயில்
  • By Magazine
  • |
– குமரி எழிலன் ஜீவானந்தம் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட, இளமையில் தேவாரம், திருவாசகம், பஜனைப்பாடல்களை தேர்வீதிகளில் பாடிப் பரவசம் அடைந்த சொரிமுத்து, குமரி மண்ணில் பூதப்பாண்டியில் பிறந்தவர் …. 9 வயதில் கோயில் சுண்டலை, எல்லாப் பிள்ளைகளுக்கும் சமமாக கொடுக்கச் சொல்லி, பூசாரிப் பாட்டா கேட்காததால்… பூசாரியிடமிருந்து பறித்துப் போய் சமபங்கு வைத்தவர். உடன்பயின்ற மண்ணடி மாணிக்கத்தின் தோளில் கை போட்டு தேர்வீதியில் சுற்றி கோயிலுக்குள் புக முயற்சியில் அடித்துக் காயப்படுத்தபட்டவர்.. காந்தியின் மீதும் கதர்மீதுமுள்ள பற்றால் […]
Read More
சமூகசேவகருக்கு பத்மஸ்ரீ விருது              கிடைக்குமா?
  • By Magazine
  • |
– சந்திப்பு : ஜி. ஜெயகர்ணன் என் உடலில் பலம் இருக்கும் வரை சமூக பணி தொடரும் என்று தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் சமூக சேவகர் ராஜகோபால். இவர் சுமார் 750 -க்கு மேற்பட்ட அனாதையான இறந்த உடல்களை அடக்கம் செய்தும் விபத்துகளில் சிக்கிய பல உயிர்களை காப்பாற்றியும் உள்ளார் மட்டுமின்றி நூற்றுக்கணக்கான மனநோயாளிகள், ஆதரவற்றவர்கள் ஆகியோர்களை காப்பகங்களிலும் சேர்த்து நிஜ கதாநாயகனாக திகழ்ந்து வருகிறார். இவரை புதிய தென்றலுக்காக மார்த்தாண்டம் கொடுங்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம். […]
Read More
பேரரசின் முடிவு
  • By Magazine
  • |
ஹிந்தி மூலம்: ச ஆதத் ஹஸன் மன்டோ தமிழில்: நாணற்காடன் தொலைபேசி ஒலித்தது. அருகில் மன்மோகன் அமர்ந்திருந்தான். ரிசீவரை எடுத்து, “ஹலோ… ஃபோர் ஃபோர் ஃபோர் ஃபோர் ஃபைவ் செவன்” என்றான். எதிர் முனையிலிருந்து “மன்னிக்கவும்… ராங் நம்பர்.” என்று பதில் வந்தது. மன்மோகன் ரிசீவரை வைத்துவிட்டு மீண்டும் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினான்.      அவன் இந்தப் புத்தகத்தை இருபது முறைக்கும் மேல் படித்திருப்பான். அத்துனை முறை படிக்குமளவுக்கு அந்தப் புத்தகத்தில் அவ்வளவு சிறப்பு எதுவும் இல்லை. […]
Read More
நேர்மை
  • By admin
  • |
நேர்மை நம்மைச் சுற்றி இருக்கும் அனைவரும் நேர்மையில்லாமல் நடந்துக் கொள்ளும் சமயத்தில் நாம் மட்டும் ஏன் நேர்மையாக நடந்துக்கொள்ள வேண்டும்? அதனால் என்ன பயன் கிடைத்துவிடப் போகிறது. நேர்மையின்றி வாழ்பவர்கள் எல்லா சுகங்களையும் அனுபவிக்கிறார்கள். நேர்மையுடன் வாழ்வதால் நமக்கு என்ன கிடைக்கிறது? என்று நினைப்பவர்கள் இந்த கதையை முழுமையாகப் படியுங்கள். ஒரு நாட்டுடைய அரசர் அவருக்கு அதிகமாக வயதானதால் புது அரசரை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு வருகிறார். ஆனால் இந்த முறை தன்னுடைய குடும்பத்திலிருந்து இல்லாமல் மக்களில் இருந்து […]
Read More
உழைப்பு
  • By admin
  • |
உழைப்பு…. இவ்வுலகில் மனிதனாக  ஏதோ இப்பிறவி எடுத்தோம்… வாழ்ந்து விட்டு போய்விடுவோம். இருப்பதை உண்டு களித்து விட்டு வாழ்வோம் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். நாம் மனிதனாக அரிய பிறப்பெடுத்து உள்ளோம். செயற்கரிய காரியங்கள் படைக்கத்தான் நாம் மனிதனாக பிறந்துள்ளோம். நாம் பிறக்கும் போது நம்மை யாருக்கும் தெரியாது. நாம் இறக்கும் போது, சரித்திரம் பேச வேண்டும். வரலாற்றில் நமது பெயர் இடம் பெற வேண்டும். எந்தவொரு சிறப்பான காரியங்கள் செய்யாமல் இருக்கிறோம் என்றால் நாமும் விலங்குகளுக்கும், […]
Read More