வெள்ளையரை எதிர்த்து போராடிய   வீரமங்கை ராணி அவந்திபாய்
  • By Magazine
  • |
பேராசிரியர் முளங்குழி பா.லாசர் மத்திய பிரதேச ராம்கார்க் நாட்டின் ராஜா விக்ரமாதித்ய சிங்கின் மனைவி ராணி அவந்திபாய். பேரழகு நிறைந்த அவர் துணிச்சல் மிக்கவர். போர்க்கலைகள் அனைத்தையும் பயின்றவர். லோதி இனத்தைச் சேர்ந்த அவந்திபாயின் இளம் பருவத்திலேயே அவர் கணவர் விக்ரமாதித்ய சிங் வாரிசு இல்லாமல் இறந்தார். கணவர் இறந்ததும் அவந்திபாய் அரசியாய் முடிசூட்டிக் கொண்டு ஆட்சி புரிந்தார்.  நாடு பிடிக்கும் ஆசையிலிருந்த ஆங்கில அரசு, ஆண் வாரிசுகள் மட்டுமே நாட்டை ஆள வேண்டும் என்று சட்டம் […]
Read More
படிப்பதற்கு நேரம் ஓதுக்குங்கள் !
  • By Magazine
  • |
 – சஜிபிரபு மாறச்சன் மனிதனுக்கும் அவனுடைய தலைவிதிக்கும் இடையே உண்மையாக உரையாடி அவனை நடுநிலைப்படுத்துவதே புத்தகம் தான். மனிதனாக பிறந்துள்ள ஒவ்வொருவரும் விலக்க முடியாத முடிவாக புத்தகங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளன. மனித இனத்தில் சிறப்புடைய மனிதனாக உயர, நாளைய தினம் நன்மைகளைக் கண்டுபிடிக்க உதவுவது புத்தகம் தான். மனிதனுக்கு நிறைய கனவுகள் உள்ளன. போற்றி வைத்து பாதுகாத்து வரும் அந்த கனவுகள், உண்மையில் நிஜமாக உருவானதால் தான் ஜெயித்தோம். கனவுகளை நிஜமாக்க முயற்சி செய்யும் போது ஏற்படும் தடைகள் […]
Read More
பெண்களே ! உங்கள் உரிமைகளை பேசுங்கள் !
  • By Magazine
  • |
பூ.வ.தமிழ்க்கனல் விடுதலை, ஆழ்கடலில் தேங்கிப்போன உடலுக்குக் கிடைத்த ஒரு பிடி காற்று. விடுதலை இறுகிப்போன கல்லறை மேல் விழுந்து நெகிழச் செய்யும் மெல்லிய முளரி இதழ். விடுதலை, அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகளின் ஒட்டுமொத்த விடுவிப்பு. விடுதலை, வரையறைக்குள் அடக்க முடியாத உணர்வு. ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்று மீண்டதை நெஞ்சு நிமிர்த்திக் கொண்டாடுகிறோம். குடும்ப வரையறை, சமூக வரையறை எனக் கட்டுப்பாடுகளுக்குள் அடங்கி, தனித்தன்மையை, விடுதலை உணர்வைத் தொலைத்த பெண்களின் உணர்வுகளைப் பற்றி எண்ணுகிறோமா? படிக்கும் படிப்பிலிருந்து திருமணநாள் […]
Read More
நூல் மதிப்புரை
  • By Magazine
  • |
காலத்தை செதுக்கும் உளிகள் என்ற நூலை எழுதியுள்ளார் பேனா நண்பர் திரு. ஆ.பிரம்ம நாயகம் அவர்கள், காலை எழுந்தவுடன் ஒரு சிறு தன்னம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அனைவருக்கும் கொடுத்துவிட வேண்டும், என்ற உயரிய நோக்கத்திலும், தமிழ் ஆர்வத்திலும், தினமும் எண்ணத்தில் தோன்றிய கருத்துக்கள் அனைத்தையும் ஒன்றாக்கி எளிய வாழ்க்கை, உயரிய சிந்தனை ஆகியவற்றை கொள்கையாகக் கொண்டு, தினமும் காலையில் தோன்றும் எண்ணங்களைக் காலை வணக்கச் செய்திகளாக நட்புக்களுக்கும், சொந்தங்களுக்கும்,  உறவுகளுக்கும் அனுப்பி வந்திருக்கிறார் இந்நூலாசிரியர். தோல்விகளாலும் துயரங்களாலும், கஷ்டங்களாலும், […]
Read More
மாற்றுத் திறனாளிகள் குறித்த பார்வைகள்
  • By Magazine
  • |
A. தர்மராஜ் (த.ராசு) பாதிக்கப்பட்ட பெண் பார்வையற்றவர் என்பதால் அவரது சாட்சியை கண்ணுள்ள சாட்சியாக எடுத்துக் கொள்ள முடியாது. செவிவழி சாட்சியாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். சம்பவத்தன்று குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஆட்டோ டிரைவர் தான் வண்டியை ஓட்டினார் என்பதற்கு ஆதாரம் இல்லை. மேலும், ஆட்டோ டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்ததை நேரில் பார்த்ததாக யாரும் சாட்சியம் அளிக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண் சொன்னதாக மட்டுமே கூறப்பட்டிருப்பது செவிவழி சாட்சியாக மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும் என்பதால் ஆட்டோ ஓட்டுநருக்கு […]
Read More
இன்சுலின் செடி
  • By Magazine
  • |
 நமது மூலிகை மருத்துவர் இன்சுலின் செடி, பிரேசில் மற்றும் அமெரிக்காவை பூர்விகமாக கொண்டது. இந்தியாவிலும் வளர்க்கப்படுகிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் இன்சுலின் ஹார்மோனை அதிகம் சுரக்கச் செய்யும் தன்மை இச்செடிக்கு இருப்பதால் இன்சுலின் செடி என பெயர் உண்டாயிருக்கிறது. ஆனால் இது இன்சுலின் ஹார்மோனுக்கு மாற்று அல்ல. இச்செடியின் இலையை மட்டும் சாப்பிட்டு நீரிழிவு நோயை முழுவதும் கட்டுப்படுத்துவது எல்லோருக்கும் சாத்தியப்படாது. இச்செடி தண்ணீர் வடிகால் வசதியுள்ள அனைத்து மண்ணிலும் வளரும். ஈரப்பதமுள்ள மண் ஏற்றது. தண்டுகளை […]
Read More
செயற்கை கருவறை
  • By Magazine
  • |
முனைவர் மோகனா, பழனி அம்மாவின் கருவறை தான் குழந்தையை உருவாக்கிக் கொடுக்கிறது. இதுவரை கருப்பைக்கு மாற்று இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தோம். இப்போது அறிவியல் அதற்கும் கூட மாற்று உண்டு என்று வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.   செயற்கை கருப்பை என்றால் என்ன?  மனிதக் கருவை கருப்பைக்கு வெளியே வளர்க்கும் ஒரு சாதனம். இயற்கையான கருப்பையின் சூழலை செயற்கையாக உருவகப்படுத்துகிறது.  இதில்  அம்னியோடிக் திரவம் (Amniotic fluid) போன்ற செயற்கை திரவம்.  செயற்கை நஞ்சுக் கொடி […]
Read More
இன்பம்
  • By Magazine
  • |
– சஜிபிரபு மாறச்சன் எப்போதும் நாம் அனைவரும் மகிழ்ச்சியாக, ஆடிப்பாடி விளையாடலாம் என்று தான் நினைக்கிறோம். இன்பத்தை விரும்பி ஏற்பது போல், துன்பத்தையும் மனவலிமையுடன் நாம் எதிர்கொள்ள பழக வேண்டும். முள்ளில்லாமல் ரோஜா இல்லை. துன்பம் இல்லாமல் மண்ணில் வாழ்க்கை இல்லை. இன்பமே துன்பத்தின் வித்து. துன்பம் தான் மனிதனின் சிந்தனையைத் தூண்டுகிறது. இன்பத்தில் அவன் தன்னிலையை இழக்கிறான். துன்பம் வரும் போது அவனுள் விழிப்புணர்வு பிறக்கிறது. இன்பத்தில் மூடிக் கிடக்கும் கண்கள் துன்பத்தில் திறக்கின்றன. துன்பமும், […]
Read More
  • By Magazine
  • |
– ஓஷோ அது இன்னமும் காலைப் பொழுது. ஒரு  கிராமத்தின் குழந்தைகள் அப்போது தான் பள்ளியை அடைந்திருக்கிறார்கள். எதிர்பாராத  விதமாக ஒரு அதிகாரி ஆய்வு செய்ய வந்தார். முதல் வகுப்பறைக்கு சென்று சொன்னார். மூன்று மிகவும் புத்திசாலி மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக என்னிடம் வந்து நான் கரும் பலகையில் எழுதக்கூடிய வினாவிற்கு விடை காணுங்கள். ஒரு மாணவர் மெதுவாக எழுந்திருந்து கரும்பலகையிலிருந்த வினாவுக்கு விடையளித்து விட்டு தன் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டார். பிறகு இரண்டாவது […]
Read More
பணி ஓய்வு நாள்
  • By Magazine
  • |
செ.பராந்தகன் நாளை முதல் செய்த வேலையையே திரும்பிச்  செய்ய வேண்டியதில்லை.. நேரங்கலெல்லாம் இனி என் கையில் தவழும். மலர்ந்த பூக்களையும் காய் கனிகளையும் கவனித்து மகிழலாம். உண்ணும் உணவின் ருசி நன்கு புரியும். கண்கள் காணாத காட்சியெல்லாம் காணப்போகின்றது.. அடுக்கிவைத்த வாசிக்காத புத்தகங்கள் வரவேற்கும் நான் வாசிக்க போகும் நேரங்களை… ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம் நாளைமுதல்
Read More