கணவரை ஏமாற்ற மயங்கியது போல நடித்தபெண்                                      அறிவுபூர்வமாக எழுப்பிய ஆசான்..
  • By Magazine
  • |
கணவரிடமிருந்து தப்பிப்பதற்காக மயங்கியது போல நடித்த பெண்ணை அறிவு பூர்வமாக செயல்பட்டு எழுப்பினேன் என்கிறார் சிதறால் பி ஏ.தங்கராஜ் ஆசான். புதிய தென்றலுக்காக கன்னியாகுமரி மாவட்டம் சிதறால் (தேமானூர்) பகுதியைச் சேர்ந்த பொதுமக்களால் பி ஏ தங்கராஜ் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் தங்கராஜ் ஆசான் அவர்களை  சிதறாலில் உள்ள அவரது வைத்தியசாலையில் சந்தித்தோம். பிஏ தங்கராஜ் என்று தாங்கள் அழைக்கப்படுவதற்கான காரணம் என்ன? எனது பெயர் தங்கராஜ் ஆகும். இந்தப் பகுதியில் முதன்முதலில் பிஏ படித்தது நான் […]
Read More
அருமையானதை எல்லாம் இன்னொரு நாளைக்கு என்று தள்ளி போடுகிறாய்!
  • By Magazine
  • |
– ஓஷோ காத்துக் கொண்டிருக்காதே. எதையும் தள்ளிப் போடாதே. நாளைக்கும் பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்து விடாதே. நாளை என்றொரு நாள் வருவதே இல்லை. நாளை என்றொரு நாள் இருந்ததே இல்லை. இருக்கவும் போவதில்லை. மனதின் ஒரு காட்சி தான் அது. எப்போதும் இன்றுதான் இருப்பது. இருப்பது எப்போதும் இப்போது மட்டுமே இருக்கிறது. இந்த கணம் மட்டுமே இருப்பது. ஏதாவது செய்ய வேண்டுமென்றால் அதை இங்கே இப்போது செய்துவிடு. ஒத்திப் போடதே. இவ்வளவு சிறிய விஷயம் தானே! நாளை […]
Read More
நன்னாரியின் நன்மைகள்
  • By Magazine
  • |
– கஸ்தூரிபா ஜாண்ஸன் நமக்கு நன்மை தரும் மூலிகைகளுள் ஒன்று நன்னாரி. தாவரயியலில் கேமிடெஸ்மஸ் இன்டிகஸ் (Hemidesmus indicus) என்பதாகும். ஆங்கிலத்தில் இதனை Indian Sarsaparilla (இந்தியன் சர்சாராபாரில்லா என்பதாகும். நன்னாரி விரும்ப பொன்னாகும் மேனி என்து பழமொழி நன்னாரி தெற்கு ஆசியா முழுதும் காணப்படும் ஒரு கொடியினம். தரம் எங்கும் காணப்படுகிறது. இந்தியா முழுவதும் காணப்படுகிறது. சித்த மருத்துவத்தில் வேர்கள் பயன்படுகிறது. தாவரத்தின் அமைப்பு எதிரெதிரில் அமைந்த நீண்ட இடைவெளிகளையுடைய கம்பி போன்ற இடைகளையுடைய ஒரு […]
Read More
கறுத்த சண்டை
  • By Magazine
  • |
– கிருஷ்ணகோபால்  “இன்னாப் பாரு உனக்கு வெளிவுலகம் தெரியாது உனக்கு  என்னமாதிரி வெளிப்பழக்கம் இருந்திருந்தா  நல்லது கெட்டது  என்னான்னுத் தெரியும்…” அவன் வாசல் பக்கம் நின்றேப் பதில் சொன்னான். “எனக்கு வெளியுலகம் தெரியாதுங்கிறது உண்மதான். வெளியுலகம் தெரிஞ்சி ஒரு வேலையும் இருந்திச்சுனா கல்யாணம் கெட்டிட்ட ஒரு மாசத்திலேயே நீயும் வேண்டாம் உறவும் வேண்டாம்ணு போயிருப்பேன்.. எங்க அம்மா நோய்பிடிச்சவங்க மிளகு அரைக்க முடியாதுனு படிப்ப பாதியில அவள் சிவப்பு நிறத்தில் கட்டியிருந்த பூப்போட்ட புடவையை விலக்கி வெள்ளை […]
Read More
இரத்தத்தை சுத்திகரிக்கும் “மஞ்சிட்டி”
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் மஞ்சிட்டி ஒரு கொடி வகையை சார்ந்தது. இது சுமார் 5 அடி நீளம் வரை வளரக்கூடியது. இதன் இலை பசுமை மாறா நிறத்தில் நீண்ட காம்புடன் செடியின் தண்டுடன் இணைந்திருக்கும் ஒரு கணுவில் 4 இலைகள் காணப்படும். தண்டு நான்கு பக்கங்களைக் கொண்டு மெல்லியதாக இருக்கும். காய் பச்சை நிறத்தில் சிறிதாகவும், பழுக்கும்போது சிகப்பு மற்றும் கறுப்பு நிறத்தை அடையும். மஞ்சிட்டி வேர்கள் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதன் வேர் ஒரு மீட்டர் நீளம் […]
Read More
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் அரசு கல்வி நிலையங்கள் மீதான நம்பிக்கைகளை மக்களிடமிருந்து அப்புறப்படுத்துதல் என்பது காலந்தோறும் நடந்து கொண்டிருக்கின்ற ஓர் தொடர் செயல்பாடு. கல்வியை தனியார் மயமாக்கியப் பிற்பாடு, அரசு கல்வி பால் எடுக்கின்ற ஒவ்வொரு நடவடிக்கையும் மக்களை தனியார் கல்வி நிறுவனங்களை நோக்கி நகர்வதற்கான ஆபத்தை விளைவிப்பது நல்லது அல்ல. அரசு கல்வி நிலையங்களில் போதுமான ஆசிரியர்கள் இல்லை என்பதுதான் மிக முக்கியமான குற்றச்சாட்டு. ஆனால் அது பற்றிய அக்கறை இல்லாது வேறு என்னவெல்லாமோ நெருக்கடிகளை […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
– வழக்கறிஞர் பி. விஜயகுமார் Death Warrant or black warrant இறப்பு பிடிகட்டளை அல்லது கருப்பு பிடிகட்டளை கொலை வழக்குகளில் தண்டனை வழங்குபவர்களுக்கு மூன்று விதமான தண்டனைகள் வழங்கப்படுகிறது. முதல் கட்டம் ஆயுள் தண்டனை. இங்கு ஆயுள் தண்டனை என்பது 14 வருடம் ஜெயிலில் இருக்க வேண்டும் என்று தண்டனை வழங்கப்படுகிறது. இங்கு குற்றவாளி 14 வருடம் முடிந்ததும் வெளிவந்து விடுவார். அடுத்தது சாகும் வரை ஜெயிலில் இருக்க வேண்டுமென்ற தண்டனை. இதில் குற்றவாளி சாகும் […]
Read More
உயிர் நதியின் ஓசை
  • By Magazine
  • |
பொன்.குமார் எழுத்தாளர் குமரி ஆதவன் ஒரு கவிஞராக மட்டுமல்லாமல் ஒரு கட்டுரையாளராகவும் இயங்கி வருகிறார். குமரி ஆதவன் பல்வேறு சூழல்களில் பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து உயிர் நதியின் ஓசை என்னும் கட்டுரைத் தொகுப்பாக்கித் தந்துள்ளார். தலைப்பு ஒரு கவிதைத் தொகுப்புக்கான தலைப்பு போல் உள்ளது.  இயற்கை மனிதனுக்கு தந்திருக்கிற மிகப்பெரிய கொடை நீராதாரம். நீர் ஆதாரங்கள் அதிகமாக அழிக்கப்பட்ட காலம் இந்த நூற்றாண்டுதான். ஏராளம் நதிகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் காணாமல் போய் பூமி […]
Read More
மாடல்ல மற்றை யவை
  • By Magazine
  • |
 தலைவாசல் திருவள்ளுவர் உலகப் பொதுமறை  எழுதிய ஒப்புமை மிக்கப் புலவர். திருக்குறள் வெள்ளித்தட்டில் வைத்த தங்க ஆப்பிள்… என்கிறார் மேலைநாட்டறிஞர் ஒருவர். வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர் உள்ளுவரோ மனுஆதி? ஒருகுலத்துக்கொருநீதி… என்ற  மனோன்மணீயம் சுந்தரனார், மற்றும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய் தொழில் வேற்றுமையான் (குறள்972)..என்ற குறள் போன்றவற்றை கற்கை நன்றே கற்கை நன்றே                        பிச்சைப்புகினும் கற்கை நன்றே… என்கிறார் அவ்வை. கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக […]
Read More
வெள்ளையர் கைப்பற்றிய நாட்டைப் போராடி மீட்ட வீரமங்கை வேலுநாச்சியார்
  • By Magazine
  • |
பேராசிரியர். முளங்குழி.பா.லாசர் இந்திய நாட்டு விடுதலைப்போரில் வெள்ளையரை எதிர்த்து நின்று போரிட்டு, வெற்றி வாகை சூடி, இழந்த நாட்டை வெள்ளையரிடமிருந்து கைபற்றிய ஒரே வீரமங்கை வேலுநாச்சியார். இராமநாதபுரம் மன்னர் விஜயரகுநாத செல்லத்துரை சேதுபதிக்கும், முத்தம்மாள் நாச்சியாருக்கும் 1730- ஆம் ஆண்டு மகளாக பிறந்த வேலுநாச்சியார். பயமே தெரியாதவர். வீரம் நிறைந்தவர். கணவனைக் கொல்ல வந்த புலியுடன் போராடி அதனைக் கொன்ற வீரமங்கை. வீரத்தோடு விவேகமும் நிறைந்த பேரழகி. வேலுநாச்சியார் தமிழ், உருது, சமஸ்கிருதம், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், […]
Read More