• By Magazine
  • |
குமரி எழிலன் இரவு என்பது உறங்க அல்ல விழித்துக்கொள்ள… கனவு என்பது ஏங்க அல்ல இயங்க… பார்வை என்பது மறக்க அல்ல பதிந்து கொள்ள பயணம் என்பது பார்க்க அல்ல அனுபவிக்க கடல் என்பது அலைவீச அல்ல உயிர்கள் வாழ வாழ்க்கை என்பது வாய் பேச அல்ல வாழ்ந்து காட்ட… புரிவது என்பது சொற்களாலல்ல செய்கைகளால் இருப்பது என்பது கற்பனை அல்ல செயல்படுவது… உயிரால்மட்டும் வாழ்வது விலங்கு உணர்வோடும் வாழ்பவன் மனிதன்.. இன்பம் என்பது கையளவு அல்ல […]
Read More
  • By Magazine
  • |
கா.திலீபன்  தமிழாசிரியர் பௌர்ணமியைப்  போல் அலங்கரித்துச் சுற்றித்திரிந்த விண்மீனே! கால் வயிறு கஞ்சிக்காகவும், தன் மகனின் ஆசைக்காகவும், உடல் கருத்தும்! கண்கள் சிவந்தும்! கரும் நிலவாக சுற்றிக்கொண்டிருக்கிறாய்! அதனால்தான் என்னவோ? அதை அமாவாசை என்கிறார்களோ? என் ஆசை அம்மா! என்றும் உயர்ந்திருக்கிறாய்.
Read More
முரண்
  • By Magazine
  • |
கமல அருள் குமார் தொலைவில் அழகாய் தெரியும் சில அருகே ஆபத்தைத் தரலாம்.. வளைவில் முடிவாய் தெரியும் சில வளைந்த பின் வியப்பைத் தரலாம்.. கலையில் கவர்ச்சியாய் தெரியும் சில களைத்த பின் கவலையும் தரலாம்… விலையில் வீழ்ச்சியாய் தெரியும் சில உழைத்த பின் உயர்ச்சியும் தரலாம்… பார்வைக்கு பளபளப்பாய் தெரியும் சிலர் பழகின பின் பாம்பாகவும் மாறலாம்.. அழகும் ஆபத்தும் எப்போதும் அருகருகே… அறிவும் அறியாமையும் எப்போதும் எதிர் எதிரே…
Read More
“நாளைய உலகம்” (இசைப்பாடல்)
  • By Magazine
  • |
குமரி எழிலன் எல்லைகளில்லா உலகம் – இது ஏற்ற தாழ்விலா கழகம் எங்கே எதுவிளைந்தாலும்-அது பெற்றவர்க்கெல்லாம் சொந்தம்                                 (எல்லைகளில்லா…) உழைப்பில் உருவான உலகம் -இது உலகோர்க் கெல்லாம் சொந்தம் பசித்த வயிறு நிறைத்து – மகிழும் பாரோர் எல்லாம் பந்தம்..                                 (எல்லைகளில்லா …) விற்பனை என்பது பனையா – அட கற்பனை போல் ஒரு வினையா என்றொரு கேள்வி எழணும் – நாம் எந்நாளும் எல்லாமும் பெறணும்                                 (எல்லைகளில்லா …) போரெனும் ஆயுதம் […]
Read More
  • By Magazine
  • |
கவிஞர்.E.K.சுப்பையா கம்பர் காந்திமகானை பணிந்திடுவோம்                 அவர் காட்டிய அஹிம்சையை கடைபிடிப்போம்                 பொறுமையை கடைபிடித்து பெருமையை செய்வோம்                 மாந்தர் பிறப்பை சிறப்படைய செய்வோம்                 தாழ்ந்தவர்களையும் தாங்கிடுவோம் நீக்கிடுவோம் கொடுமையை                 வள்ளுவன் குறளை வாழ்க்கையில் நடத்தி வள்ளள் காந்தியை போற்றுவோம்                 நமக்கு சுதந்திரத்தை வாங்கி கொடுத்தவர்கள் இறப்பிலும் பிறர் உயிரை எடுப்பதில்                 அவர் விரும்பவில்லை உண்ணாவிரதம் உண்மையின்                 தத்துவத்தை கொண்டே உலகை நடுங்க செய்யும்                 கண்கண்ட தெய்வம் […]
Read More
போர்த் தின்னும் மனிதம்
  • By Magazine
  • |
இரா. அரிகரசுதன் போர்ச்சிதறிலின் எச்சங்களில் வாழும் தனது குடும்பத்திற்கு உணவுப் பொருளை எடுத்துச்சென்ற இரண்டு சிறுவர்களின் மேல் வீசியெறியப்படுகின்றது குண்டு… வானிலிருந்தோ தொலைதூரத்திலிருந்தோ வெடித்துச் சிதறிய உன்மத்தத்தைக் கண்டுகொண்டிருப்பவனின் மனம்.. தற்செயலாலானதா என்ன? இணையம் உலாவவிடும் இக்காட்சிக்குள் மாட்டிக்கொண்ட மலைகள் கடல்கள் தாண்டிய தூரத்தில் வாழும் ஓர் ஆசிரியனின் இதயம் உருகிப் பாய்கிறது! யுத்தங்களே இந்த உலகின் சுற்றுச்சூழல் சீர்கேடு. யுத்தங்களே மனதின் ஆகப்பெரும் கழிவு. இதயங்களை களற்றிய தோரணங்களுக்குள் அமர்ந்து தங்கள் தேநீர்களை அளவெடுத்துக் கொண்டிருப்பவர்கள் […]
Read More
  • By Magazine
  • |
மழையின் மண் வாசம் ! அறியாத தமிழ் தேசம் ! காரணம் மண் இல்லாமையே ! எங்கும் தார் சாலை ….. அனைத்தும் அறிந்தவன் பித்தனானான்! ஆயுர்வேதம் அறிந்தவன் சித்தனானான்! உன்னை அறிந்தவன் உலகளந்தான் ! உயரிய விருதையும் பெற துணிந்தான் ! காரணம் தமிழே கதி என்றான் ….                                                      கா.திலீபன்
Read More
  • By Magazine
  • |
 ஜெகன் தங்கையா. B பறந்து திரியும் வண்ணத்துப்பூச்சிகளின் இறகுகளில் பளபளக்கும் வண்ணத்துகள்கள் பிடிக்கும் விரல்களில் ஒட்டிக் கொள்ளும் வசீகரம் குறைந்து போகும்… உதிர்ந்த மயிர் என்பதால் மனிதகுலமே ஒதுக்கித் தள்ளினாலும் மயிலிறகின் வசீகரம் வாழ்நாள் முடிந்த பின்பும் வாழ்ந்து கொண்டிருக்கும்..!                   
Read More
  • By Magazine
  • |
குமரி எழிலன் சிவகாமி சிவகா…. மி சிவகா ……..மி உனக்கென்ன வருணன் வந்து வாசல் தெளிப்பான் …. வாயு வந்து முற்றம் பெருக்குவான் ……. மழைத்துளி வந்து புள்ளி வைக்கும் …. மேகப்பொடிகள் கோலம் போடும் ….. அக்கினி அடுக்களை சமையல் செய்யும் பார்வதி (பக்கத்து தெரு பார்வதி அல்ல) வந்து பாத்திரம் பூசுவாள் சரஸ்வதி (பக்கத்துவீட்டு சரஸ்வதி அல்ல) சமைக்க கறிகாய் நறுக்குவாள் …. திருமகள் திருகையில் (mix- யில்) காணம் திரிப்பாள் தேவதை வந்து […]
Read More
  • By Magazine
  • |
கமல. அருள் குமார் கத்தரிப்புகள் இன்றி மரம் கூட அழகாவதில்லை.. சித்தரிப்புகள் இன்றி மன்னர் கூட மாவீரன் ஆவதில்லை.. மட்டம் தட்டாமல் மண் கூட செம்மையாவதில்லை.. மட்டம் தட்டுபவர்கள் இன்றி மனம் கூட வன்மையாவதில்லை.. கத்தரிப்புகளும் சுத்திகரிப்புகளும் அவரவரால் இயலாது.. அடுத்தவர் தரும் அவமானங்களால் இயலும்..
Read More