குமரி எழிலன்
சிவகாமி
சிவகா…. மி
சிவகா ……..மி
உனக்கென்ன
வருணன் வந்து
வாசல்
தெளிப்பான் ….
வாயு வந்து
முற்றம்
பெருக்குவான் …….
மழைத்துளி வந்து
புள்ளி
வைக்கும் ….
மேகப்பொடிகள்
கோலம்
போடும் …..
அக்கினி
அடுக்களை
சமையல்
செய்யும்
பார்வதி
(பக்கத்து தெரு பார்வதி அல்ல)
வந்து பாத்திரம்
பூசுவாள்
சரஸ்வதி
(பக்கத்துவீட்டு சரஸ்வதி அல்ல)
சமைக்க
கறிகாய்
நறுக்குவாள் ….
திருமகள்
திருகையில்
(mix- யில்)
காணம் திரிப்பாள்
தேவதை வந்து
தேங்காய்த்
திருவுவாள்
அப்சரஸ்
உனக்கு
அலங்காரம்
செய்வாள்
எங்கிருந்தோ
ஒரு
இடியோசை போல
மகராணிக் கென்ன
மாய ஒறக்கம்
மாமி மலை வெடிக்கும்
மருமகள் கனவு
தூள் …..தூள் ….. ஆகும்.
Leave a Reply