தர்மம் செய் மனமே…

தர்மம் செய் மனமே…

  • By Magazine
  • |

இரா. அரிகரசுதன் கவிதைகள்

உரு கொள்கிறார்கள்!

புரியவே மாட்டேன் என்கின்றது.

குளித்து முடித்து ஈரமான நகத்தை

வெட்டி எறிவதைப் போன்ற

லாவகத்தில் செய்துவிடுகிறார்கள்!

பயிற்சிப் பெற்ற தொழில் வல்லுனர்களாக

இருக்கிறார்கள் அல்லவா!

ஆச்சரியம் தருகின்றது.

அன்பெனும் உறையுள்

துருப்பிடித்திருக்கும்

கூரியக் கத்தியை

எவ்வளவுதான் இறுக்கிப் பிடிப்பது!

தன்னை

ஒரு ஈர்க்காம் பெட்டியென

அடக்கி வைப்பதற்குள்ளிருக்கும்

துயரம்,

ஒரு வெடித்தலின்

சிதறல்களை அள்ளிப் பருகுவதைப் பரிசளிக்கின்றது.

ஞாயம் தன்னைத் தின்று சீரணித்தவர்களின்

வயிற்றுக்குள் உருண்டு கொண்டிருக்கின்றது

தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்,

தாழ்ந்திடாமல் தன்னை தற்காப்பதும்

தர்மம்.

தர்மம் செய்… தர்மம் செய்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *