பணி ஓய்வு நாள்
  • By Magazine
  • |
செ.பராந்தகன் நாளை முதல் செய்த வேலையையே திரும்பிச்  செய்ய வேண்டியதில்லை.. நேரங்கலெல்லாம் இனி என் கையில் தவழும். மலர்ந்த பூக்களையும் காய் கனிகளையும் கவனித்து மகிழலாம். உண்ணும் உணவின் ருசி நன்கு புரியும். கண்கள் காணாத காட்சியெல்லாம் காணப்போகின்றது.. அடுக்கிவைத்த வாசிக்காத புத்தகங்கள் வரவேற்கும் நான் வாசிக்க போகும் நேரங்களை… ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம் நாளைமுதல்
Read More
போன்சாய் வாழ்க்கை
  • By Magazine
  • |
ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் கொஞ்சம் வளர்ந்தாலும் கிளைகளை உடைத்துவிட்டு கொஞ்சுகிறான் நான் அழகி என்று ! என் இயல்பில் படராமல் அவன் இசைவுக்கு வளரும் எனக்கோ போன்சாய் மரங்கள் பிடித்தமில்லை வட்டத்தொட்டிக்குள் வாழும் போன்சாய் போல் வீட்டுச்சுவருக்குள் முடிகிறது என்வாழ்வும் நீர் தேடி அழையமுடியா வேரின் வலியும் இலக்கின்றி ஓடும் என் வாழ்வின் வலியும் ஒத்த பாதையில் பயணிக்கிறது
Read More
  • By Magazine
  • |
இரா.சிவானந்தம் பயனளிக்கும் கைத்தொழிலை தக்க காலத்தில் கற்றுக்கொண்டால் வாழ்க்கைக்கு வளம் ஊட்டும் கற்ற கைத்தொழில் யாருக்கும் எப்போதும் அடிமையாக்காது காட்டும் கைத்தொழில் சிறப்புறக்கற்றால் பலருக்கு கொடுக்கலாம் வேலைவாய்ப்பு கைத்தொழில் கற்றவர் தானே தொழிலாளி தானே முதலாளி வேலை நேர கட்டுப்பாடில்லை எப்போதும் உழைக்கலாம் எந்த நேரத்திலும் ஓய்வு எடுக்கலாம் உழைப்பிற்கேற்ப வருவாய் கூடும் வாழ்க்கைதரமும் பெருகும். தணிக்கை – வரி ஏய்ப்பு சோதனை பிரச்சனை இல்லை பயமின்றி உழைக்கலாம் சிறந்த கைத்தொழில்களால் நாமும் உயர்வோம் நாடும் உயரும்.
Read More
ஏக்கம்
  • By Magazine
  • |
குமரி எழிலன் சன்னலில் ஒரு சாயல் தெரிந்தது… அது வானத்து நிலவோ … நிலவைத் தொட கைகள் துடித்தன கண்கள் மட்டுமே தழுவி மீண்டன… தோற்ற மயக்கமா? உண்மைத் தோற்றமா? நிலவுக்கும் தெரியும் கண்களுக்கும் புரியும்..  நாள் நட்சத்திரம் தேதி குறிப்பிட்டா கைகள் குலுக்கும் காயங்கள் சேரும்.. காய்ச்சலுக்கு மருந்து காத்திருக்குது கடைகளில் அல்ல … கண்களில் …. கைகளில் … இதயங்களில் …. காலம் உருண்டோடுகிறது உலகம் சுழன்று கொண்டிருக்கிறது கற்பனையில் மட்டும் வாழ்வது கனவல்லவா […]
Read More
வேடன் எனும் கருஞ்சூறாவளி
  • By Magazine
  • |
தக்கலை ஹாமீம் முஸ்தபா கூடி நிற்கும்  பெரும் மக்கள் திரள்முன் நின்று கொண்டு வேடன் என்னும் அந்தக் கலைஞன், “நான் பாணன் இல்லை  பறையன் இல்லை புலையன் இல்லை நீ தம்புரானும் இல்லை நீ தம்புரான் என்றால் எனக்கொரு மயிருமில்லை இனி காலமில்லை காத்திருக்கப் போவதுமில்லை பொறுத்துப் போகும் எண்ணமுமில்லை” என்று   ராப் இசையில் தன் குரலை அதிரவிடும்போது கூடிநிற்கும் பெரும் கூட்டமும் அவரோடு  சேர்ந்து ஆரவாரிக்கிறது. கேரள மக்கள் இசைமரபில் குறிப்பாக மலையாள நாடன் பாட்டு […]
Read More
  • By Magazine
  • |
கே.பி. பத்மநாபன் உயர்வான உழவரையே போற்றி நாட்டின்                 உறுபசியைப் போக்குதற்கே முயல வேண்டும்; அயராதிங்(கு) உழைக்கின்ற பாட்டாளிக்கும்                 அனைத்துநல மேன்மையெலாம் கிட்ட வேண்டும்; இயலாத ஏழைக்கும் ஊணுடுக்கை                 எல்லாமே எந்நாளும் ஈதல் வேண்டும்; வயதான காலத்தில் வாட்டமின்றி                 வாழுவகை செய்யும் நல்திட்டம் வேண்டும்.! சுயமாகத் தொழில் செய்யும் இளைஞர்க்கெல்லாம்                 சோர்வின்றி அரசிங்கே உதவ வேண்டும்; புயவலியால் மாற்றாரை அடிமை செய்யும்                 போக்கினரை அடக்கித்தான் ஆக வேண்டும்; இயன்றவரை தாய்மொழியில் […]
Read More
வேணும் சிக்கனம்
  • By Magazine
  • |
இரா.சிவானந்தம் பிழைப்பிற்காக வெளிநாடு சென்றவன் நன்றாய் சம்பாதித்து அனுப்பினான் குடும்பத்திற்கு மனைவி மக்களும் வந்த பணத்தில் செல்வ செழிப்பாள் வாழ்ந்து மகிழ்ந்தனர் தேவையானவைகளைத் தவிர தேவையற்றதையும் வாங்கினர் சிக்கனம் என்பதை மறந்து போயினர். நான்காண்டு கழித்து விடுமுறையில் வந்தவனும் அள்ளி வந்தான் நிறைய ஆடம்பரப் பொருட்கள் உறவும் சுற்றமும் வியந்து நின்றன நட்பும் – அறிந்தோரும் சுற்றி வந்தனர் மீண்டும் புறப்பட்டான் வெளிநாட்டுக்கு ஆர்வமுடன் அங்கு மூண்ட அந்நிய நாட்டுச் சண்டையால் திகைத்து நின்றான். தாக்குதல்களால் பலரும் […]
Read More
  • By Magazine
  • |
குமரி எழிலன் மத்தகத்தே உடைபடும் தயிர்க்கட்டியாய் புத்தகம் படும்பாடு பெரும்பாடு …. வீட்டிலிருந்து பழைய புத்தகக் கடைக்கு பழைய புத்தகக் கடையிலிருந்து வீட்டுக்கு, மீண்டும் வீட்டிலிருந்து பழைய புத்தகக் கடைக்கு …. தாளம் படுமோ தறிபடுமோ காலவெள்ளத்தில் எறிபடுமோ …. அடுப்புக்கு நெருப்பாகாமல் அடுக்கிலாவது இருக்கட்டும் பேரீச்சம்பழம் ஆகாமல்
Read More
வான்புகழ் வள்ளுவர்!
  • By Magazine
  • |
– இரா.சிவானந்தம் திருவள்ளுவரின் அற்புதப்படைப்பால் வியந்து நிற்கிறது ஞாலம் ஒன்றே முக்கால் வரிகளில் தான் எத்தனையெத்தனை ஜாலம் முப்பாலின் உன்னதத்தை என்றும் மறக்காது காலம் மதம் இனம் கடந்த அற்புதப்படைப்பு வள்ளுவரின் காலமும் – வரலாறும் இன்னும் ஆராயப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுவரை இதற்கீடான ஒரு நீதிநூல் தோன்றவில்லை இனியும் எம்மொழியிலும் தோன்றப் போவதுமில்லை அனைத்து மக்களாலும் ஏற்கப்பட்ட நூல் அனைத்து நாட்டாரும் ரசிக்கும் நூல் போற்றாத மனிதர் இல்லை போற்றாதவர் மனிதரே இல்லை ஞாலம் உள்ளளவும் வள்ளுவம் […]
Read More
புத்தக உலகம் !
  • By Magazine
  • |
கே.பி. பத்மநாபன் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தையே      புறக்கணித்தல் புதுமையென ஆன தின்று; சித்தத்தைச் சீர் செய்து தெளிவாயாக்கிச்      சிந்தனையைக் கூராக்கும் புத்தகங்கள் எத்தனையோ இங்கிருக்க எல்லாம் நீக்கி      எல்லோரும் முகநூலில், வலைதளத்தில் நித்தமும் மூழ்கியதில் நீந்துகின்றார்;      நிசமான மகிழ்வினையே தொலைத்து விட்டார்! நித்தமொரு புத்தகத்தைக் கையில் ஏந்தி      நீளாற்றின் கரையோரச் சோலை தன்னில் சத்தமிலாத் தென்றலுடன் சரசமாடிச்      சாய்ந்தமரக் கிளைமீதில் படுத்தவாறு சித்தமெலாம் ஒன்றிணைய வாசிக்கின்ற      செவ்வியநல் […]
Read More