என்னெத்த சொல்ல…!

  • By Magazine
  • |

இரா.சிவானந்தம்

உருவாகிறதோ புதியதாக

ஒரு வேறுபட்ட உலகம்

லஞ்சம்- ஊழல் நிறைந்தாக..?

காண சகிக்கவில்லை

எங்கும் பரந்து நிகழும்

பாலியல் – வன்முறை கொடுமை!

மக்களிடமிருந்து விடைபெற்று

காணாமல் போய் கொண்டிருக்கிறது

பண்பாடும்- கலாச்சாரமும்

எங்கு தேடியும் காண முடியாமல்

உள்ளம் ஏங்கித் தவிக்கிறதே

மனிதநேயமும் – அன்பு தழுவலும்

பணமே பிரதானமாக

மாறிக் கொண்டிருக்கிறது

உறவிலும்- பாசத்திலும்

அவசரத்திற்கு உதவுவாரும்

ஆபத்தில் காப்பவரும்

காணா தேசமாய் மாறுதே

கூட்டுக்குடும்ப வாழ்க்கையும்

முதியோர்களைப் பேணுவதும்

குறைந்து – பெருகிவிட்டன முதியோர் இல்லங்கள்

தொலைக்காட்சியிலும்- கைபேசியிலும்

தொலைகிறது பலரது வாழ்க்கை

திருந்துமா என்பது கேள்விக்குறியே

தட்டிக் கேட்பாரில்லை

வழி நடத்துவாருமில்லை

திசை மாறி போகுது வாழ்க்கை

எவர் சொல்லி

எவர் கேட்பார்

என்னும் நிலை மாறுமோ?

விடிவு வரும்

நலம் திகழும்

என்றே நம்புவோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *