காலமும் கனியும்

  • By Magazine
  • |

குமரி எழிலன்

கண்ணெதிரே உள்ளகாட்சி

           காண்பதற்கு

பெண்மறைவில் மறைந்ததென்ன

           மாயம்

பெண்இடத்தைக் காலிசெய்த

            உடனே

தூண்மறைவில் சென்றதென்ன

            நியாயம்

ஒருகண்ணால் நீ பார்த்த

            போதும்

ஒளிர் மின்னல் என்மீது

             மோதும்

தளிர்கொடியாய் நெஞ்சத்தில்

              படரும்

குளிர் கொம்பாய் என்நெஞ்சு

               மாறும்..

பார்வையாலே நீ என்னைக்

                கொல்கிறாய்

பாவி என்னை பரிதவிக்க

                 வைக்கிறாய்..

நேராகப் பார்த்தால்தான்

                பெண்ணே

நிலவு முகம் தேய்ந்திடுமா

                 கண்ணே..

காராக பார்வைமழை

                  பொழியும்

காதலெனும் பயிர்செழித்து

                   மகிழும்

காலம்வரும் காத்திருப்போம்

                    கனியும்

கோலமதைக் காண்போமே

                    இனியும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *