வாழ்வியல்
  • By Magazine
  • |
– செல்வி ஞானதாஸ் குற்றவாளி கூண்டில் இருந்த குட்டப்பனை அடிக்க லத்தியுடன் உள்ளே நுழைந்தார் காவல் அதிகாரி பாலா. குட்டப்பன் நடுநடுங்க எதற்கோ ஏங்குபவராக பாலாவை பார்த்தார். கோபமாக அடிக்க ஓங்கிய லத்தியை கீழே வைத்துவிட்டு டேய் எதற்காக திரும்ப பார்த்தாய் என்று 80 வயதுக்கும் மதிப்பு கொடுக்காமல் கேட்டான் 40 வயது பாலா. குட்டப்பன் தவிக்கும் பார்வையில் பதிலளிக்க தொடங்கினார். நான் ஒரு காலத்தில் சந்தோஷமாக வாழ்ந்தவன். எனக்கு அழகிய அன்பான மனைவியும், நான்கு பிள்ளைகளும் […]
Read More
  • By Magazine
  • |
கதை பகிர்வு: குமரி எழிலன். ஒரு ஏழைக் கிழவர்…மூன்று மகன்கள் . உங்களுக்கு நான் விட்டுப்போகக்கூடிய பொருள் ஏதுமில்லை..ஆனால்.உடல் வலிவும்..மதிநுட்பமும்  தான் உங்கள் சொத்து என்பதை மறவாதீர்கள்.. எப்போதும் ஒன்றுசேர்ந்து வாழுங்க..பார்ப்பதை கூர்ந்து கவனியுங்க.. கிழவர் மரணித்தார்.. மகன்கள் மூவரும் வெளியூருக்கு பயணம் புறப்பட்டார்கள்..காடு, மலை கடந்து பாலைவனத்துக்கு. வந்துவிட்டனர்.. எதிரே ஒருவர் ஏதோ ஒரு  பொருளைத் தேடிக்கொண்டே வந்தார்.. நீங்கள் தேடுவது ஒரு ஒட்டகமா.. என்று கேட்டான் மூத்தவன்.. அவ்ஒட்டகத்தின் இடதுகண் பார்வை கிடையாதா.. இது […]
Read More
ஜானகி
  • By Magazine
  • |
அருள்மொழிவர்மன் வெந்தயக்கீரை, அரக்கீரை, மணத்தக்காளி கீரை, முடக்கத்தான் கீரை. கீரை வேணுமா தாயி? தடித்த பெண் குரல் மூடிய கதவையும் தாண்டி காதில் அறைந்தது. ஜானு கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள். வெளியே நின்றவள் ஆறடி உயரம். நல்ல கருப்பு. வெறும் நெற்றி. வெளுத்துப்போன கவரிங் செயின். பழைய புடவை. கீரைக்காரியும் காமாட்சியை அளந்தாள். என்ன தாயி நீதான் இந்த வீட்டுக்கு புதுசா குடிவந்திருக்கியா? கீரை வேணுமா. ஜானு கீரைக்கட்டுகளை புரட்டினாள். இது என்ன தங்கமா? பட்டா? […]
Read More
முதியோர் இல்லம்
  • By Magazine
  • |
– எம்.செந்தில்குமார் தினந்தோறும் மாலையில் மாலாவும், தினேஷூம் மெரினா கடற்கரையில் கடலை வாங்கி தின்று தங்களது அன்பை பரிமாறி கொள்வது வாடிக்கையாக இருந்தது. மாலா கடலை பாக்கெட்டுகளை அதிகமான அளவுக்கு வாங்கி வைத்துக் கொள்வாள். அதற்கு தினேஷ்தான் காசு கொடுக்க வேண்டும். அதனால் தினேஷ் மாலாவிடம் ஏன் இவ்வளவு கடலையை வாங்குகிறாய் என்று அடிக்கடி மாலாவிடம் கடிந்து கொள்வான். அதற்கு மாலா தினேஷிடம் கடலையை அதிகமாக சாப்பிட்டால் ஹார்மோன்ஸ்க்கு நல்லது என்பாள். மாலாவின் அன்பை தட்ட முடியாமல் […]
Read More
  • By Magazine
  • |
– செல்வி ஞானதாஸ் ஆனந்தி பெயருக்கு ஏற்றார்போல் ஆனந்தமானவள். அவளை சுற்றி இருப்பவர்களை ஆனந்தமாக வைத்திருக்க ஆசைப்படுபவள். இன்று அவள் கணவன், காலையில் கோபமாக பேசிவிட்டு வேலைக்கு சென்றார். அவர் வீட்டிற்கு திரும்பி வரும்போது வீட்டில் இருக்கக் கூடாது எங்காவது சென்றுவிட வேண்டும். கைப்பேசியோ, பணமோ எடுக்காமல் ஏதாவது அனாதை இல்லத்திற்கு செல்ல வேண்டும் அல்லது உயிரையே மாய்த்துக் கொள்ள வேண்டும். இனி உயிருடன் வாழவேக் கூடாது. நான் இவ்வளவு பாசமாகவும், உண்மையாகவும் விட்டுக் கொடுத்தலுடன் இருந்த […]
Read More
கறுத்த சண்டை
  • By Magazine
  • |
– கிருஷ்ணகோபால்  “இன்னாப் பாரு உனக்கு வெளிவுலகம் தெரியாது உனக்கு  என்னமாதிரி வெளிப்பழக்கம் இருந்திருந்தா  நல்லது கெட்டது  என்னான்னுத் தெரியும்…” அவன் வாசல் பக்கம் நின்றேப் பதில் சொன்னான். “எனக்கு வெளியுலகம் தெரியாதுங்கிறது உண்மதான். வெளியுலகம் தெரிஞ்சி ஒரு வேலையும் இருந்திச்சுனா கல்யாணம் கெட்டிட்ட ஒரு மாசத்திலேயே நீயும் வேண்டாம் உறவும் வேண்டாம்ணு போயிருப்பேன்.. எங்க அம்மா நோய்பிடிச்சவங்க மிளகு அரைக்க முடியாதுனு படிப்ப பாதியில அவள் சிவப்பு நிறத்தில் கட்டியிருந்த பூப்போட்ட புடவையை விலக்கி வெள்ளை […]
Read More
தலைஞாயிறு
  • By Magazine
  • |
அன்பாதவன் காலையில் எழும்போதே ‘ஜில்’லென்றிருந்தது. இரவு நல்லமழை பெய்து இருந்தது. தலைஞாயிறு கிராமத்தில் இதுதான் பிரச்சனை. எப்போது வரும் எப்படி வரும் என்று சொல்லாமல் கொள்ளாமல் சூப்பர் ஸ்டார் மாதிரி எப்போது வேண்டுமானாலும் பெய்து தீர்த்துவிடும் மழை…. அதனால் தானோ… ‘தமிழ்நாட்டின் சிரபுஞ்சி’….. பேரு பெத்த பேரு.                 தலைஞாயிறு என்றவுடன் நீங்கள் மாயவரம் அருகிலுள்ள தலைஞாயிறு என்று நினைத்து விடாதீர்கள். நாங்கள் இருப்பது திருத்துறைப்பூண்டி தலைஞாயிறு அஞ்சல்நிலைய முழுப்பெயர்தலை ஞாயிறு அக்ரஹாரம்.                 ரவியும் எழுந்துவிட்டான். […]
Read More
ஆதிக்கம்
  • By Magazine
  • |
கா கீ கூ கட்சியின் முதல் மாநில மாநாடு… அழைக்கிறார் காவலர் கோபால சமுத்திரம் அப்போது தான் வாங்கி வந்த சுவரொட்டியை தரையில் விரித்து வைத்து பார்த்துக் கொண்டிருந்தான் சிங்கராயன். சுவரொட்டியின் மேல் பகுதியில் வரிசையாய் சாதிக்காக பாடுபட்டவர்களின் புகைப்படங்கள்… கீழே இடப்பக்கம் பெரிதாய் சிரித்தபடி கோபால சமுத்திரம் படம்… வலப்பக்கம் கொஞ்சம் சிறியதாய் சிங்கராயனின் படம்.. கீழ் வரிசையில் சிறிது சிறிதாக நிறைய புகைப்படங்கள்… கைபேசியை எடுத்து அச்சக உரிமையாளரை அழைத்தான். “அண்ணே… சூப்பரா இருக்குண்ணே… […]
Read More
வ(ப)ண்டி
  • By Magazine
  • |
ஐம்பது   வயது மதிக்கத்தக்க ஒருவன் காப்பி கலர் பழைய  ஸ்கார்பியோ  நான்கு சக்கர வாகனத்தை  வேகமாக  ஓட்டி வந்து  நகரமயமாகிக் கொண்டிருக்கும் கிராமத்து சாலை   ஓரத்தில் சட்டென்று  நிப்பாட்டினான். வேகமாக வந்து திடீரென நிற்கும் போது சடன் ப்ரேக் பிடித்ததால்  கிரீச் ஒலி எழுந்தது.பிறரின் கவனத்தை கவரும் நோக்கத்தோடுதான்  அவ்வாறு வந்து நிப்பாட்டினான் என்பதோடு மட்டுமல்லாமல் ‘வண்டி ஓட்டுவதில் கில்லாடிதாம்டே’ என பிறர் பெருமைப்பட பேசுவதை காது குளிரக் கேட்க வேண்டும் என்றும் தான் அவ்வாறுச் செய்தான்..அவனுடைய […]
Read More
  • By Magazine
  • |
  – குமரி எழிலன்  …….நல்லா சமைக்கணும் செவப்பா இருக்கணும் … தரகர் தங்க சாமியிடம், தன் மகனுக்கு, பெண் பார்க்கச் சொன்ன, பாக்கியத்தம்மாள் விளக்கிக் கொண்டிருந்தாள் …. ஒரே வாரத்தில …. கொண்டாந்து ஏறக்கிருவோம் …. என்றார் தரகர் தங்கு என்ன எறக்கிருவொம்,  கிறுக்க்கிருவோ முங்கறீங்களே….. நா என்ன அண்டாகுண்டா வா கேட்டேன்… பொண்ணு தானுங்க கேட்டேன் சரீங்கம்மா….. நல்லா சமைக்கனும், செவப்பா இருக்கணும் … அவ்வளவு தானா ஏற்பாடு பண்ணிடுவோம். சாவியைப் போட்டு. தனது […]
Read More