வர்மம் எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் துதிக்கை வர்மம் சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான உள்ளங்கை வெள்ளை வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் துதிக்கை வர்மம் பற்றி அறிவோம். கைவெள்ளையின் மேல் கை மடங்கும் உள்பகுதியில், மணிக்கட்டின் நேர் எதிர்புறம் துதிக்கை வர்மம் அமைந்துள்ளது. துதிக்கைக்காலம், அகமணிபந்த வர்மம், கோழிக்கழுத்தகதாரை வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் இவ்வர்மம் வழங்கப்படுகிறது. “திகையதாம் வெள்ளையில் சேர்ந்தருகின் மத்திபத்தில் இகமதாம் வளைவினில் துதிக்கைவர்மம்”.                                                                                 – இலாடச்சூத்திரம் -300 […]
Read More
ஆயுள் நீடிப்பதற்காக  உண்ணும் உணவும் பருகும் பானங்களும்
  • By Magazine
  • |
  C. முருகன் உலக ஆய்வில் அதிகம் தேனீர் அருந்தும் நாடு இந்தியா. ஜப்பானிய மக்களும் இந்தியர்களை போன்று அதிக அளவில் தேனீர் பருகுகின்றனர். தேயிலை 1660-ல் ஆசிய நாட்டில் தோன்றியது . 19-ம் நூற்றாண்டில் தான் ஆப்பிரிக்கா நாடுகளில் பிரபலமாக தோன்றியது. 1880-ல் தான் அமெரிக்காவில் தோன்றியது. ஆனால் இதற்கெல்லாம் முன்பாகவே நம் நாட்டில் தோன்றியிருப்பதாக கூறப்படுகிறது.   இந்திய மக்கள் தேயிலை அதிகமாக தேனீராக குடிக்கின்றனர். இன்னும் பல தேனீர் வகைகள் உள்ளன. அவை                 […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-வின் 292-வது கருத்தாய்வு கூட்டமானது மரு.கமலக்கண்ணன் தலைமையில் திரு.கே.செல்வநாதன் ஆசான், மூலச்சல் மருத்துவர்.த. இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 04.10.2025 அன்று மதியம் சுமார் 2.00 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் மரு.கமலகண்ணன் மூட்டு வலிக்கான மருந்து, மலச்சிக்கல், வலிகளை கட்டுப்படுத்துவதற்கான சூரணம் செய்முறையை கூறினார். மேலும் தீராத தலைவலிக்கு பூச்சு மருந்தினையும் கூறினார். அடுத்ததாக திரு. செல்வநாதன் ஆசான் பசியின்மை, செரியாமை, உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல் ஆகியவற்றை குணமாக்கும் லேகியம் செய்முறையைக் […]
Read More
மாற்றுத் திறனாளிகள் குறித்த பார்வைகள்
  • By Magazine
  • |
A. தர்மராஜ் (த.ராசு) முந்தைய பாகத்தின் தொடர்ச்சி.. மாற்றுத் திறனாளிகளின் நலன் கருதி, இந்திய அரசின் மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுத் துறையின் கீழ் ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டுக்கான தேசீய நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனம் 2023 பிப்ரவரியில் திருப்போரூரை அடுத்த முட்டுக்காடு ஊராட்சியில் மாற்றுத் திறனாளிகளால் உருவாக்கப்பட்ட பொருட்களை பொது மக்களுக்கு காட்சிப்படுத்தும் தேசீய அளவிலான கண்காட்சி மற்றும் அவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ஒன்றினை நடத்தியது. இந்தக் கண்காட்சியில் 23 மாநிலங்களைச் […]
Read More
தீபாவளிக் கவிதைகள் – 02
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் நீண்ட பாலங்கள் பரவித் தெரிகின்ற நகரம் சாலைகளில் மின்னுகிறது பண்டிகையின் வெறுமை பத்தி விற்றுக் கொண்டிருந்த பாட்டி கம்பி மத்தாப்பு வித்துக்கொண்டிருக்கின்றாள் துவைத்த சுத்தமான உடையில் நூறு ருபாய் கேட்டு வயதான தம்பதியினர் வலித்த கால்கள் திரியும் தெருக் கடைகள் ஏழைகளைக் குறிபார்த்து கைநீட்டும் யாசகர்கள் வாழ்த்துகளையும் சிரிப்புகளையும் யாரும் யாருக்கும் கடத்தாத தெருக்கள் அங்கேதான் மோப்பம் பிடித்துக்கொண்டிருந்த வறுமையை நான் கண்டு கொண்டேன் அது சாபத்தை ஓதி எறிந்து விளையாடிக் கொண்டிருந்தது […]
Read More
நூல் மதிப்புரை
  • By Magazine
  • |
பொறியியல் கல்வியை முடித்த ஒரு இளைஞனை செண்டை மேளம் என்ற நாட்டார் கலை ஆட்டிப்படைக்கிறது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கொடை விழாவில் கண்ட சக்கர தீ வெட்டி தூக்கும் நிகழ்ச்சியில் எழுந்த செண்டை மேளத்தின் ஒலி, வெறும் தகர டப்பாவில் கொய்யா மரக்கம்பால் ஒத்திகை பார்க்கும் அளவுக்கு அவனுள் ஆழமாகப் பதிந்தது. இதுதான் சஜு என்ற கலைஞன் உருவான புள்ளி. “கொட்டடிக்காரன்” என்ற இந்த நூல், சஜுவின் 14 ஆண்டுகால செண்டை மேள அனுபவத்தை, ஒரு […]
Read More
ஊனமறு நல்லழகே…
  • By Magazine
  • |
ராஜன் ஆத்தியப்பன் கவிதைகள் வாசிக்கையில் சில நேரங்களில் மனம் நிலைத்து நின்று விடுவதுண்டு. எப்படி இந்த வரிகளை கவிஞர் கற்பனை செய்திருப்பார். இயல்பாகவே சொற்கள் தங்களைப் பிணைத்துக் கொண்டதா கவிஞன் ஏற்கெனவே திட்டமிட்டிருப்பானா எழுதுவதற்கு முன் அந்த வரிகள் எங்கிருந்தன? எழுதியபின் அந்த கவியின் மனநிலை எப்படியிருந்திருக்கும்.சற்று நேரம் புளகாங்கிதம் அடைந்திருக்கக்கூடுமா. (நிச்சயமாக அடைந்திருப்பார்)                 விலை மதிப்பற்ற அக்கணம் வாசிப்பவரின் முகவிரிவில் மீண்டும் மீண்டும் மீட்கப்படுகிறது என்பதுவே கவிதையின் வாழ்வாக இருக்கிறது.                 அப்படியானால் பாரதிக்கு […]
Read More
உலகின் புதிரான முதல் கொலையும் மிகப்பழமையான மனித இரத்தமும்
  • By Magazine
  • |
– முனைவர் மோகனா, பழனி அற்புதமான அறிவியல்..! அறிவியல் உலகில்,   அதிரடித் திருப்பு  முனையாக, உலகத்தைத் திருப்பிபோட்ட, பிரமிக்கச் செய்த ஒரு தகவல்  இப்போது   கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது . அது  என்ன   என்று  தெரிந்தால்  நீங்களெல்லாம்  ஆச்சரியத்தில்  மயக்கம்  போட்டு விடுவீர்கள் . உடலிலிருந்து  இரத்தம்  வெளியேறிய, கண நேரத்தில், காற்று அதன் மேல் பட்டவுடன், இரத்தம் இறுகிக்    கட்டியாகிவிடும். இதுதான் இரத்தத்தின் இயல்புத் தன்மையும்  கூட. அது நிகழவில்லை என்றால், சின்ன காயம் பட்டால் கூட அது […]
Read More
மின்னணுவியலின் கதை
  • By Magazine
  • |
 – காளீஸ்வர் நமது நவீன உலகின் அடித்தளமாக விளங்கும் மின்னணுவியல், ஒரே இரவில் தோன்றிய மாயாஜாலம் அல்ல. இது படிப்படியாக, பல கண்டுபிடிப்பாளர்களின் உழைப்பாலும், விடாமுயற்சியாலும் உருவான பிரம்மாண்ட அறிவியல் பயணம். எலெக்ட்ரான்கள் பற்றிய புரிதல் ஏற்பட்ட பின்னர்தான் ‘மின்னணுவியல்’ என்ற தனித் துறையே உருவானது.  எலெக்ட்ரானின் பிறப்பு மின்னணுவியலின் தொடக்க புள்ளியானது, ஜே.ஜே. தாம்சன் (J.J.Thomson) என்ற ஆங்கில இயற்பியலாளரின் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பில்தான் இருக்கிறது. 1897 ஆம் ஆண்டில், கேத்தோடு கதிர்க் குழாய்கள் (Cathode […]
Read More
  • By Magazine
  • |
– வழக்கறிஞர்   பி. விஜயகுமார் எப்படியெல்லாம் சட்டம் வேலை செய்யுது பாருங்க! கண்ணன் மற்றும் ராதா இருவரும் கணவன் மனைவியர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஆனால் கண்ணன் பெயரில் ஏகப்பட்ட சொத்துக்கள் இருந்தன. வயது ஆகிக் கொண்டே இருந்தது. தமது காலத்திற்குப் பிறகு தமது சொத்துக்களை யாருக்காவது சென்றடைய வேண்டும் எண்ணத்தில் கண்ணன் ஒரு உயில் எழுதினார். தனது இறப்பிற்குப் பிறகு மனைவி ராதா உயிரோடு இருந்தால் அவரது சொத்துக்கள் அனைத்தும் ராதாவிற்கு செல்ல வேண்டுமென்றும், ஒருவேளை […]
Read More