கடவுள்

கடவுள்

  • By Magazine
  • |

– இரா. அரிகரசுதன்

மௌனத்தை செல்பேசியில்

ஏற்றிவிட்டு

அமர்ந்திருந்தேன்,

கோவில் வளாகத்தின்

கல்லிருக்கையில்

என்னருகில்

ஒரு முதியவர்

வந்தமர்ந்தார்

நான் அவரைக் கவனிக்க வில்லை

என் மௌனத்தின்

கனம் ஏறிக்கொண்டே இருக்கின்றது

ஒரு பஞ்சுமூட்டை

நீர் குடிப்பதைப்போல

மௌனத்தின் துடி

கைகொள்ளாதது அல்லவா?

என்னவோ தோன்ற

அவரைப் பார்த்தேன்

கல் இருக்கையின் அந்த ஓரத்தில்

அமர்ந்திருந்த அவரோ

கொதித்துக் கொண்டிருக்கும்

இன்னொரு மௌனத்தின் வெக்கையாக

ஒளிர்ந்து கொண்டிருந்தார்

எனக்கு வியர்த்தது

அவரின் எடை

நகர்த்த முடியாததாக

இருந்தது

பாதி சாத்திக் கொண்டிருக்கும்

கோவிலின் வாசல் கதவைத்

தாண்டி நான் வெளியேறினேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *