• By Magazine
  • |
பிறரை வென்று வாழ்வதற்காய்ப்                 பித்தலாட்டம் செய்வதுவும் உறவை எல்லாம் மிதிப்பதுவும்                 உண்மை தன்னை மறைப்பதுவும் திறமையாக ஏய்ப்பதுவும்                 திருடிப் பொருளைச் சேர்ப்பதுவும் புறமே கூறி நடப்பதுவும்                 புகழைத் தருமென்(று) எண்ணாதே! அறமே இல்லாச் செய்கைகளால்                 ஆதிநாளில் கிடைப்பதெலாம் இறவாப் புகழென்றாகாதே;                 ஈசல் வாழ்வே அதற்குண்டு: மறந்தும் கேடு செய்யாமல்                 மனிதநேயத் தொண்டுடனே சிறந்த செயலைச் செய்வோர்க்கே                 சீரும் பேரும் நிலைத்திருக்கும்! நிறமும் இனமும் மதமுமெலாம்                 […]
Read More
இட்லி புராணம்
  • By Magazine
  • |
தமிழன் கண்டுபிடித்த தலையாய உணவு இதன் வரலாற்றுக்காலம் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி உண்பது காய்ந்த வயிற்றிற்கும் காய்ச்சல் காரருக்கும் உதவுவது மருத்துவர் மருந்துசீட்டில் எழுதாத மருந்து. எப்போது உண்ணலாம் எதனுடனும் உண்ணலாம் ஒரே மாவுதான் சுவை வேறு- தோசை- இட்லியாய் எந்த தமிழர் விருந்திலும் இதற்கு இடமுண்டு பலரின் பயணத்தில் உடன் வருவது துணியுடன் ஒட்டி அவிழ்ந்தாலும்- பிரிக்கப்படுவது மாலை வரை தாக்கு பிடிக்கும் மறுநாள் இட்லி உப்புமாவாக மலரும். […]
Read More
உலகைப் படிப்பவன்
  • By Magazine
  • |
எப்போதும் எதிலும் ஒழுங்கைக் கடைபிடிக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கு காணும் எல்லாவற்றிலும் நீளும் தாமதம் காணச் சகிக்காமல் தலைக்கேறும் கோபத்தில் தானாகவே கிடைத்து விடுகிறது சிடுமூஞ்சிப் பட்டம் தேவையின் உச்சத்தில் காலைப் பிடித்தும் காயை நகர்த்தியும் காரியம் சாதித்துவிடும் எதிர் வீட்டுக்காரருக்கு சாமர்த்தியசாலிப் பட்டம் பொருந்திப் போகிறது. எப்போதும் உதவியென யார் கேட்டாலும் ஓடிச்செய்யும் மாடி வீட்டு நண்பருக்கு எளிதில் கிடைக்கிறது இளிச்சவாயன் பட்டம் எப்படி வாழ்வதென்ற கேள்வியோடும் எதைப் படிப்பதென்ற ஏக்கத்தோடும் எனைச் சுற்றியுள்ளோரைக் கண்டு மனிதர்களின் […]
Read More
வ.உ.சி-க்கு உதவி செய்த கைதிகள்
  • By Magazine
  • |
வ.உ.சி-க்கு கோவை சிறைதான் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது..! அந்த ஜெயிலர் பெயர் மிஞ்ஜேல்… ரொம்ப மோசமானவன்.. கொடூரக்காரன்..! வ.உ.சி -யைஜெயிலுக்குள் கொண்டு செல்லும்போதே,  கை, கால்களை கட்டித் தெருவெல்லாம் இழுத்துச் சென்றுள்ளனர்..! வஉசிக்கு சிறைக்குள் தனிஅறை.. ஆனால் அதில் காற்று வசதி இல்லை.. சுத்தமும் சுகாதாரமும் இல்லை.. கால்களில் விலங்கு பூட்டப்பட்டுத்தான் வஉசியை அடைத்து வைத்தனர்..! சிறைக்குள் சென்றதுமே தலையை மொட்டை அடித்திருக்கிறார்கள்..  ஒரே ஒரு உடைதந்திருக்கிறார்கள்.. அதுகூட சாக்குப் பையால் தைத்தது. ஒருநாளைக்கு ஆயிரம் […]
Read More
சாலையில்  இறந்து கிடக்கும் பூனைக்கான இரங்கல் குறிப்பு
  • By Magazine
  • |
வண்டியில அடிபட்டு செத்துகிடக்குது பாருங்கப்பா, பாவம் அந்த பூனை. சாம்பல்கரிய நிறத்தில் உப்பிப்போய் கிடந்த அந்தப் பூனையின் உடலில் வண்டியின் தடயங்களைக் கண்டறிய இயலவில்லை. இதோட அப்பா பூனை எங்கப்பா இருக்கும்?… தேடிவரும்ல. நெஞ்சுக்கு முன்னிருந்தது அவனின் குரல்… அப்பாவை எவ்வளவு பெரிய உருவமாக எழுப்பிவிட்டான்! கடுகுக்குள்ளிருந்து எகிறும் குரலை குறுகத் தறித்தால் எங்கு கொண்டு பொத்தி வைப்பது. அது பெரிய பூனைதான் என்பதையும் தனித்தலையும் திறன் கொண்டது என்பதையும் நான் சொல்லவில்லை. அவ்வாறே அது கைவிடப்பட்டதாகவோ […]
Read More
கவிதை
  • By Magazine
  • |
கரிசனையோடு உச்சுகொட்டும் சிலரும் கண்டும் காணாமல் பலருமாயிருக்கும் ஒரு மத்தியான வெய்யிலின் உக்கிரத்தில் மாரெலும்பு தெந்நிய ரோட்டோரச் சிறுமி நெருப்பைக் கடப்பதுபோல ரோட்டைக் கடக்கிறாள் பட்டுப்போன மர இலைகளுக்கு நன்றியோடு நானெழுதிக்கொண்டிருக்கும் இந்த கவிதை என்னை அருவருப்பாய் பார்க்கிறது. – டாக்டர் கி. பாபு
Read More
தமிழ் நாடகத்தந்தை சங்கரதாசு சாமிகள்
  • By Magazine
  • |
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனால், ‘நாடக உலகின் இமயமலை’ என்று புகழப்பெற்ற சங்கரதாசுசாமிகள் தமிழ் நாடகத்தந்தை என்றும் போற்றப்படுகிறார். புதுநெறிஇவர் நலிந்து கிடந்த நாடகத் தமிழுக்கும்இசைதமிழுக்கும் புதுநெறி வகுத்தவர். கூத்துமரபில் இருந்து உருவாகி வளர்ந்த தமிழ் நாடகத்தை அரங்கமரபிற்கு ஏற்ப முறைகளை உருவாக்கியதோடு மட்டுமின்றி தெருக்கூத்துகளையும் புதுப்பித்தவர். தமிழ் நாடக வரலாற்றில் 50-க்கும் மேற்பட்ட நாடகங்களை இயற்றினார். ஏராளமான கலைஞர்களை உருவாக்கி நாடகப்பயிற்சி அளித்தார்.சங்கரதாசுசாமிகள், தூத்துக்குடியில் தமிழ்ப் புலமைமிக்க தாமோதரன்-பேச்சியம்மா தம்பதியருக்கு மகனாக 1867-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி […]
Read More
மக்கள் கவிஞர் தமிழ் ஒளி
  • By Magazine
  • |
_ பூ.வ. தமிழ்க்கனல் “வஞ்சகக் காலன் வருவதும் போவதும் வாழ்க்கை நியதியடா – எனில் செஞ்சொற் கவிதைகள் காலனை வென்று சிரிப்பது இயற்கையடா !” ஆம். இந்த வரிகளை எழுதிய காலனை வென்று வாழும் கவிதைகளை இயற்றிய மகத்தான மக்கள் கவிஞர் தமிழ் ஒளி பிறந்த நூறாண்டு விழா ஆண்டு இது.  பாரதிதாசனுக்கு 33 வயது இளையோன். கவிஞர் தமிழ் ஒளி பிறந்தது 1924 செப்டம்பர் 21 ஆம் தேதியாகும். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூர் […]
Read More
ஜேன் குக் ரைட் – வேதிசிகிச்சையின் அன்னை
  • By Magazine
  • |
– பேரா. மோகனா, பழனி நண்பர்களே, எல்லா உயிர்களையும் நோய் தாக்குவது இயல்பு.நோய் என்பது வைரஸ் அல்லது  பாக்டீரியா அல்லது   வளர்சிதை  மாற்றங்களால் ஏற்படலாம்.  இவைகளில் வைரஸ் நோய்கள் அனைத்தும் தொற்றும் நோய்களே. பாக்டீரியாவால் ஏற்படும் நோய்களில் சில தொற்றுபவை;  சில தொற்றாநோய்கள். தொற்றாநோய்களில்  மூன்று பெரிய நோய்கள்தான் முன்னணியில் நிற்கின்றன  1. சர்க்கரை நோய், 2. இதய நோய் 3. புற்றுநோய்.. புற்றுநோய் எப்படி புற்றுநோய் என்பது நோய் அல்ல. அது ஒரு வளர்சிதை மாற்றத்தில் […]
Read More