மாற்றுத் திறனாளிகள் குறித்த பார்வைகள்
  • By Magazine
  • |
A. தர்மராஜ் (த.ராசு) முந்தைய பாகத்தின் தொடர்ச்சி.. மாற்றுத் திறனாளிகளின் நலன் கருதி, இந்திய அரசின் மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுத் துறையின் கீழ் ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டுக்கான தேசீய நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனம் 2023 பிப்ரவரியில் திருப்போரூரை அடுத்த முட்டுக்காடு ஊராட்சியில் மாற்றுத் திறனாளிகளால் உருவாக்கப்பட்ட பொருட்களை பொது மக்களுக்கு காட்சிப்படுத்தும் தேசீய அளவிலான கண்காட்சி மற்றும் அவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ஒன்றினை நடத்தியது. இந்தக் கண்காட்சியில் 23 மாநிலங்களைச் […]
Read More
இருதயநோயும் வருமுன் காத்தலும்
  • By Magazine
  • |
பழனி அரங்கசாமி உலக வாழ்வில் செடியும், கொடியும், புல்லும், புதரும், மாடும், மனையும் ஒரு கட்டத்தில் வாடி வதங்கி மக்கி மடிந்து விடுகின்றன. மக்கள் கூட்டமும் பிறந்து வளர்ந்து முதிர்ந்து மடிவது தான். வாழ்வாவது மாயம் மண்ணாவது திண்ணம் என்பது எச்சரிக்கை. ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவதில்லை என்பது கசப்பான உண்மை. மரணத்தின் முன்னர் ஆண்டானுக்கும் அடிமைக்கும், ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஒரே நிலை தான். மரணம் என்பது அனைவர்க்கும் உறுதி என்றால் நாம் ஏன் […]
Read More
பழைய டிவியின் திரைகள்
  • By Magazine
  • |
– காளீஸ்வர் அப்பொழுதெல்லாம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இருந்ததில்லை! கண்ணைக் கவரும் எல்இடி விளக்குகள் இருந்ததில்லை! குண்டு பல்பு என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் டங்ஸ்டன் விளக்குகளும், கருப்பு வெள்ளை திரையிலான தொலைக்காட்சிப் பெட்டிகளுமே இருந்தன. 1990-களில் தான், தனியார் தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் இந்தியாவில் தொடங்கியது. அந்தப் பழைய நாட்களில், டிவி ஆன் செய்ததும் ஒரு சில வினாடிகள் கழித்துத் தான் படம் வரும். அது ஏன்? அந்த டிவிக்களின் உள்ளே என்ன நடந்தது? இப்போது பார்ப்போம். […]
Read More
நூல் மதிப்புரை
  • By Magazine
  • |
பொறியியல் கல்வியை முடித்த ஒரு இளைஞனை செண்டை மேளம் என்ற நாட்டார் கலை ஆட்டிப்படைக்கிறது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கொடை விழாவில் கண்ட சக்கர தீ வெட்டி தூக்கும் நிகழ்ச்சியில் எழுந்த செண்டை மேளத்தின் ஒலி, வெறும் தகர டப்பாவில் கொய்யா மரக்கம்பால் ஒத்திகை பார்க்கும் அளவுக்கு அவனுள் ஆழமாகப் பதிந்தது. இதுதான் சஜு என்ற கலைஞன் உருவான புள்ளி. “கொட்டடிக்காரன்” என்ற இந்த நூல், சஜுவின் 14 ஆண்டுகால செண்டை மேள அனுபவத்தை, ஒரு […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-வின் 291-வது கருத்தாய்வுக் கூட்டமானது, திரு.இராஜன் ஆசான் தலைமையில் மரு.கமலகண்ணன், திரு.கே.செல்வநாதன் ஆசான், மருத்துவர் த.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 06.09.2025 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் திரு.இராஜன் ஆசான் சர்க்கரை நோய், உடல் மெலிவு, மூலநோய் இவற்றுக்கு தேற்றான்கொட்டை லேகியம் செய்முறையை தெளிவாகக் கூறினா£. மரு.ஷேக் முகமது வாதவலிகள், மூட்டு வீக்கம் இவற்றுக்கு தைலம் செய்முறையையும் உடல் பருமன், உயர் கொழுப்பு, வாயுப்பிடிப்பு இவற்றை குணப்படுத்தும் […]
Read More
நேர்மையும் நீதிமன்றங்களும்
  • By Magazine
  • |
டாக்டர். பழனி அரங்கசாமி உலகம் முழுதும் மக்களாட்சியின் மகத்தான கட்டுமானத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள் நான்கு. நீதிமன்றங்கள், அரசுத்துறை, சட்டமன்றங்கள் என்பதோடு செய்தி ஊடகங்களும் அவற்றுள் ஒன்றாகும். நீதி என்பது இந்திய மண்ணில் குறிப்பாகத் தமிழகத்தில் காலம் காலமாக வேரூன்றி நிற்கும் அரியதோர் நெறிமுறையாகும். மன்னராட்சியோ, மக்களாட்சியோ எதுவாக இருப்பினும் ஆட்சிகள் மாறலாம். ஆளுவோர் மாறுவர். ஆனால் நேர்மை என்னும் ஆணிவேரில் முகிழ்த்து நிற்கும் நீதி என்பது சாகாமல் வாழும் ஒரு சமூகப்பண்பு. பசுவின் கன்றைக் தேர்க்காலில் […]
Read More
ஊனமறு நல்லழகே…
  • By Magazine
  • |
ராஜன் ஆத்தியப்பன் கவிதைகள் வாசிக்கையில் சில நேரங்களில் மனம் நிலைத்து நின்று விடுவதுண்டு. எப்படி இந்த வரிகளை கவிஞர் கற்பனை செய்திருப்பார். இயல்பாகவே சொற்கள் தங்களைப் பிணைத்துக் கொண்டதா கவிஞன் ஏற்கெனவே திட்டமிட்டிருப்பானா எழுதுவதற்கு முன் அந்த வரிகள் எங்கிருந்தன? எழுதியபின் அந்த கவியின் மனநிலை எப்படியிருந்திருக்கும்.சற்று நேரம் புளகாங்கிதம் அடைந்திருக்கக்கூடுமா. (நிச்சயமாக அடைந்திருப்பார்)                 விலை மதிப்பற்ற அக்கணம் வாசிப்பவரின் முகவிரிவில் மீண்டும் மீண்டும் மீட்கப்படுகிறது என்பதுவே கவிதையின் வாழ்வாக இருக்கிறது.                 அப்படியானால் பாரதிக்கு […]
Read More
உலகின் புதிரான முதல் கொலையும் மிகப்பழமையான மனித இரத்தமும்
  • By Magazine
  • |
– முனைவர் மோகனா, பழனி அற்புதமான அறிவியல்..! அறிவியல் உலகில்,   அதிரடித் திருப்பு  முனையாக, உலகத்தைத் திருப்பிபோட்ட, பிரமிக்கச் செய்த ஒரு தகவல்  இப்போது   கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது . அது  என்ன   என்று  தெரிந்தால்  நீங்களெல்லாம்  ஆச்சரியத்தில்  மயக்கம்  போட்டு விடுவீர்கள் . உடலிலிருந்து  இரத்தம்  வெளியேறிய, கண நேரத்தில், காற்று அதன் மேல் பட்டவுடன், இரத்தம் இறுகிக்    கட்டியாகிவிடும். இதுதான் இரத்தத்தின் இயல்புத் தன்மையும்  கூட. அது நிகழவில்லை என்றால், சின்ன காயம் பட்டால் கூட அது […]
Read More
போதைப் பழக்கத்தால்   மதியிழந்த மனிதர்கள்
  • By Magazine
  • |
C. முருகன் மக்கள் சமுதாயத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் எதிராக உலகளவில் எழுந்திருக்கும் பிரச்சனை போதைப்பழக்கம் ஆகும். வயது வித்தியாசம் இன்றி சமுதாயத்தில் போதைப்பழக்கம் வேரூன்றி உள்ளது என்பது கவலைக்குரியது ஆகும். போதைப்பழக்கத்தை தடுக்கும் விதமாக பல சட்டங்கள் முன் வைக்கப்பட்டாலும் அதை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. இப்பழக்கம் ஆண்கள் மட்டுமின்றி பெண்களிடத்தும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 26-ம் தேதி சர்வதேச போதை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் நோய்களும், தற்கொலைகளும் போதை […]
Read More
மாலிப்டினம் சுரங்கத்திட்டம்
  • By Magazine
  • |
பூ.வ.தமிழ்க்கனல் பேராபத்து ஒன்று தமிழ்நாட்டு மக்களை நோக்கி வந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநியில் மாலிப்டினம் சுரங்கம் அமைக்க ஒன்றியஅரசு திட்டமிட்டிருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல், அப்பகுதிமக்களைத் தூக்கமிழக்கச் செய்துள்ளது.                 திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 400 சதுரகிலோமீட்டர் (சுமார் 1 லட்சம் ஏக்கர்) பரப்பளவில் மாலிப்டினம் எனும் அரியவகைத் தனிமம் இருப்பதாகவும் அதனை வெட்டி எடுக்க ஒன்றியஅரசு முடிவு செய்திருப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மாலிப்டினம் தனிமம் எடுப்பதற்காக, பழநி வட்டத்திற்குட்பட்ட மேற்குத்தொடர்ச்சி மலை […]
Read More