கண்டங்கத்திரி
  • By Magazine
  • |
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், தரிசு நிலங்களிலும், புதர் காடுகளிலும், சாலை ஓரங்களிலும் இயல்பாகவே வளர்ந்து காணப்படும் ஒரு மூலிகை தான் கண்டங்கத்திரி. தாவரவியலில் சொலானம் ஸானக்தோ கார்ப்பம் (Solanum xantho carpum) என்னும் இம்மூலிகை சொலானேசியே (Solanaceae) என்னும் குடும்பத்தை  சேர்ந்தது. தரையுடன் படரும் முட்கள் அடர்ந்த ஒரு செடி. இதன் வேர், பூ, இலைகள், காய்கள், பழங்கள் அனைத்தும் மருத்துவத்துக்கு பயன்படும். அனைத்து விதமான நிலங்களிலும் நன்கு வளரும் தன்மை கொண்டது. முட்களுடன் மாற்றடுக்கில் அமைந்த […]
Read More
தடை செய்யப்பட்ட  சொட்டு மருந்து
  • By Magazine
  • |
கண் பார்வையை மேம்படுத்தும், படிப்பதற்காக மட்டும் அணியும் கண்ணாடி தேவைப்படாது என்ற விளம்பரத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட புதிய கண் சொட்டு மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு இந்தியாவின் மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி ரத்து செய்துள்ளது. இது ப்ரெஸ்பியோபியா போன்ற கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், படிக்கும்போது கண்ணாடி அணிவதைக் குறைக்கும், மிக அருகில் உள்ள பொருள்களை பார்க்கும்போது ஏற்படும் கண் மங்கலைத் தடுக்கும் என கூறப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக வழங்கப்பட்ட அனுமதியை ரத்து […]
Read More
‘வர்மம்’ எனும் மர்மக்கலை…!
  • By Magazine
  • |
சுளுக்கு வர்மம் சென்ற மாத இதழில் நாபியின் கீழ் உள்ள வர்மங்களில் ஒன்றான வித்துவர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான சுளுக்கு வர்மம் பற்றி அறிவோம். சுளுக்குவர்மம், முதுகில் நான்காவது பின்வாரி எல்லின் நடுவினைச் சார்ந்து சிப்பிக்குழியின் மேல் அமைந்துள்ளது. இவ்வர்மம் சுளுக்கி வர்மம், உடல் சுளுக்கி வர்மம், சிப்பிச்சுழுக்கு வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது.                 “நாமப்பா கைப்பூட்டு எல்லினு நடுவில் தானே  சேர்ந்ததொரு சுளுக்குவர்மம் என்று சொல்வார்”. […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
சட்டம் படிப்பதற்குரிய கல்வித்தகுதி கழிந்த மாதம் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் இவ்வாறு ஒரு தீர்ப்புவந்தது. மாணவர் ஒருவர் 10-ம் வகுப்பு வரை பள்ளிச்சென்று ரெகுலர் படிப்பை படித்து முடித்து விட்டு சூழ்நிலையின் காரணமாக மேலும் பள்ளிச் சென்று +2 படிக்க முடியவில்லை. இதனால் இவர் வீட்டிலிருந்தே தொலைதூரக்கல்வி மூலம் தமது +2 வை முடித்தார். இந்த தொலை தூரக்கல்வி சான்றுடன் ஆந்திராவில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் சட்டம் படிப்பிற்காக விண்ணப்பம் கொடுத்திருந்தார். கல்வி நிர்வாகமோ தொலைத்தூரக்கல்வி படித்தவர்களுக்கெல்லாம் […]
Read More
தமிழ் நாடகத்தந்தை சங்கரதாசு சாமிகள்
  • By Magazine
  • |
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனால், ‘நாடக உலகின் இமயமலை’ என்று புகழப்பெற்ற சங்கரதாசுசாமிகள் தமிழ் நாடகத்தந்தை என்றும் போற்றப்படுகிறார். புதுநெறிஇவர் நலிந்து கிடந்த நாடகத் தமிழுக்கும்இசைதமிழுக்கும் புதுநெறி வகுத்தவர். கூத்துமரபில் இருந்து உருவாகி வளர்ந்த தமிழ் நாடகத்தை அரங்கமரபிற்கு ஏற்ப முறைகளை உருவாக்கியதோடு மட்டுமின்றி தெருக்கூத்துகளையும் புதுப்பித்தவர். தமிழ் நாடக வரலாற்றில் 50-க்கும் மேற்பட்ட நாடகங்களை இயற்றினார். ஏராளமான கலைஞர்களை உருவாக்கி நாடகப்பயிற்சி அளித்தார்.சங்கரதாசுசாமிகள், தூத்துக்குடியில் தமிழ்ப் புலமைமிக்க தாமோதரன்-பேச்சியம்மா தம்பதியருக்கு மகனாக 1867-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி […]
Read More
மக்கள் கவிஞர் தமிழ் ஒளி
  • By Magazine
  • |
_ பூ.வ. தமிழ்க்கனல் “வஞ்சகக் காலன் வருவதும் போவதும் வாழ்க்கை நியதியடா – எனில் செஞ்சொற் கவிதைகள் காலனை வென்று சிரிப்பது இயற்கையடா !” ஆம். இந்த வரிகளை எழுதிய காலனை வென்று வாழும் கவிதைகளை இயற்றிய மகத்தான மக்கள் கவிஞர் தமிழ் ஒளி பிறந்த நூறாண்டு விழா ஆண்டு இது.  பாரதிதாசனுக்கு 33 வயது இளையோன். கவிஞர் தமிழ் ஒளி பிறந்தது 1924 செப்டம்பர் 21 ஆம் தேதியாகும். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூர் […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
வழக்கறிஞர்.பி.விஜயகுமார் போலீசாருக்கு நமது மொபைல் ஃபோனை சோதனையிடும் அதிகாரம் கிடையாது. (அரசியலமைப்புச்சட்டம் ஆர்ட்டிக்கிள்-21 Right to Life and personal Liberty). பொதுவாக ஓட்டுனர் உரிமம் இல்லாமலும் தலைக்கவசம் அணியாமலும் வாகனம் ஓட்டுபவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்கள் மீது அபராதம் விதிக்க முற்படுவர். சில வாகன ஓட்டிகளோ வீட்டில் உரிமம் இருக்கிறது, அதனால் அபராதம் கட்ட முடியாது என அடம் பிடிப்பர். இதனால் போலீசாருக்கும் வாகன ஓட்டிக்கும் வாய்தகராறு முற்றி இறுதியில் போலீசார் அவர் வண்டியை […]
Read More
ஜேன் குக் ரைட் – வேதிசிகிச்சையின் அன்னை
  • By Magazine
  • |
– பேரா. மோகனா, பழனி நண்பர்களே, எல்லா உயிர்களையும் நோய் தாக்குவது இயல்பு.நோய் என்பது வைரஸ் அல்லது  பாக்டீரியா அல்லது   வளர்சிதை  மாற்றங்களால் ஏற்படலாம்.  இவைகளில் வைரஸ் நோய்கள் அனைத்தும் தொற்றும் நோய்களே. பாக்டீரியாவால் ஏற்படும் நோய்களில் சில தொற்றுபவை;  சில தொற்றாநோய்கள். தொற்றாநோய்களில்  மூன்று பெரிய நோய்கள்தான் முன்னணியில் நிற்கின்றன  1. சர்க்கரை நோய், 2. இதய நோய் 3. புற்றுநோய்.. புற்றுநோய் எப்படி புற்றுநோய் என்பது நோய் அல்ல. அது ஒரு வளர்சிதை மாற்றத்தில் […]
Read More
புற்றுநோயைத் தடுக்கும் நிலக்கடலை…
  • By Magazine
  • |
– நமது மூலிகை மருத்துவர் “உள்ளுர் பண்டங்கள்” விலை போகாது என்பது போல, பாதாம் பருப்பிற்கு சற்றும் குறைவில்லாத அனைத்து சத்துப்பொருள்களும் நிலக்கடலையில் இருந்தும், அதிக விலை கொடுத்து வாங்கும் பாதாம் பருப்பையே மக்கள் கொண்டாடுகின்றனர். நிலக்கடலையின் பூர்வீகம் தென் அமெரிக்கா. சைனாவிற்கு அடுத்தபடியாக, இந்தியா, அமெரிக்காவில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, குஜராத்திலும் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. நிலக்கடலை விதை மூலம் பயிரிடலாம். இது 120 […]
Read More
கல்லீரல் கொழுப்புத் தேக்கம்
  • By Magazine
  • |
– கஸ்தூரிபா ஜாண்ஸன் தற்காலத்தில் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அதிகம் காணப்படுகின்றன. அதே போன்று கல்லீரலில் கொழுப்பு படிவதால் ஏற்படக் கூடிய  என்னும் (Fatty Liver) நோயும் பலருக்கு காணப்படுகிறது. இந்த கொழுப்பு கல்லீரல் நோய் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது நமது ஆரோக்கியத்துக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆரம்பக்கட்டத்தில் இந்த நோயை குணப்படுத்துவதும் எளிது. ஆனால் இது தீவிரமடையும் போது தான் நாம் மருத்துவரை சந்திக்கிறோம். சில சமயங்களில் […]
Read More