சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
ஓடி ஒளியும் எதிர்தரப்பினருக்கு சம்மன் வழங்கும் முறை Civil (உரிமையியல்) வழக்குகளில் பிரதிவாதிகள் வாதியின் சம்மனை வாங்காமல் டிமிக்கி கொடுத்துக் கொண்டே இருப்பர். சம்மன் வாங்கினால் நீதிமன்ற ஆணைக்கு கட்டுப்பட வேண்டியிருக்கும். ஆதலால் சம்மன் வாங்காமல் ஓடி ஒழிந்து கொண்டிருப்பர். வாதிக்கோ, பிரதிவாதிக்கு சம்மன் கொடுத்தால் மட்டுமே அவர் இடத்தில் பிரதிவாதி கட்டுமானம் செய்வதை தடை செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கும். சம்மன் பிரதிக்கு வழங்கப்படாததால் வாதி மிகவும் மன உளைச்சலில் இருப்பார். இப்பேர்பட்ட சூழ்நிலைகள் […]
Read More
‘வர்மம்’எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
கைக்கிட்டிக்காலம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான தும்மிக்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் கைக்கிட்டிக்காலம் பற்றி அறிவோம். “பார் சிப்பி கீழ்வாறின் பக்க சார்வில் பரிவான கைக்கிட்டிக்காலம்”.                                 – வர்ம குருநூல் “……………….. தும்பிக்காலம் நின்றதன் நாலிறையின் கீழ் கைக்கிட்டிக்காலம்”.                                 – வர்ம கடிகார நரம்புச்சூத்திரம் மேலும், கொள்ளும் கைகெட்டிக்காலம் கொண்டால்                 குருவருளால் குறியதினை கூறக்கேளு            விள்ளும் வாய்பிளந்து நீர் பாயுமப்பா                 வெகுவான […]
Read More
குமரிமாவட்ட பாரம்பரிய  மருத்துவம்’- ஒரு பார்வை
  • By Magazine
  • |
இந்தியாவின் தென் எல்லையாக விளங்கும் கன்னியாகுமரி பல கலைகள் சிறப்புற்று காணப்படும் மாவட்டமாகும். இங்கு மன்னர்கள் ஆட்சி செலுத்தி உள்ளனர். நீர்வளம், நிலவளம் மட்டுமின்றி தொன்று தொட்டே கல்வி வளமும், கலை வளமும் மிக்க பகுதியாகவே விளங்கிய இம்மாவட்டம், மருத்துவகலையில் ஓர் ஒப்பற்ற இடத்தைப் பெற்றுள்ளது. தொன்றுதொட்டே குருமுறை கல்வியாக மருத்துவம், களரி போன்ற கலைகள் கற்பிக்கப்பட்டன. கி.பி. 4-ஆம் நூற்றாண்டு முதல் 7- ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்களால் இங்கு […]
Read More
உயிர்கள் தட்டான்களாக பறந்து திரியும் மய்யழிக்கரை
  • By Magazine
  • |
பயணக்கட்டுரை – கிருஷ்ணகோபால் கேரளாவில் பல இடங்களுக்குச் சென்றிருக்கிறோம் ஆனால் இது வரைக்கும்  வடகேரளத்திற்கு சென்றதில்லையே என நண்பர்கள் மலபார்  சுற்றுலாவுக்கு திட்டமிட்டப் போது  நான்  மகிழ்ந்தேன். முப்பது வருடத்திற்குப் பிறகு கோழிக்கோடு மண்ணில் கால்பதிக்கப் போகிறோம் என்ற மிதப்பு என்னை மகிழச் செய்தது. பத்தாம் வகுப்பு  ஆண்டு இறுதித் தேர்வு முடிந்து  விடுமுறைகாலத்தில் விளையாடும் போது எனக்கும் தம்பிக்கும்   ஓயாமல் சண்டை நடப்பதை சமாளிக்க முடியாத அம்மா  என் உறவினர் ஒருவரோடு  கொத்தன், கையாள் வேலைக்கு  […]
Read More
தை பிறந்தால் வழிபிறக்கும்
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் “மாடு கட்டிப் போரடித்தால் மாளாது என்று சொல்லி, ஆனை கட்டி போரடித்த மருத நிலம் எங்க நிலம்…” என்றப் பாடலை தமிழ்மண்ணில் எங்கு வில்லிசை நடந்தாலும் நம்மால் கேட்காமல் இருக்க முடியாது. பல்லாயிரம் ஆண்டுகளாக விவசாயத்தில் தலை நிமிர்ந்து நின்றது நம்நாடு. உணவில் நாவுக்கு சுவை பார்த்து உண்டு மகிழ்ந்தவன் தமிழன் என்பது உலகறிந்த உண்மை. ஏனைய நாட்டாரெல்லாம் தம் நாட்டில் விளைந்த உணவுப் பொருட்களைப் பச்சையாகவும், சுட்டும், வெறுமையாய் அவித்தும் உண்டு […]
Read More
வர்மம்’எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான வாறிளகி வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் தும்மிக்காலம் பற்றி அறிவோம். “ஈடழியும் பித்துக்காய் அதன் பின்பக்கம் தும்மி என்ற வர்மம்”.                                                                                – வர்ம குருநூல் “வளமான வன்னெல்லு ஒட்டையின் கீழ் தும்மிக்காலம்”. – வர்ம அகஸ்தியசாரி “பண்பான தும்மியதன் காலம் கேள் தொடரான பித்துக்காய் பிறமேதானே”.                                                                                                – கால வர்மநூல் மேலும், போமப்பா காறயஸ்தி பூணெல்லின் கீழ்                                 […]
Read More
புத்தாண்டு  வாழ்த்துக்கள்!
  • By Magazine
  • |
உலகெலாம் ஏத்தும் இயற்கை அன்னையின் இதயத்தில் வாழும் அனைத்துயிரிகளும் இனிமையுற்று, இன்புற்று வாழ புதியதென்றலின் புத்தாண்டு வாழ்த்துக்கள்…                 ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி ஏழைப்பணக்காரன் என்றாகியிருக்கின்றது இவ்வுலகம்.  உள்ளார் இல்லாரை உருக்குலைக்கும் இன்னல் நிலை இந்நிலத்தில் இல்லாமல் ஆகட்டும்.                 சாதி-மதம், இனம்-நிறம், நாடு-தேசம் எனப் பகுத்துப் பேசும் பகுத்தறிவில்லா பண்புகள் ஒழிந்து எல்லோருக்கும் எல்லாம் எனும் மனிதநேயம் மலரட்டும்…                 அறியாமைச் சுழிக்குள்ளே அறிவுக்கொவ்வா கதை சொல்லி மக்களை மடையராக்கும் மகத்தான பேதைமை ஒழியட்டும்…                 சொல்லும் […]
Read More
தமிழ்நாட்டுக்காக உயிர் நீத்த சங்கரலிங்கனார்
  • By Magazine
  • |
பூ.வ. தமிழ்க்கனல் அக்டோபர் 13-ஆம் தேதி தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாள். உலகத்திலேயே கொள்கைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த மாமனிதர் சங்கரலிங்கனார். சிறைத்தண்டனை                 சங்கரலிங்கனார் விருதுநகர் மாவட்டம் மண்மலைமேடு என்ற ஊரில் 1895- ஆம் ஆண்டு ஜனவரி 26- ஆம் தேதி பிறந்தார். தந்தை பெயர் கருப்பசாமி. தாயார் பெயர் வள்ளியம்மை. விருதுநகரில் காமராசர் படித்த பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுப் பல முறை சிறைத்தண்டனை பெற்றார்.                 […]
Read More
குலியானாவிடமிருந்து ஒரு கடிதம்
  • By Magazine
  • |
ஹிந்தி மூலம்: அம்ருதா ப்ரீதம் தமிழில்: நாணற்காடன் கிளைகளெங்கும் இலைகள் நிரம்பியிருந்தன. ஆனால் அவற்றில் பூக்கள் எதுவுமில்லை. நான் தினமும் இலைகளின் முகத்தைப் பார்ப்பேன். சம்பா எப்போது பூக்கும் என்று யோசிப்பேன். ‘எவ்வளவு பெரிய பூந்தொட்டியில் வைத்தாலும் சம்பா பூக்காது. இந்தச் செடியின் வேர்களுக்கு நிலத்து மண் தான் தேவை’ என்று ஒரு தோட்டக்காரர் என்னிடம் சொல்லியிருக்கிறார். நான் பூந்தொட்டியிலிருந்து செடியை எடுத்து நிலத்தில் நட்டுக்கொண்டிருந்தபோது ஒரு பெண் என்னைச் சந்திக்க வந்தாள். “நான் உன்னைப் பல […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-வின் 282-வது கருத்தாய்வுக் கூட்டமானது, திரு.அசரி ஆசான் தலைமையில் மரு.கமலகண்ணன்,  மூலச்சல் மருத்துவர் த. இராஜேந்திரன், திரு.இராஜன் ஆசான், திரு.கே.செல்வநாதன் ஆசான் ஆகியோர் முன்னிலையில் 07.12.2024 அன்று மதியம் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில், மரு.கமலக்கண்ணன் வாயுப்பிரச்சனை குணமாவதற்கான மருந்து செய்முறையை கூறினார். அடுத்ததாக, திரு.இராஜன் ஆசான் மலச்சிக்கலுக்கு நிலவாகை சூரணம் செய்முறையை கூறினார். அடுத்ததாக, திரு.அசரி ஆசான் இரத்த மேக கசாயம் செய்முறையையும், மேகம், குடல்சுரம் இவற்றுக்கு சிப்பிநெய் […]
Read More