வர்ம அடிமுறை வரலாற்றின் வாழும் சாட்சி  கிள்ளியூர் கே.ஆர்.ராஜ்குமார் ஆசானுடன் ஒரு நேர்காணல்!
  • By Magazine
  • |
குமரி மண்ணின் வீரக்கலையான வர்மம் மற்றும் அடிமுறைத் துறையில் சுமார் 70 ஆண்டுகால அனுபவம் கொண்டவர் 82 வயது நிறைந்த தமிழ் வித்வான் கே.ஆர். ராஜ்குமார் ஆசான் அவர்கள். இரண்டு முதுகலை (M.A) பட்டங்கள் பெற்ற கல்வியாளரான இவர், தனது பாரம்பரியக் கலை அறிவைப் பகிர்ந்து கொள்கிறார். கேள்வி: ஆசான் அவர்களே, கல்விப்புலத்தில் இவ்வளவு பட்டங்களைப் பெற்ற உங்களுக்கு, இந்த வர்ம மற்றும் தற்காப்புக் கலைகள் மீது ஆர்வம் ஏற்பட்டது எப்படி? பதில்: எனது குடும்பமே ஒரு […]
Read More
உதவும் உள்ளங்கள்
  • By Magazine
  • |
 திருமதி .செல்வி ஞானதாஸ் “கடவுளே! என் பிள்ளைக்கு நல்லபடியா ஒரு கல்யாணம் முடிஞ்சிட்டா, என் கடமை முடிஞ்சிரும். அவனைக் கஷ்டப்பட்டு படிக்க வச்சு ஆளாக்கியாச்சு. அவனுக்கு ஒரு துணை கிடைச்சா போதும்,” எனச் சொர்ணம்மாள் மனமுருகி வேண்டிக் கொண்டிருந்தார். அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த சோமு சிரித்துக் கொண்டே வந்தான். “என்னம்மா… காலையிலேயே ஒரே வேண்டுதலா இருக்கு? இன்னைக்குப் பார்க்கப்போற பொண்ணையும் வேண்டாம்னு சொல்லிருவேன்னு பயமா?” என்றான். “ஆமாப்பா… அந்தப் பொண்ணு பாக்கியாவுக்குப் படிப்பு மட்டும் இருந்தா போதும்னு […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA–297 வது கருத்தாய்வு கூட்டமானது 07.03.2026 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் திரு. அருள்தாஸ் ஆசான் தலைமையில் திரு.இராஜன் ஆசான், மரு.கமலக்கண்ணன், மருத்துவர்.த.இராஜேந்திரன், திரு.ஜாண் ஆகியோர் முன்னிலையில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் திரு.இராஜன் ஆசான் உடல் உஷ்ணம், நரம்பு வலிமை இவற்றுக்கு அமிர்த சஞ்சீவி சூரணம் செய்முறையைக் கூறினார். திரு. அருள்தாஸ் ஆசான் பாசாண விசம் முறிக்கும் மருந்து செய்முறையைக் கூறினார். மேலும் ஒடிவுமுறிவு, புண், தீபட்டபுண், அடிபட்ட காயம் […]
Read More
  • By Magazine
  • |
வர்ம அறிவியல் மாமேதை மூலச்சல் Dr.T. இராஜேந்திரன் சென்ற மாத இதழின் தொடர்ச்சி… பேரண்ட (பிரபஞ்சம்) தோற்றம் பற்றிய அறிவியல் ஆய்வுகள் பேரண்டத் தோற்றம் பற்றி சமயம் சார்ந்தும், அறிவியல் சார்ந்தும் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அவை, தத்தம் கொள்கைகளுக்கேற்ப நம்பிக்கைக்குரியதாய் காணப்படுகின்றன. 1. கடவுள் எனும் ஓர் ஒப்பற்ற ஆற்றல் படைத்தவர் நேரடியாகவே பிரபஞ்சத்தையும் அதன் உயிரினங்களையும் படைத்தார். 2. சூனியத்திலிருந்து பிரபஞ்சம் உருவாகியது. 3. இப்பிரபஞ்சம் கண்ணுக்குப் புலப்படாத பரமாணுக்களின் சேர்க்கையில் உருவானது என்பன […]
Read More
ஃபாஸ்ட்ஃபுட்  –Fast Food
  • By Magazine
  • |
– கஸ்தூரிபா    ஜாண்ஸன் ஃபாஸ்ட்ஃபுட் உணவில் செயற்கை நிறங்களை அதிகம் கலக்கின்றனர். சான்ட்விச், சிக்கன் 65, பஜ்ஜி, வடை, பிரியாணி, ஃபிரைடு ரைஸ் போன்ற பல்வேறு உணவுகள் துரித உணவுகள் என்ற பெயரில் பல்வேறு வகையான நிறப்பொடிகளுடன் அலங்காரமாக அங்காடிகளில் அரங்கேறுகின்றன. நிறத்துக்காகவும், ருசிக்காகவும், மணத்துக்காகவும் சிறுவர் முதல் பெரியோர் வரை அவற்றை உண்டு ருசிக்கின்றனர். அவற்றில் பல்வேறு வகையான இராசாயன மருந்துகள் சேர்க்கப்படுகின்றன. அதனால் குடல் புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு, மரபணுக்கோளாறு, உடல் பருமன் போன்ற […]
Read More
கூடாரத்தில் கசிந்த குளம்படி
  • By Magazine
  • |
அகிலா கிருஷ்ணமூர்த்தி மருத்துவமனையின் நுழைவு வாயில். வெள்ளை வண்ணம் பூசிய பழங்காலத்துக் கட்டிடமாக இருந்தது. அதற்கு நூற்றாண்டுகால வரலாறு இருப்பதாகச் சொன்னார்கள். ஏதோ ஒரு வகையில் அங்கே பணிபுரிவதற்கான வாய்ப்பு கிடைப்பது அரிதாக இருந்தது. அதன் வலப்பக்கத்தில் சிறிது தூரத்தில் பெரிய வேப்ப மரம். அதைக்கடந்து தான் பிரசவ வார்டுக்கு செல்ல வேண்டும். எந்தக் காலமும் அந்த மரத்தை தனித்துப் பார்த்ததே இல்லை. பறவைகளோடு சேர்த்து பிரசவத்திற்கு வந்தவர்கள், அவர்களுக்காகக் காத்திருப்பவர்கள், உணவு, உறைவிடம் என இல்லாதவர்களுக்கு […]
Read More
வர்மம் எனும்  மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் கூட்டுக்காலம் சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான கோச்சக்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் கூட்டுக்காலம் பற்றி அறிவோம். கையின் அக்குள் பகுதியில் கூட்டுக்காலம் அமைந்துள்ளது. இவ்வர்மம்  கைக்கூட்டுக்காலம், கரக்கூட்டுக்காலம், கமுக்குழி வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. இந்த கூட்டுக்காலத்தில் அத்திப்பதை அத்திக்காந்தாரி நரம்புகளும், அகச்சூத்திர புறச்சூத்திர நரம்புகளும் கூட்டாக பின்னி செயல்படுவதால் தான் இப்பெயர் ஏற்பட்டது. இந்த தலமும் சார்பும் பல்வேறு வர்ம பிணிகளை தீர்க்கும் வல்லமை […]
Read More
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் “கைநிறையச் சம்பளம் வருது.. ஆனா நிம்மதி?” – 24 வயது இளம்பெண் ஒருவரின் இந்தக் கதறல்,  சமூக ஊடகங்களின் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.  இக்குரல் நடுத்தர மக்களின் கதவுகளையும் தட்டியிருக்கிறது. ஏசி அறைகள், வார இறுதி விடுமுறைகள், பளபளக்கும் அடையாள அட்டைகள் என வெளியிலிருந்து பார்க்க மினுக்கும் கார்ப்பரேட் வாழ்க்கை, உள்ளே ஒரு தலைமுறையின் ஆன்மாவையே சிதைத்துக் கொண்டிருக்கும் அச்சம் இப்போது மேலெழுந்து நிற்கிறது. வாழ்வின் நோக்கமும் வெற்றி எனும் சொல்லின் பொருளும் […]
Read More
  • By Magazine
  • |
மகேஷ் பாலகிருஷ்ணன் ஊருக்கு ஒதுக்குப்புறமான அந்தப் பாதையில் சைக்கிள் மிதிக்கும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. சைக்கிள் கேரியரில் அமர்ந்திருந்த வள்ளியம்மாவைப் பார்த்துக் கோபமாகத் திரும்பினார் தந்தை. “உன்னைக் கொண்டு போய் ஸ்கூல்ல விடுறதுக்குள்ள எனக்கு உயிரே போகுது!” என்றார் எரிச்சலுடன். வள்ளியம்மா பதில் சொல்லவில்லை. அமைதியாகச் சாலையைப் பார்த்துக் கொண்டு வந்தாள். அதுதான் அவளது முதல் ஊமைப் பயணம். வீட்டிற்கு வந்ததும் பசி வயிற்றைக் கிள்ளியது. அடுப்பங்கரையில் அப்பத்தா தம்பிக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தாள். வள்ளியம்மா […]
Read More
  • By Magazine
  • |
– காளீஸ்வர் சமீபத்திய உலக அரசியல் சூழல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு வழி வகுத்திருக்கிறது. நிலைமை சீராகுமா எனும் சந்தேகங்கள் ஒருபுறம் இருக்கும் இடத்தில், எங்கே எரிபொருள் கிடைக்காது போய்விடுமோ என்கிற அச்சத்தில்! எரிபொருள் நிலையங்களில் மக்கள் செய்யும் விஷ பரீட்சைகளை பார்க்கும்போது நெஞ்சம் பதைபதைக்கிறது. குடிதண்ணீர் கேன்கள், குடங்கள் என கிடைக்கும் பொருட்களில் எல்லாம் பெட்ரோலை வாங்கி மக்கள் நிரப்பி கொள்வதற்காக இணையம் முழுவதும் பல காணொளிகள் பரவுகிறது. […]
Read More