• By Magazine
  • |
S. அபுல் கலாம் ஆசாத். நேற்று திங்கள் நகர் சென்றபோது 150 ரூபாய்க்கு ஒரு சிறிய  வேளா மீன் துண்டு வாங்கி வந்தேன். எப்படியும் நமக்கு மீன் குழம்பு இருந்தால்தான் நோன்பு காலங்களில் சகருக்கு சோறு உள்ளே கொஞ்சம் அதிகமாக செல்லும். வாங்கி வந்து நானே தோலுரித்து சிறு துண்டுகளாக வெட்டி அதனை கழுவி பொரி ப்பதற்கானதை  உப்பு, மிளகு, மஞ்சள், மற்றும் பெருஞ்சீரகம்  பொடி சேர்த்து கலந்து வைத்தேன், குழம்பு வைப்பதற்கான மீன் துண்டுகளை தனியாக […]
Read More
கன்னியாகுமரியில் தமிழ்நாடு ஓய்வூதியப் பத்திரிகையாளர்கள் நலச்சங்க 4-ஆம் ஆண்டு விழா
  • By Magazine
  • |
டாக்டர் த. இராஜேந்திரன் அவர்கள் சிறப்பு மலரைப் பெற்றுக்கொண்டார் சமூகத்தின் கண்களாகச் செயல்படும் பத்திரிகையாளர்கள், தங்களின் பணி ஓய்வுக்காலத்திலும் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் நிறுவப்பட்ட ‘தமிழ்நாடு ஓய்வூதியப் பத்திரிகையாளர்கள் நலச்சங்கத்தின்’ நான்காம் ஆண்டு தொடக்க விழா மற்றும் சிறப்பு மலர் வெளியீட்டு விழா, உலகப்புகழ் பெற்ற கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் பிப்ரவரி 24-ஆம் தேதி  நடைபெற்றது. இவ்விழாவிற்குச் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு. பி.ஆர். சுப்பிரமணி அவர்கள் தலைமை தாங்கி, சங்கத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து உரையாற்றினார். […]
Read More
  • By Magazine
  • |
பூ.வ.தமிழ்க்கனல் இந்தியவரைபடத்தில் ஒருபுள்ளிபோலத் தென்கோடியில்தீவாகக் காட்சியளிக்கும் குட்டிநாடு, இலங்கை. இதன் மொத்தப் பரப்பளவு 62,610.2 சதுரகிலோமீட்டர் மட்டுமே. தமிழ்நாட்டின் பரப்பளவு 1,30,058 சதுரகிலோமீட்டர் ஆகும். தமிழ்நாட்டில் பாதிதான் இலங்கை. இக்குட்டி நாட்டில்தான் ஈழத் தமிழர்களுக்கு எதிரான சிக்கல்கள் காலந்தோறும் வரிசை கட்டி நிற்கின்றன. ஈழத் தமிழர்களை அரசியல் சார்ந்தும் ஆயுதவழியில் உளவியல் தொல்லைகள் கொடுத்தும் ஒடுக்கும் பணியைச் சிங்களப் பேரினவாத அரசுகள் காலந்தோறும் செய்து வருகின்றன. அந்த வகையில், அண்மைக் காலமாக அரசமைப்புச் சட்டத் திருத்தங்களின் மூலம் […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
– வழக்கறிஞர் பி. விஜயகுமார் முஸ்லீம் கணவரது இரண்டாவது திருமணம் பதிவு செய்யப்படமாட்டாது! முஸ்லீம் மத வழக்கப்படி கணவர் நான்கு மனைவி வரை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற வரைமுறை உள்ளது. இருப்பினும் தற்போது கேரளாவில் நடந்த ஒரு சம்பவத்தில் கணவர் இரண்டாவது திருமணத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிய செல்லும் போது சார்பதிவாளர் அலுவலகம் மறுத்து விட்டது. முதல் மனைவியை இங்கு கூட்டி வந்து அவர் ஒப்புதல் தந்தால் மட்டுமே இரண்டாவது திருமணம் பதிவு செய்யப்படும் என கணவரையும், […]
Read More
குவாண்டம் தொழில்நுட்பமும் கணினிகளும்
  • By Magazine
  • |
– காளீஸ்வர் உலகம் தட்டையானது, பூமியை சூரியன் சுற்றி வருகிறது, நிலவு பூமியை விட பெரிதானது. நட்சத்திரங்கள் நிலையாக இருக்கக்கூடியவை. ஐந்து கிரகங்கள் மட்டுமே இருக்கின்றன என்பன போன்ற பல்வேறு விதமான அனுமானங்கள், அறிவியல் கருத்துக்கள் தோன்றுவதற்கு முன்பு உலகம் எங்கிலும் நிலைத்து இருந்தது. கலிலியோ தொலைநோக்கியை கண்டறிந்ததோடு, பல்வேறு விதமான பௌதிகவியல் கருத்துக்களையும் முன்வைத்தார். அவருடைய காலத்தில் முற்போக்கான பல அறிவியல் கருத்துக்களை முன் வைத்ததற்காகவே பல இன்னல்களையும் அவர் சந்தித்திருக்கிறார். இதெல்லாம் நாம் வரலாற்றின் […]
Read More
விழுதுகள்
  • By Magazine
  • |
– கை. செல்லத்தங்கம் ஆட்டோவை விட்டிறங்கி கேட்டைத்திறந்து உள்ளே வந்தனர் ராமகிருஷ்ணனும் பத்மாவும். தோட்டம் முழுதும் இலைகளும், புல்லும் வளர்ந்திருந்தன. ஒரு மாசம் ஆச்சு வீட்டை விட்டு போய் வேற எப்படி இருக்கும் என நினைத்தப்படியே கதவை திறந்தாள். அடுத்த வீட்டில் இருந்து அக்கா வந்தீட்டீங்களா என்ற குரல் கேட்டது ஆமா மீனா என குரல் கொடுத்தபடி உள்ளே வந்து உட்கார்ந்தாள். பயணப்பைகளை உள்ளே எடுத்து வைத்தார் ராமகிருஷ்ணன். பைக் சாவியைக் கையில் எடுத்தபடி பத்மா முதலில் […]
Read More
அறிவு சமூகத்திற்காக ஓயாது உழைக்கும்  விக்கிபீடியா
  • By Magazine
  • |
– சே. சுபாஷினி இன்று நாம் ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் உடனடியாக இணையததில் தேடுகின்றோம். சுமார் 25 வருடங்களுக்கு முன்னால் நூலகங்கள்தோறும் சென்றால்தான் நம்மால் தகவல்களை அறிந்து கொள்ள முடியும். ஆனால் கணினியுகம் இணையத்தை அறிமுகப்படுத்தியப்பிறகு. விக்கிபீடியா எனும் மந்திரக்காரன் அறிவார்ந்த தேடலுக்கான நேரத்தை நம் உள்ளங்கைகளில் கொடுத்துவிட்டான். அந்தவகையில் மாணவர் முதல் பெரியவர்வரை அன்றாட வாழ்வில் தினமும் விக்கிபீடியாவை பயன்படுத்தாமல் யாரும் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவு விக்கிபீடியா மக்கள் வாழ்வில் […]
Read More
காலவெட்டி
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன், வேறுபடுத்தும் காலவெட்டியைக் கொண்டலைகின்றன இன்றும் நேற்றும் நேற்று உண்ண இருந்ததை இன்று தேடி அலைவது ஒரு வேட்டை இன்று இருந்திருந்ததை நேற்றே எடுத்துக்கொண்டவர் செய்தது கொள்ளை கொள்ளை என்பது திறன் திறன் கல்வி என்பது வடிவமைக்கப்பட்ட பாசம் பாசச் சுருள்களைக் கைக்கொடுக்கும் நிலையங்கள் ஆசிரியர்களை வெளியேற்றும் வீரத் தொழில்முறைவோரே.. எனவே ஆசிரியரே வெளியேறுங்கள்.. அல்லது நாங்கள் செய்வோம் திரேதாயுகம் முதல் நாங்கள் பயிற்சி பெற்றிருக்கின்றோம் நாங்கள் செய்வோம்.. அவ்வாறே…..
Read More
விடுதலைக் கலைத்தோழன் முரசு ஆனந்த்
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் ஜனவரி 7ஆம் நாள் சென்னைப் பயணத்தில் ரெஜின்ரோஸ் நிர்வகிக்கும் சென்னை தியேட்டர் அக்காடமியில் நான் சிறுகதை ஆசிரியர் அனலி செல்வராஜ் நாடகக் கலைஞர், தஞ்சை விஜி ஆகியோர் சந்தித்தோம். அப்போது நாடகப் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாடக ஒத்திகையின் சிறுபகுதியைப் பார்க்கும் வாய்ப்பை விஜயகுமார் எனக்கும் செல்வராஜ்க்கும் வழங்கினார். ஒத்திகையைப்பார்த்தபின் கலைஞர்களிடம் பேசும்போது எங்கள் நாடக நினைவுகளை பகிர்ந்துகொண்டபோது முரசு கலைக்குழுவில் நாங்கள் நிகழ்த்திய நாடகங்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டோம். பின் அலுவலகம் […]
Read More
புத்தகம் வாசிப்பு
  • By Magazine
  • |
முனைவர் ப.சார்லஸ் தொட்டு பார்த்தால் அது வெறும் காகிதம் தொடர்ந்து படித்தால் வாழ்வில் வெற்றியின் ஆயுதம் அதுவே புத்தகங்கள் ஆகும் .”மனிதனுடைய ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு புத்தகங்கள்” தான் என்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.                 புத்தகங்கள் மனிதனின் மிகச் சிறந்த நண்பர்கள்.ஒரு நல்ல புத்தகம் நூறு நல்ல நண்பர்களுக்கு சமம் என்றார் நம் முன்னாள் குடியரசுத் தலைவர் கி. றி. யி. அப்துல் கலாம். உலகின் பெரிய மேதைகள் அனைவரும் புத்தகம் வசிக்கும் பழக்கத்தின் மூலம் உருவானவர்களே. […]
Read More