அதிக ஆயுளின் அதிசயம்
  • By Magazine
  • |
C. முருகன் 2014-ம் ஆண்டு அமெரிக்கா ஒரு ஆய்வு நடத்தியது. உலகில் அதிக வயது வரை வாழ்ந்தவர்களின் ஆய்வு. அமெரிக்கர்களை விட ஜப்பானில் தான் அதிக வயது வரை வாழ்ந்து சாதனை படைத்தவர்கள் அதிகம் என்று ஆய்வில் தெரிந்தது. 100 வயது 110 வயது தாண்டியும் நல்ல ஆரோக்கியம், மன உறுதியுடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய நீண்ட வாழ்க்கை பல நேரங்களில் கடினமாக இருந்துள்ள போதிலும் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ளும் போது அவற்றால் மனக்குழப்பம் […]
Read More
வெள்ளை எலி சகுனம்
  • By Magazine
  • |
– ஓஷோ ஜப்பானில் ஒரு கதை சொல்லுவார்கள். அதை இங்கு தருகிறோம். ஜப்பானில் வெள்ளை எலியை நல்ல சகுனம் என்பார்கள். திடீரென ஒரு வெள்ளை எலியை யாராவது பார்த்து விட்டால் உடனே வெகு மகிழ்ச்சி தான். என்னவோ நல்லது நடக்கப் போகிறது. ஒருநாள் ஒரு தந்தையும் மகனும் சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். திடீரென தந்தையின் முதுகுக்குப் பின்னால் ஒரு வெள்ளை எலியை மகன் பார்த்தான். சட்டெனத் திரும்பி விடாதீர்கள். உங்களுக்குப் பின்னால் ஒரு விருந்தாளி இருக்கிறார். நல்ல சகுனம். […]
Read More
உயிரற்றவைகளின் உரையாடல்கள்
  • By Magazine
  • |
சிவ. விஜயபாரதி தாகத்திற்கு இறைஞ்சுகிறது பாவப்பட்ட உயிர். கைககளை அகல விரிக்கின்றன ஞானமிகு பழைமைகள். தற்காலிக கதையொன்றினை அளந்து ஒருக்களித்து நகர்கிறார்கள் நிலைமை உணர்ந்த யாவரும். குரல்வளை நெறிக்கின்றன கையளிக்கப்பட்ட நீரினை கேட்டு வரும் அலையழைப்புகள் . வற்றும் முன் வழிந்தோடிய உப்பு நீர்த்தடங்கள் குறித்து அதன் சிற்றுயிர்கள் எழுப்பும் வினாவிற்கு உயிர்ப்பற்ற புன்னகையைப் பதிலெனக் கொடுப்பதற்குள் விளையாட்டு பொம்மைகள் கேட்டு அழ மலங்க மலங்க விழிக்கிறதந்த உயிர் மங்கும் விழிகளோடு மரங்களிடம் இறைஞ்ச அசைந்து அது […]
Read More
உடல் உஷ்ணமகற்றும் “முள் இலவு”
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் இலவு மரம், ஏரிக்கரை ஓரம், தரிசு நிலம், சாலை ஓரங்கள் மற்றும் மலைசார்ந்த நிலங்களில் தானாகவே வறட்சியை தாக்கு பிடித்து வளரும் மரவகை ஆகும். இதனை விதை மூலம் நடவு செய்யலாம். 3 முதல் 5 வருடங்களில் காய்கள் உண்டாகி பலன் கொடுக்கும். வறட்சி மற்றும் பூச்சி தொல்லைகளை தாக்கு பிடித்து பராமரிப்பு செலவு இன்றி வளர்கிறது. இம்மரம் நேராக சுமார் 70 அடி வரை வளரும். முள் இலவு மரத்தின் தண்டில் […]
Read More
உலகின் தங்க பெட்டகம் – நியூயார்க், பெடரல் பேங்க்
  • By Magazine
  • |
– முனைவர் மோகனா, பழனி அட தங்கமே…யாரறிவார் உந்தன் அரியாசனம் ..? வாழ்க்கையில் ஏதாவது ஒரு நிகழ்வு/ செயல்பாடுகளில் தங்கத்தை போட்டிருப்பீர்கள்.   அல்லது யாருக்காவது தங்கம் வாங்கிக் கொடுக்கும்படி நேர்ந்திருக்கும். அந்த தங்கத்துக்கு எங்கு விலை, யாரால் நிர்ணயிக்கப்படுகிறது தெரியுமா? அதன் தரத்தை நிர்ணயம் செய்வது யார்? எங்கே? இதெல்லாம் என்றைக்காவது நினைத்துக்கூட பார்த்திருப்போமா? இப்பவும் கூட நம்மில் நிறைய பேருக்கு இது  தெரியாது. கண்டுபிடித்தது எப்படி?      மனிதன் எப்போது தங்கத்தைப் பயன்படுத்தினான், எப்படி கண்டுபிடித்தான், […]
Read More
என்னுடைய பயணத்தில் புகைவண்டிகள்
  • By Magazine
  • |
எம்.முகுந்தன். மலையாள நாவலாசிரியர். தமிழில் :கிருஷ்ணகோபால் இரயில் ஒரு வாகனம் மட்டுமல்ல அனுபவம் கூட தான். பல வேளைகளிலும் அது வீட்டு நினைவுகளும் நிறைந்ததே… என்னுடைய வாழ்க்கையில் இரயில் பயணத்திற்கென தனியொரு இடம் உண்டு. அரை நூற்றாண்டிற்கும் மேலாக நான் தொடர்ந்து இரயிலில் பயணம் செய்திருக்கிறேன்.அந்த அலைச்சலைக் குறித்து ஒர்மை வரும் போது சென்னை நகரத்தைக்  குறித்து சொல்லாமல் கடந்துச் செல்ல இயலாது. மய்யழியில் புகைவண்டி நிலையத்தை அடுத்துத்தான் என்னுடைய பழைய காலத்து  வீடு. அன்று  அது […]
Read More
சுற்றுச்சூழல் அக்கறையோடு
  • By Magazine
  • |
பண்டிகைகளைக் கொண்டாடுவோம் பண்டிகைகள் என்றாலே கொண்டாட்டங்களுக்கு குறைவிருக்காது. உறவுகள் கூடி கொண்டாடுவதற்கானவைதான் பண்டிகைகளும் திருவிழாக்களும். ஆனால் இந்த அவசரகால தொழில்நுட்ப வாழ்வில் தொலைவுகளில் வாழும் நாம் இப்பண்டிகைக் காலங்களில் உறவுகளை சந்தித்து கூடி மகிழ்ந்திருப்பதற்கான முக்கியத்துவத்தைக் குறைத்துக் கொண்டு நுகர்வுசார்ந்த கொண்டாட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றோம். சொந்தங்களைச் சந்தி¢த்தல் என்பது சுமூகமான கூட்டுக்குடும்பங்களில் நடைபெறும் நிகழ்வாகும். தற்போதைய வாழ்விற்கான பொருளாதாரத் தேடலில் எங்கெங்கோ படிப்பு, பணி என பிரிந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் உறவு ரீதியாக தொலைவிலிருந்தாலும் கூட்டுக்குடும்ப […]
Read More
கோகுல்
  • By Magazine
  • |
டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்….பீப்பீ….டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்… மிக அனாயசயமாக வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. புகை கக்காத பைக் வண்டி. நேராக ஓடிக்கொண்டிருக்கும் அந்த வண்டி சட்டென்று ஒரு ட வளைவில் திரும்பி மேல் நோக்கி விரைகிறது. இரண்டடி உயரத்திற்கு பயணித்த அது சடாரென திரும்பி கீழ் நோக்கி வருகிறது. மறுபடியும் அதே ட வளைவுக்கு உடன்பட்டு தரைக்கு வந்து சேர்கிறது. இப்போது அது எல்லா இடங்களிலும் தனக்கான பாதையை உருவாக்கிக்கொண்டு ஓடுகிறது. அல்லது அதன் சக்கரங்கள் போகும் வழியெல்லாம் பாதையாகிவிடுகிறது. டுர் டுர் சத்தமும், […]
Read More
ஒரு நினைவூட்டல்
  • By Magazine
  • |
“இயற்கை என்னும் இளைய கன்னி” குமரியின் கிழக்கு எல்லையில் தோவாளைக்கும் இராஜாவூருக்கும் இடையலிருக்கும் மலையின் பெயர் கன்யா உச்சி…ஆம் குமரிக்கோடு..(கன்யா_குமரி.உச்சி_கோடு,மலை) ‘பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள’ என்ற சிலம்பின் பாயிரவரிகள்..ஈராயிரம் ஆண்டுகட்குமுன் இயற்கை சீற்றங்களால் ஏற்பட்ட  மாற்றங்கள் குறித்து பேசுகின்றது. கடுக்கரை என்ற ஊர் வரை குமரிக்கடல்பரந்திருந்து.. அன்றைய கபாடபுரத்தோடு.. இவ்வூரும் கடல்கோளுக் கிரையாகி, கடற்கரை எனும் ஊர் கடல்வற்றி மீண்டும் நிலமாகி இன்றைய நிலம்  கடுக்கரை ஆயிற்று… என்பர்…. ஆம்… இயற்கை […]
Read More
ஆலயங்களிலிருந்து வெளியேறுதல்
  • By Magazine
  • |
நூற்றாண்டுகளுக்குப்பின் அங்கு செல்ல முடிந்த நான் அதன் இறுகித் திரண்டெழுந்து நிற்கும் கனத்த பெரிய கதவம் காண்கிறேன் சட்டை களைய வைக்கப்பட்டேன் வெற்று மார்போடு எனக்கான தேவதைகளைக் கண்டு குறைதீர்க்க வேண்டுமென்று சோதிடம் வழி உள்ளேறினேன் கருங்கல் பாவிய பிரகாரம் முழுதும் புறக்கணிப்பின் கூக்குரலால் நிறைந்திருப்பதை உணரத் தொடங்கியபோது பதற்றமுற அவசரமானேன் யாழிகளின் கோரைப் பற்களில் மனித சதைத் துணுக்குகள் சிற்பங்களின் அழகில் வடிகிறது செங்குருதி எனக்கெதிரே இன்னொரு மொழியில் யாரோ தீர்மானஞ்சொல்ல கலவரமடைந்தேன் வெளியேறும் திசைகளில் […]
Read More