சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
Irretrievable Marriage (நீடிக்கவே முடியாத திருமணம்) – வழக்கறிஞர் பி. விஜயகுமார் விவாகரத்து வழக்கு பல காரணங்களால் நீதிமன்றத்தில் கணவராலோ அல்லது மனைவியர்களாலோ தாக்கல் செய்யப்படுகிறது. பரஸ்பர விவாகரத்து கணவன்- மனைவி இவரும் சேர்ந்து தாக்கல் செய்வார்கள். பரஸ்பர வழக்கில் கணவன்- மனைவி இருவருக்கும் விவாகரத்து கிடைத்து விடும். ஒரு தரப்பினர் மட்டும் தாக்கல் செய்யும் வழக்குகளில் விவாகரத்து எளிதாக கிடைக்காது. ஏனென்றால் மறுதரப்பு கட்சிக்காரர் விவாகரத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பார். சில வழக்குகளில் நீதிமன்றம் கணவன் – […]
Read More
கல்லீரலில் கொழுப்பு சேர்வதை தடுக்க
  • By Magazine
  • |
– கஸ்தூரிபா ஜாண்ஸன் நமது ராஜ உறுப்புகளுள் ஒன்று கல்லீரல். சென்ற செப்டம்பர் 2024 புதியதென்றல் மாத இதழில் இந்நோய் பற்றிய சில குறிப்புகள் கூறப்பட்டுள்ளன. கொழுப்பு கல்லீரல் மற்றும் கல்லீரல் விரிவாக்கத்தில் காணப்படும் அதிகமான கொழுப்பு படிதல் ஒரு முக்கியமான கல்லீரலில் உண்டாகும் நோய் ஆகும். இதை கவனிக்காமல் விட்டு விட்டால் ஆபத்தை உண்டாக்கும். எனவே இந்நோ வராமல் தடுக்கவும், வந்தால் பாதிப்பினை குறைக்கவும் அல்லது முற்றிலுமாக அழித்து விடவும் தேவையான முறைகளைப் பற்றிப் பார்ப்போம். […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-வின்  287-வது கருத்தாய்வுக் கூட்டமானது, திரு. அருள்தாஸ் ஆசான் தலைமையில் மூலச்சல் மருத்துவர் த.இராஜேந்திரன், திரு.கே.செல்வநாதன் ஆசான் ஆகியோர் முன்னிலையில் 03.05.2025 அன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில், திரு.கே. செல்வநாதன் ஆசான் காசம், சயம், கை கால் எரிவு, தாகம், விக்கல் சுரம், அஸ்திவெட்டை, வாந்தி, நெஞ்செரிவு, குன்மம், காமாலை, வாயு இவற்றுக்கு தாளீசபத்திரி சூரணம் செய்முறையை தெளிவாகக் கூறினார். அடுத்ததாக, திரு. அருள்தாஸ் ஆசான் இரத்த […]
Read More
தோல்நோய்களுக்கு  சிறந்த‘பிரம்மதண்டு’
  • By Magazine
  • |
 நமது மூலிகை மருத்துவர் வெண்ணிற கோடுகளுடன் காம்பில்லாமல் கூரிய முட்களுடன் கூடிய பசுமையும் நீலம் கலந்த இலைகளுடன், அழகான மஞ்சள் நிற பூக்களையும், முட்கள் நிறைந்த நீள் உருண்ட காய்களும் அதனுள் கடுகு போன்ற விதைகளையும் கொண்டு, எப்பகுதியை உடைத்தாலும் மஞ்சள் நிற பால் வடியும் குணத்தை கொண்டு நேராக ஒரு மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய அழகான ஒரு களைச் செடி தான் பிரம்ம தண்டு. தரிசு நிலங்கள், ஆற்றங்கரையோரங்களில், சாலையோரங்களில் தானே வளர்கிறது. இதன் […]
Read More
வேடன் எனும் கருஞ்சூறாவளி
  • By Magazine
  • |
தக்கலை ஹாமீம் முஸ்தபா கூடி நிற்கும்  பெரும் மக்கள் திரள்முன் நின்று கொண்டு வேடன் என்னும் அந்தக் கலைஞன், “நான் பாணன் இல்லை  பறையன் இல்லை புலையன் இல்லை நீ தம்புரானும் இல்லை நீ தம்புரான் என்றால் எனக்கொரு மயிருமில்லை இனி காலமில்லை காத்திருக்கப் போவதுமில்லை பொறுத்துப் போகும் எண்ணமுமில்லை” என்று   ராப் இசையில் தன் குரலை அதிரவிடும்போது கூடிநிற்கும் பெரும் கூட்டமும் அவரோடு  சேர்ந்து ஆரவாரிக்கிறது. கேரள மக்கள் இசைமரபில் குறிப்பாக மலையாள நாடன் பாட்டு […]
Read More
வர்மம்’ எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் அல்லிவர்மம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான அழல்வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் அல்லிவர்மம் பற்றி அறிவோம். அல்லிவர்மம் நாபியின் நேர் பின்புறம் நான்குவிரலின் மேல் முதுகுத்தண்டில் அமைந்துள்ளது. இவ்வர்மம் அரசவர்மம், அல்லி அரச வர்மம், அல்லி அரசாணி வர்மம், சந்திர புஷ்கரணி வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. “சாதிக்கும் சந்திரபுஷ்கரணியோடு தாவி நிற்கும் மாய்கை மகரத்தூடுற்று வாதிக்கும் பின்பாகம் அல்லி அரசவர்மம்”.                                                                                                 – வர்மகுருநூல் […]
Read More
  • By Magazine
  • |
வேண்டும்! ஏழைகளின் நலனில் அக்கறை! உலகின் வல்லரசு நாடுகளில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் கார்பரேட்டுகளுக்கு எதிராக மக்கள் 2008- ஆம் ஆண்டில் தீவிரமாக போராடத் தொடங்கி அஃது ஓய்வுற்று ஓரளவு சமாளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதே போல் அதிகரித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் தாறுமாறான வரிவிதிப்புகள், உலக நாடுகளை ஒரு விதமான பார்வைக்குள் கொண்டு வந்துள்ளது. உள்நாட்டு அரசியல் பொருளாதார சூழலும் வெகுவாக பாதிப்படைந்து மக்கள் 2008-ம் ஆண்டை போல் மீண்டும் தெருக்களில் இறங்கி போராடி வருகின்றனர். […]
Read More
வர்மம் எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் அழல்வர்மம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான மாற்றான்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் அழல்வர்மம் பற்றி அறிவோம். அழல் வர்மம் மண்ணீரல் நடுவில் அமைந்த முதுகெலும்புத்தொடரின் இடதுபக்க சார்பில் அமைந்துள்ளது. இந்த வர்மம் மாத்திரையாய் கொண்டவுடன் உடல் எங்கும் அக்கினியால் எரிந்தது போல் வெப்பம் அதிகமாகி அழல் மிஞ்சுவதால் அழல் வர்மம் என்ற பெயராயிற்று. அக்கினி வர்மம், நெருப்பு வர்மம், அழலாடி வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் இவ்வர்மம் […]
Read More
“கிர்ணி” என்று அழைக்கப்படும் “முலாம்பழம்”
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் கோடைக்காலத்திற்கு ஏற்ற முலாம்பழச்செடி ஒரு கொடி வகை. இது வெள்ளரிக்காய், பூசணிக்காய், தர்பூசணியின் குடும்பத்தை சார்ந்தது. இதன் பூர்வீகம் ஆசியா கண்டத்தின் மத்தியபகுதி. இலை பசுமையாக பெரியதாகவும், பூக்கள் மஞ்சள் நிறத்திலும், ஆண்பூவும் பெண்பூவும் ஒரே செடியில் இருக்கும். காய்கள் உருண்டையாக இருக்கும். முலாம்பழம் தோல் சற்று கடினமாக மஞ்சள் பசுமை கலந்த நிறத்தில் வலைப்பின்னல் தோற்றத்துடன் காணப்படும். பழத்தின் உட்பக்கம் ஆரஞ்சி நிறத்தில் சதைபற்றுடன் காணப்படும். முலாம்பழச் செடியை விதை மூலம் […]
Read More
  • By Magazine
  • |
இந்தியாவின் ஒட்டுமொத்த ஏழை மக்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒருவகை அச்சம் எனும் பாசி படரத் தொடங்கி வருகிறது. முதலில் விவசாய நிலங்களில் சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்படும் பூச்சுக்கொல்லி மருந்துகள். அறியாமையின் உள்ளே ஓர் அறிவுத்திறனாகக் கடைப்பிடிக்கப்படும் இப்பயன்பாடு தலைமுறைகளை நோயாளிகள் ஆக்கிவிடும் எனும் உணர்வே இல்லாத நிலையில் அரசும் கவனிக்கவில்லை. மக்களும் கண்டுகொள்ளவில்லை. களைக்கொல்லிகள் என சந்தைப்படுத்தபடும் மருந்துகள் நிலத்தின் உயிரியியல் கட்டமைப்பை சிதைத்து வெட்டையாக்கிவிடும் என்ற உணர்வு துளியளவும் இல்லாத ஏழை விவசாயிகள். வறுமையின் பிடியில் […]
Read More