சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA -வின் 288-வது கருத்தாய்வுக் கூட்டமானது மருத்துவர்.கமலகண்ணன் அவர்கள் தலைமையில் மூலச்சல் மரு.த.இராஜேந்திரன், திரு.கே.செல்வநாதன் ஆகியோர் முன்னிலையில் 07.06.2025 அன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் மருத்துவர்.கமலகண்ணன் அவர்கள் சோரியாசிஸ் குணமாவதற்கான தைலம் மற்றும் மேல்பூச்சு முறைகளைத் தெளிவாகக் கூறினார். மேலும் வாயுப்பிரச்சனைகளுக்கு சூரணம் செய்முறையையும் கூறினார். அடுத்ததாக திரு.கே.செல்வநாதன் ஆசான் அஸ்வகெந்தி சூரணம் செய்முறையை கூறினார். அடுத்ததாக மரு.ஷேக் முகமது ஏங்கலிழைப்பு, இரைப்பு இவற்றுக்கு தங்க ரத்தினாதி […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
– வழக்கறிஞர் பி. விஜயகுமார் 1986-ல் நடந்த சம்பவத்துக்கு  நாற்பது வருடம் கழித்து தீர்ப்பா? இது ராஜஸ்தான் மாநிலத்தில் 1986-ம் ஆண்டு நடந்த சம்பவம். ஒரு ஆறு வயது ஒரு சிறுமியை ஒரு காமுகன் சிதைத்து விட்டான். பாலைவனத்தில் கஷ்டப்பட்டு ஒட்டகத்தில் வந்து சிறுமியின் தாய் போலீசில் புகார் செய்தார். வழக்கு நீதிமன்றத்திற்கு விசாரணக்கு வந்தது. அப்போது இந்த போக்சோ சட்டம், அதாவது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 கிடையாது. பாலியல் குற்றங்களுக்கு அப்போது […]
Read More
  • By Magazine
  • |
 ஜெகன் தங்கையா. B பறந்து திரியும் வண்ணத்துப்பூச்சிகளின் இறகுகளில் பளபளக்கும் வண்ணத்துகள்கள் பிடிக்கும் விரல்களில் ஒட்டிக் கொள்ளும் வசீகரம் குறைந்து போகும்… உதிர்ந்த மயிர் என்பதால் மனிதகுலமே ஒதுக்கித் தள்ளினாலும் மயிலிறகின் வசீகரம் வாழ்நாள் முடிந்த பின்பும் வாழ்ந்து கொண்டிருக்கும்..!                   
Read More
  • By Magazine
  • |
குமரி எழிலன் சிவகாமி சிவகா…. மி சிவகா ……..மி உனக்கென்ன வருணன் வந்து வாசல் தெளிப்பான் …. வாயு வந்து முற்றம் பெருக்குவான் ……. மழைத்துளி வந்து புள்ளி வைக்கும் …. மேகப்பொடிகள் கோலம் போடும் ….. அக்கினி அடுக்களை சமையல் செய்யும் பார்வதி (பக்கத்து தெரு பார்வதி அல்ல) வந்து பாத்திரம் பூசுவாள் சரஸ்வதி (பக்கத்துவீட்டு சரஸ்வதி அல்ல) சமைக்க கறிகாய் நறுக்குவாள் …. திருமகள் திருகையில் (mix- யில்) காணம் திரிப்பாள் தேவதை வந்து […]
Read More
வெள்ளையரை எதிர்த்து போராடிய   வீரமங்கை ராணி அவந்திபாய்
  • By Magazine
  • |
பேராசிரியர் முளங்குழி பா.லாசர் மத்திய பிரதேச ராம்கார்க் நாட்டின் ராஜா விக்ரமாதித்ய சிங்கின் மனைவி ராணி அவந்திபாய். பேரழகு நிறைந்த அவர் துணிச்சல் மிக்கவர். போர்க்கலைகள் அனைத்தையும் பயின்றவர். லோதி இனத்தைச் சேர்ந்த அவந்திபாயின் இளம் பருவத்திலேயே அவர் கணவர் விக்ரமாதித்ய சிங் வாரிசு இல்லாமல் இறந்தார். கணவர் இறந்ததும் அவந்திபாய் அரசியாய் முடிசூட்டிக் கொண்டு ஆட்சி புரிந்தார்.  நாடு பிடிக்கும் ஆசையிலிருந்த ஆங்கில அரசு, ஆண் வாரிசுகள் மட்டுமே நாட்டை ஆள வேண்டும் என்று சட்டம் […]
Read More
படிப்பதற்கு நேரம் ஓதுக்குங்கள் !
  • By Magazine
  • |
 – சஜிபிரபு மாறச்சன் மனிதனுக்கும் அவனுடைய தலைவிதிக்கும் இடையே உண்மையாக உரையாடி அவனை நடுநிலைப்படுத்துவதே புத்தகம் தான். மனிதனாக பிறந்துள்ள ஒவ்வொருவரும் விலக்க முடியாத முடிவாக புத்தகங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளன. மனித இனத்தில் சிறப்புடைய மனிதனாக உயர, நாளைய தினம் நன்மைகளைக் கண்டுபிடிக்க உதவுவது புத்தகம் தான். மனிதனுக்கு நிறைய கனவுகள் உள்ளன. போற்றி வைத்து பாதுகாத்து வரும் அந்த கனவுகள், உண்மையில் நிஜமாக உருவானதால் தான் ஜெயித்தோம். கனவுகளை நிஜமாக்க முயற்சி செய்யும் போது ஏற்படும் தடைகள் […]
Read More
பெண்களே ! உங்கள் உரிமைகளை பேசுங்கள் !
  • By Magazine
  • |
பூ.வ.தமிழ்க்கனல் விடுதலை, ஆழ்கடலில் தேங்கிப்போன உடலுக்குக் கிடைத்த ஒரு பிடி காற்று. விடுதலை இறுகிப்போன கல்லறை மேல் விழுந்து நெகிழச் செய்யும் மெல்லிய முளரி இதழ். விடுதலை, அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகளின் ஒட்டுமொத்த விடுவிப்பு. விடுதலை, வரையறைக்குள் அடக்க முடியாத உணர்வு. ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்று மீண்டதை நெஞ்சு நிமிர்த்திக் கொண்டாடுகிறோம். குடும்ப வரையறை, சமூக வரையறை எனக் கட்டுப்பாடுகளுக்குள் அடங்கி, தனித்தன்மையை, விடுதலை உணர்வைத் தொலைத்த பெண்களின் உணர்வுகளைப் பற்றி எண்ணுகிறோமா? படிக்கும் படிப்பிலிருந்து திருமணநாள் […]
Read More
பழங்கால தமிழகத்தில் (வில் ஊணி) அனகோண்டா பாம்பா?
  • By Magazine
  • |
பாம்பு வைத்தியர் அதிர்ச்சி தகவல் …!!! பழங்கால தமிழகத்தில் வில் ஊணி என்ற அனகோண்டா போன்ற பிரம்மாண்டமான பாம்பு வாழ்ந்திருக்கலாம் என்று கூறுகிறார் பாரம்பரிய விஷ வைத்தியர் ராஜரத்தினம். கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு அருகே கண்ணங்கரை விளை பகுதியைச் சேர்ந்த பாரம்பரிய விஷ வைத்தியர் ராஜரத்தினம் (66) அவர்களை புதிய தென்றலுக்காக அவரது வீட்டில் சந்தித்தோம். பாரம்பரிய விஷ வைத்தியரான அவர் மொபைல் போன் பயன்படுத்துவதில்லை. குறிப்பாக அவரது வீட்டில் இதுவரை மின்சார இணைப்பு இல்லை. செல்போன், […]
Read More
  • By Magazine
  • |
கமல. அருள் குமார் கத்தரிப்புகள் இன்றி மரம் கூட அழகாவதில்லை.. சித்தரிப்புகள் இன்றி மன்னர் கூட மாவீரன் ஆவதில்லை.. மட்டம் தட்டாமல் மண் கூட செம்மையாவதில்லை.. மட்டம் தட்டுபவர்கள் இன்றி மனம் கூட வன்மையாவதில்லை.. கத்தரிப்புகளும் சுத்திகரிப்புகளும் அவரவரால் இயலாது.. அடுத்தவர் தரும் அவமானங்களால் இயலும்..
Read More
  • By Magazine
  • |
செ.பராந்தகன் அரச மரத்தடி பிள்ளையாரிடம் ஆயிரக்கணக்கில் வேண்டுதல்கள்… மழை வேண்டி உருகி நின்றான் உழவன்.. வேண்டாம் என்கிறான் அருகிலேயே உப்பள உரிமையாளன்.. நோயாளி கூட்டம் அதிகம் வேண்டுமென மருத்துவன் ஏங்கி நிற்க நோயில்லா வாழ்வுக்கு பிரார்தித்தனர் அதிகம்பேர்.. வெட்டியானும் வேலை வேண்டும் என மன்றாடினான் ஒருபுறம், வியாபாரம் தழைக்க வியாபாரிகளோ மறுபுறம்.. இப்படிக் கேட்டுக் கேட்டே பெரிய காதோடு அமர்ந்துள்ளார் அரசமரத்தடி பிள்ளையார்..
Read More