கோபக் கடலில் பாசத்தீவு
  • By Magazine
  • |
கா. திலிபன், தமிழாசிரியர் உப்பட்டி, பந்தலூர், நீலகிரி – 643 241. அன்புக்குரிய நண்பன் மகிழனுக்கு, நெஞ்சம் நெருடலுடன் இந்த மடலை எழுதுகிறேன். என்னவோ தெரியலடா வீட்டில் நிலைமை மிகவும் கடினமாக இருக்கிறது. அப்பாவின் கண்டிப்பு அதிகமாகிட்டே போகுது எதற்கும், கோபம்..கோபம்… கோபம்.. நான் அவரை பார்க்கும் போதெல்லாம் பயமாக இருக்கிறது. பேசாமல் தனியாக போய்விடலாமா என்ற எண்ணம் கூட தோன்றுகிறது. என் மனக் கவலையை உன்னிடம் சொல்ல தோன்றியது. வாய்ப்பு கிடைத்தால் விரைவில் சந்திப்போம். இப்படிக்கு […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-வின் 291-வது கருத்தாய்வுக் கூட்டமானது, திரு.இராஜன் ஆசான் தலைமையில் மரு.கமலகண்ணன், திரு.கே.செல்வநாதன் ஆசான், மருத்துவர் த.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 06.09.2025 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் திரு.இராஜன் ஆசான் சர்க்கரை நோய், உடல் மெலிவு, மூலநோய் இவற்றுக்கு தேற்றான்கொட்டை லேகியம் செய்முறையை தெளிவாகக் கூறினா£. மரு.ஷேக் முகமது வாதவலிகள், மூட்டு வீக்கம் இவற்றுக்கு தைலம் செய்முறையையும் உடல் பருமன், உயர் கொழுப்பு, வாயுப்பிடிப்பு இவற்றை குணப்படுத்தும் […]
Read More
நேர்மையும் நீதிமன்றங்களும்
  • By Magazine
  • |
டாக்டர். பழனி அரங்கசாமி உலகம் முழுதும் மக்களாட்சியின் மகத்தான கட்டுமானத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள் நான்கு. நீதிமன்றங்கள், அரசுத்துறை, சட்டமன்றங்கள் என்பதோடு செய்தி ஊடகங்களும் அவற்றுள் ஒன்றாகும். நீதி என்பது இந்திய மண்ணில் குறிப்பாகத் தமிழகத்தில் காலம் காலமாக வேரூன்றி நிற்கும் அரியதோர் நெறிமுறையாகும். மன்னராட்சியோ, மக்களாட்சியோ எதுவாக இருப்பினும் ஆட்சிகள் மாறலாம். ஆளுவோர் மாறுவர். ஆனால் நேர்மை என்னும் ஆணிவேரில் முகிழ்த்து நிற்கும் நீதி என்பது சாகாமல் வாழும் ஒரு சமூகப்பண்பு. பசுவின் கன்றைக் தேர்க்காலில் […]
Read More
ஊனமறு நல்லழகே…
  • By Magazine
  • |
ராஜன் ஆத்தியப்பன் கவிதைகள் வாசிக்கையில் சில நேரங்களில் மனம் நிலைத்து நின்று விடுவதுண்டு. எப்படி இந்த வரிகளை கவிஞர் கற்பனை செய்திருப்பார். இயல்பாகவே சொற்கள் தங்களைப் பிணைத்துக் கொண்டதா கவிஞன் ஏற்கெனவே திட்டமிட்டிருப்பானா எழுதுவதற்கு முன் அந்த வரிகள் எங்கிருந்தன? எழுதியபின் அந்த கவியின் மனநிலை எப்படியிருந்திருக்கும்.சற்று நேரம் புளகாங்கிதம் அடைந்திருக்கக்கூடுமா. (நிச்சயமாக அடைந்திருப்பார்)                 விலை மதிப்பற்ற அக்கணம் வாசிப்பவரின் முகவிரிவில் மீண்டும் மீண்டும் மீட்கப்படுகிறது என்பதுவே கவிதையின் வாழ்வாக இருக்கிறது.                 அப்படியானால் பாரதிக்கு […]
Read More
மாற்றுத் திறனாளிகள் குறித்த பார்வைகள்
  • By Magazine
  • |
A. தர்மராஜ் (த.ராசு) முந்தைய பாகத்தின் தொடர்ச்சி… தற்போது தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் உட்பட 18 நலவாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பதிவு செய்த தொழிலாளர்கள் கல்வி, திருமணம், மகப்பேறு, வீட்டுவசதி, வீடு கட்டும் திட்டம், கண் கண்ணாடி ஆகியவற்றிற்கு நிதி உதவி கோரி விண்ணப்பிக்கலாம். புலம் பெயர்ந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு பணியிடத்தில் மரணம் ஏற்பட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு சொந்த ஊருக்கு கொண்டு செல்ல அதிகபட்சம் ஒரு லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த […]
Read More
உலகின் புதிரான முதல் கொலையும் மிகப்பழமையான மனித இரத்தமும்
  • By Magazine
  • |
– முனைவர் மோகனா, பழனி அற்புதமான அறிவியல்..! அறிவியல் உலகில்,   அதிரடித் திருப்பு  முனையாக, உலகத்தைத் திருப்பிபோட்ட, பிரமிக்கச் செய்த ஒரு தகவல்  இப்போது   கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது . அது  என்ன   என்று  தெரிந்தால்  நீங்களெல்லாம்  ஆச்சரியத்தில்  மயக்கம்  போட்டு விடுவீர்கள் . உடலிலிருந்து  இரத்தம்  வெளியேறிய, கண நேரத்தில், காற்று அதன் மேல் பட்டவுடன், இரத்தம் இறுகிக்    கட்டியாகிவிடும். இதுதான் இரத்தத்தின் இயல்புத் தன்மையும்  கூட. அது நிகழவில்லை என்றால், சின்ன காயம் பட்டால் கூட அது […]
Read More
விவசாயம் ஒரு தொழில் அல்ல   அது வாழ்க்கையே
  • By Magazine
  • |
– பசுமை சாம்பியன் விருதுபெற்ற அக்ரி.ஒய்.ராஜகுமார் உணவு இல்லாமல் மனிதனால் உயிர் வாழ முடியாது அத்தகைய உணவு கிடைப்பதற்கு விவசாயிகள் உயிர்நாடியாக செயல்படுகிறார்கள் விவசாயம் இல்லாவிட்டால் மக்கள் பட்டினியால் உயிர் இழக்க வேண்டிய நிலை வரும் ஆனால் அந்த விவசாயிகளை கவுரவிக்கவோ பாராட்டவோ யாரும் முன்வருவதில்லை மட்டுமல்ல இன்றைய தலைமுறையினர் யாரும் விவசாயத்தை விரும்பவில்லை என்பதுடன் விவசாயம் செய்வது இன்று கேலிக்குரிய தொழிலாக மாறியிருக்கும் சூழலில் விவசாயிகளை ஊக்குவித்து கவுரவித்து  விவசாயம் பற்றிய விழிப்புணர்வை விதைத்து ஏற்படுத்தி […]
Read More
போதைப் பழக்கத்தால்   மதியிழந்த மனிதர்கள்
  • By Magazine
  • |
C. முருகன் மக்கள் சமுதாயத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் எதிராக உலகளவில் எழுந்திருக்கும் பிரச்சனை போதைப்பழக்கம் ஆகும். வயது வித்தியாசம் இன்றி சமுதாயத்தில் போதைப்பழக்கம் வேரூன்றி உள்ளது என்பது கவலைக்குரியது ஆகும். போதைப்பழக்கத்தை தடுக்கும் விதமாக பல சட்டங்கள் முன் வைக்கப்பட்டாலும் அதை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. இப்பழக்கம் ஆண்கள் மட்டுமின்றி பெண்களிடத்தும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 26-ம் தேதி சர்வதேச போதை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் நோய்களும், தற்கொலைகளும் போதை […]
Read More
வெறுப்பின் கொற்றம் வீழ்க
  • By Magazine
  • |
– குமரி எழிலன் வெறுப்பின் கொற்றம் வீழ்த்துவோம் வெற்றுக் குரல்களை நீக்குவோம் இருளின் கொடுமையை மாற்றுவோம் கருணை ஒளியை ஏற்றுவோம்… அன்பே அறமென எழுவோம்… அனைவரும் ஒன்றென முழங்குவோம் அத்தனையும் இனி உலகில் அனைவர்க்கு மென்றே வழங்குவோம் கண்முன் அனைவரும் சமமே.. இதை கருத்திலும் விதைப்போம் தினமே இருப்பது  பொதுவாய்ப் போனா.. இனி அறமே வெல்லும் தானா.. வளமையென்பது இயற்கை வறுமை என்பது செயற்கை இயற்கையைத் தொடர்ந்தால் இன்பம் செயற்கையைத் தொடர்ந்தால் துன்பம் அறஞ்செய விரும்பினாள் அவ்வை […]
Read More
அண்ணலின்  அழுகை அறிந்தார் யார்?
  • By Magazine
  • |
கே.பி.பத்மநாபன் அண்ணலார் அமரராகி ஆண்டுகள் எழுபத்தேழும் மண்ணிதில் மறைந்து போச்சு; மகானையே மறந்து மாச்சு; உண்மையே உரைத்தோன் நாட்டில் ஊழலும் பெருகிப் போச்சு; பெண்மையை மதித்தோன் நாட்டில் பெண்மைவன் முறையுமாச்சு; கண்ணியம் கட்டுப்பாட்டைக் கடமையாய்க் கொண்டோன் மண்ணில் பண்ணிடும் பாதகங்கள் பலப்பல பெருகியாச்சு; அண்டியோர் தம்மை அன்பாய் ஆதரித்தோனின் மண்ணில் எண்ணிலாக் கலவரங்கள் எனதினம் ஆகியாச்சு; உண்ணுதல் உடுத்தல் தம்மில் உயரிய எளிமை கண்ட கண்ணிய காந்தி மண்ணில் கருநிதி பெருகியாச்சு; புண்ணியன் வாழ்ந்திம் மண்தான் புதுமைகள் […]
Read More