• By Magazine
  • |
– சிவ. விஜயபாரதி. கும்பகோணம் அந்த வாசனை அவனை ஏதோ செய்தது. அவர்கள் மீதிருந்து வருகின்ற அந்த மணம் அவன் மூக்கினுள் நுழைந்து இதயம் வருடியது.அது என்ன வாசனை? இந்த ஐந்து பேர் மீது மட்டும் எப்படி வருகிறது இந்த வாசனை?குறைவாகவும் இல்லை.அதிகமாகவும் இல்லை. அருகில் அமரும் நமக்கு மட்டும் மிக மெல்லியதாக பரவி கொஞ்ச நேரத்தில் காணாமல் ஆகிவிடுகிறது.எனக்கு மட்டும்தான் அப்படி தோன்றுகிறதா? இவர்களின் மேல் வரும் இவ்வாசனை எனக்கு மட்டும்தான் தெரிகிறதா? வேறு யாருக்காவது […]
Read More
செஞ்சோற்றுக்கடன்
  • By Magazine
  • |
கை. செல்லத்தங்கம் ராமசாமி… ஏ.ராமசாமி என்னப்பா கூப்பபிட்டது கூட காதில் கேட்காமல் அப்படியென்ன யோசனையில் போய்க்கிட்டு இருக்க… ஒன்றுமில்லண்ணே… வயலுக்கும் போய்க்கிட்டு வாறேன்… ஆமா அது தான் தெரியுதே… நான் என்ன யோசனைன்னு கேட்டேன். அதாண்ணே பிரியா படித்து முடிச்சுட்டா. பக்கத்து இங்கிலீஷ் மீடியம் ஸ்கூலுக்கு டீச்சராகப் போறா. கலியாணம் பாக்கணும் இல்லா அதை தான் நினைச்சிக்கிட்டே வந்தேன். நல்ல யோசனை தானப்பா உனக்கு. நான் ஒண்ணு சொல்லட்டுமா… சொல்லுங்கண்ணே… பேசாம உன் தங்கச்சி பையன் கண்ணனுக்கு […]
Read More
  • By Magazine
  • |
பூ.வ.தமிழ்க்கனல் தமிழீழம் யாழ்ப்பாணத்திலுள்ள செம்மணி கிராமத்திற்கு அருகில் பல நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் உயிரோடும் உயிரற்ற நிலையிலும் புதைக்கப்பட்டனர். தமிழீழத் தமிழ் மக்கள் முள்ளிவாய்க் காலில் மட்டும் இனப் படுகொலை செய்யப்படவில்லை. அதற்கு முன்பாகவே பல்வேறு திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் ஈழத் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்கள். அப்படியான ஒரு நிகழ்வே செம்மணிப் படுகொலை. 1998, 1999 ஆம் ஆண்டுகளில், செம்மணிப் படுகொலைப் புதை குழி உலகத்துக்குத் தெரிந்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2001-ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் […]
Read More
  • By Magazine
  • |
– ஓஷோ நல்ல குணம் எதையும் உண்டாக்குவதில்லை. ஏனெனில் நீங்கள் முற்றிலும் நற்குணம் உடையவராக இருப்பின் உங்களுக்கு எதுவும் தேவையில்லை. நீங்கள் நற்குணம் உடையவராக இருப்பின் அங்கு ஆசை இல்லை. அங்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை. நீங்கள் முற்றிலும் சரியாக இருக்கின்றீர்கள். முற்றிலும் சரியாக இருப்பது எங்கும் நகர்வதில்லை. அரைகுறையானது தான் நகர்கிறது. அரைகுறையானது தான் எதையாவது உண்டாக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறது. ஒரு முற்றிலும் சரியான ஓவியன் ஓவியம் தீட்டுவதில்லை. ஒரு முற்றிலும் சரியான இசைக்கலைஞன் அவனுடைய […]
Read More
மாற்றுத் திறனாளிகள் குறித்த பார்வைகள்
  • By Magazine
  • |
A. தர்மராஜ் (த.ராசு) முந்தைய பாகத்தின் தொடர்ச்சி.. மாற்றுத் திறனாளிகளின் நலன் கருதி, இந்திய அரசின் மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுத் துறையின் கீழ் ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டுக்கான தேசீய நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனம் 2023 பிப்ரவரியில் திருப்போரூரை அடுத்த முட்டுக்காடு ஊராட்சியில் மாற்றுத் திறனாளிகளால் உருவாக்கப்பட்ட பொருட்களை பொது மக்களுக்கு காட்சிப்படுத்தும் தேசீய அளவிலான கண்காட்சி மற்றும் அவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ஒன்றினை நடத்தியது. இந்தக் கண்காட்சியில் 23 மாநிலங்களைச் […]
Read More
இருதயநோயும் வருமுன் காத்தலும்
  • By Magazine
  • |
பழனி அரங்கசாமி உலக வாழ்வில் செடியும், கொடியும், புல்லும், புதரும், மாடும், மனையும் ஒரு கட்டத்தில் வாடி வதங்கி மக்கி மடிந்து விடுகின்றன. மக்கள் கூட்டமும் பிறந்து வளர்ந்து முதிர்ந்து மடிவது தான். வாழ்வாவது மாயம் மண்ணாவது திண்ணம் என்பது எச்சரிக்கை. ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவதில்லை என்பது கசப்பான உண்மை. மரணத்தின் முன்னர் ஆண்டானுக்கும் அடிமைக்கும், ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஒரே நிலை தான். மரணம் என்பது அனைவர்க்கும் உறுதி என்றால் நாம் ஏன் […]
Read More
பழைய டிவியின் திரைகள்
  • By Magazine
  • |
– காளீஸ்வர் அப்பொழுதெல்லாம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இருந்ததில்லை! கண்ணைக் கவரும் எல்இடி விளக்குகள் இருந்ததில்லை! குண்டு பல்பு என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் டங்ஸ்டன் விளக்குகளும், கருப்பு வெள்ளை திரையிலான தொலைக்காட்சிப் பெட்டிகளுமே இருந்தன. 1990-களில் தான், தனியார் தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் இந்தியாவில் தொடங்கியது. அந்தப் பழைய நாட்களில், டிவி ஆன் செய்ததும் ஒரு சில வினாடிகள் கழித்துத் தான் படம் வரும். அது ஏன்? அந்த டிவிக்களின் உள்ளே என்ன நடந்தது? இப்போது பார்ப்போம். […]
Read More
மான்விழி டீச்சர்
  • By Magazine
  • |
N.செல்வி ஞானதாஸ் மான்விழி அழகிய புன்னகையுடன் வலம் வந்தாள். அவள் வேலை பார்க்கும் பள்ளியில். ஆசிரியைகளுள் அவளைத்தான் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். அனைவர் மனதையும் கவர்ந்திருந்தாள். அவளது மனதில் மென்மையை அவளது பேச்சே பிரதிபலிக்கும்.   பள்ளியில் பெரும்பாலான குழந்தைகள் எனக்கு வகுப்பு ஆசிரியராக மான்விழி ஆசிரியை வர வேண்டுமென தலைமை ஆசிரியரிடமே கேட்டு விட வேண்டும் என தலைமை ஆசிரியரின் அறையின் பக்கம் வரை சென்று விட்டு ஓடி விடுவார்கள் அந்த அளவிற்கு குழந்தைகளுக்கு மான் […]
Read More
தீபாவளிக் கவிதைகள் – 02
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் நீண்ட பாலங்கள் பரவித் தெரிகின்ற நகரம் சாலைகளில் மின்னுகிறது பண்டிகையின் வெறுமை பத்தி விற்றுக் கொண்டிருந்த பாட்டி கம்பி மத்தாப்பு வித்துக்கொண்டிருக்கின்றாள் துவைத்த சுத்தமான உடையில் நூறு ருபாய் கேட்டு வயதான தம்பதியினர் வலித்த கால்கள் திரியும் தெருக் கடைகள் ஏழைகளைக் குறிபார்த்து கைநீட்டும் யாசகர்கள் வாழ்த்துகளையும் சிரிப்புகளையும் யாரும் யாருக்கும் கடத்தாத தெருக்கள் அங்கேதான் மோப்பம் பிடித்துக்கொண்டிருந்த வறுமையை நான் கண்டு கொண்டேன் அது சாபத்தை ஓதி எறிந்து விளையாடிக் கொண்டிருந்தது […]
Read More
நூல் மதிப்புரை
  • By Magazine
  • |
பொறியியல் கல்வியை முடித்த ஒரு இளைஞனை செண்டை மேளம் என்ற நாட்டார் கலை ஆட்டிப்படைக்கிறது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கொடை விழாவில் கண்ட சக்கர தீ வெட்டி தூக்கும் நிகழ்ச்சியில் எழுந்த செண்டை மேளத்தின் ஒலி, வெறும் தகர டப்பாவில் கொய்யா மரக்கம்பால் ஒத்திகை பார்க்கும் அளவுக்கு அவனுள் ஆழமாகப் பதிந்தது. இதுதான் சஜு என்ற கலைஞன் உருவான புள்ளி. “கொட்டடிக்காரன்” என்ற இந்த நூல், சஜுவின் 14 ஆண்டுகால செண்டை மேள அனுபவத்தை, ஒரு […]
Read More