தோற்றமயக்கம்
  • By Magazine
  • |
– குமரி எழிலன் மயினியோ, ஆத்தடிமாடங்கோயில்ல? ஒரு அதிசயத்தைக் கேட்டேளா? சொல்லுவுளே, சொன்னாத்தானே தெரியும். அதயேங் கேக்கயோ ஆத்தடிமாடன் சொள்ளமாடனுக்கு கண்ணு  மூடிமூடித் தொறக்காம….கேக்கயில                                                   புல்லரிச்சுற்று..படபடப்புடன் சொல்லி முடிக்குமுன் தெவுங்கிவிட்டாள் தெக்கூட்டு விசியா . எவ சொன்னாவுளே நீ நேருல பாத்தியா? நம்பமறுத்த தொனியில் கேட்டாள் கவுசல்யா. நேருல பாத்தியா தேருல பாத்தியான்னு விண்ணாணம்லாம் பேசாதிங்யொ இப்பதான் கோரசேரி மயினி சொன்னா. பாத்துக்கிடுங்கோ. அவளுக்கும் வேலையில்ல உனக்கும் சோலியில்ல. உடுத்த சீலைய நம்பமாட்டேளா? நீங்யொ இருந்திருந்து வொங்கள்ட்டவந்து […]
Read More
உலகின் முதல் எழுத்தாளர்
  • By Magazine
  • |
ஆதிகால சுமேரியாவும், பாபிலோனும்தான் நாகரிகம், மற்றும் எழுத்துக்களின் பிறப்பிடம் என்று சொல்லப்படுகிறது.   யூப்ரடீஸ், டைக்ரீஸ் நதிகளுக்கிடையே இருந்த, பண்டைய மெசபடோமியாவின்  ஒரு நகரம்தான் பாபிலோன். மெசபடோமியாதான் மனித நாகரிகத்தின் தொட்டில் என்றும், வளமான பிறைநிலம் (Fertile Crescent)  என்றும் போற்றப்படுகிறது.  அந்த காலம், கற்காலத்தின் முடிவாகவும், பித்தளை/உலோக காலத்தின் துவக்க காலமும் கூட. அப்போதுதான்  எழுத்து துவங்கியதும் கூட.  பழங்கால சுமேரியர்கள் கல்வியில் மிகவும் நம்பிக்கை வைத்திருந்தனர். எதனையும் பதிவு செய்வது அங்கே முக்கியமாக கருதப்பட்டது. தமது […]
Read More
தமிழ் நாடகத்தந்தை சங்கரதாசு சாமிகள்
  • By Magazine
  • |
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனால், ‘நாடக உலகின் இமயமலை’ என்று புகழப்பெற்ற சங்கரதாசுசாமிகள் தமிழ் நாடகத்தந்தை என்றும் போற்றப்படுகிறார். புதுநெறிஇவர் நலிந்து கிடந்த நாடகத் தமிழுக்கும்இசைதமிழுக்கும் புதுநெறி வகுத்தவர். கூத்துமரபில் இருந்து உருவாகி வளர்ந்த தமிழ் நாடகத்தை அரங்கமரபிற்கு ஏற்ப முறைகளை உருவாக்கியதோடு மட்டுமின்றி தெருக்கூத்துகளையும் புதுப்பித்தவர். தமிழ் நாடக வரலாற்றில் 50-க்கும் மேற்பட்ட நாடகங்களை இயற்றினார். ஏராளமான கலைஞர்களை உருவாக்கி நாடகப்பயிற்சி அளித்தார்.சங்கரதாசுசாமிகள், தூத்துக்குடியில் தமிழ்ப் புலமைமிக்க தாமோதரன்-பேச்சியம்மா தம்பதியருக்கு மகனாக 1867-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி […]
Read More
மக்கள் கவிஞர் தமிழ் ஒளி
  • By Magazine
  • |
_ பூ.வ. தமிழ்க்கனல் “வஞ்சகக் காலன் வருவதும் போவதும் வாழ்க்கை நியதியடா – எனில் செஞ்சொற் கவிதைகள் காலனை வென்று சிரிப்பது இயற்கையடா !” ஆம். இந்த வரிகளை எழுதிய காலனை வென்று வாழும் கவிதைகளை இயற்றிய மகத்தான மக்கள் கவிஞர் தமிழ் ஒளி பிறந்த நூறாண்டு விழா ஆண்டு இது.  பாரதிதாசனுக்கு 33 வயது இளையோன். கவிஞர் தமிழ் ஒளி பிறந்தது 1924 செப்டம்பர் 21 ஆம் தேதியாகும். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூர் […]
Read More
பரிமாணங்களைக் கண்ணுறுதல்
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் வீட்டில் பல்லியைப் புகைப்படம் எடுத்தான் மகன். நான் அலுவலகத்தில் புகைப்படம் எடுத்தேன், இரண்டு பல்லிகளுமே குட்டிப் பல்லிகள். நான் எடுத்தப் புகைப்படத்தில் பல்லிக்குட்டியின் உள்ளுறுப்புகள் வண்ண நிழலாகத் தெரிகின்றது, அடிவயிற்றோடு சில உறுப்புகளும் தெரிகின்றன, குடல், ஈரல், மண்ணீரல் என அவை இருக்கலாம். மகன் ஒருநாள் முன்னரே அந்தப் புகைப்படத்தை எடுத்துவிட்டான். அடுத்தநாள் தூக்கத்திற்காக படுக்கையைத் தட்டும்போதுதான் சொன்னான். “அப்பா… அப்பா…. உங்க செல்பேசியில் ஒரு புகைப்படம் எடுத்தேன், பாருங்க..” “எந்த இடத்தில் […]
Read More
மலையாளக்  கவிதை
  • By Magazine
  • |
மலையாளம் – விபிதா தமிழ் – ராஜன் ஆத்தியப்பன்                                      உம்மிணிக்கு ஆறு வயது. அவளுக்கென்று  மூக்குக் கண்ணாடி ஒன்றுண்டு. பூனையை அவள் பார்ப்பது நான் பார்ப்பதுபோல் அல்ல. அவளது பூனைக்கு சிறகுகளுண்டு. மனிதரைப்போல அது பேசும் ஒரு கையால் சோறு பிசைந்து தின்னும். நாய்குட்டியை அவள் பார்ப்பது நான் பார்ப்பதுபோல் அல்ல. ஆகாயம் தொடுமளவிற்கு பறக்கும் சக்தியுடையது அவளது நாய்குட்டி. பாட்டு பாடும் படம் வரையும் முத்தம் கொடுக்கும். எறும்புகளை அவள் பார்ப்பது நான் பார்ப்பதுபோல் […]
Read More
அமைதி காப்போம்!
  • By Magazine
  • |
– கே.பி. பத்மநாபன் மனிதர் இடையே கருத்தெல்லாம்                 மாறுபடும் தான், தவறன்று; தனி என் கருத்தே உயர்வென்று                 தலையுள் வெறியைக் கொள்ளாமல் கனிவாய் மாற்றார் மொழிகேட்டுக்                 கலந்தே அன்பால் உறவாடி இனிய முடிவை எட்டிட்டால்                 இம்மண் அமைதி பூண்டிடுமே! கணவன் மனைவி இருவருமே                 கலந்தே பேசி முடிவெடுத்தால் மணமே நிறைந்த இல்லறத்தை                 மகிழ்வாய் வாழ்ந்து விடலாமே; இணக்கமாக இருநாடும்                 இணைந்தே பேச முயன்றிட்டால் பிணங்கள் வீழும் போரின்றிப் […]
Read More
ஜேன் குக் ரைட் – வேதிசிகிச்சையின் அன்னை
  • By Magazine
  • |
– பேரா. மோகனா, பழனி நண்பர்களே, எல்லா உயிர்களையும் நோய் தாக்குவது இயல்பு.நோய் என்பது வைரஸ் அல்லது  பாக்டீரியா அல்லது   வளர்சிதை  மாற்றங்களால் ஏற்படலாம்.  இவைகளில் வைரஸ் நோய்கள் அனைத்தும் தொற்றும் நோய்களே. பாக்டீரியாவால் ஏற்படும் நோய்களில் சில தொற்றுபவை;  சில தொற்றாநோய்கள். தொற்றாநோய்களில்  மூன்று பெரிய நோய்கள்தான் முன்னணியில் நிற்கின்றன  1. சர்க்கரை நோய், 2. இதய நோய் 3. புற்றுநோய்.. புற்றுநோய் எப்படி புற்றுநோய் என்பது நோய் அல்ல. அது ஒரு வளர்சிதை மாற்றத்தில் […]
Read More
தமிழர் மரபில் நிலமும் – நீரும்
  • By Magazine
  • |
– ஓர் சூழலியல் பார்வை – கோவை சதாசிவம் மனிதர்கள் தமது முன் கால வரலாற்றை அறிந்து கொள்வதில் தீராத தாகம் கொண்டவர்கள்! பத்து தலைமுறைக்கு முன்பு எம் பாட்டன் எப்படி இருந்திருப்பார்..? எப்படி வாழ்ந்திருப்பார்..? இத்தகைய கேள்விகளில் இருந்தே தொடங்குகின்றன… எப்போது பூமி தோன்றியது..? எப்போது மனிதன் தோன்றினான் ..?  எனும் புதிய கேள்விகள். பூமி, இறைவனின் படைப்பு என்று பண்டைய சமயங்கள் அனைத்தும் நம்பின. பூமி தட்டையானது என்னும் கருத்தாக்கத்தில் பூமியை பாயாகச் சுருட்டிக்கொண்டு […]
Read More
பூதப்பாண்டியில் பிறந்த புரட்சிக்குயில்
  • By Magazine
  • |
– குமரி எழிலன் ஜீவானந்தம் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட, இளமையில் தேவாரம், திருவாசகம், பஜனைப்பாடல்களை தேர்வீதிகளில் பாடிப் பரவசம் அடைந்த சொரிமுத்து, குமரி மண்ணில் பூதப்பாண்டியில் பிறந்தவர் …. 9 வயதில் கோயில் சுண்டலை, எல்லாப் பிள்ளைகளுக்கும் சமமாக கொடுக்கச் சொல்லி, பூசாரிப் பாட்டா கேட்காததால்… பூசாரியிடமிருந்து பறித்துப் போய் சமபங்கு வைத்தவர். உடன்பயின்ற மண்ணடி மாணிக்கத்தின் தோளில் கை போட்டு தேர்வீதியில் சுற்றி கோயிலுக்குள் புக முயற்சியில் அடித்துக் காயப்படுத்தபட்டவர்.. காந்தியின் மீதும் கதர்மீதுமுள்ள பற்றால் […]
Read More