கோகுல்
  • By Magazine
  • |
டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்….பீப்பீ….டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்… மிக அனாயசயமாக வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. புகை கக்காத பைக் வண்டி. நேராக ஓடிக்கொண்டிருக்கும் அந்த வண்டி சட்டென்று ஒரு ட வளைவில் திரும்பி மேல் நோக்கி விரைகிறது. இரண்டடி உயரத்திற்கு பயணித்த அது சடாரென திரும்பி கீழ் நோக்கி வருகிறது. மறுபடியும் அதே ட வளைவுக்கு உடன்பட்டு தரைக்கு வந்து சேர்கிறது. இப்போது அது எல்லா இடங்களிலும் தனக்கான பாதையை உருவாக்கிக்கொண்டு ஓடுகிறது. அல்லது அதன் சக்கரங்கள் போகும் வழியெல்லாம் பாதையாகிவிடுகிறது. டுர் டுர் சத்தமும், […]
Read More
ஒரு நினைவூட்டல்
  • By Magazine
  • |
“இயற்கை என்னும் இளைய கன்னி” குமரியின் கிழக்கு எல்லையில் தோவாளைக்கும் இராஜாவூருக்கும் இடையலிருக்கும் மலையின் பெயர் கன்யா உச்சி…ஆம் குமரிக்கோடு..(கன்யா_குமரி.உச்சி_கோடு,மலை) ‘பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள’ என்ற சிலம்பின் பாயிரவரிகள்..ஈராயிரம் ஆண்டுகட்குமுன் இயற்கை சீற்றங்களால் ஏற்பட்ட  மாற்றங்கள் குறித்து பேசுகின்றது. கடுக்கரை என்ற ஊர் வரை குமரிக்கடல்பரந்திருந்து.. அன்றைய கபாடபுரத்தோடு.. இவ்வூரும் கடல்கோளுக் கிரையாகி, கடற்கரை எனும் ஊர் கடல்வற்றி மீண்டும் நிலமாகி இன்றைய நிலம்  கடுக்கரை ஆயிற்று… என்பர்…. ஆம்… இயற்கை […]
Read More
ஆலயங்களிலிருந்து வெளியேறுதல்
  • By Magazine
  • |
நூற்றாண்டுகளுக்குப்பின் அங்கு செல்ல முடிந்த நான் அதன் இறுகித் திரண்டெழுந்து நிற்கும் கனத்த பெரிய கதவம் காண்கிறேன் சட்டை களைய வைக்கப்பட்டேன் வெற்று மார்போடு எனக்கான தேவதைகளைக் கண்டு குறைதீர்க்க வேண்டுமென்று சோதிடம் வழி உள்ளேறினேன் கருங்கல் பாவிய பிரகாரம் முழுதும் புறக்கணிப்பின் கூக்குரலால் நிறைந்திருப்பதை உணரத் தொடங்கியபோது பதற்றமுற அவசரமானேன் யாழிகளின் கோரைப் பற்களில் மனித சதைத் துணுக்குகள் சிற்பங்களின் அழகில் வடிகிறது செங்குருதி எனக்கெதிரே இன்னொரு மொழியில் யாரோ தீர்மானஞ்சொல்ல கலவரமடைந்தேன் வெளியேறும் திசைகளில் […]
Read More
கவிதை
  • By Magazine
  • |
யானையொன்றை விழுங்குவதுபோல் நான் கண்ட கனவு விடிகாலையின் பாயில் சுருட்ட முடியாமலிருந்தது. யானையாகக் கண்டது எனது காலத்தையா கற்பனையையா என்னையா நானொரு கோயில் யானையிடம் நாலைந்து நாள் பேசிப்பார்த்தேன் யானை என்னிடம் பேசிய மொழி தமிழைப்போல் எனக்குப் புரிந்தது சாலையோரத்தில் வாகனங்களின் சக்கரங்கள் காறித்துப்பும் மழை வெளியில் எனது முகம் போய் அலைகிறது. யானை போல்  ஊர்திகள் சாலையை நிரப்புகின்றன எதுவும் சொல்வதற்கில்லை அனாதைக் கனவாய் திசைகளில் அடித்துச் செல்லப்படுகிறது பெருஞ்செவிகள். ஒருமுறை வானவில்லில் எனது நிறத்தையும் […]
Read More
ஆன முதலில் அதிகம் செலவானால்
  • By Magazine
  • |
வரவு எட்டணா செலவு பத்தணா என்றால் அதிகம் இரண்டணா கடனில் போய் தானே முடியும். நம் முன்னோர்களில் பெரும்பான்மையோர் கடன் வாங்குவதை மிகவும் அவமானமாகவே நினைத்து வாழ்ந்தனர். வருவாய்க்கு ஏற்பவே செலவுகளைச் சுருக்கி வருவாய்க்குள் வாழவே முற்பட்டனர். குடும்பத்தில் உள்ள இல்லதரசிகளும் கணவன் உழைத்துப் பொருள் தேடிக்கொண்டு வந்து கொடுப்பதைச் சிக்கனமாகச் செலவிட்டு அதில் சிறு தொகையை (சிறுவாடு) கணவருக்குக் கூட தெரியாமல் சேமித்து வைப்பர். அதனைக் குடும்பத்தின் அவசர அவசியத் தேவைக்குத் தக்க சமயத்தில் கொடுத்துக் […]
Read More
ஒரு பஞ்ச் ஒரு கிக் அவ்வளவுதான்
  • By Magazine
  • |
சிரிப்புகள் ஒன்றை ஒன்று முட்டிப் திரியும் வகுப்பறைக்குள்ளே ஆசிரியை சொல்லிக்கொண்டிருந்தார் “குழந்தைகளே உங்களை யாராவது விரும்பத் தகாத வழியில் தொட அனுமதிக்கக் கூடாது” உடலின் குறிப்பிட்டப் பாகங்களை சுட்டிக் காட்டினார். கிச்சுகிச்சு மூட்டிய உணர்வோடான சிரிப்பில் குழந்தை முகங்கள் “அவ்வாறானசூழலில் என்ன செய்வீர்?” ஆசிரியையின் கேள்வியில் வகுப்பறை அமைதியாயிற்று. கிணற்றுள் கல்லெறியும் தொனியில் ஒரு குழந்தை “அவங்களுக்கு டிஸ்யும் டிஸ்யும்தான் ஒரு பஞ்ச் ஒரு கிக் அவ்வளவுதான் அப்படியே காலி பண்ணிருவேன்” குழந்தையின் அடவுகளில் கராத்தேவின்  மஞ்சள் […]
Read More
கதவுக்குள்ளிருந்து கிரீச்சிடுவது ஒரு வட்டமே
  • By Magazine
  • |
இருபக்கங்களிலும் ஒவ்வாமையை வளர்த்தியிருக்கிறது கதவு உளுத்துபோன மரத்தால் ஆகியிருக்கின்றது கதவின் மனம் சிலுவை என அடிக்கப்பட்டிருக்கும் நிலையின் கண்ணி விடுவதாயில்லை கதவை அதன் கனத்தையும் தாண்டி புலம்பலை ஒரு சாபமென துப்பிக்கொண்டிருக்கின்றது கதவு இருபக்கங்களிலும் அங்கிருக்கும் இருபக்கங்களும் தனக்கான இருபக்கங்களை உற்பத்தி திறன்கொண்டு வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன அவ்வாறே கதவுகளும் பக்கங்களும் பக்கங்களும் கதவுகளும் என சுழலும் ஒரு வட்டம் தன்னுள் ஒளி பொருந்தியதாய் தன்னை நினைத்துக் கொள்கிறது பார்த்துக்கொண்டிருக்கும் சிறுவன் தன்கை ஓட்டுச்சில்லால் அடிக்கின்றான் சில்லு சில்லாகும் […]
Read More
  • By Magazine
  • |
வசந்தம் ஒருநாளில் மலர்வதில்லை. அதுபோலத்தான் வாழ்வின் உயர்வு என்கிறார் அரிஸ்டாட்டில். என்றோ ஒருநாள் நடக்கப் போகின்ற தேர்வுக்காக நாம் வருடம் முழுவதும், படித்து, நம்மை தயார் செய்து காத்திருக்கிறோம். நன்றாக எழுதி நல்ல மார்க் எடுக்கிறோம் இல்லையா… உழைக்க வேண்டும். உழைத்தால் தான் கூலி கிடைக்கும். வியர்வை சிந்தாமல் எதுவும் கிடைக்காது. எது உங்களுக்கு தேவையோ அதை அளவில்லாமல் இப்பிரபஞ்சம் உங்களுக்கு வாரி வழங்கி கொண்டே இருக்கும். சாதனை புரிய பிறந்த நீங்கள் ஏன் தயக்கம் காட்டுகின்றீர்கள். […]
Read More
சரித்திரப்பதிவின் முதல்பெண் மருத்துவர் மெரிட் ப்ட்டா
  • By Magazine
  • |
நண்பர்களே, இப்போது நான் கூறுவது ஒரு சரித்திரம் பதிவிட்ட உண்மை நிகழ்வுகள். பொதுவாக பெண்களைப் பற்றிய பதிவுகள் குறைவாக  கிடைக்கின்றன. நான் ஆதிகால பெண் மருத்துவர்களைத் தேடியபோது எதிர்பாராமல் கிடைத்தவர் தான் மெரிட் ட்டா (Merit-Ptah) என்ற பெண் மருத்துவர். இதில் Ptah என்பதற்கு “Ptah கடவுளின் பிரியமானவர்” என்று பொருளாம். இவர் மெரிட் ட்டா (Merit-Ptah) எகிப்தின் இரண்டாம் வம்சத்தின் போது, பாரோவின் நீதிமன்றத்தின் ஒரு பெண் தலைமை மருத்துவராக கருதப்பட்டார். அவரது காலம் கிமு […]
Read More
கோபம் தானாக அடங்கிப் போகிறது!
  • By Magazine
  • |
ஜப்பானில் தியானத்தை ஜா.ஜென் என்பார்கள். ஜா.ஜென் என்றால் உட்கார்ந்து விடுவது என்று பொருள். ஒன்றும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருப்பது. ஒரு ஜென் துறவி ஒரு நாளுக்கு ஆறிலிருந்து எட்டு மணிநேரம் சும்மா உட்கார்ந்திருக்கிறார். ஒன்றும் செய்யாமல் சும்மா அப்படியே உட்கார்ந்திருக்கிறார். அப்படிச் சில நாட்கள், வாரங்கள், மாதங்கள் உட்கார்ந்திருக்கும் போது மனம் தானாக ஓய்ந்து போகிறது. புத்தி பேதலித்தவர்களை ஜென் மடங்களுக்கு அழைத்து வருவார்கள். அங்கே அவர்களுக்கு எந்த சிகிச்சையும் தருவதில்லை. உட்கார்ந்திருக்க உதவுவார்கள். உணவு தருவார்கள். […]
Read More