மகிழ்வு உன் கையில்!

  • By Magazine
  • |

முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்…

துரோகம்-விரோதம்

ஏமாற்றம் – இழப்பு

எனும்

கடந்த காலங்களின்

காலடி தூசுகளை

கழுவ மறந்தால்…

காட்சிக்கு மனிதராகவும்

கனவுக்குள் பிணமாகவும்

வாழும் கலைகள் தான்

வாய்க்கும்…

நேற்று நடந்தவை

நேற்றிற்குரியவை…

இன்று அவைகள்

மாற்றத்திற்குரியவை…

மாறி சிந்தித்தால் மானிடம்

புரியும்… ஏற்றம் என்பது

எல்லோர்க்குமுண்டு

மனதால் குணத்தால்

உயர்ந்துநின்றால்

மகிழ்ச்சிப்பூக்கள்…

பூத்துக்குலுங்கும்

மணம் வீசி எங்கும்

மகிழ்வைக் கொடுக்கும்

சேற்றுக்குள் தான்

வாழ்வோம் என்று

மறக்க மறுத்தால்

மனிதம் ஒருநாள்

மாண்பை இழக்கும்

இது – மாமனிதர்களின்

மகத்துவ தத்துவம்…

வேற்றுமை கழைந்து

விதியை அழித்து

மதியால் உயர்ந்து

மகிழ்வாய் வாழ்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *