தோல்நோய்களுக்கு  சிறந்த‘பிரம்மதண்டு’
  • By Magazine
  • |
 நமது மூலிகை மருத்துவர் வெண்ணிற கோடுகளுடன் காம்பில்லாமல் கூரிய முட்களுடன் கூடிய பசுமையும் நீலம் கலந்த இலைகளுடன், அழகான மஞ்சள் நிற பூக்களையும், முட்கள் நிறைந்த நீள் உருண்ட காய்களும் அதனுள் கடுகு போன்ற விதைகளையும் கொண்டு, எப்பகுதியை உடைத்தாலும் மஞ்சள் நிற பால் வடியும் குணத்தை கொண்டு நேராக ஒரு மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய அழகான ஒரு களைச் செடி தான் பிரம்ம தண்டு. தரிசு நிலங்கள், ஆற்றங்கரையோரங்களில், சாலையோரங்களில் தானே வளர்கிறது. இதன் […]
Read More
வர்மம்’ எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் அல்லிவர்மம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான அழல்வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் அல்லிவர்மம் பற்றி அறிவோம். அல்லிவர்மம் நாபியின் நேர் பின்புறம் நான்குவிரலின் மேல் முதுகுத்தண்டில் அமைந்துள்ளது. இவ்வர்மம் அரசவர்மம், அல்லி அரச வர்மம், அல்லி அரசாணி வர்மம், சந்திர புஷ்கரணி வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. “சாதிக்கும் சந்திரபுஷ்கரணியோடு தாவி நிற்கும் மாய்கை மகரத்தூடுற்று வாதிக்கும் பின்பாகம் அல்லி அரசவர்மம்”.                                                                                                 – வர்மகுருநூல் […]
Read More
வர்மம் எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் அழல்வர்மம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான மாற்றான்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் அழல்வர்மம் பற்றி அறிவோம். அழல் வர்மம் மண்ணீரல் நடுவில் அமைந்த முதுகெலும்புத்தொடரின் இடதுபக்க சார்பில் அமைந்துள்ளது. இந்த வர்மம் மாத்திரையாய் கொண்டவுடன் உடல் எங்கும் அக்கினியால் எரிந்தது போல் வெப்பம் அதிகமாகி அழல் மிஞ்சுவதால் அழல் வர்மம் என்ற பெயராயிற்று. அக்கினி வர்மம், நெருப்பு வர்மம், அழலாடி வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் இவ்வர்மம் […]
Read More
“கிர்ணி” என்று அழைக்கப்படும் “முலாம்பழம்”
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் கோடைக்காலத்திற்கு ஏற்ற முலாம்பழச்செடி ஒரு கொடி வகை. இது வெள்ளரிக்காய், பூசணிக்காய், தர்பூசணியின் குடும்பத்தை சார்ந்தது. இதன் பூர்வீகம் ஆசியா கண்டத்தின் மத்தியபகுதி. இலை பசுமையாக பெரியதாகவும், பூக்கள் மஞ்சள் நிறத்திலும், ஆண்பூவும் பெண்பூவும் ஒரே செடியில் இருக்கும். காய்கள் உருண்டையாக இருக்கும். முலாம்பழம் தோல் சற்று கடினமாக மஞ்சள் பசுமை கலந்த நிறத்தில் வலைப்பின்னல் தோற்றத்துடன் காணப்படும். பழத்தின் உட்பக்கம் ஆரஞ்சி நிறத்தில் சதைபற்றுடன் காணப்படும். முலாம்பழச் செடியை விதை மூலம் […]
Read More
மனிதனின் விந்தணுவில் நுழைந்த நானோநெகிழிகள்
  • By Magazine
  • |
– முனைவர் மோகனா, பழனி நண்பர்களே..இப்போது, நெகிழி இன்றி நம் வாழ்க்கை இல்லை எனற நிலையில் தான் எல்லோரும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இந்த நிலையில் நெகிழியின் துணுக்களான, மைக்ரோ பிளாஸ்டிக் மற்றும் நானோ பிளாஸ்டிக் ஆகிய இரண்டும் மனித உயிரணுக்களில் (விந்தணுக்கள்) நுழைந்திருப்பது என்ற தகவல் நம் இதயத்தில் அதிர்ச்சியை உண்டுபண்ணும் விஷயம் ஆகும். இது ஏன் ஏற்பட்டது இதன் காரணி என்ன? இதனால் விளையும் பாதிப்புகள் என்ன ? என்பதை அறியும்போது இன்னும் அதிக […]
Read More
ஆடாதோடையும் அதன் மருத்துவபயன்களும்
  • By Magazine
  • |
– கஸ்தூரிபா ஜாண்ஸன் ஆங்கிலத்தில் மலபார் நட் (Malabar nut) என்று அழைக்கப்படும். ஆடாதோடை தாவரவியல் பெயர் (Adathoda Vasica) ஆடாதோடை வாசிக்கா என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு புதர் செடியாகும். Acanthaceae  என்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்தது ஆடாதோடை தரப்படுத்தப்படாத பூக்கும் தாவரம். இத்தாவரம் முக்கியமான வேலிகளில் காணப்படும் மாவிலை, நுணர் இலையைப் போல் ஈட்டி வடிவத்தில் நீண்ட பெரிய இலைகளுடன் செழிப்பாக வளர்ந்திருக்கும். இதன் பூக்கள் வெண்ணிறமானவை. இம்மூலிகை (சூடு) வெப்பத் தன்மையானது. இத்தாவரத்தின் […]
Read More
வர்மம்  எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் மாற்றான்காலம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான பித்துக்காய் வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் மாற்றான்காலம் பற்றி அறிவோம். மாற்றான்காலம், மார்புப்பகுதியிலுள்ள நேர்வர்மத்திற்கு பின்பாக நடுமுடிச்சிற்குள் அமைந்துள்ளது. இவ்வர்மம் வினோத வர்மம், மாற்றானை செய்யும் காலம், நடுமுடிச்சி வர்மம், நட்டெல் வர்மம், சோரதீண்டாக்காலம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. “மாற்றானை செய்கின்ற காலந்தன்னை வழுத்துகிறேன்  நடுமுடிச்சிக்குள்ளேயப்பா”.                                                                                                 – வர்ம குருநூல் மேலும், “கூற்றான தமரின் நடுவூன்றிட்டாலோ குலை […]
Read More
மூலநோய்க்கு சிறந்த“கருணைக்கிழங்கு”
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் பல மருத்துவ குணங்களையும், ஏராளமான சத்துக்களையும் தன்னகத்தே கொண்டு நமது உடல் பிணிகளை கருணையோடு தீர்த்து வைக்கும் மிகவும் சிறப்பான ஒரு கிழங்கு கருணைகிழங்கு. கருணைகிழங்கு மற்றும் சேனைகிழங்கு என்பவை ஒரே கிழங்கை குறிக்குமா? வேறு வேறு  கிழங்குகளை குறிக்குமா? என்ற ஐயம் பலருக்கும் உள்ளது. நாம் மருத்துவத்திற்கும், சமைப்பதற்கும் பயன்படுத்தும் மிகவும் உன்னதமான கிழங்கு சிறுகருணை, பிடிகருணை என்றழைக்கப்படும் கருணைகிழங்கு ஆகும். பெருங்கருணை என்பது, யானையின் கால் போன்று மிகவும் பெரிதாக […]
Read More
நன்னாரியின் நன்மைகள்
  • By Magazine
  • |
– கஸ்தூரிபா ஜாண்ஸன் நமக்கு நன்மை தரும் மூலிகைகளுள் ஒன்று நன்னாரி. தாவரயியலில் கேமிடெஸ்மஸ் இன்டிகஸ் (Hemidesmus indicus) என்பதாகும். ஆங்கிலத்தில் இதனை Indian Sarsaparilla (இந்தியன் சர்சாராபாரில்லா என்பதாகும். நன்னாரி விரும்ப பொன்னாகும் மேனி என்து பழமொழி நன்னாரி தெற்கு ஆசியா முழுதும் காணப்படும் ஒரு கொடியினம். தரம் எங்கும் காணப்படுகிறது. இந்தியா முழுவதும் காணப்படுகிறது. சித்த மருத்துவத்தில் வேர்கள் பயன்படுகிறது. தாவரத்தின் அமைப்பு எதிரெதிரில் அமைந்த நீண்ட இடைவெளிகளையுடைய கம்பி போன்ற இடைகளையுடைய ஒரு […]
Read More
வர்மம்’எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் பித்துக்காய்வர்மம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான கைக்கிட்டிக்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் பித்துக்காய்வர்மம் பற்றி அறிவோம். நேர் வர்மத்தின் பின்புறம் சற்று தாழ்வாக அமைந்த எல் வரிசையின் தாழ்வோரமாக அமைந்த நுறுக்கெல் எனப்படும் விலா எலும்பின் சார்பில் இவ்வர்மம் அமைந்துள்ளது. அதாவது கல்லீரல் பதியின் பின்பக்கம் பித்துக்காய் வர்மம் அமைந்துள்ளது. பித்திக்காய் வர்மம் என்னும் வேறுபெயராலும் இவ்வர்மம் வழங்கப்படுகிறது. “கிடத்தும் நேர்வர்மத்தின் பின்பக்கத்தில் கிளர் நொறுக்கெல் […]
Read More