– கஸ்தூரிபா ஜாண்ஸன்
ஆங்கிலத்தில் மலபார் நட் (Malabar nut) என்று அழைக்கப்படும். ஆடாதோடை தாவரவியல் பெயர் (Adathoda Vasica) ஆடாதோடை வாசிக்கா என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு புதர் செடியாகும். Acanthaceae என்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்தது ஆடாதோடை தரப்படுத்தப்படாத பூக்கும் தாவரம். இத்தாவரம் முக்கியமான வேலிகளில் காணப்படும் மாவிலை, நுணர் இலையைப் போல் ஈட்டி வடிவத்தில் நீண்ட பெரிய இலைகளுடன் செழிப்பாக வளர்ந்திருக்கும். இதன் பூக்கள் வெண்ணிறமானவை. இம்மூலிகை (சூடு) வெப்பத் தன்மையானது. இத்தாவரத்தின் பூ, இலை, பட்டை அனைத்துமே மருத்துவகுணம் வாய்ந்தவை.
இதன் இலைகளில் டானின் அல்கலாய்டுகள், சப்பொனின், பிளவாய்டுகள், விசாக்கின், வாசினால் ஆடாதோடின் வைட்டமின் C கேலக்டோஸ் முதலிய சத்துக்கள் காணப்படுகின்றன.
இதன் இலைகள் பூக்கள் உட்கொண்டால் ஆடாத உடலும் ஆடும்.. பாடாத குரலும் பாடும் என்று சொல்வார்கள்.
ஆடாதோடாவுக்கு ஐந்து மிளகுக்கும் பாடாத நாவும் பாடும் என்பது பண்டு தொட்டே வரும் பழமொழி.
ஆடாதோடைக் கசாயம் செய்து அருந்தி வரும் போது, ஒருவரது கரடுமுரடான சப்தம் மாறி நன்றாகப் பாடவரும்.
ஆடுகள் ஆடாதோடையின் இலைகள் மிகுந்த கசப்பாக இருப்பதால் உண்பதில்லை. எனவே ஆடு தொடர் இலை என்றும் இச்செடிக்கும் பெயர் உண்டு.
ஆடாதோடையின் பயன்கள்
ஆடாதோடை பன்ன மையறுக்கும்
வாத முதற்.
கோடா கோடிச் சுரத்தின்
கோதொழிக்கும் நாடின
மிகுந்தெழுந்த சன்னிபதின் மூன்றும்
அகத்துநோய் போக்குமறி
இது சாதாரண சளி, ஜலதோஷம், இருமல் போன்ற நோய்களுக்கு துளசி, சுக்கு, மிளகு, திப்பிலி, தூதுவளை போன்ற இலைகளையும் பொடித்துக் கலந்து ஆவி பிடிக்கவும். கொதிக்க வைத்து உள்ளுக்கு அருந்தவும்.
மேலும் கபம் சார்ந்த நோய்களான மூக்கடைப்பு, தொண்டைவலி, நெஞ்சில் கபம், அலர்ஜி, ஆஸ்துமா என எல்லா நோய்களும் விரட்டியடிக்கப்படும். ஆடாதோடை இலைகள் காயவைத்த பொடி இரண்டு ஸ்பூன் போட்டு கொதிக்க வைத்து அரை டம்ளர் ஆக வற்ற வைத்து மூன்று வேளை சாப்பாட்டுக்கு முன் இருநாட்கள் குடித்து வர இழுப்பு, ஜலதோஷம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.
வாழை, திராட்சை, பால்சார்ந்த பொருட்கள் சாப்பிடாமல் பொரியல், ரசம் அனைத்திலும் மிளகுத்தூள் துவி சாப்பிட்டால் நல்லது.
இதன் இலைகளை வதக்கி அரைத்து தேன் கலந்து சாப்பிடும் போது வாந்தி, காய்ச்சல், கழிச்சல், உணவு விஷமாதல் போன்றவை மாறும்.
ஆடாதோடை வேருடன் கண்டங்கத்தரி வேர் பொடித்து தேன் கலந்து உண்ணும் போது நரம்பு வலுப்பெற்று ஒழுங்காக வேலை செய்யும். இதன் இலைகளை கொதிக்க வைத்த நீரை நாள்பட்ட இலுமல், சளி, ஆஸ்துமா, காசநோய், மூச்சுத்திணறல் போன்றவை சரியாகும்.
வயிற்றில் உண்டாகும் புழுபூச்சிகள், சைனஸ், கக்குவான் இருமலுக்கும் சிறந்த மருந்து ஆகும்.
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகளுக்கும், கர்ப்பப்பை நோய்களுக்கும் இதன் இலைக் கசாயம் சிறந்த மருந்து. ஆரம்ப கால வெண்குஷ்டம், மஞ்சள் காமாலைக்கும் சிறந்த மருந்து ஆகும். சீதபேதி, சிரங்குகளை தடுத்து ஈரலை பலப்படுத்தும். மலத்துடன் இரத்தம் கலந்து போவதையும் தடுக்கிறது.
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிக இரத்தப் போக்கு பிரசவித்த பின் உதிரபோக்கினை குறைக்கவும், கர்ப்பபை வலப்படவும் இந்த ஆடாதோடை அதிக உதவியாக இருக்கிறது. இரத்தக் கொதிப்பினைக் குறைக்கிறது.
இதன் காய், கனி, வேர் அனைத்தும் எல்லவித கிருமிகளையும் அகற்றுகின்றன. மலர்கள் கண்ணுக்கு சிறந்த மருந்தாகவும், இரத்த ஒட்டத்தை சீர் செய்யவும் உதவுகிறது. இதன் இலையை அரைத்து சிரங்குகளுக்கு தடவும் சிறந்த மருந்தாகும்.
இவ்வாறு பல வழிகளில் பயன்படும் இம்மூலிகையை நம் இல்லங்களில் வளர்த்து பயன் பெறுவோமாக!
Leave a Reply